Kiligalai Parakka Vidungal
By Maheshwaran
()
About this ebook
இன்பா என்பவன் திறமைசாலி மற்றும் அழகானவன். இவன் வேலை வாங்குவதற்காக ஒரு ஏஜெண்டிடம் பணம் கட்டினான். இன்பாவுக்கு அவன் எதிர்பார்த்த வேலை கிடைத்ததா? இதற்கிடையில் பெற்றோர் இன்பாவை ஏன் வீட்டை விட்டு துரத்த வேண்டும். இதற்கான காரணம் என்ன? இன்பா காதலித்த தேன்கனியை திருமணம் முடித்தானா? யார் அந்த அபூர்வா? இப்படி பல சுவாரசியமான திருப்பங்களை வாசித்து அறிவோம்...
Read more from Maheshwaran
Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Mullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Pachaikili Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsThalaivan Sooda… Nee Malarnthai Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Pesuma? Rating: 2 out of 5 stars2/5Mayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Koduthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Devathai Azhaikkiral... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Poovai Maarivida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsNee Kavithai Naan Kaagitham Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Idam Irukkiratha? Rating: 0 out of 5 stars0 ratingsMudhalai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kiligalai Parakka Vidungal
Related ebooks
Thee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Porkaalam Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Un Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Gangai Rating: 5 out of 5 stars5/5Anal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsEn Pon Vaanam Nee Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Aagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsநதியே பெண் நதியே Rating: 0 out of 5 stars0 ratingsNathiye Pen Nathiye Rating: 0 out of 5 stars0 ratingsTholaithathum… kidaithathum…! Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Kangal Rating: 5 out of 5 stars5/5Devathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsThavamindri Kidaitha Varame Rating: 0 out of 5 stars0 ratingsஉயிரே உன்னை அழைக்கிறேன்..! Rating: 0 out of 5 stars0 ratingsNandha Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Indrum Theriyavillai Natchathirangal! Rating: 0 out of 5 stars0 ratingsமுத்தழகி Rating: 0 out of 5 stars0 ratingsMuththazhagi Rating: 0 out of 5 stars0 ratingsVithiyin Kaigal Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsYerikkadiyil Sila Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAndha Nimidam Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsOru Neela Devathai! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kiligalai Parakka Vidungal
0 ratings0 reviews
Book preview
Kiligalai Parakka Vidungal - Maheshwaran
https://www.pustaka.co.in
கிளிகளைப் பறக்க விடுங்கள்
Kiligalai Parakka Vidungal
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
https://www.pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
உன்பன இப்போது தான்
முதல் முதலாய்
பார்க்கிறேன்.
ஆனால் ஜென்மம் ஜென்மமாய்
பார்த்தது போல்
பழகியது போல்
பேசியது போல்
சிரித்தது போல்
இது எதனாலே!
விடிந்து வெகுநேரமாகியும் சூரியன் எங்கே இருக்கிறான் என யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பனி அடர்த்தியாய் படர்ந்திருந்தது. செடி கொடிகளின் இலைகளில் நுப்பும் நுரையுமாய் பனி உறைந்து கிடந்தது.
திரும்பிய திசையெங்கும் புகை.
குளுமையான பனிப்புகை.
இரவு அளவுக்கு அதிகமான பனிப்பொழிவு இருந்ததற்கு அடையாளமாய் சாலைகளில் உறைந்துக்கிடக்கும் பனிக்கட்டிகள்.
விபத்தை தவிர்ப்பதற்காக வேண்டி வாகனங்கள் முகப்பு விளக்குகளுடன் மெதுவாய், மெதுமெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தன. சாலையில் நடமாடுகிற மனிதர்கள் எல்லோருமே இறுக்கமான கம்பளி ஸ்வெட்டரும், தொப்பியும் அணிந்திருந்தார்கள்.
ஸ்வெட்டரும், தொப்பியும் இல்லாமல் வெளியே வரமுடியாது போலிருந்தது. ஊட்டியிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்கிறவர்களுக்கு இந்த பனியும் குளிரும் ஒன்றும் பண்ணாது. அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் சாதாரண விஷயம்தான்.
ஆனால் புதிதாய் வந்து தங்குகிறவர்களுக்கு இதெல்லாம் ரொம்ப அதிசயமாய்த்தான் தோன்றும்.
இன்பாவிற்கும் அப்படித்தான் தோன்றியது.
வெளிச்சம் வரட்டுமே என்று ஜன்னல் கதவைத் திறந்தவனின் முகத்தில் தைலவாசனையோடு கூடிய குளிர்காற்று வந்து மோதியது.
நாசிக்குள் ஊடுருவிய குளிர் உடல் முழுவதையும் நடுங்க வைத்தது.
ஜன்னலின் வழியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிற பச்சைப்பிரதேசம் முழுவதும் பனி மூடி வெள்ளைப்படலமாய் காட்சியளித்தது.
இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று அழுத்தமாய் தேய்த்து கன்னங்களில் வைத்துக் கொண்டான்.
அறைக்கதவு தட்டப்பட்டது.
திறந்த ஜன்னல் கதவை மூடி பழையபடி கொக்கியை மாட்டிவிட்டு, வேகமாய் நடந்து அறைக்கதவைத் திறந்தான்.
சூடாய் ஆவிபறக்கும் தேனீர்குவளையோடு சமையல்காரன் சாத்தப்பன் நின்றிருந்தான்.
இந்தாங்க தம்பி...
இன்பாவின் கையில் தேனீர்குவளையைத் தந்தான். குளிருக்கு இதமாய் சூடாகவும் சுவையாகவும் தொண்டைக்குள் இறங்கியது தேனீர்.
சாத்தப்பன்...
சொல்லுங்க தம்பி...
குளிக்கணும். சுடுநீர் தயாராயிடுச்சா?
அஞ்சரை மணிக்கே தயார் பண்ணிட்டேன். நீங்க போய் குளிக்கலாம்...
காலியான தேனீர்குவளையை சாத்தப்பனிடம் கொடுத்துவிட்டு தேங்காய்ப்பூ துண்டையும், சோப்பு டப்பாவையும் எடுத்தான். குளியலறையை நோக்கி நடந்தான்.
தம்பி...
தயக்கமாய் இன்பாவை அழைத்தான் சாத்தப்பன்.
என்ன சாத்தப்பா?
உங்ககிட்டே ஒண்ணு கேட்கணும்... கோபிச்சுக்க மாட்டீங்களே?
கண்கள் பனிக்க கேட்டான்.
மொதல்ல கேளு...
அலட்சியமாய் தோள்களைக் குலுக்கினான் இன்பா.
நீங்க இந்த எஸ்டேட்டுக்கு வந்து ஆறுமாசமாயிடுச்சு... ஆனா ஒரு தடவைக்கூட உங்க வீட்டுக்கு... போனும் பேசலை... லெட்டரும் போடலை... நேருலயும் போகலை...! ஏன் தம்பி? வீட்டுல எதாவது பிரச்சினையா? பெத்தவங்க மேல கோபமா? எதா இருந்தாலும் பெரிசு பண்ணாதீங்க. மறக்கப்பாருங்க. புள்ளையோட அருமை பெத்தவங்களுக்குத்தான் தெரியும். நீங்க இருக்கற எடம் புரியாம உங்கப்பா அம்மா என்னமா கலங்கி போய் நிக்கறாங்களோ?
இத்தனை நாளாய் பழகிய உரிமையில் படபடவென்று பேசினான் சாத்தப்பன்.
சுரீரென்றிருந்தது.
உள்ளுக்குள் முள் தைத்தது மாதிரி வலித்தது.
முகத்தில் சட்டென்று ஒருவித இறுக்கம் படர்ந்தது.
சாத்தப்பனை ஏற இறங்கப் பார்த்தான் இன்பா.
சொந்தங்கள்னு சொல்லிக்கற அளவுக்கு எனக்கு யாரும் கிடையாது சாத்தப்பன்! என்னை வேற யாரோட பேச சொல்றீங்க. இனி இந்த ஊட்டிதான் எனக்கு எல்லாமே. நா சாகற வரைக்கும் இங்கதான் இருக்கப்போறேன்.
தனக்குள் இருப்பதை அவன் யாரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. அதனால் மனதை கல்லாக்கி கொண்டு பொய்யான வார்த்தைகளை உதிர்த்தான். கண்களில் நீர்த்துளிர்த்தது.
ஏண்டா அந்த கேள்வியைக் கேட்டோம் என சாத்தப்பனுக்கு தர்மசங்கடமாக இருந்தது.
தம்பி... நான் உங்களை கண்கலங்க வெச்சுட்டேனே...
அதனாலென்ன? மூணுவேளையும் வயிறுமுட்ட வாய்க்கு ருசியா சமைச்சுப் போடறீங்களே உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு எங்கிட்டே!
அதற்குமேல் அங்கே நிற்கவில்லை.
விறுவிறுவென்று குளியலறையை நோக்கி நடந்தான்.
சொந்தங்கன்னு சொல்லிக்கற அளவுக்கு எனக்கு யாரும் கிடையாது.
நானா சொன்னேன்?
நானா அப்படி ஒரு பொய்யை சொன்னேன்?
கண்ணுக்குள் அப்பாவும், அம்மாவும் வந்துப்போனார்கள்.
எல்லாத்தையும் தொலைச்சுட்டு வந்து நிக்கறான். இவனால பட்டகடனை அடைக்கறதுக்குள்ளே... நீங்க என்ன, நானே கிழவனாயிடுவேன்... இனி இவன் இந்த வீட்ல இருந்தான்னா நா வெளியே போயிடுவேன்... சம்பாதிக்கற புள்ளை முக்கியமா, தண்டமா ஊரைச்சுத்தற புள்ளை முக்கியமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க...
அண்ணன் உதயவாணனின் குரல் காதினுள் ஒலித்தது.
இன்பாண்ணே... நீ வேலைக்குப்போய் முதல் மாத சம்பளம் வாங்கினதும்... எனக்கு தங்கத்துல கல்லு தோடும்... குடைஜிமிக்கியும் வாங்கி தர்றியாண்ணே...
தங்கை இன்னிசை மனசுக்குள் வந்தாள்.
இன்பாவிற்கு கண்ணீர் ‘குபுக்’கென வழிந்தது.
இன்னிசை உன்னோட வாழ்க்கையையே நான் கேள்விக்குறி ஆக்கிட்டேனே...
இதயம் வேகவேகமாய் துடித்தது.
கண்ணீரை விரலால் சுண்டினான். இடுப்பில் தேங்காய்ப்பூ துண்டை சுற்றிக்கொண்டு அலுமினிய பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணீரை குவளையால் அள்ளி தலையில் ஊற்றிக்கொள்ள ஆரம்பித்தான்.
விடாமல் சிணுங்கியது தொலைபேசி.
சக்கர நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்த கங்காதரன் நிமிர்ந்தார். அடுக்களைக்குள் இருந்து குக்கர் விசிலடித்தது. மிக்ஸியில் எதையோ அரைக்கிற இரைச்சல் கேட்டது.
காலை டிபன் தயாரிப்பதில் மும்முரமாய் இருந்தாள் சாவித்திரி.
தொலைபேசியின் சிணுங்கல் அவளுடைய காதில் விழவில்லை.
விழுந்திருந்தால் வெளியே ஓடிவந்து ரிஸீவரை எடுத்திருப்பாள்.
சக்கர நாற்காலியை உருட்டியபடியே தொலைபேசி வைக்கப்பட்டிருந்த டீபாயை நெருங்கினார் கங்காதரன். சிணுங்கிய ரிஸீவரைக் கையிலெடுத்தார்.
ஹலோ...
என்றழைத்தார்.
டாடி... நான் அபூர்வா பேசறேன்...
மறுமுனையிலிருந்து தித்திப்பாய் ஒரு குரல் ஒலித்தது.
அபூர்வா... எப்படிம்மா இருக்கே?
முகம் முழுவதும் மலர்ச்சி பரவ கனிவாய் கேட்டார்.
ஐ ஆம் பைன் டாடி.
எப்பவும் காலை நேரத்துல பேசவேமாட்டியே, என்னம்மா இன்னைக்கு திடீர்னு பேசறே?
அபூர்வா அவருடைய ஒரே செல்ல மகள்.
கோயம்புத்தூர் காலேஜில் கடைசி வருட பட்டப்படிப்பு படிக்கிறாள்.
எனக்கு ஒன் வீக் லீவு டாடி...
அப்படியா...? அப்போ இந்த ஒன் வீக்கும் உன் சினேகிதிங்களைக் கூட்டிகிட்டு. மருதமலை... திருமூர்த்தி பால்ஸ்ன்னு... ஊர் சுத்தப்போறேன்னு சொல்லு. ஒரே கொண்டாட்டம்தான்.
கங்காதரனின் குரலில் உற்சாகம் வழிந்தது.
இல்ல டாடி... நான் இந்த தடவை அங்கல்லாம் போகப்போறதில்லை…
ஏம்மா...?
திருமூர்த்தி பால்ஸ்க்கு எத்தனை தடவைதான் போறது...?
வேறு எந்த ஊருக்காவது போகணுமா? தாராளமா போய்ட்டு வா...
ஊஹும்... நான் எங்கேயும் போகலை...! நம்ம ஊருக்குதான் வரப்போறேன். எங்கே திரும்பினாலும் பச்சைக்கம்பளம் விரிச்சது மாதிரி பசுமையா தெரியற மரங்கள்... மாசு இல்லாத சுத்தமான... மூலிகைக் காற்று... இயந்திரதனம் இல்லாத அமைதியான வாழ்க்கை... காதைக் கிழிக்காத பறவைகளோட கீச் கீச் ஒலி... மனசுக்கு சந்தோஷத்தை தர்ற ரோஜாக்கள்னு... விளங்கற ஊட்டியோட தனித்தன்மை... இந்த உலகத்தோட எந்த மூலைக்குப்போனாலும் கெடைக்காது டாடி.
நிழலோட அருமை வெய்யில்லுன்னு சொல்லுவாங்க... உனக்கு இப்பதான் ஊட்டியோட அருமை புரிஞ்சதா? தாராளமா வா... நானா வேணாம்னு சொல்லப்போறேன்?
உடனே... காரை அனுப்பி வைங்க டாடி...