Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nandriyudan Nandhini
Nandriyudan Nandhini
Nandriyudan Nandhini
Ebook124 pages1 hour

Nandriyudan Nandhini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'நன்றியுடன் நந்தினி' என்னும் இந்த கதை, ஒரு தாய் தன் குழந்தையை நிரந்தரமாய் பிரிந்த பின்பு
அந்த குழந்தையை பிரிந்த ஏக்கத்தை, தவிப்பை அமானுஷ்யமாய் வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும் என்று ஆசிரியர் திரு. இந்திராசௌந்தராஜன் அவர்கள் அவர் பாணியில் மிக அழகாகவும் மிரட்டலாகவும் சொல்லிருக்கிறார். இரண்டு சூழ்நிலைகள் வேறு வேறு கதாபாத்திரங்கள், அவர்களின் வாழ்கை தேடல்கள் என்று பின்னி சுவைபட புனைந்திருக்கிறார்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580100705009
Nandriyudan Nandhini

Read more from Indira Soundarajan

Related to Nandriyudan Nandhini

Related ebooks

Related categories

Reviews for Nandriyudan Nandhini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nandriyudan Nandhini - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    நன்றியுடன் நந்தினி

    Nandriyudan Nandhini

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ‘வாழ்க்கை என்றால் என்ன?’

    இந்த கேள்வியை ஒரு குருவானவர் தன்னை சந்திப்பவர்களிடமெல்லாம் கேட்டபடி இருந்தார். ஆனால், ஒருவர் கூட அவருக்கு நிறைவான பதிலை கூறவில்லை. ஒருவர் பிறந்துவிட்ட உயிர்கள் மரணம் வரும் வரையில் இந்த மண்ணில் எதையாவது செய்தபடி இருப்பதுதான் வாழ்க்கை என்றார். இன்னொருவர் ஒருபடி மேலே போய் சந்தோஷமாய் வாழ முயற்சிப்பதே வாழ்க்கை என்றார். அதெல்லாம் இல்லை... எதுவுமே நம் கையில் இல்லை இதை உணர்த்துவதுதான் வாழ்க்கை... என்றார் மூன்றாமவர். மொத்தத்தில் ஒருவர் கூட சரியான விடையைக் கூறவில்லை. கூறவும் அவர்களால் முடியவில்லை.

    ஏன் முடியவில்லை என்று நாம் கேட்டுக் கொள்ளும்போதே அதற்கான உண்மையான விடை என்ன என்பதை அந்த குருவிடமே கேட்டு விடுவோம். குருவும் கூறுகிறார்... ஒருவன் தன்னையறிதலே வாழ்க்கை...! என்று. இதை தொடர்ந்து அடுத்தடுத்து கேள்விகள் முளைக்கின்றன.

    தன்னையறிவது என்றால் என்ன?

    தன்னையறிவது என்பது எதற்கு?

    தன்னையறிவதால் ஆகப்போவதென்ன?

    தன்னையறிவது என்பது அவ்வளவு கடினமா என்ன?

    திலகத்துக்கு இடுப்பு வலி எடுத்துவிட்டது!

    மிக அமைதியானவள் திலகம்... அவள் இருமல் கூட அதிக சப்தமின்றிதான் இருக்கும். அவ்வளவு மென்மையானவள்... ஆனால், இப்போது பெரும் குரலெடுத்துக் கத்தினாள்.

    ஐயோ! அம்மா... வலி தாங்க முடியயிலியே...

    அவளது குரல் அந்த வீட்டில் உள்ளவர்களை உலுக்கி எடுத்தது. ஆனாலும் அவர்களுக்கு நடுவில் அந்த வேதனை மிகுந்த குரலை ஒரு நெருடலாக கருதி முகத்தை சுளித்துக் கொண்டான் ஒருவன்.

    திலகத்தின் ஒன்றுவிட்ட அண்ணன் அவன்.

    பெயர் ராமதுரை.

    பதறத் தொடங்கிவிட்ட மனைவியைப் பார்த்து,

    போ கனகம்... போய் மருத்துவச்சியை எழுப்பி கூட்டிக்கிட்டு வா...

    போகணும்...

    ஆமா, நீயும் நானும் ஆஸ்பத்திரிலதான் பொறந்தோமாக்கும்? ஏசுநாதரே மாட்டுத் தொழுவத்துலதான் பொறந்தார் தெரியும்ல...?

    இப்போ எதுக்குங்க இந்த பேச்சு... போய் ஒரு ஆட்டோவை கூட்டிக்கிட்டு வாங்க. திலகம் எவ்வளவு வலின்னாலும் தாங்கிக்கறவ. அவளே இந்த அளவு கத்தறான்னா நிச்சயம் வயித்துல குழந்தை குறுக்குல பிரண்டுகிட்டிருக்கணும்...

    அடியே... பிரசவத்தும்போது யாருடி கத்தல...? அலுங்காம இந்த உலகத்துல அந்த ஆதிபராசக்தியால கூட பிள்ளை பெற முடியாதுடி... இதை போய் பெருசா சொல்லிக்கிட்டு...

    போதுங்க... இது பிரசங்கம் பண்ற நேரமில்ல. ஏற்கெனவே சரியான சத்தான ஆகாரமில்லாம ரொம்ப வீக்கா இருக்கான்னு டாக்டரம்மா சொல்லியிருக்காங்க. தயவுசெய்து போய் ஒரு ஆட்டோவை பிடிச்சுக்கிட்டு வாங்க...

    கனகம் அவனை உந்தித் தள்ளிவிட்டாள் அவனும் அரை மனதாக ஆணிக் கதவில் தொங்கிய தன் அரைக்கை சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு தெருவில் இறங்கினான்.

    வாசல் தாண்டும்போது முணுமுணுத்தான்.

    ‘இங்க நம்ம பொழப்பே நாறப் பொழப்பா இருக்குது... இதுல இவ ஒருத்தி. இவளுக்கு சோறு போட்டதே பெருசு. இதுல இவளுக்கு ஒரு புள்ள பொறந்து, அதுக்கும் இனி பாலு கஞ்சின்னு ஊத்தணும். ஹூம்... எல்லாம் தலைஎழுத்து!

    குடிச்சிப்பிட்டு லாரியில் அடிபட்டு செத்த இவ புருஷன், இவளையும் இழுத்துக்கிட்டு லாரியில் விழுந்துருக்கலாம்...’

    புலம்பியபடியே செல்லும் கணவனை கண்கள் கலங்க பார்த்தாள் கனகம். ஒரு வீட்டின் வறுமை பல அரிய மனித குணங்களைத் தின்றுவிடுகிறது. அதில் பாசமும் கருணையும்தான் முதலில் அடிபடுகிறது.

    ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும் திலகம் தான் ராமதுரைக்கு ஒரே சகோதரி. ஆனால், அவளை பாசத்தோடு நேசிக்க அவனால் முடியவில்லை. மாதம் இருநூறு ரூபாய் சம்பாத்தியத்தில் மனைவிக்கும் பிள்ளைக்கும் சோறு போடுவதே பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் குடிகார கணவனை ஒரு லாரி விபத்தில் பறிகொடுத்துவிட்டு நிர்க்கதியாக ராமதுரையிடம் வந்து நின்றவள் தான் திலகம்.

    எங்கே வந்தாய் என்று கேட்கவும் முடியவில்லை. வைத்து ஆதரிக்கவும் வறுமை இடம் தரவில்லை.

    வந்தவள் கர்ப்பிணியாக இருந்ததுதான் கொடுமை.

    "அண்ணி... அவர் போனது தெரிஞ்ச உடனேயே நானும் அரளி விதையை அரைச்சு விழுங்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனா, என் வயித்துக்குள்ள என்னை நம்பி வாழ வந்துட்ட என் பிள்ளையைக் கொல்ற அளவுக்கு என் மனசு கல்லா இல்லாம போயிடிச்சு. அதான் நான் சாகல அண்ணி.

    இங்கேயும் உங்களுக்கு நான் பாரமால்லாம் இருக்கமாட்டேன் அண்ணி. என்னால முடிஞ்சவேலையை செய்யறேன். தீப்பெட்டி அடுக்கறேன்" என்று தன் பங்குக்கு நிறையவே சம்பாதித்தும் தந்தாள்.

    ஆனாலும் ராமதுரையால் அவளைப் பாசமாக நேசிக்க முடியவில்லை. பாரமாகத்தான் அவன் வரையில் ஆகிப் போனாள்.

    ஒரு பதினைந்து நிமிட கால அவகாசத்தில் அரை மனதாய் ஒரு ஆட்டோவை பிடித்து வந்தான் ராமதுரை. திலகத்திடம் சப்தம் பல மடங்கு பெருகிவிட்டிருந்தது. கனகம் பாய்ந்து வந்து திட்டத் தொடங்கினாள்.

    அவசரம் தெரியாம இப்படியா ஆடி அசைஞ்சுக் கிட்டு வருவே? என்கிற கேள்வியோடு திலகத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடத் தொடங்கினாள்!

    ***

    2

    ‘ஒருவன் தன்னை எதற்காக அறிய வேண்டும், அறிந்துகொள்வதால் ஆவதென்ன போன்ற கேள்விகள் எல்லாம் நிறையவே எழும்புகின்றன. ஆனால், தன்னையறிவதுதான் வாழ்க்கை - அதற்காகத்தான் இந்த பிறப்பே எனும்போது அதற்காக முயல்வதுதானே சரி...?

    சரி... தன்னை ஒருவர் அறிந்து கொள்வது எங்ஙனம்?

    ஒருவர் ஆணாக இருக்கும் பட்சத்தில் தான் ஒரு ஆண் என்பதில் தொடங்கி, தனக்கான பெயர், தான் பிறந்த தேதி, தனது வயது, தனது ரத்தப்பிரிவு என்று எதையறிவதும் தன்னையறிவது ஆகாது. இவை எல்லாம் அடையாளங்கள் இதனைக் கடந்து தன்னையறிவதில் மூழ்கிட வேண்டும்.

    பாலகுருநாதன் என்று ஒரு இளைஞர்!

    தன்னையறியத் தயார் ஆனார். மேற்சொன்ன அடையாளங்களை விட்டுவிட்டு தான் யார் என்று அறிய அவர் விரும்பியபோது அவருக்குள் பளிச் சென்று ஒரு சிந்தனை. அவர் இந்த மண்ணில்

    பிறந்த தேதி அவருக்கு தெரியும். பிறப்பதற்கு முன்னால் பத்து மாதம் வரை தாயின் வயிற்றில் இருந்ததையும் ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும். அந்த பத்து மாதங்களுக்கு முன்னால்

    Enjoying the preview?
    Page 1 of 1