Bharathi Isai Paadum Vanavil Panpaattu Maiyam
()
About this ebook
முண்டாசுக் கவி பாரதியைத் தன் பள்ளிப் பருவத்திலிருந்தே உள்ளத்தில் வைத்துப் பூஜித்து வந்தவர் கவிஞர் இரவி. சிறந்த வழக்கறிஞரான இவர் தன் நண்பர்களுடன் இணைந்து சென்னையில் வானவில் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளில் பாரதிக்கு விழா எடுத்து ஆராதித்து வருகிறார். ஆண்டுதோறும் பாரதி பெயரில் சான்றோருக்குப் பொற்கிழி அளித்து பெருமைபடுத்தி வருகிறார். பல்வேறு துறைகளைச் சார்ந்த ஒருவர்க்கு ஆண்டுதோறும் விருதும் அளித்து உவகை கொள்கிறார்.
இந்த நூல் வானவில் பண்பாட்டு மையத்தின் தோற்றம்,வளர்ச்சி, சாதனை போன்ற பல விஷயங்களை நயம்பட எடுத்துரைக்கிறது.
Read more from Dr. Jayanthi Nagarajan
Kamba Ramayanam Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsKamba Ramayanam Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsVisithira Arasar Rating: 0 out of 5 stars0 ratingsKaliyuga Deivam shirdi Sai Rating: 0 out of 5 stars0 ratingsKothaiyin Kadhai Rating: 0 out of 5 stars0 ratingsMazhalaiyar Paadalgal - 50 Rating: 0 out of 5 stars0 ratingsKalkiyin Ponniyin Selvan Kathai Surukkam Rating: 0 out of 5 stars0 ratingsKonja Neram Konja Neram Rating: 0 out of 5 stars0 ratingsNee Pathi Naan Pathi Kanney Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Poove Rating: 0 out of 5 stars0 ratings
Related to Bharathi Isai Paadum Vanavil Panpaattu Maiyam
Related ebooks
Kanaiyazhi - January 2021 Rating: 0 out of 5 stars0 ratingsAthvaidham Rating: 0 out of 5 stars0 ratingsSathanai Semmal Sa.Ve.Su. Rating: 0 out of 5 stars0 ratingsIlanthamizharukkul Pavendar Rating: 0 out of 5 stars0 ratingsAalayam Arivom! Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAindhu Naadugalil Arubathu Naal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsOru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum Rating: 3 out of 5 stars3/5Veera Thuravi Vivekanandhar Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kanigal! Rating: 0 out of 5 stars0 ratingsSirappuyar Seevagasinthamani Rating: 0 out of 5 stars0 ratingsSevviyal Aringar Oriza Balu Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Oru Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Manangal Rating: 0 out of 5 stars0 ratingsAthisaya Mahakavi Bharathiyar! Rating: 0 out of 5 stars0 ratingsKuzhavi Marunginum Kizhavathaagum... Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsNaan Santhitha Manithargalil - Jeevi Rating: 0 out of 5 stars0 ratingsPillaitamil - Panmugapaarvai Rating: 0 out of 5 stars0 ratingsThiruvasagathil Magalir Aadal Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Thorum Narasingam Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Sindhisai Padalgal Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Meendum Sankara Vijayam Rating: 0 out of 5 stars0 ratingsPon chandran kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaatrinile Varum Geetham Rating: 0 out of 5 stars0 ratingsManida Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsIlangaiyil Bharathi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Bharathi Isai Paadum Vanavil Panpaattu Maiyam
0 ratings0 reviews
Book preview
Bharathi Isai Paadum Vanavil Panpaattu Maiyam - Dr. Jayanthi Nagarajan
https://www.pustaka.co.in
பாரதி இசை பாடும் வானவில் பண்பாட்டு மையம்
Bharathi Isai Paadum Vanavil Panpaattu Maiyam
Author:
முனைவர் ஜெயந்தி நாகராஜன்
Dr. Jayanthi Nagarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. ஒரு படைப்பாளி உருவாகின்றான்.
2. சான்றோர் தொடர்பு
3. சிந்தனைக் கோட்டம்
4. பாரதி கலைக்கழகம்
5. வானவில்
6. வானவில் பண்பாட்டு மையம்
7. ஜதி பல்லக்கு
8. மையம் ஆற்றிவரும் தமிழ்ப் பணிகள்
9. பாரதி ஐந்து
10. பாரதி விருது பெற்றவர்கள்
11. விருது பெற்ற திருமதி வாணி ஜெயராமுடன் ஒரு நேர்காணல்
12. வாழி வாழி மையம் வாழி
1. ஒரு படைப்பாளி உருவாகின்றான்.
காலக் கண்ணாடியைச் சற்றே பின்னோக்கிப் பார்க்க உள்ளம் விழைந்தது. மனம் என்பது சிறகின்றிப் பறக்கக் கூடியது. கடவுச்சீட்டு, பயணச்சீட்டு என எதுவும் அதற்குத் தேவையில்லை. சற்றே நீண்ட பயணமாக அது அமைந்தது. ஆம்! 50 வருடங்கள் பின்னால் காலக் கண்ணாடியைத் திருப்ப, அங்கே ஓர் அழகிய இளைஞன் தெரிந்தான். கல்லூரியில் அப்போதுதான் அவன் அடியெடுத்து வைத்திருப்பான் போலும். பார்ப்பவரை வசீகரிக்கும் முகத்தோற்றம்; ஒல்லியான உடல்வாகு; கண்களில் அறிவின் சுடர் ஒளிவிடுவதைக் காண முடிந்தது. அவன் சென்னையைச் சார்ந்த மயிலைவாசி. ஆனால் அவன் காலை வேளையில் திருவல்லிக்கேணியில் உள்ள திருமலாச்சாரியார் பெண்கள் பள்ளி வாசலில் நின்றிருந்தாள். அங்கே என்ன வேலை? அப்பள்ளியில் அவனுடைய சகோதரிகள் படிக்கின்றனர்.
விவேகானந்தா கல்லூரி மாணவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் நடத்தும் ‘மாணவரிஸம்’ எனும் அச்சுப் பத்திரிகைக்காகப் படைப்புத் திறன் உள்ள மாணவிகளிடம் இருந்து அவர்கள் படைப்புக்களை அனுப்புமாறு கேட்பதற்காகவே வந்ததாகத் தெரிவித்தான். சுற்றுவட்டாரத்தில் உள்ள அத்தனை பள்ளிகளுக்கும் சென்று கதைகள், கட்டுரைகள் எனப் பலவற்றைச் சேகரித்து வந்த அந்த இளைஞன் அன்று அப்பள்ளியின் கதாநாயகனானான். அவன் எங்கள் சகோதரன் எங்கள் பெரியம்மாவின் புதல்வன்
என்று பெருமையோடு தெரிவித்தனர் அச்சகோதரிகள். அவர்களுள் ஒருவரே இந்நூலின் ஆசிரியர் ஆவார்.
மாணவரிஸம் எனும் அப்பத்திரிக்கை அப்போது மாணவர் உலகில் பிரபலமடையத் தொடங்கியது. அது நாலரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது, பல இளம் படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களை அச்சில் கண்டு ஆனந்தமுற்றனர்.
தமிழ் மொழியைக் கற்க வேண்டும் எனும் துடிப்பில் ஆங்கிலப் பள்ளியில் இருந்து மயிலை சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த அம்மாணவனுக்கு அவனுடய ஆசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன் அளித்த ஊக்கம் அளப்பரிது. சிறந்த தமிழ் அறிஞர்களின் தொடர்பு, ஒத்த அலைவரிசையினைக் கொண்ட நட்பு வட்டம் ஆகியவை அந்த இளைஞனை மேலும் மேலும் செதுக்கியது.
என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். ஒரு நல்ல வலிமையான, வளமையான பாரதத்தைப் படைக்கிறேன்
என்று முழங்கிய வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் இருந்திருந்தால் அந்த மாணவனைக் கட்டித் தழுவியிருப்பார்; உச்சி முகந்து பாராட்டியிருப்பார்.
அந்த மாணவன்தான் க. இரவி. இன்று சிறந்த வழக்கறிஞர் மட்டுமன்றிப் பல படைப்புக்களை அளித்து வரும் சிறந்த எழுத்தாளர். வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும் அவரே.
2. சான்றோர் தொடர்பு
வானொலி அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த வேளை. எண்ணற்ற தொலைக்காட்சிகள் தங்கள் முகங்களைக் காட்ட மறந்த காலம். இலக்கிய விழாக்கள் மட்டுமே அனைவருக்குமான பொழுதுபோக்கும் களங்களாகத் திகழ்ந்த அருமையான காலம் அது. பட்டி மன்றங்கள் முழு வீச்சுடன் முழங்கிய காலம். குடும்ப உறவுகளை ஆனந்தமாக்குவது மகனா, மகளா; குடும்பச் சுமையைச் சுமப்பது கணவனா, மனைவியா என்றெல்லாம் இப்போது போன்ற இலகுவான தலைப்புக்களை அப்போது கேட்க முடியாது.
தம்பியரில் சிறந்தவர் இலக்குவனனா, பரதனா, விபீடணனா, கும்பகர்ணனா, கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா. என்ற ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் பட்டிமன்றங்கள், தயரதன் நிறையும் குறையும், வாலியை இராமன் மறைந்து கொன்றது சரியே, தவறே போன்ற வழக்காடு மன்றங்கள் கேட்போருக்கு அறிவினை ஊட்டக் கூடிய வகையில் இருக்கும்.
நீதிபதி இஸ்மாயில், முனைவர் அவ்வை நடராசன், பேராசிரியர் சத்யலேன், திருச்சி இராதாகிருஷ்ணன், தா. பார்த்தசாரதி, கிவாஜகன்னாதன், சௌத்தராகைலாசம் எனப் பல தமிழ் அறிஞர்கள் மேடைகளில் முழங்கிய பொற்காலம்.
பாரதி கராஜ், தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன், முனைவர் அவ்வை நடராசன் போன்றோர் அவ்விளைஞனைச் செதுக்கிய சிற்பிகள் மாணவராக இருந்த போதே இரவி தன் பேச்சுத் திறமையால் அனைவரையும் ஈர்த்தார்.
இரவி ஓரணியில் பேச, எதிர் அணியில் அப்போது இன்னுமோர் இளைஞன் பேச பட்டிமன்றமே கலகலத்துப் போகும்... இரவியின் எதிரணியில் பேசிய அந்த மாணவன் இன்று பல பட்டிமன்றங்களுக்கு நடுவராகத் தன் சொல்லாற்றலால் சொல் வேந்தன் என்று பாராட்டு பெற்ற சுகி சிவம் ஆவார்.