Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannamoochi
Kannamoochi
Kannamoochi
Ebook104 pages40 minutes

Kannamoochi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராமச்சந்திரன், சந்திரசேகரன் இருவரும் சந்துரு என்றழைக்கப்படுவதால் ஏற்படும் குழப்பங்களே கதை, ராமச்சந்திரன், தன் மாமாவின் வீட்டை அவருக்குத் தெரியாமல் லஷ்மி என்ற மனைவியும் குழந்தையும் உள்ள நண்பன் சந்திரசேகரனுக்கு வாடகைக்கு விடுகிறான். ராமுவின் மாமா ஊரிலிருந்து வர சந்திரசேகரனை ஜகனின் நண்பரின் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கிறான் அந்த வீட்டில் உஷா என்ற பைத்தியம் சந்துருவை தன் கணவன் என்கிறாள். அதைப் பார்க்கும் லட்சுமியின் அட்வகேட் மாமா சந்திரசேகரனை கோர்ட்டுக்கு இழுப்பதாகச் சொல்கிறார். ராமுவின் மாமா லட்சுமியை அவன் மனைவி என்று நினைக்கிறார். உஷா தான் காதலிக்கும் சந்துரு ராமசந்திரன்தான் என்று கூறி குழப்பத்தை தீர்த்து வைக்கிறாள்.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580148907598
Kannamoochi

Read more from S.Ve. Shekher

Related to Kannamoochi

Related ebooks

Related categories

Reviews for Kannamoochi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannamoochi - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    கண்ணாமூச்சி

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Kannamoochi

    கதை, வசனம், டைரக்‌ஷன்

    கே.கே. ராமன் & சாரதி

    தயாரிப்பு

    S.Ve. சேகர், சுந்தா

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    காமெடிக் காவலன் எஸ்.வி. சேகர்

    சமீபத்தில் என் காதுகளில் செந்தமிழ் நாடென்னும் போதினிலேவுக்குச் சமமாக தேன் வந்து பாயவைத்த செய்தி இது தான்...

    அரதப் பழசான ஒரு தமிழ் சினிமாவைப் பார்க்க பாரகன் தியேட்டருக்குச் சென்ற என் நண்பன் அங்கு ஐம்பது, நூறு என்று பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுவதைப் பார்த்து ஆடிப் போயிருக்கான். கிட்டதட்ட எம்.கே.டி, வயசான அந்த சினிமாவுக்கு வந்த வாழ்வை நினைத்தபடி நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய நண்பன், டிக்கெட்டில் எஸ்.வி. சேகர் டிராமா விவரங்கள் இருப்பதைப் பார்த்து, ஏற்கனவே ஆடிப்போன அவன் ஆவணிப்போய் அருகில் உள்ள ஐம்பது நூறு கொடுத்த சக ஆசாமிகளை விசாரித்திருக்கிறான். அவர்கள் பாரகனுக்கு எதிரே உள்ள கலைவாணர் அரங்கம் கேட் வரை ‘சேகர் - அதிசயம்’ காண நிரம்பி வழிவதைக் காட்டிவிட்டு, ‘பெரிய தம்பி’க்காக கூடிய பேரணி இதுவென்று கூறிவிட்டு பாரகனிலிருந்து கலைவாணருக்கு அவசர அவசரமாக ஓடியிருக்கிறார்கள்.

    பாமாயில், கெரஸின் க்யூவுக்கு போட்டியாக ஒரு டிராமா டிக்கெட் க்யூ சினிமா தியேட்டர் வரை நீண்டு பிளாக்கில் விற்கப்படுவதை மறுநாள் மூச்சிறைக்க என்னிடம் கூறிவிட்டு வாயைப் பிளந்தான் என் நண்பன். இதைக் கேட்ட எனக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த சந்தோஷம். மாங்காய் நம்பர் 1... சேகர் உபயத்தால் கடந்த பத்து பதினைந்து வருடங்களாக நகைச்சுவைக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அந்தஸ்து, மாங்காய் நம்பர் 2... தமிழ் நாடகம் தளர்ந்து விட்டது. டி.வி. வீடியோ, ரேடியோ, தையல் மெஷின், வாஷிங் மெஷின் இவைகளால் பாதிக்கப்பட்டுவிட்டது... என்றெல்லாம் ஒப்பாரி வைக்கும் அந்த விமர்சக நண்பரின் மூக்கு உடைப்பட்டது.

    1973-இல் கல்லூரியில் பத்து, பதினைந்து நிமிட நாடகங்கள் போட்டுக் கொண்டிருந்த நான், நடிப்பதற்காக நண்பர் கே.கே. ராமன் மூலமாக நாடகப்பிரியாவுக்கு வந்தேன். நடிக்க வந்த என்னை எழுதச் சொன்னார் எஸ்.வி. சேகர். ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகத்தை நான் படித்துக் காட்டியபோது, சேகரைத் தவிர மற்றவர்கள் என்னை ஒரு மாதிரியாக நம்புகத்தனமாகப் பார்த்தார்கள். எனது முதல் பிரசவமான நாடக சீமந்தப்புத்திரனை சென்னை மேடைகளில் சீராட்டி தாலாட்டி புஷ்டியாக்கினது சேகர்தான். தற்சமயம் நான் பதினாறுக்கும் மேலே பெற்று பெருவாழ்வு வாழ்ந்தாலும், எனது முதல் குழந்தையை உச்சி முகர்ந்து தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடிய சேகரைப் பற்றி உயர்வாகச் சொல்ல வேண்டுமானால் தனி புத்தகமே வேண்டும். எனது மூன்று நாடகங்களை நடித்துக்காட்டி அதற்குப் பெருமை சேர்த்த நாடகப்பிரியா குழுவினருக்கு அனந்த கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஓரிரு உம்மனா மூஞ்சிக்காரர்கள் சேகரின் நாடகங்கள் துணுக்குத் தோரணம், அவரைக்காய் பந்தல்... என்று விமர்சனம் என்ற பெயரில் தனக்குத்தானே அசட்டுப்பிசட்டென்று பேசிக் கொள்ளலாம். அவர்களுக்கென்ன சொல்லிவிட்டு போய் விடுவார்கள். பலர் விரும்பும் காமெடிக்காக கின்னசுக்கு சமமான விடாமுயற்சியோடு கடந்த இருபத்தைந்து வருடங்களாக சேகர் நாடகம் போட்டுக் கொண்டிருந்ததனால்தான், பின்னால் வந்த என் போன்றவர்களுக்கு மேடைகளும், அரங்கங்களும் வசதியாகக் கிடைத்தன. சேகர் மட்டும் நாடகம் போடாமல் இருந்திருந்தால் இந்நேரம் சென்னையில் நாடக அரங்குகள் இருக்கும் இடத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களும் கட்டப்பட்டிருந்தால் கூட ஆச்சரியமில்லை.

    மக்கள் சிரிப்பே மகேன் சிரிப்பு என்று மெஸேஜை பரப்பிக் கொண்டிருக்கும் சேகரை விளம்பரங்களில் காமெடி கிங் என்று போடுகிறார்கள், அது தவறு. சேகர் காமெடி கிங் அல்ல... காமெடிக் காவலன். ஆம்! சிரிப்பதையே பாவம் என்பது போல சிரிக்க மறந்து விட்ட இந்நாளில், சேகர் மட்டும் இல்லாவிட்டால், நகைச்சுவைக்கு ஒரு சிலை செய்து பிறப்பு - இறப்பு போட்டு மியூசியத்தில் வைத்து இருப்பார்கள். இந்த கிரேஸிக்கு கிரோவியான காமெடி கோட்டையின் காவல்காரன் எஸ்.வி. சேகர் பல்லாண்டு வாழ்ந்து பலரை சிரிக்க வைப்பதனால் நோயின்றி பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல எனது குலதெய்வம் உப்பிலியப்பனை வேண்டிக் கொள்கிறேன்.

    வாழ்க சேகர்! வளர்க காமெடி! இவரது அடுத்த சாதனையைப் பாராட்ட காத்திருக்கும்,

    பால்ய நண்பன்

    - ‘கிரேஸி’ மோகன்

    சமர்ப்பணம்

    நாடகப் பிரியாவின் நாடகங்கள் இன்றும் புகழ் பெற்றும், ரசிக்கும்படியாக இருக்கிறது என்றால் அதற்கு முதற் காரணம் கடவுளின் அருளும் அடுத்தபடியாக ரசிகர்களாகிய நீங்களும்தான்.

    அரங்க வாடகையும்

    Enjoying the preview?
    Page 1 of 1