Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Visithira Arasar
Visithira Arasar
Visithira Arasar
Ebook111 pages36 minutes

Visithira Arasar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாடகம் என்பது கண்ணுக்கும், செவிக்கும் ஒருசேர விருந்தளிக்கக் கூடிய ஓர் அற்புதக்கலை நம் பள்ளி மேடைகளில் தமிழ் நாடகங்கள் ஒலிக்கவில்லையே எனும் குறையைப் போக்கியிருக்கும் ஒரே காரணத்திற்காக “விசித்திர அரசர்” எனும் நாடக நூலை எழுதிய ஆசிரியர் திருமதி ஜெயந்தி நாகராஜன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் மொத்தம் ஏழு நாடகங்களை இந்நூல் கொண்டுள்ளது. இலக்கியம், சமூகம், எனப் பலவற்றை இந்நாடகம் பெற்றிருக்கிறது.

நாடகத் தலைப்பைக் கொண்ட முதல் நாடகமான ‘விசித்திர அரசர்’ தமிழையும் அதன் தரத்தையும் அறியாத மன்னன் பின் தன் தவறை உணர்ந்தவனாய்ப் புடம் போட்ட தங்கமாய் மாறும் அழகை நயம்பட, சுவைபட விளக்குகிறது.

தமிழுக்காகத் தன் உயிரையேத் தரத் தயங்காத அண்ணன் குமணன், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதற்கேற்பத் திருந்திய அன்புத் தம்பி இவர்களின் பாசப் போராட்டத்தைக் கூறும் நாடகமாக ‘அன்புக்கோர் அண்ணன்’ பெயருக்கேற்ப இருக்கிறான்.

சாம்ராட் அசோகக் சக்கரவர்த்திக் கலிங்கப் போருக்குப் பின் அன்பின் வழியில், அமைதியை நாடிச் செல்வதைத் தத்ரூபமாகப் ‘புத்தம் சரணம் கச்சாமி’ நாடம் விளக்குகிறது.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580154608384
Visithira Arasar

Related to Visithira Arasar

Related ebooks

Reviews for Visithira Arasar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Visithira Arasar - Dr. Jayanthi Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விசித்திர அரசர்

    (நாடகம்)

    Visithira Arasar

    (Naadagam)

    Author:

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    Dr. Jayanthi Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    1. விசித்திர அரசர்

    2. அன்புக்கோர் அண்ணன்

    3. புத்தம் சரணம் கச்சாமி

    4. மனு நீதிச் சோழன்

    5. பேகன்

    6. திருக்குறிப்புத் தொண்டர்

    7. சிறுத்தொண்ட நாயனார்

    அணிந்துரை

    நாடகம் என்பது கண்ணுக்கும், செவிக்கும் ஒருசேர விருந்தளிக்கக் கூடிய ஓர் அற்புதக்கலை நம் பள்ளி மேடைகளில் தமிழ் நாடகங்கள் ஒலிக்கவில்லையே எனும் குறையைப் போக்கியிருக்கும் ஒரே காரணத்திற்காக விசித்திர அரசர் எனும் நாடக நூலை எழுதிய ஆசிரியர் திருமதி ஜெயந்தி நாகராஜன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் மொத்தம் ஏழு நாடகங்களை இந்நூல் கொண்டுள்ளது. இலக்கியம், சமூகம், எனப் பலவற்றை இந்நாடகம் பெற்றிருக்கிறது.

    நாடகத் தலைப்பைக் கொண்ட முதல் நாடகமான ‘விசித்திர அரசர்’ தமிழையும் அதன் தரத்தையும் அறியாத மன்னன் பின் தன் தவறை உணர்ந்தவனாய்ப் புடம் போட்ட தங்கமாய் மாறும் அழகை நயம்பட, சுவைபட விளக்குகிறது.

    தமிழுக்காகத் தன் உயிரையேத் தரத் தயங்காத அண்ணன் குமணன், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதற்கேற்பத் திருந்திய அன்புத் தம்பி இவர்களின் பாசப் போராட்டத்தைக் கூறும் நாடகமாக ‘அன்புக்கோர் அண்ணன்’ பெயருக்கேற்ப இருக்கிறான்.

    சாம்ராட் அசோகக் சக்கரவர்த்திக் கலிங்கப் போருக்குப் பின் அன்பின் வழியில், அமைதியை நாடிச் செல்வதைத் தத்ரூடமாகப் ‘புத்தம் சரணம் கச்சாமி’ நாடம் விளக்குகிறது.

    அப்பப்பா! ஒரு பசுவின் துயர் துடைக்க மனுநீதிச்சோழன் செய்த முடிவுதான் என்ன? இலக்கியத்தில் காணப்படும் செய்திகளை ஒன்றுவிடாமல் நம் மனம் ஒன்றிவிடுமாறு இவ்வாவு எளிமையாக, சுவையாகச் சொல்ல முடியுமா? படித்துவிட்டு இப்படித்தான் என்னால் வியக்க முடிந்தது. ஆசிரியருக்கு இது கை வந்த கலைபோலும்.

    மயிலுக்குப் போர்வை தந்தான் வள்ளல் பேகன் இதுதான் இலக்கியத்தில் காணப்படும் ஒரு வரிச் செய்தி இதை வைத்துக்கொண்டே ஒரு அருமையான நாடகத்தைத் தந்த விதம் என்னைப் பிரமிக்க வைத்தது

    பெரிய புராண நிகழ்வுகளைக் கொண்டு இரு நாடகங்கள் மிக அழகாகப் பின்னப்பட்டிருக்கிறது குழந்தைகளுக்குப் பெரிய புராணத்தை மிக எளிமையாகப் புரிய வைத்திருக்கிறார்

    திருக்குறிப்புத் தொண்டரின் அருடைகளை, பெருமைகளை, அவர் அடியார்களின் துணிகளைத் துவைத்து விளக்குவதைப் போல் நன்குப் பளீர் என ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.

    பிள்ளைக் கறியைக் கேட்டு வந்த சிவனையும், இறந்த பிள்ளையை மனம் உருக வேண்டி அழைக்கும் பெற்றோரையும் நாடகம் நம் கண் முன்னே நிறுத்துகிறது பெற்றோரின் கதறல் நம்மையும் அழ வைத்துவிடுகிறது என்றால் அது மிகையல்ல.

    ஆசிரியரின் எழுத்திற்குக் கிடைத்த வெற்றியாக நாம் இதனைக் கொள்ளலாம் நாடகங்களில் இடம் பெறும் வசனங்கள் பளீர் பளீர் என மின்னுகிறது.

    இதனை அருமையாகப் படைத்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்புடன்,

    அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்.

    1. விசித்திர அரசர்

    காட்சி - 1

    இடம்: விசித்திரபுரியின் சாலைப் பகுதி

    பாத்திரம்: தண்டோரா போடுபவர், மக்கள்

    த.போ: (டம் டம் என அடித்தபடி) இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால். நமது மா மன்னர் விசித்திர ராயர் புலவர்களின் புலமையைப் பாராட்டும் முகமாகக் கவிதைகளின் எடைக்கு எடை பொன்னும், பொருளும் பரிசளிக்க முடிவு செய்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். புலவர் பெருமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்! டம்... டம்...

    மக்கள் (1): அடேங்கப்பா! கவிதைகளின் எடைக்கு எடை பொன்னா! அடிச்சாங்கப்பா பரிசுகளை!

    மக்கள் (2): ம்! எனக்கும் கவிதை எழுதத் தெரிந்தால்...

    மக்கள் (3): கவிதை எழுதுவது என்ன பெரிய வித்தையா! மன்னா! நீ சொன்னா அது சட்டம்! கொடு எனக்குப் பட்டம்! பாத்தியா என் கவிதையை!

    மக்கள் (1): (கிண்டலாக) அட! அட! என்ன அழகிய கவிதை! அர்த்தமுள்ள கவிதை!

    மக்கள் (2): அட சும்மா இருங்கப்பா! நமக்குக் கவிதை எழுதத் தெரியாட்டி என்ன! யாராவது கவிதை எழுதத் தெரிஞ்சவங்சுக்சிட்டே இந்த அறிவிப்பைப் பற்றி சொல்லலாமே!

    மக்கள் (3): அட ஆமாம்! இந்த யோசனை நம்ம யாருக்குமே தோணவில்லையே! நீ கெட்டிக்காரன் தாம்ப்பா! முயன்றால் நீ கூட கவிதை எழுதலாம்.

    மக்கள் (1): சரி! சரி! நீ சொன்னதும்தான் என் நினைவிற்கு வருகிறது. என் வீட்டுப் பக்கத்துலே மாணிக்கனார்னு ஒரு புலவர் இருக்காரு. அவரு எப்பப் பார்த்தாலும் ஓலைச் சுவடியை வைச்சு எதாவது எழுதிக்கிட்டே

    Enjoying the preview?
    Page 1 of 1