Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathula Poo
Kaathula Poo
Kaathula Poo
Ebook95 pages35 minutes

Kaathula Poo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீடுகளுக்கு புது நம்பர் கொடுக்கப்பட்டதால் ஏற்படும் குழப்பத்தில், எமகிங்கரர்கள் தவறுதலாக மார்கண்டேயன் என்பவனை எமலோகம் அழைத்து வருகின்றனர். மார்கண்டேயனுக்கும் சிவபெருமானின் நெற்றிக் கண்ணுக்கும் பயந்து எமன் அவனை பூலோகம் அனுப்பி வைக்கப்படாத பாடுபடுகிறான்.

மார்கண்டேயனைப் போலவே உள்ள கண்ணப்பன் ஒரு விபத்தில் இறக்க இருப்பதால் கண்ணப்பனுக்கு பதில் அவன் வீட்டில் மார்க்கண்டேயனை விட்டுவிடத்தீர்மானிக்கின்றனர். ஆனால் கண்ணப்பன் விபத்திலிருந்து தப்பி வீடு திரும்புகிறான். ஒரே வீட்டில் இரு கணவன்மார்கள் இருக்கக்கூடாது என்பதால் மார்கண்டேயனை அழைத்து வரச்செல்லும் கிங்கரர்கள் மறுபடியும் தவறுதலாக கண்ணப்பனை மேலோகம் அழைத்து வருகின்றனர்.

இம்முறை மார்கண்டேயனின் உயிரை எடுக்க எமனே பூலோகம் வருகிறான். அதற்குள் மார்கண்டேயன் சாவித்திரி திருமணம் நடந்து விடுகிறது. சாவித்திரிக்கு வாக்கு கொடுத்த எமன் மார்கண்டேயனின் உயிரை எடுக்க முடியாமல் ஏமாந்து போகிறான். தம்பதிகள் சேருகின்றனர்.

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580148907596
Kaathula Poo

Read more from S.Ve. Shekher

Related to Kaathula Poo

Related ebooks

Related categories

Reviews for Kaathula Poo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathula Poo - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    காதுல பூ

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Kaathula Poo

    கதை, வசனம்

    ராதா

    ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், நாடகமாக்கம்,

    ஸ்க்ரிப்ட் எடிட்டிங், டைரக்ஷ்ன், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    ஒரு அதிர்ஷ்டக்காரனின் நட்பு...

    1975-ஆம் வருடம் மார்ச் மாதத்தில் ஒரு நாள் ‘ரகசியம் பரம ரகசியம்’ என்ற என் முதல் நாடகம் மேடையேறிய வெற்றிக் களிப்பில் நான் வியந்திருந்தேன். ‘நாடகம் நன்றாக இருந்தது’ என்ற குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். துருதுருவென, சிகப்பாக, கன்னத்தில் குழி விழ சிரித்தபடி ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். எஸ்.வி. சேகர் என்ற அந்த ‘அதிர்ஷ்டக்காரனின் நட்பு’ எனக்கு இப்படித்தான் கிட்டியது. இன்றுவரை அவர் நட்பு தொடர்கிறது...

    மூவாயிரம் நாடகங்களுக்கு மேல் மேடையில் தோன்றி ரசிகர்களை விழாக் குலுங்க சிரிக்க வைக்கும் இந்த ‘நகைச்சுவை நாயகனை’ எப்படிப் பாராட்டுவது? - தெரியாமல் திகைக்கின்றேன். அன்றும் சரி இன்றும் சரி இவர் நாடக உலகத்தின் முடிசூடா சக்கரவர்த்தி. இவருக்கு இணையாக வசூல் குவிக்கும் கலைஞர்கள் எழுத்திலும் சரி நடிப்பிலும் சரி இருந்ததில்லை என்பது உண்மை. எனக்கு இது கசக்கவில்லை. யாருக்காவது கசந்தால் மன்னிக்கவும்! பிரமையிலிருந்து மீளுங்கள், வேறு வழி இல்லை! இவர் நாடக உலகின் மீது ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அப்படிப்பட்டது!

    சிரிக்க வைப்பது ஒன்றும் அப்படி சுலபமான வேலை இல்லை. இது இவருக்காக இரு நாடகங்களை நான் எழுதியபோது கண்டு தெரிந்த உண்மை. தனக்கென்று ஒரு பாணி வைத்திருக்கிறார். ரசிகர்களை நன்கு புரிந்து வைத்து செயல்படுகிறார். வெற்றி ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை இவரிடம். இவரது வெற்றிக்குப் பின் அயராத உழைப்பு, தளராத தன்னம்பிக்கை பின்பலமாக இருந்திருக்கிறது. நான் கூட இவரை ‘நீ நாடக உலக M.G.R.’ என்றிருக்கிறேன்!

    அவரைப் போன்ற நீடித்த கீர்த்தி, செல்வாக்கு, முகவசீகரம், பரந்த மனம் எல்லாமே சேகருக்கு உண்டு. நண்பனாகக் கருதி என்னிடம் அவர் காட்டி வரும் அன்பின் பவித்ரம் பற்றி காகிதத்தில் நான் கிறுக்க முடியாது. ஒரு தேர்ந்த நடிகனாக என் படங்களில் அவர் தந்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் பற்றி நிறைய பேசலாம்.

    சூப்பர் ஸ்டார் என்பவனுக்கு சில லட்சணங்கள் உண்டு. காலத்தின் கடுமையை மீறி நிற்பான் அவன். நாடக உலகத்தைப் பொறுத்த வரை துணிந்து கூறலாம். S.Ve. Shekher ஒரு Super Star...

    என் இனிய நண்பனே! கலைத்தாயின் மடியில் செல்லமாய் வளரும் நகைச்சுவை தமிழே! தூய உள்ளம் கொண்ட கலைத் தென்றலே...

    3000-ம் என்ன? மூன்று லட்சம் தரம் நீ தமிழ் நாடக மேடைகளில் தோன்ற வேண்டும்... உன் மூச்சுக் காற்று நகைச்சுவை பயிர்களுக்கு பிராணவாயுவாகி... அவைப் புதுப்பொலிவுடன் வளர வேண்டும்... சிரிக்க வை சேகர்! அல்லும் பகலும் உழண்டு, மனக் கிளர்ச்சியினால் பல நோய்களைத் தாங்கி, துவண்டு நிற்கும் ஜீவன்களை - உன் சிரிப்பலைகளால் தட்டி எழுப்பு! மடியும் ஸெல்கள் கூட உன் ஜோக்குகளால் பிழைத்துக் கொள்ளுமே!...

    நீ பிறரை சிரிக்க வைக்க - பிறர் கவலைக்கு உன் நாடகங்கள் மருந்தாக -

    தமிழ் நாடக மேடை உன் ஆக்கிரமிப்பாய் மேலும் தழைக்க - இன்னும் முன்னேறு!

    இறைவன் உனக்கு நீடித்த, ஆனந்தமான, ஆரோக்யமான, அதிசயமான வாழ்வை - அற்புதப் பிரசாதமாக வழங்கட்டும்.

    - வெங்கட் (கதாசிரியர் - இயக்குநர்)

    (3000-ஆவது நாடக விழா மலரிலிருந்து)

    சமர்ப்பணம்

    நாடகப் பிரியாவின் பாரி வெங்கட் - துருவ நட்சத்திரமாக விளங்க வேண்டியவன். திடீரென்று வால் நட்சத்திரமாக மறைந்ததை எங்களால் இன்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்தப் பாத்திரத்தையும் அனாயாசமாக வித்தியாசமாக நடிப்பவன். சிறப்பாக மிமிக்கிரி செய்யத் தெரிந்தவன். பெற்ற தாயையையும், மனைவி குழந்தைகளையும் தம்பியையும் மிகவும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்று இரவு பகலாக உழைத்தவன். டாக்சி டாக்சி

    Enjoying the preview?
    Page 1 of 1