Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellamey Thamash Thaan
Ellamey Thamash Thaan
Ellamey Thamash Thaan
Ebook109 pages40 minutes

Ellamey Thamash Thaan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பபாட்டை பாடி பிரிந்தவர்கள் ஒன்று சேரலாம் என்பதால் மகாலஷ்மி தன் குடும்ப பாட்டின் மா பகுதியை பாடி வரும் தன் அண்ணன் சிங்கப்பூர் சிதம்பரத்தின் மகன் பிரேமுக்குத்தான் தன் பென் சித்ராவை கல்யாணம் செய்து வைக்கப்போவதாக சொல்கிறாள். சித்ராவை காதலிக்கும் கோபி பிரேமாகவும், தன் மேனேஜர் மார்த்தாண்டத்தை சிதம்பரமாகவும் நடிக்க வைக்க திட்டம் போடுகிறான் குடும்பப் பாட்டுடன் கோபி நுழைய அவனைத் தொடர்ந்து அதே பாட்டுடன், ஒரிஜினல் பிரேம் சிங்கப்பூர் சிதம்பரம், மேனேஜர் மார்த்தாண்டம் மூவரும் ஒருவர் பின் ஒருவராக நுழைவதால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது.

கோபி நிலைமையை சமாளிக்கிறான். பிரேம் வேலைக்காரி விஜயாவை காதலிப்பதால் கோபியை தன் மகனாக நடிக்க வைக்கும் சிதம்பரம் அவனுக்கே சித்ராவை கல்யாணம் செய்து வைக்கும்படி தங்கையிடம் கோர குடும்பப் பாட்டை பாடி அனைவரும் ஒன்று சேர்கின்றனர்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148907543
Ellamey Thamash Thaan

Read more from S.Ve. Shekher

Related to Ellamey Thamash Thaan

Related ebooks

Related categories

Reviews for Ellamey Thamash Thaan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellamey Thamash Thaan - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    எல்லாமே தமாஷ்தான்

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Ellamey Thamash Thaan

    கதை, வசனம்

    ஜி.கே

    நாடகமாக்கம், ஸ்க்ரிப்ட் எடிட்டிங், இயக்கம், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்சி 12

    காட்சி 13

    காட்சி 14

    காட்சி 15

    காட்சி 16

    அழ வைக்கும் உலகில் சிரிக்க வைக்கும் நண்பர்

    சேகரின் நாடகங்கள் வெறும் துணுக்குத் தோரணங்கள் என்றும், நாடகத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தால் ஒன்றுகூட ஞாபகம் இருக்காது என்றும், பல ஜோக்குகள் அபத்தம் என்றும் சிலர் என்னிடமே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    வீட்டிற்குப் போனால் பிரச்சினை. வெளியே போனால் பிரச்சினை. ஆபீசிற்கு போனால் பிரச்சினை என்று பிரச்சினைக் கடலில் நடுவே வாழும் மனிதர்கள் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு எஸ்.வி. சேகரின் கப்பலில் கொஞ்ச தூரம் உல்லாச பயணம் போய் வர முடிகிறது என்றால் அதுதான் அவரது வெற்றி. பத்திரிகை உலகத்தின் வீழ்ச்சிக்கும் திரை உலக சரிவிற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தாம் காரணம் என்று ஆள்காட்டி விரலை இவற்றை நோக்கிக் காட்டுபவர்கள், எஸ். வி. கேரின் நாடகத்திற்கு மட்டும் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருப்பதற்குக் காரணம் காட்ட முடியாமல் திணற வேண்டியிருக்கிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் நாடகம் நடத்த அஞ்சும் இந்தக் காலத்தில் எந்தக் கிழமையாக இருந்தால் எனக்கென்ன, என் நாடகத்துக்கு ஜனங்க வருவாங்க என்று தன்னம்பிக்கையோடு பேசும் சேகரைப் பார்த்து வியக்க வேண்டியிருக்கிறது. கதாசிரியர் எழுதிக் கொடுக்கிற வசனங்களை அப்படியே நெட்டுருப் பண்ணாமல், தன் மேடை அனுபவத்தையும் அதில் சேர்த்துக் குழைத்து எந்தெந்த இடம் சிரிப்பு எழாமல் இரண்டு நிமிடத்திற்கு மேல் நகருகிறதோ அந்த இடத்தை டிரிம் செய்துவிடுவார். அல்லது சிரிக்கும்படி இரண்டு வசனத்தை சேர்த்துவிடுவார். அன்றையச் செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் கேஷுவலாக வசனத்தில் பொருந்தும்படி சேர்த்துவிடுவதில் சேகர் ஒரு சமர்த்தர்.

    ஒரு நாடகத்தில் இப்படி ஒரு வசனம். ‘ராமர் இருக்கிற இடம்தான் சீதைக்கு அயோத்தி’, உடனே சேகர், ‘இதபார் ராமருக்கே அயோத்தியில லேண்ட் பிராப்ளம் சீதையை வேற கூட்டிட்டு போனா அவ்வளவுதான், சர்வசாதாரணமாக இந்த மாதிரியான விஷயத்தில் சேகருக்கு பிரசன்ஸ் ஆப் மைண்ட் பிரமாதமாக வேலை செய்யும். சிரிக்காதவர்களைக்கூடச் சிரிக்க வைக்கும் ஆற்றல் அவரிடம் உண்டு.

    திரையுலகில் இன்று நகைச்சுவை ஜாம்பவான்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் நடித்துக் காட்டிய காட்சிகளுக்கெல்லாம் சிரிக்காத நம் தமிழக முதல்வர், எஸ்.வி. சேகர் நாடகத்தின்போது மட்டும் அப்படி சிரித்தார். நம் முதல்வர் இந்த அளவுக்கு சிரிப்பார்கள், இரசிப்பார்கள் என்பதே அன்று தான் தெரியும் கோல்டன் பீச்சின் நுழைவாயிலில் வி.ஜி. பன்னீர்தாஸ் ஒரு புதுமையை அறிமுகப்படுத்தி இருந்தார். அங்கு அரண்மனை வாயிற்காப்போன் மாதிரி ஒருவர் நிற்பார். அவர் கண்களைக்கூட இமைக்காமல் நிற்பார் மணிக்கணக்கில். அவரைச் சிரிக்க வைக்க முயன்று தோற்றவர்கள் பலர். எஸ்.வி. சேகரிடம் மட்டும் இவரது ஜம்பம் சாயாது என நினைக்கிறேன். அப்படி எவரையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் அவரிடம் உண்டு.

    இன்று அழவைக்க எத்தனையோ பேர் இருக்கிறார்கள் எரிச்சலூட்டுவதற்கு அதைவிட அதிகமான பேர் இருக்கிறார்கள் ஆனால், சேகர் அளவிற்கு நாடகத்தில் சிரிக்க வைக்க யார் இருக்கிறார்கள்?

    - லேனா தமிழ்வாணன்

    3000வது நாடக விழா மலரிலிருந்து

    சமர்ப்பணம்

    1992-ம் வருடம் சிங்கப்பூரில் நாடகம் நடத்தச் சென்றபோது செராங்கூன் ரோடில் உள்ள செராங்கூன் பிளாசா வாசலில் ஹலோ எஸ்.வி. எப்படி இருக்கீங்க? நான் சுரேஷ். நான் உங்க விசிறி. இங்க ஒரு பாங்குல வேலை பார்க்கிறேன் என்று அறிமுகமாகி இன்று என்னுடைய தம்பிகளில் ஒருவனாகியவன் சுரேஷ் என்ற சுரேஷ் வெங்கடாச்சாரி. சிதம்பரத்தில் பிறந்து சிதம்பரம் யூனிவர்சிடியில் படித்து, சிங்கப்பூரில் வேலைபார்த்து, இப்போது சிங்கப்பூர், சென்னை, ஆஸ்திரேலியா, துபாய், லண்டன், அமெரிக்கா ஆகிய இடங்களில் கம்பெனி நடத்திக்கொண்டு வரும் அளவிற்கு உயர்ந்தவன். நட்பை பெரிதும் மதிப்பவன். இன்று என்னைவிட என் பையனிடம் நண்பனாக பழகும் அளவிற்கு இளமை மனதுடையவன். சுரேஷ் தாய், தந்தை, மனைவி லக்ஷ்மி, மகன் ஸ்ரீராம், மகள் வினோதினி அனைவரும் என் நாடகத்தின் ரசிகர்கள். எங்களின் குடும்ப நண்பர்கள்.

    1994-ம் ஆண்டு அமெரிக்காவில் நாடகம் நடத்தச் சென்றபோது பிட்ஸ்பர்க்கில் நண்பரே, நான் லேனா கண்ணப்பன் உங்கள் மாமா பி.வி.ஆரிடம் தஞ்சாவூரில் படித்தவன்; உங்களின் விசிறி என்று அறிமுகமாகி ஒரு தமிழ் நாடக சினிமா நடிகனுக்கு ஆசியாவிலேயே முதல் முதலில் www.sveshekher.com என்ற வெப் – சைட்டை துவக்கியவன். என் இனிய நண்பன். என் வழியாக தன்னுடைய காலேஜில் படித்த நண்பனான சுரேஷை அமெரிக்காவில் சந்தித்து நட்பை புதுப்பித்துக் கொண்டவன். சில சமயம், செய்யும் தொழிலைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்பவன். தமிழ்நாடு பவண்டேஷன் என்ற ஒரு சமூக சேவை அமைப்பில் முக்கிய பங்கு வகிப்பவன். எனக்கு அமெரிக்காவில் பலநண்பர்களை

    Enjoying the preview?
    Page 1 of 1