Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellarum Vaanga
Ellarum Vaanga
Ellarum Vaanga
Ebook99 pages37 minutes

Ellarum Vaanga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிச்சை என்கிற ராஜாவும் சீதாவும் காதலர்கள். ஆனால் சீதா தன் பெற்றோர் சம்மதித்தால் தான் திருமணம் என்று கூறுகிறாள். சீதாவின் வீட்டிற்கே தான் கல்யாணமானவன் என்று கூறி ராஜா குடி வருகிறான். காதலி சீதாவையே தன் மனைவி நரசம்மாவாக அறிமுகப்படுத்துகின்றான். மாடி வீட்டு நரசிம்மன் குண்டூர் நரசம்மாவின் தந்தையை அழைத்து வருகிறார். சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்படுகின்றது. பெற்றவர்களே தாலி எடுத்து கொடுக்க புத்திசாலித்தனமாக பிச்சை என்கிற ராஜாராமன் நரசம்மா என்கிற சீதாவின் கழுத்தில் தாலி கட்டுகின்றான்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580148907599
Ellarum Vaanga

Read more from S.Ve. Shekher

Related to Ellarum Vaanga

Related ebooks

Related categories

Reviews for Ellarum Vaanga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellarum Vaanga - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    எல்லாரும் வாங்க

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Ellarum Vaanga

    கதை, வசனம்

    ஜி.கே

    ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், ஸ்க்ரிப்ட் எடிட்டிங், டைரக்‌ஷன் & தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சிகர சேகரன்

    ஒன்றா, இரண்டா... 3500 நாடகங்கள்?!

    மலைப்பு தட்டுகிறதல்லவா! இது ஒரு தனிமனிதனின் சாதனை எனும்போது வியப்பு நேரிடுகிறது! மக்கள் ஆதரவின்றி இந்த சாதனை சாத்தியமா? இதனின்றும் அவருக்கு ரசிகர்கள் எவ்வளவு அமோகமான ஆதரவைத் தந்துள்ளார்கள் என்பது புரியும்.

    எப்போதும் ஹவுஸ் புல்...

    சில சமயம் ஒரே நாளில் இரண்டு நாடகங்கள். இந்தியாவில் அவர் நாடகம் அரங்கேறாத நகரமே கிடையாது. வெளிநாட்டிலும் - குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்காவிலும் அவர் நாடகங்கள் அரங்கேறியுள்ளன!

    சபா காரியதரிசி - மூச்! எல்லாம் அவரே... ஜெயமோ தோல்வியோ பாரம் அவர்மீது! அவர் நாடக பாணியே அலாதி. மக்களுக்கு எக்கச்சக்க பிரச்சனைகள், ரேஷனிலிருந்து, தண்ணீர் வரை நூறு பிடுங்கல். நாடகத்திற்கு வருபவர்கள் ஒரு 2 மணி நேரமாவது வாய்விட்டு சிரித்து மகிழ வேண்டும் என்பதுதான் அவர் குறிக்கோள்! காட்சி ஜோடனைகள், மந்திர தந்திர காட்சிகள், அறவே கிடையாது. நடிப்புதான் ஆணிவேர். Timing அவருக்குக் கைவந்த கலை. அவர் வீசும் ஹாஸ்ய வெடி குண்டு வெடிக்காமல் போனதேயில்லை! ஆனால் அவர் சிரிக்கமாட்டார்! அடுத்த வசனத்திற்குப் போய்விடுவார். அண்ணாசாமி பாகவதரைப்போல...

    அவர் நாடகத்தில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை - பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு பிரசுரிக்கும்! அவ்வளவு ஒரிஜினல் அவைகள் அன்றாட அரசியல், சமூக நிகழ்ச்சிகளை ஒட்டி இருக்கும். தான் என்னவோ அறிவு ஜீவி என்றும், நாடக புனருத்தாரணம் செய்ய வந்திருப்பதாகவும் - அவர் என்றுமே பறைசாற்றிக் கொண்டதில்லை! அதுசரி... அவர் நாடகங்கள் என்ன, வெறும் துணுக்குத் தோரணங்களா?

    கிடையாது! கிடையவே கிடையாது! அடித்தளத்தில் ஒரு உண்மை இருக்கும்.

    அரசியல் சமூக ஊழலை நையாண்டி செய்த வண்ணம் அமைந்திருக்கும். நாடகம் பூராவும் ஒரு உண்மைக் கருத்து இழையோடி இருக்கும்!

    நாடகம் அவருக்குப் பிழைப்பு அன்று! அவர் ஒரு கணிப்பொறியாளர், நாடகக் கலையின் மீதுள்ள அளவிலா மோகத்தினால் அதில் ஈடுபாடு கொண்டுள்ளவர்.

    மற்றொரு அம்சம் -

    நாடகத்தில் தன்னை மாத்திரம் பிரசங்கப்படுத்திக்கொள்ளும் மௌடீகம் அவருக்குக் கிடையாது!

    எல்லா நடிகருக்கும் அதில் சம வாய்ப்பு இருக்கிறது! பந்தா கிடையாது. சக நடிகர்களை சரிசமமாக நடத்துபவர். கண்கூடாகவும் பார்த்திருக்கிறேன்!

    அது சரி, யார் இந்த கூத்தாடி என இதுவரை சொல்லவில்லையே...

    அவர்தான் எஸ்.வி. சேகர்!

    அவர் நாடகங்களின் 3500-ஆவது விழா இம்மாதம் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    ஆனால் ஒரே ஒரு சமர்ப்பணம்! என்றாவது - மருந்துக்கு ஒரு சுத்த, தெள்ளு தமிழ் நாடகம் போடுவாரா?

    காலம் வரும் காத்திருப்போம்.

    - சுப்புடு

    3500வது நாடக விழா மலரிலிருந்து

    சமர்ப்பணம்

    எங்க வீட்டுல எங்க அப்பாவை நாங்க எல்லாரும் அண்ணான்னுதான் கூப்புடுவோம். அதற்குக்காரணம் தன்னுடைய 22ம் வயதிலேயே இந்தியன் ஏர்ஃபோர்சில் கிடைத்த வேலையைவிட்டு விட்டு தன் தந்தையின் மறைவுக்குப்பின் குடும்ப பாரத்தை சுமக்க ஆரம்பித்தார். எங்க சித்தப்பா அத்தையெல்லாம் எங்க அப்பாவை அண்ணான்னு கூப்புடறதைக் கேட்ட நாங்களும் அப்பாவை அண்ணான்னே கூப்பிட ஆரம்பிச்சோம். ஆனா அம்மா மட்டும் அம்மாவாவே இருந்துட்டாங்க.

    எங்க வீட்டுல நான் மூத்த பையனாக இருந்தாலும் எனக்கும் ஒரு அண்ணா மன்னி உண்டென்றால் அது நடிகர் சாருஹாசன், அவர்களும் பாப்ளி என்று செல்லமாக அழைக்கப்படும் திருமதி சாருஹாசனான மன்னியும்தான். நான் பெறாத பிள்ளை என்று இன்றும் பெருமையாக சொல்லிக் கொள்ளும் மன்னி.

    நாடகப் பிரியாவின் அனைத்து வசன புஸ்தகங்களும் எழுதி வந்த உடன் - ரிகர்சல் ஆரம்பிப்பதற்கு முன்னால் படித்துப் பார்த்து கருத்து சொல்லும் அதிகாரம் படைத்த மூவர். 1. என் தந்தை எஸ்.வி. வெங்கடராமன், 2. மன்னி, 3. என் நண்பன் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.

    ஜனாதிபதி விருது பெற்ற சுஹாசினியின் தாய், ஜனாதிபதி விருது பெற்ற சாருஹாசனின் மனைவி. ஜனாதிபதி விருது பெற்றுக் கொண்டே இருக்கும் மணி ரத்னத்தின் மாமியாராக இருந்தாலும் வட்டம், மாவட்ட அளவில் நான் பெறும் பரிசுகள் விருதுகளுக்கு மிகவும் சந்தோஷப்படும் ஓர் உன்னத மனுஷி என் மன்னி. என் பிறந்த நாளையோ திருமண நாளையோ நான் மறந்தாலும் முதல் நாள் மாலையோ, அடுத்தநாள் விடியற்காலைக்குள்ளாகவோ மன்னியிடமிருந்து, நான் பெறாத பிள்ளைக்கு என் மனப்பூர்வமான ஆசீர்வாதங்களுடன் என்று கையெழுத்திட்ட பரிசு என் வீட்டிலிருக்கும். என் நாடகத்தைப் பற்றியோ என்னைப் பற்றியோ வரும்

    Enjoying the preview?
    Page 1 of 1