Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjil Aasai Kodi Sumanthu…
Nenjil Aasai Kodi Sumanthu…
Nenjil Aasai Kodi Sumanthu…
Ebook81 pages26 minutes

Nenjil Aasai Kodi Sumanthu…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580128305570
Nenjil Aasai Kodi Sumanthu…

Read more from Maheshwaran

Related to Nenjil Aasai Kodi Sumanthu…

Related ebooks

Reviews for Nenjil Aasai Kodi Sumanthu…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjil Aasai Kodi Sumanthu… - Maheshwaran

    http://www.pustaka.co.in

    நெஞ்சில் ஆசை கோடி சுமந்து...

    Nenjil Aasai Kodi Sumanthu…

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    தென்றல், கையை நீட்டு மருதாணி வெச்சு விடறேன்... வெண்ணெய் மாதிரி மருதாணியை அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொண்டு பக்கத்தில் வந்து அமர்ந்தாள் மலர்க்கொடி.

    வேணாம்மா...

    உதட்டைச் சுழித்தாள் தென்றல்.

    கல்யாணப் பொண்ணு... மருதாணி வேணாம்னு சொல்லக் கூடாது.

    தென்றலின் கையை வலுக்கட்டாயமாகப் பற்றித் தன் மடியில் வைத்துக் கொண்டாள் மலர்க்கொடி

    வேணாம்னா விட்றேன்...

    தென்றல் எரிச்சலாய் சிணுங்கினாள்.

    அதெப்படி விட்ற முடியும். கல்யாணப் பொண்ணுக்கு அழகே மருதாணி தானே...?

    பிடிக்கலை...

    எதைப் பிடிக்கலை... மருதாணியையா... இல்ல இந்த கல்யாணத்தையா?

    ரெண்டையும் தான்...

    எல்லாப் பொண்ணுங்களும் சொல்ற அதே வார்த்தையைத் தான் நீயும் சொல்றே! நான்கூட கல்யாணத்துக்கு முதல் நாள் வரை 'பிடிக்கலை... வேணாம், வேணாம்'னுதான் அடம்புடிச்சேன்... யார் விட்டா... இழுத்துப் போய் மணவறையில் உங்கப்பாவுக்கு பக்கத்துல உக்கார வெச்சுட்டாங்க. அவர் கட்டின தாலி என் கழுத்துல ஏறின அடுத்த நிமிஷமே என் மனசை மாத்திக்கிட்டேன்... நாய்க்குட்டியாட்டம் அவரையே சுத்தி வர ஆரம்பிச்சுட்டேன் கல்யாணத்துக்கும் தாலிக்கயிறுக்கும் இருக்கிற மகிமையை நீயும் புரிஞ்சுக்கத்தான் போறே...

    மருதாணியை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி தென்றலின் உள்ளங்கையில் வைத்து அழகாய் பூ வரைந்தாள் மலர்க்கொடி.

    நீளநீளமான வெண்டைக்காய் விரல்களுக்கு மருதாணியாலேயே குல்லாய் மாட்டிவிட்டாள்.

    ஆடாமல் அசையாமல் பதுமையைப் போல அமர்ந்திருந்தாள் தென்றல்.

    கண்களில் நீர் துளிர்த்தது.

    மனசுக்குள் இதயன் வந்து வந்து போனான்.

    'இதய்... இதய்...'

    தென்றலின் மனம் துடியாய்த் துடித்தது.

    கஷ்டப்பட்டுப் போட்டிருக்கேன், நல்லா காயற வரைக்கும் எதுலயும் இடிச்சுக்காம அப்படியே உட்கார்ந்திரு...

    தென்றலின் இரண்டு கைகளிலும் மருதாணியை வைத்துவிட்டு காலியான கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அடுக்களையை நோக்கி நடந்தாள் மலர்க்கொடி

    தென்றலுக்கு அழுகை முட்டியது.

    ‘இதய்... உங்களை மறந்துவிட்டு இன்னொருவனுடன் கல்யாணமா... உங்களை சுமந்த நெஞ்சில் இன்னொருவனுக்கு இடமா?'

    இதயம் படபடத்தது.

    ஈட்டியைச் சொருகியதைப் போல வலித்தது.

    வாய்விட்டு அழவேண்டும் போல இருந்தது.

    அப்பா சற்குணமும் தம்பி சபரிநாதனும் கல்யாணப் பத்திரிகைகளை நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் கொடுத்து விட்டு வருவதற்காகப் போயிருந்தார்கள்.

    கல்யாணத்திற்கு இன்னும் ஏழுநாட்களே இருந்தன.

    எல்லா வேலைகளும் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தன. வீட்டிற்கு வெள்ளையடித்து புது வர்ண பூசியிருந்தார்கள். துருப்பிடித்த ஜன்னல் கம்பிகள் எல்லாம் பெயிண்ட் வாசனையோடு பளபளத்தன. திரைச்சீலைகள் மாற்றப்பட்டிருந்தன. ரொம்ப வருடங்களாக இருந்த கறுப்பு வெள்ளை டி. வியைத் தூக்கிப் பரணில் போட்டுவிட்டு புத்தம் புது கலர் டி.வி-யை அந்த இடத்தில் வாங்கி வைத்திருந்தார்கள். தென்றலின் கல்யாணத்தை முன்னிட்டு வீடு முழுக்க நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.

    மாப்பிள்ளை வசதியான வீட்டுப் பிள்ளை.

    அதுவும் ஒரே பிள்ளை.

    கண்ணுக்கு லட்சணமாய் இருந்தான். சொந்தமாய் பிஸினஸ் செய்கிறான்.

    மாப்பிள்ளையின் அப்பாவும் அம்மாவும் தான் தென்றலை வந்து பெண் பார்த்தார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1