Kaadhal Devathai Azhaikkiral...
By Maheshwaran
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Kuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Linga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean Naan Rating: 5 out of 5 stars5/5Karuppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Mayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsElla Muthangalum Enakke! Rating: 0 out of 5 stars0 ratingsMayanguthu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Poovai Maarivida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Poi Pesuma? Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsMudhalai Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Aasai Kodi Sumanthu… Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhal Devathai Azhaikkiral...
Related ebooks
Amma Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Oru Veedu Pootti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Devathai Neril Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Rattinam Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Kondravan Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Urvalangal Rating: 0 out of 5 stars0 ratingsSaatharana Manidhan Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Devathai Rating: 1 out of 5 stars1/5Gandharva Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsபொன்னாடை Rating: 0 out of 5 stars0 ratingsPonnaadai Rating: 4 out of 5 stars4/5Thisai Maariya Thendral... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Bothai Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் ஒன்றாகிப் போனதே... Rating: 0 out of 5 stars0 ratingsSollamal Kol Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagave Naan Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyil Kidantha Oru Panimalar Rating: 0 out of 5 stars0 ratingsMayavanam Rating: 5 out of 5 stars5/5Madhil Mel Manasu Rating: 5 out of 5 stars5/5உரிமை கொண்டாடு உயிரே..! Rating: 0 out of 5 stars0 ratingsUrimai Kondaadu Uyire Rating: 0 out of 5 stars0 ratingsKaanamal Pona Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Viral Rating: 0 out of 5 stars0 ratingsEn Devathai Engey? Rating: 4 out of 5 stars4/5En Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Unnai Vidava, Ramya Rating: 0 out of 5 stars0 ratingsYamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Vanitha Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaadhal Devathai Azhaikkiral...
0 ratings0 reviews
Book preview
Kaadhal Devathai Azhaikkiral... - Maheshwaran
http://www.pustaka.co.in
காதல் தேவதை அழைக்கிறாள்...
Kaadhal Devathai Azhaikkiral…
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
யாரும் பறிக்காததால் மரக்கிளைகளிலேயே பழுத்து நன்றாக கனிந்து குலுங்கின சப்போட்டா பழங்கள். அளவுக்கு அதிகமாக காய்த்திருந்ததாலோ என்னமோ அணில்களுக்கு கூடப்பிடிக்கவில்லை போலும்.. பாதியைக் கடித்துவிட்டு மீதியை சிதறடித்துக் கொண்டிருந்தன. எங்கிருந்தோ பறந்து வந்த கிளிக்கூட்டம் சிறகுகளைப் படபடத்தபடி அங்கும் இங்கும் தாவி கொஞ்சி குலாவுவதை இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் கதிரவன்.
மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியிருந்தான்.
போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது சாய்ந்திருந்தான்.
கதிரவனுக்கு இருபத்தியெட்டு வயது.
பி.பி.ஏ. படித்தவன். மேற்கொண்டு எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்பது கதிரவனின் ஆசை.
ஆசை இருக்கிற அளவிற்கு பொருளாதாரம் கிடையாது.
படித்த படிப்பிற்கேற்ற வேலையும் கிடைக்கவில்லை. எந்த நிறுவனத்திற்கு போனாலும் முன் அனுபவம் இருக்கிறதா என்றார்கள்.
சில இடங்களில் சிபாரிசுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
முன் அனுபவமும் சிபாரிசும் இல்லாவிட்டால் டெபாசிட்டாய் பெரிய தொகையைக் கட்டச் சொன்னார்கள்.
கதிரவனுக்கு முன் அனுபவம் கிடையாது.
சிபாரிசும் இல்லை.
'பெரிய தொகையை எல்லாம் நினைத்துகூடப் பார்க்க முடியாது.
வேலை கிடைக்கும் வரை வீட்டில் சும்மா இருக்கவும் பிடிக்கவில்லை.
கல்லூரியில் படிக்கும் போதே மாலை வேளையில் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டிருந்தான் கதிரவன். கற்று முடித்ததுமே லைசென்ஸ்ஸீம் வாங்கி விட்டான். வேலை கிடைக்காத பட்சத்தில் வங்கியில் கடன் வாங்கி ஒரு ஆட்டோ வாங்கியாவது பிழைப்பை நடத்தி விடலாம் என்பது அவனுடைய திட்டம்.
கதிரவனுக்கு பெற்றோர் கிடையாது.
அவனுக்கு எழு வயது இருக்கும் போது இருவரும் ஒரு விபத்தில் பலியாகி விட்டார்கள். கதிரவனை வளர்த்தது, ஆளாக்கியது. படிக்க வைத்தது எல்லாமே அவனுடைய அத்தை பூவாயிதான்.
பூவாயி வாழ்வதே கதிரவனுக்காகத்தான்.
கதிரவனை கவுரவமான உயர்ந்த இடத்திற்கு கொண்டு வரவேண்டும்
நான்கு பேர் மதிக்கும்படியாய் வாழவைக்க வேண்டும்.
எந்த சிரமமான சூழ்நிலையும் கதிரவனைப் பாதித்து விடக்கூடாது. அவன் எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும்.
தள்ளுவண்டியில் இட்லிகடை நடத்துகிறாள் பூவாயி.
ஒய்வேயின்றி இயந்திரமாய் உழைக்கிறாள்.
கதிரவன் கல்லூரியில் காலடி வைத்த போது அவளும் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து விட்டாள்.
சிறிய வாடகை வீட்டில் தங்கி விட்டாள்.
தினம் நூறு ரூபாய் கிடைத்தாலும் அது சொந்தத் தொழிலாய் இருக்க வேண்டும்.
லாபமோ, நஷ்டமோ எதுவாக இருந்தாலும் நம்மையே சேரட்டும்.
அதனால் தான் இட்லி வியாபாரத்தை தொடங்கினாள். சென்னையில் வாழ்வதற்கு..
கண்களில் கனவுகள் மிதந்தால் மட்டும் போதாது.
நம்பிக்கை வேண்டும். உழைப்பு வேண்டும். குறிக்கோள் வேண்டும். தளராத விடா முயற்சி வேண்டும்.
இவை எல்லாம் இருந்தால் தான் நாட்களை நகர்த்த முடியும்.
ஓரளவிற்கு வருமானம் கிடைத்தது.
யாரிடமும் கைநீட்டாமல் வீட்டு வாடகையையும், கதிரவனின் படிப்பு செலவையும் சமாளிக்க முடிந்தது.
பூவாயியின் சிரமம் உணர்ந்தவன் கதிரவன். அதனாலேயே வேறு எதிலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பிலேயே செலுத்தினான்.
கல்லூரியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றிருந்தான்.
படிப்பு முடிந்து விட்டது.
பட்டமும் வாங்கியாகி விட்டது.
தன் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலை கிடைக்கும் வரை சொற்பமான சம்பளம் தந்தாலும் பரவாயில்லை என வேறு எங்காவது வேலை செய்யலாமே என்ற எண்ணத்தில் இருந்தவனை பூவாயிக்கு தெரிந்த வைத்தியநாதன் என்பவர்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டார்.
வைத்தியநாதன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
மகனும், மருமகளும் தங்கள் குழந்தைகளோடு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட அவரும் மனைவியும் இங்கே தனிமையில்.
பூவாயியின் இட்லி கடைக்கு தான் சாப்பிட வருவார்.
தானும் சாப்பிட்டு விட்டு மனைவிக்கும் வாங்கிப் போவார்.
பூவாயிக்கு அவர்மீது மதிப்பும் மரியாதையும் அதிகம். கதிரவனைப் பற்றி அவரிடம் தான் சொல்லி புலம்புவாள்.
உங்களுக்கு தெரிஞ்ச எடத்துல சுதிரவனுக்கு எதாவதொரு வேலை வாங்கி கொடுங்க ஐயா
அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருப்பாள்.
கதிரவனுக்கு கார் ஓட்டத்தெரியுமா பூவாயி
தெரியும்னுதான் நெனைக்கறேன்.."
"நல்லாதாப்போச்சு! எனக்கு வேண்டியவங்க வீட்ல டிரைவர் வேலை காலியா இருக்கு.
நம்பகமான ஆளா இருந்தா சொல்லச்சொன்னாங்க! டிரைவர்னா, தினமும் வேலை இருக்காது. அந்த வீட்டு பெரியவர் ஓடிகிட்டே இருக்கற பிஸினஸ்மேன். மாதத்துல முக்கால்லாசி நாள் வெளியூர்ல தான் இருப்பார். ஏர்போர்ட்டுக்கு கூட்டிப்போகணும் அதே மாதிரி வந்து எறங்கினதும் அழைக்கப்போகணும். அவரோட மனைவி வெள்ளி, செவ்வாய் எதாவதொரு கோவிலுக்கு போவாங்க. அவங்களை பத்திரமா கோவிலுக்கு கூட்டிப்போய் அழைச்சுவரணும்.. வேளா வேளைக்கு அவங்க வீட்லயே சாப்பிட்டுக்கலாம்.. ஓரளவுக்கு நல்ல சம்பளமும் தந்துடுவாங்க.. கதிரவனுக்கு சம்மதமான்னு கேட்டு சொல்லு... நாளைக்கே சேர்த்து விட்டுடுறேன்" என்றார் வைத்தியநாதன்.
அவர் சொன்னதை தயக்கமாய் கதிரவனிடம் தெரியப்படுத்தினாள் பூவாயி.
உன்னை நா கட்டாயப்படுத்தலை... விருப்பம் இருந்தா மட்டும் சொல்லு! இல்லாட்டி வேணாம்.
என்னத்த இப்படி பேசறே? டிரைவிங் எனக்கு பிடிச்ச விஷயம். நா அவங்க வீட்டுக்கு வேலைக்குப் போறேன். என்னை சேர்த்து விடச் சொல்லு
கதிரவன் தன் சம்மதத்தை தெரியப்படுத்தினான்.
பூவாய் மலர்ந்தாள் பூவாயி.
நீ எதிர்ப்பார்க்கற அளவுக்கெல்லாம் சம்பளம் கெடைக்காது கதிரவா
பரவாயில்லை.. கையில் வேலைன்னு ஒண்ணு இருக்கே.. அது போதும்..
அவங்க ரொம்ப பணக்காரங்களாம்
நா என்னோட வேலையைத்தானே செய்யப்போறேன்..
எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினான் கதிரவன். அதன் பிறகுதான் வைத்தியநாதன் இங்கே அழைத்து வந்து வேலைக்கு சேர்த்து விட்டார்.
அந்தப் பெரிய வீட்டில் கதிரவன் வேலைக்கு சேர்ந்து இன்றோடு ஒரு வாரம் ஆகிறது. முதலாளி ராஜகணபதி பிசினஸ் விஷயமாக ஆந்திராவிற்குப் போயிருக்கிறார். கதிரவன் தான் அவரை அழைத்துப்போய் விமான நிலையத்தில் இறக்கி விட்டான். முதலாளியின் மனைவி கோதை இருக்கிற இடமே தெரியாது.
சாந்தமும் கனிவும் நிறைந்தவள்.
ஒரே ஒரு நாள் அவளை கோவிலுக்கு அழைத்துப் போனான்.
ராஜகணபதி கோதை தம்பதியருக்கு திலோத்தி என்றொரு மகள் இருக்கிறாள். கல்லூரியில் படிக்கிறாள். திலோத்திக்கு கார் ஓட்டத்தெரியும். அவளுக்கென்று தனிக்கார் இருந்தது. தினமும் கல்லூரிக்கு காரை தானே ஓட்டிக் கொண்டுதான் செல்வாள்.
அந்த திலோத்தி சிவப்பா, கறுப்பா, உயரமா, குட்டையா, அழகானவளா, சுமாராளவளா? எதுவுமே தெரியாது கதிரவனுக்கு.
திலோத்தியை அவன் இன்னும் பார்க்கவேயில்லை.
வீட்டிலிருந்து அதிகாலையிலேயே கிளம்பி விடுவாள் திலோத்தி கல்லூரி முடிந்ததும் தன் தோழிகளோடு சேர்ந்து ஊரைச் சுற்றிவிட்டு இரவுதான் வீடு திரும்புவாள்.
திலோத்தி வருவதற்குள் கதிரவன் வேலை முடிந்து போய் விடுவான்.
அதனால் தான் திலோத்தியைப் பார்க்க வாய்ப்போ கிடைக்கவில்லை.
திலோத்திக்கும் தனக்குமான முதல் சந்திப்பே மோதலாகப் போகிறது என்றோ, திலோத்தியால் தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகிறது என்றோ கதிரவனுக்கு அப்போது தெரியவே தெரியாது.
தெரிந்திருந்தால் அந்த வீட்டில் வேலைக்கு சேர்த்திருக்கவே மாட்டான்.
விளையாட வேண்டும் என்று நினைத்து விட்டால் ஏழுமலைதாண்டி, ஏழு கடல் தாண்டி போய் ஒளிந்தாலும் விதிவிடுமா?
கதிரவனோடு விளையாட விதி காத்திருந்தது.
டிரைவர் ஏய் டிரைவர் கமான் இங்க வா
தோட்டத்திலிருந்து அதட்டலாய் ஒலித்தது தித்திப்பான அந்தக்குரல்.
காதிலேயே வாங்காதது மாதிரி காரின் மீது சாய்ந்திருந்தான் கதிரவன்.
2
"கூப்பிடறது காதில் விழலையா? இல்லே விழாதது மாதிரி அலட்சியமா நிக்கறியா? டிரைவர் ஏய் உன்னைத்தான் ஒரு