Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athirshtakaran
Athirshtakaran
Athirshtakaran
Ebook122 pages44 minutes

Athirshtakaran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதாநாயகன் கோபாலகிருஷ்ணனின் அம்மா புல்லட்புஷ்பா ஒரு பகட்டுப் பேர்வழி. கதாநாயகி பாமாவின் அப்பா ஜொள்ளு ஜக்கு வயசு வித்தியாசம் பார்க்காமல் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடுபவர்.

கோபாலகிருஷ்ணன், பாமா இருவரும் பெற்றேர்களுக்கெதிராக போலீஸ் கிற ஸ்டேஷனில் கல்யாணம் செய்து கொள்கின்றனர். கோபாலகிருஷ்ணன் சின்ன விஷயத்திற்காக கூறும் சிறுசிறு பொய்கள் அவனுக்கெதிராக பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. பாமாவை பொமிரட்ட கோபாலகிருஷ்ணன் ஒரு பெண் தன்னை காதலிப்பதாக சொல்ல அவன் கொடுத்த யான அட்ரசில் இருக்கும் ருக்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறாள் பாமா.

பாமா ருக்மணியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறான் கோபாலகிருஷ்ணன் விவாகரத்து வரை செல்லும் பாமா, கடைசியில் உண்மை தெரிந்து கணவருடன் இணைகிறாள்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148907542
Athirshtakaran

Read more from S.Ve. Shekher

Related to Athirshtakaran

Related ebooks

Related categories

Reviews for Athirshtakaran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athirshtakaran - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    அதிர்ஷ்டக்காரன்

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Athirshtakaran

    வசனம்

    ஜி.கே

    கதை, நாடகமாக்கம், இயக்கம், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்சி 12

    காட்சி 13

    காட்சி 14

    காட்சி 15

    காட்சி 16

    காட்சி 17

    காட்சி 18

    காட்சி 19

    26.9.1992 அன்று 3000-ஆவது நாடக விழாவில்

    தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமை உரையிலிருந்து

    தமிழ் நாடக உலகில் தனது சிறந்த நகைச்சவை நாடகங்களின் மூலம், தனக்கென தனி முத்திரையை பதித்து அனைவருக்கும் அறிமுகமான நல்ல கலைஞர் எஸ்.வி. சேகர் கடந்த 18 ஆண்டுகளாக நாடகப்பிரியா என்னும் நாடகக் குழுவை வெற்றிகரமாக நடத்தியதோடு, 3000-வது முறையாக தன்னுடைய குழுவினரோடு நாடகங்களை நடத்தும் சாதனையை பாராட்டும் வகையில் நடத்தப்படும் இந்த இனிய விழாவில் கலந்துகொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவரது ‘பெரிய தம்பி’ என்னும் நாடகத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளமைக்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

    தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ், சகோதரர்கள் மற்றும் நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் போன்ற அறிஞர்கள் நாடகக் கலையின் வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றி இருக்கிறார்கள் என்பது உண்மை ஆகும். சமூக நாடகங்களும் புராண நாடகங்களும் மக்களுக்கு தேவையான கருத்துக்களை வழங்கியதோடு மட்டும் அல்லாமல், இந்திய சுதந்திரத்திற்கும், எழுச்சியை ஊட்டிய வரலாறு நம்மிடம் உண்டு.

    அந்த வகையில் இன்றைய கால கட்டத்தில், நகைச்சுவை நாடகங்களை படைப்பதையே தனது லட்சியமாகக் கொண்டு, அந்த முயற்சியில் மகத்தான வெற்றி பெற்ற நாடகங்களை நடத்திவருபவர்தான் எஸ்.வி. சேகர். நகைச்சுவை நடிப்பிற்கு சில தகுதிகள் உண்டு. நடிகர் ஒருவர் தனது நடிப்பால் காண்போரை அழவைப்பது எளிது. ஆனால் அதே நேரத்தில் நமது நடிப்பால் சிரிக்க வைப்பது என்பது மிகமிக கடினம். இத்தகைய கடினமான பின்னணி கொண்ட துறையில், தற்போது நகைச்சுவை நாடகங்கள் என்றால், அது எஸ்.வி. சேகருடைய நாடகங்கள்தான் என்ற ஒரு சாதனையை படைத்து இருக்கிறார் சகோதரர் எஸ்.வி. சேகர்.

    நாடகக் கலையினை வெற்றிகரமாக நடத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நாடகங்கள் ஒவ்வொரு முறையும் நடத்தப்படும்போது, புதிதாக ஒரு நாடகம் அரங்கேற்றுவது போன்ற நிலையை உண்டு பண்ணுவதற்கு அசாத்திய திறமை வேண்டும். நாடகத்தை பார்க்கின்ற ரசிகர்கள், நாடக நடிகர்களின் நடிப்பின் நுணுக்கங்களை நேரடியாக ரசித்து, தங்கள் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் வெளிப்படுத்துகிற வாய்ப்பு நாடகத்திற்கு மட்டுமே உண்டு.

    எனவே நடிகர்கள் சரிவர நாடகக்காட்சிக்கு ஏற்றால்போல் உணர்ச்சிகளை காட்டத் தவறினால், நாடகம் வெற்றி அடைய இயலாது; நடிகர்கள் பாராட்டு பெற முடியாது. அதிலும் குறிப்பாக நகைச்சுவை மேடை நாடகங்களில் நடிகர்கள் நகைச்சுவை ததும்ப வசனங்களை உச்சரிக்கும் முறையிலும், குரலின் ஏற்ற இறக்கத்திலும், உடலின் அசைவிலும்தான் நகைச்சுவை உணர்வினை வெளிப்படுத்த முடியும்... ஒரு நகைச்சுவை நடிகருக்கு உரித்தான அத்தனை அம்சங்களும் அமையப்பெற்ற சிறந்த நடிகர் எமது எஸ்.வி. சேகர் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

    ரசிகர்களை சிரிக்க வைப்பதையே தன் லட்சியமாகக் கொண்டு திகழும் எஸ்.வி. சேகர் ஒரு நாடகக் குழுவைத் தொடர்ந்து நடத்திவருவதோடு, திரை உலகிலும் அறிமுகமாகி இதுவரை 78 திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். இவரது நாடகங்கள் தொலைகாட்சியிலும் தொடர் நாடகங்களாக ஒளிபரப்பப்பட்டு மக்கள் மனதை கவர்ந்து இருக்கின்றன என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த செய்திதான். ஆனால் இவரது நாடகக்குழு பல்வேறு சமுதாய பணிகளையும் ஆற்றி இருக்கிறது என்று அறியும்போது மிகுந்த மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்துகிறது...

    இத்தனை பெருமைகளையும் பெற்ற எஸ்.வி. சேகருக்கும், அவரது நாடகக்குழுவை சேர்ந்த நடிகர்கள் நடிகையர்களுக்கும்,மற்றவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சமர்ப்பணம்

    இன்றைக்கு இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்றால் இந்துக்களின் தலைநகரமாக விளங்குவது காஞ்சி ஸ்ரீ மடம்.

    நடமாடும் தெய்வங்களான காஞ்சி ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர ஜெயேந்திர சரஸ்வதியான புதுப் பெரியவாளும், ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர வியஜேந்திர ரஸ்வதியான பால பெரியவாளும் ஒவ்வொருமுறை என்னையும் என் குடும்பத்தாரையும் ஆசீர்வதிக்கும்போது நாங்கள் பெறும் நன்மைகளை உயர்வுகளை வார்த்தையால் விவரிக்க முடியாது. காஞ்சி சங்கர மடத்தின் செல்லப் பிள்ளை எஸ்.வி. சேகர் என்று சில பத்திரிகைகள் எழுதியபோது கோடி ரூபாய் சம்பாதித்தாலும் கிடைக்காத சந்தோஷம் இன்றுவரை எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பெரியவரிடம் ஒரு முறை நானும் தங்களுடன் வட இந்திய சுற்றுப்பயணம் வருகிறேன் என்றபோது நீதான் உன் ஆடியோ கேசட்டில் என்னுடன் வந்துகொண்டிருக்கிறாயே என்றபோது வேறு எந்த கலைஞனுக்கும் கிடைக்காத கௌரவம் எனக்கும் என் நாடகக் குழுவிற்கும் கிடைத்தது.

    இன்றும் எங்களின் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம் காஞ்சி பெரியவர்களின் ஆசிகள்தான்.

    ஒரே நாளில் என்னுடைய முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவருவதென்றால் அதுவும் நடமாடும் தெய்வங்கள். காஞ்சி சங்கராச்சாரியார்கள் அவர்கள் ஆசிகள்தான் காரணம். காஞ்சிப் பெரியவர்களின் ஆசிபெற்ற நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டக்காரந்தான்.

    கிருஷ்ணா கிருஷ்ணா என்ற திரைப்படமாக வந்த இந்த அதிர்ஷ்டக்காரனை காஞ்சி சங்கராச்சாரியார்கள் அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

    காட்சி 1

    இடம்: ஜொள்ளு ஜகன்னாதன் வீடு

    பாத்திரங்கள்: தரகர், தங்கசாமி, ஜொள்ளு ஜகன்னாதன், பாமா, ஜோசியர்

    தரகர்: ஆண்டவா - எல்லோரையும் நல்லபடியா வைப்பா...

    தங்கசா: யோவ் ஜொள்ளு... ஜொள்ளு...

    ஜக்கு: வா தரகா எங்க இந்தப் பக்கம்...

    தரகர்: ம்... போபர்ஸ் பைல்ஸ் எல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1