Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Just Jolly Part - 2
Just Jolly Part - 2
Just Jolly Part - 2
Ebook101 pages40 minutes

Just Jolly Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலை வடிவங்களே நகைச்சுவை. நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை என்பது ஒருவருடைய மன உளைச்சல் மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மற்றும் மன நிலையைப் பேண உதவும். இத்தகைய சுவையை சுவைப்பதற்கு வாருங்கள் எஸ்.வி. சேகரின் ஜஸ்ட் ஜாலி வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580148907546
Just Jolly Part - 2

Read more from S.Ve. Shekher

Related to Just Jolly Part - 2

Related ebooks

Related categories

Reviews for Just Jolly Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Just Jolly Part - 2 - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    ஜஸ்ட் ஜாலி பாகம் 2

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Just Jolly Part - 2

    எழுத்து

    கோவி கோவன்

    எண்ணம், இயக்கம்

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முத்திரை பதித்த வித்தகர்

    1975-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக சென்னை வானொலி நிலையத்தின் முதன் மாடியில் திரு. எஸ்.வி. சேகரை சந்தித்தேன்.

    அப்போது நாடகத்துறையில் இருந்த திரு எம்.கே. மூர்த்திதான் சேகரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சேகர் பேசிய குரல் என்னை மிகவும் வசீகரித்தது.

    அன்றுதான் அறிமுகமாயிருந்தாலும் ஏதும் இன்கிபிஷன் இல்லாமல் இயல்பாக உரையாடிய விதம் என்னைக் கவர்ந்தது. இளைஞர்கள் பங்கேற்கும் பல புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கிக் கொண்டிருந்த நேரம் அது.

    சேகரைக் கேட்டேன். ஓ.கே. என்று தலையாட்டினார். சுருளிராஜன், மனோரமா இருவரும் இணைந்து நடித்த ஒரு தொடர் சித்திரத்தில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

    மூத்த கலைஞர்கள் முன்னிலையில் தைரியமாக நடித்தும், மிக தைரியமாக சின்ன சின்ன மாறுதல்களைச் சொன்னதும் இன்றும் என் நினைவில் நிழலாடுகின்றன.

    அவருடைய பலம் என்ன? என்பதை அப்போதும், கால் நூற்றாண்டுக்குப் பிறகு இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

    வானொலிக் கலைஞர், தொலைக்காட்சிக் கலைஞர், மேடை நாடகக் கலைஞர், திரையில் மின்னும் நட்சத்திரம் என்று படிப்படியாக உயர்ந்து, இன்றும் மேடை நாடகத்தில் வரலாறு படைத்த சாதனையாளராகத் திகழ்வதின் பின்னணி என்ன?

    காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் - இயற்கையாக அவருக்குள்ள ஆற்றல், இறை நம்பிக்கை, தொழில் மீது பக்தி, அக்கறை, இன்வால்வ்மெண்ட், டெடிகேஷன், எதை, எப்படி சொல்ல வேண்டும் என்பதை அறிந்த நகைச்சுவை நடிகர்களை இன்றும் நம் நினைவில் நிற்கிறார்கள்.

    சேகரின் மேடை நாடகத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும்,

    ரசிகர்கள் கைதட்டி அலை ஓய்வதற்குள் அடுத்த ஜோக் தயாராக இருக்கும்

    சேகரின் குரல், நகைச்சுவைக்கென்றே படைக்கப்பட்டது. எல்லாவற்றையும் நகைச்சுவை உணர்வோடு பார்த்து, தான் அனுபவித்த நகைச்சுவை உணர்வை பிறர் உணர உரைக்கும் திறம் பெற்றவர். எதையும் சமாளிக்கும் திறம் பெற்றவர் மேடையில் அசந்தர்ப்பமாக தவறு நிகழ்ந்தால் கூட அலட்டிக் கொள்ளாதவர் -

    சமீபத்தில் ஒரு நாடகத்தில் பேசிய பெண், ல, ழ-வில் தவறிப்போனார்.

    விடுவாரா சேகர்!

    இதோ அவருடைய உடனடி வசனம்...

    என்னம்மா இது டெலிவிஷன் நிகழ்ச்சித்தொகுப்பாளர் மாதிரி பேசறே!

    கரவொலி அடங்க மிக நீண்ட நேரமானது. நாடகத்துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியவர் சேகர். வீடியோ, ஆடியோ என்று அவர் நாடகங்கள் பலர் இல்லங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

    திரையில் இயல்பான நகைச்சுவைக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வரிசையில் சேகருக்கும் மிக முக்கிய இடம் உண்டு.

    - ஏ. நடரஜன்

    முன்னால் இயக்குனர்

    சென்னை தொலைக்காட்சி

    சமர்ப்பணம்

    நாடகப்பிரியாவின் அனைத்து நாடகங்களும் (ஒன்றைத்தவிர) வெற்றி பெற்றதென்றால் அதற்கு முக்கிய காரணம் கடவுளுக்கும், ரசிகர்களுக்கும் அடுத்தபடியாக மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள். நாடகக் குழுவின் வெற்றி அந்தக் குழுவில் இருக்கும் நடிக நடிகையர்களைப் பொறுத்துத்தான். அவர்களுக்கு அந்தக் குழுவின் மேல் இருக்கும் அபிமானம், நன்றிக்கடன், விஸ்வாசம் இவற்றைப் பொறுத்துத்தான், அந்த நாடகக்குழு எத்தனை வருடங்கள் தொடர்ந்து நிலைக்கும் என்று கூற முடியும். அந்த வகையிலே இன்றும் நாடகப்பிரியா சிறந்து விளங்கக் காரணமாயிருந்தவர்களில் முதன்மையானவர் அமரர் திரு. பால கிருஷ்ணராவ். ஒவ்வொரு நாடகத்திலும் வேறுவேறு பாத்திரப் படைப்புக்களில் உங்களை மகிழ்வித்தவர். கண்ணாமூச்சியில் டாக்டராக, கிரேசி தீவ்ஸ்சில் காது கேளாதவராக, சொந்த வீடு வாடகை வீட்டில் குழந்தை சாமியாக, எக்சார்சிஸ்டில் பெண்ணுக்குத் தந்தையாக, மங்காத்தாவில் கட்டபொம்மனாக, காதுல பூவில் கிங்கரனாக, சிகாமணியில் கால்ல ஆணி வந்தவராக, வால்பையனில் நடிகர் மோகன்குமாராக, எல்லாரும் வாங்கவில் மிலிடரி சுந்தரம்பிள்ளையாக, எல்லாமே தமாஷ்தானில் போலீஸ்காரராக, யாமிருக்க பயமேனில் P.T. பாஷாவாக, பெரியதம்பியில் கிராமத்து ஆளாக தன்னை மாற்றிக் காட்டியவர். தன் குழந்தை இறந்த அன்று அதை அடக்கம் செய்துவிட்டு மாலை நாடகத்தை தவறவிடக்கூடாது என்று வந்து நடித்தவர். தந்தை இறந்த பத்து நாட்களுக்குள் புது நாடகத்தில் வந்து நடித்தவர். ஆனால் மைலாப்பூர் அகாடமியின் விருதை அவர் இறந்த பிறகு அவர் மகன் பெற்றுக்கொண்ட அளவிற்கு தாமதமாக கௌரவிக்கப்பட்டவர். இன்றும் எங்களின் எந்த பழைய நாடகங்களை போட்டாலும் பாலன் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப இயலவில்லை. அப்படிப் பட்ட சிறந்த நடிகரும், மிகச்சிறந்த எங்களின் குழு உறுப்பினரும், நண்பருமான பாலன் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

    பின்னி கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கும்போது நாடகப்பிரியாவில் இருந்தவர் திரு. ரமணி. 5 பிள்ளைகளுக்கு தந்தையானாலும் உடலாலும் மனதாலும் இளமையானவர் ரமணி. மிகுந்த நகைச்சுவை உணர்வு உடையவர். நாடகம் என்ற நினைப்பிலேயே எப்போதும் இருந்தாலும், 5 மகன்களையும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்தவர். ஐயப்ப பக்தர். மார்கழி மாத சமயத்தில் எந்த நாடகம் போட்டாலும் தாடியுடன்தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பவர். என்னுடைய ஆடிட்டருக்கும் எனக்கும் பாலமாக இருந்தவர். சிங்கப்பூர், இந்தோனேசியா, அமெரிக்கா, கனடா எந்த

    Enjoying the preview?
    Page 1 of 1