Kanaiyazhi - January 2021
By Kanaiyazhi
()
About this ebook
Read more from Kanaiyazhi
Kanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2020 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanaiyazhi - January 2021
Related ebooks
C. K. Subramania Subramania Mudhaliyarin Periyapuranam Uraithiran Rating: 1 out of 5 stars1/5Rasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsKuzhavi Marunginum Kizhavathaagum... Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsSindhisai Padalgal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2022 Rating: 0 out of 5 stars0 ratingsManida Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Athvaidham Rating: 0 out of 5 stars0 ratingsNarthamalai Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsPon chandran kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kanigal! Rating: 0 out of 5 stars0 ratingsBharathi Isai Paadum Vanavil Panpaattu Maiyam Rating: 0 out of 5 stars0 ratingsSathanai Semmal Sa.Ve.Su. Rating: 0 out of 5 stars0 ratingsPakka Balam Rating: 0 out of 5 stars0 ratingsManathil Thullina Thuli Pakkal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsAlaiyadum Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsUnnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsVidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Mulaiththathadi Rating: 0 out of 5 stars0 ratingsAadi Pattam Thedi Vithai... Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsPillaitamil - Panmugapaarvai Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanaiyazhi - January 2021
0 ratings0 reviews
Book preview
Kanaiyazhi - January 2021 - Kanaiyazhi
http://www.pustaka.co.in
கணையாழி ஜனவரி 2021
மலர்: 55 இதழ்: 10 ஜனவரி 2021
Kanaiyazhi January 2021
Malar: 55 Idhazh: 10 January 2021
Author:
ம.ரா
Ma. Raa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
கணையாழி ஜனவரி 2021
தலையங்கம் - ம.ரா.
விதைக்கிற காலத்திலும் விழிப்பாய் இருப்போம்!
புத்தாண்டுப் பொங்கல்
நல்வாழ்த்துகள்!
நடிகர் ரஜினிகாந்த்
கட்சி தொடங்கப் போவதில்லை என்று
கடைசி நேரத்தில்
தெளிவு பெற்றிருக்கிறார்!
கடந்த ஆண்டின் நம்பிக்கையற்ற
இருட்டை விரட்டிக் கொண்டு
இதோ புதிய வெளிச்சம்!
இனி பகல் நேரம் அதிகரிக்கும்
எதிர் வரும் இடர்ப்பாடுகளை
எதிர்கொள்வதற்கும்
எரித்துக் கொல்வதற்கும்
ஆற்றலைப் பெறுவோம் என்ற
நம்பிக்கையில் வரவேற்போம்!
தேடி விதைத்ததின்
அறுவடைக் காலம் இது!
விதைத்ததுதான் விளையும் என்பதால்
அறுவடைக் காலத்தில்
புலம்புவதை விடுத்து
விதைப்புக் காலத்திலும்
விழிப்பாய் இருப்போம்!
பொங்கல் என்பது
மற்ற பண்டிகை போல
அழிவைக் கொண்டாடுவது இல்லை!
ஆக்கத்தைக் கொண்டாடுவது!
கரடு முரடான நிலத்தைத் திருத்திக்
கழனி ஆக்கி விளை நிலம் ஆக்கி
அதில் பயிர் ஆக்கி
நெல்லெடுத்து அரிசி ஆக்கிப்
பொங்கல் ஆக்கிச்
சூரியனைச் சாப்பிட
வீட்டுக்கு அழைக்கும் திருவிழா!
பொங்கல் என்பது
பயத்தில் கை கூப்பி அலகு குத்தி
குற்றேவல் செய்வோர்
கொண்டாடும் விழா இல்லை!
பூமிக்கு வாழ்வளித்து
உயிர் வளர்க்கும் சூரியனுக்கு
நன்றி சொல்லும் விழா!
நெல் பல பொலிக என்று
கொண்டாடும் திருவிழா!
பட்டி பெருகுக!
பால் பானை பொங்குக! என்று
உழைப்பில் உடன் நிற்கும்
மாட்டுக்கும் சோறு ஊட்டும் விழா!
பொங்கலோ பொங்கல் என்று
வீடுகளில் முழங்கும்
கொண்டாட்டக் குரலுக்கு
அரிசி, பருப்பு, கரும்பு என
அனைத்தையும் தன்
வியர்வையில் வளர்க்கும்
விவசாயிகள் இப்போது
பனி மூட்டத்தில் குளிர் போர்வையில்
சாலைகளில் விதைக்க
சபிக்கப்பட்டிருக்கிறார்கள்!
வேட்டை என்பது உயிர் அழிப்பது!
வேளாண்மை என்பது பயிர் வளர்ப்பது!
அதன் வழி உயிர் வளர்ப்பது!
வளர்க்கிறவர்களை வேட்டையாடலாமா?
விளை நிலங்கள்
பன்னாட்டு நிறுவனங்களின்
வேட்டைக் காடுகள் ஆகலாமா?.
மற்றவர் உயிர் வளர்ப்பில்
தன்னுயிர் வளர்க்கும்
விவசாயப் பெருமக்களின்
வயிற்றெரிச்சல் முழக்கம்
வாயிற் கதவை வந்தடையவில்லையா?
தலைப்பாகை முற்றுகையில்
தலைநகர்!
"ஊமையோ? அன்றிச் செவிடோ?
அனந்தலோ?" என்று
ஆண்டாள் கேட்பதைப் போல
ஆட்சியரைக் கேட்கக்
குடும்பம் குடும்பமாகக்
கூடி நின்று
இரவு பகல் பாராமல்
எழுப்பும் பெருமூச்சுத் தீ!
வேதனைப் பெருமூச்சில்
வெந்து கருகும் பொங்கல் பானை!
பொங்கல் பானை விடும் மூச்சில்
திணறப் போவது ஆட்சியின் மூச்சு!
இந்தியா ஒரு விவசாய நாடு
எத்தனை நாளாய் இப்படி இருப்பது?!
மக்களின் பேச்சரவம்
இன்னும் கேட்டிலையொ?
ஈதென்ன பேருறக்கம்
கள்ளம் தவிர்த்துக் கதவைத் திறங்கள்!
கடந்த ஆண்டு கடந்து போனது
புதிய ஆண்டு வருகிறது!
இந்த ஆண்டு
தேர்தல் ஆண்டு!
விதைப்பதுதான் விளையும்
அறுவடைக் கால
அவதியைத் தவிர்க்க
விதைக்கிற காலத்திலும்
விழிப்பாய் இருப்போம்!
அன்புடன்
ம.ரா
***
உள்ளடக்கம்
அஞ்சலி - மு. இராமசுவாமி (தொ. பரமசிவன்)
கவிதை - கனகா பாலன்
கட்டுரை - தனஞ்செயன்
கவிதை - வலங்கைமான் நூர்தீன்
சிறுகதை - நீ.பி. அருளானந்தம்
கவிதை - காசாவயல் கண்ணன்
கட்டுரை - மு. இராமசுவாமி
கவிதை - ந.சிவநேசன்
குறுநாவல் - ஸிந்துஜா
கட்டுரை - கவிஞர் எஸ். சண்முகம்
கவிதை - கோபி சேகுவேரா
சிறுகதை - அகிலா
கவிதை- ஸ்ரீரங்கம் செளரிராஜன்
சிறுகதை - நலங்கிள்ளி
கவிதை –தங்கேஸ்
கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி
***
அஞ்சலி - மு. இராமசுவாமி
மு ராமசாமி.jpgதொ.ப. என்கிற ஒரு கருஞ் சட்டை அறிஞர்!
பாளையங்கோட்டை - தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்பதாக, எல்லார் மனங்களிலும் அந்த நாட்களில் - நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே - கருத்தமைக்கப்பட்டிருந்த ஓரூர்! தடுக்கி விழப்போனால், ஒன்று பள்ளிக்கூட வாசலிலோ, அல்லது கல்லூரி வாசலிலோதான் ஒருவர் விழுந்தாக வேண்டும். சம்பாதிப்பதற்காகவன்றி, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துதற்காகவும், அறிவூட்டுதற்காகவுமாக, மிஷினரிகளின் கல்விச் சாலைகள், நூறாண்டுகளுக்கு முன்பே, ஊரைச் சுற்றிலும் காலூன்றியிருந்த வடிவு அது! தென் தமிழகத்தில், நூறாண்டுகளுக்கு முன்பே, முதல் பெண்கள் கல்லூரியைக் கொண்டிருந்த ஊர்! தாமிரபரணிச் சுலோச்சனா முதலியார் பாலத்தின் அந்தப் பக்கமாய்க் கால் வைத்தால் அது திருநெல்வேலி; இந்தப் பக்கமாய்க் கால் வைத்தால் அது பாளையங்கோட்டை! அப்படித்தான் பாளையங்கோட்டைத் தெற்கு பஜாரைத் தொட்டு, தெற்கே, அதன் இணைகோடாய்க் கீழ்மேலாய் நீண்டு கிடக்கிற அந்தப் பூர்வீகக் குடிகாட்டின் மேலத்தெருவில் கால் வைத்தால், அங்குத் தொ.ப. வீடு! கீழத் தெருவில் கால் வைத்தால், அங்கு எங்கள் வீடு! தெற்கு பஜாரை ஊடறுக்கும் இரண்டு குறுக்குத் தெருக்களைக் கடந்தால் 10-15 வீடுகளின் தூரம்தான் எங்கள் இருவர் வீடுகளுக்கும்! கொள்வினை – கொடுப்பினைகூட, ரொம்பவும் அருகித்தான் நடக்கும் இரண்டுத் தெருக்களுக்கிடையிலும், அப்பொழுது! அதை உடைக்கிற சங்கிலியாய், எங்கள் கீழத்தெருவிற்கு மாப்பிள்ளையாய் வந்து சேர்ந்தவர் இவர்! அதன்பிறகு, அவருடன் மனம் மிக நெருக்கமாயிருந்த காலங்களில், உரத்து ஒலி எழுப்பினால், கேட்கிற தூரத்தில், வீடுகளின் தூரங்கள் குறுகியிருந்தன. என்னை விட ஒரு வயது மட்டுமே மூப்பு அவர்!
thopa.jpgஅப்பா இல்லாமல் அம்மா, ஆச்சியின் அரவணைப்பில், அவர்கள் குழைத்து ஊட்டிய பண்பாட்டு எச்சங்களின் மிக நுணுக்கமான அசைவுகளை - அந்த அறிவை - அந்தக் களஞ்சியத்தை - அதன் மொழிக் குறியீடுகளை, அப்படியே தனக்குள் உள்வாங்கி, அதைப் பொடிப் பொடியாய் நுணுக்கி, நாட்டார் மரபில், அதனிடத்தை உரசிப் பார்த்து, அதற்குப் பகுத்தறிவு முலாம் பூசிச் சமூக அறிவாகக் கைமாற்றித் தந்தவர் தொ.ப.!
தொ.ப. அம்மாவின் ஊர் அபிஷேகப்பட்டியை அடுத்திருக்கிற வெள்ளாங்குழி என்பதால் சொந்தப் பெயர் மறைந்து, வெள்ளாங்குழி அம்மாவாகவே பக்கத்து வீட்டாரால் அறியப்பட்டவர்! அம்மா, ஆச்சிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்டு, கேட்டு, சமூகத்தை உள்வாங்கி, அதை மனசுக்குள் அலசிப் பார்த்த, இந்த மண்ணுக்கான, பாட்டி வைத்தியத் தொடர்ச்சிதான் – விதை நெல்லின் வீரியம்தான் - அவரின் ஆய்வு நெறிமுறை! அது, வீரியம் குறைந்த - வீரியத்தைக் குறைக்கிற ஒட்டு ரகம் அல்ல. பாரம்பரிய அறிவுத் தேடலுக்கான புறச்சூழல் அமைகிற நிலையில் – நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம், நா.வா.வின் ஆராய்ச்சி, பாளை சி.சு.மணியின் குருஞானம், சாத்தான்குளம் ராகவனின் வரலாற்று ஆய்வுகள், தந்தை பெரியார் சிந்தனைகளின் அணுக்கம், மண்ணின் மரபு வரலாற்றை அடித்தட்டிலிருந்து வாசிக்கிற தேட்டம், தன்னைச் சூழ்ந்தே கிடக்கிற மாணவர்களின் பல்லாயிரம் கேள்விகள் எழுப்பிய சிந்தனைகள் - இவற்றின் குழைவாக, அவருக்குள் ஊறிக் கிடந்து, மண்ணின் மொழியில் நறுக்குத் தெறித்தாற் போல், தன் கருத்துகளை எளிமையாகச் சொல்லிப்போகிற பார்வைத் துளிதான் அவருடையது! இவர்கள்தாம் அவரின் ஞானக்குருக்கள்! இவர்களின் திரட்சியிலிருந்து உருவாகித்தான், அவரின் சிந்தனைமுறை அப்படியே இந்தச் சமுகத்தை விளக்குவதற்கும் - விளங்கிக் கொள்வதற்குமாகப் பொருந்திப் போயிருக்கிறது. அவர் அள்ளித் தெளித்திருக்கிற சிந்தனைத் துளிகள் ஒவ்வொன்றும், அழகர் கோயில்’ போன்று நீண்ட ஆய்விற்குரியது. பணி நிறைவிற்குப் பின்பாகச் செய்ய வேண்டும் என்று தள்ளிப் போட்டிருந்த, விவாதித்துக் கொண்டேயிருந்த பல பணிகளைச் செய்து முடித்தற்குரிய சூழலுக்கு, அவர் உடல் ஒத்துழைக்காமல் போனதுதான் உடலைக் கவனித்துக் கொள்ளாத அவரின்