Nitham Oru Nilavu
()
About this ebook
'நித்தம் ஒரு நிலவு' கதையில் வரும் வசந்தியைப் போன்ற - ஒருவன் மீது ஆசைப்பட்டாலும், நம் தகுதிக்கும் குடும்ப நிலைமைக்கும் இந்தக் 'காதல் ஊதல்' எல்லாம் சரிபட்டு வராது என்று ஒதுங்கிப் போகிற பெண்கள்தாம் நம்மில் அதிகம்….. ராஜசேகர் போன்ற பெண் பித்தர்களின் முகத்திரையைக் கிழிக்க….. மனோகரி போன்ற நெஞ்சுரம் மிகுந்தவர்கள் வந்தாக வேண்டும்….. அதே போல 'தன்னை ஏமாற்றி, படுகுழியில் தள்ளியவனையே மணந்து, அவனுக்கே பிள்ளை பெறுவேன்' என்கிற பழைய அசட்டுத்தனமான விதிமுறைகளை எல்லாம் உடைத்தெறிந்து, நிமிர்ந்து நிற்கிற உமா.... நிஜ வாழ்க்கையில் நான் சந்தித்த தீரம் மிகுந்த பெண் இவள்!
Read more from Anuradha Ramanan
Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsNanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Ulley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsMouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Poovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPuthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Anna Rating: 5 out of 5 stars5/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsUravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Iruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Nila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Kaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Part - 1 Rating: 5 out of 5 stars5/5Vera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Kaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsAambalai Rating: 5 out of 5 stars5/5Unnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsArali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nitham Oru Nilavu
Related ebooks
Kaakitha Medai Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyai Oru Muthaliravu Rating: 5 out of 5 stars5/5Naal Muzhukka Naadagam Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal - Collection 3 Rating: 0 out of 5 stars0 ratingsKaanamal Pona Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Vendum Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsAasai Paravai Koondukkulle Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsVilaikku Vaangiya Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsAan Manam Rating: 0 out of 5 stars0 ratingsNadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5Veliyorathil Oru Vellai Poo Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Uma Rating: 3 out of 5 stars3/5Maaya Manam Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Kolathai Maatravaa Rating: 5 out of 5 stars5/5Eppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Megathile Methaidu Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Vettai Rating: 0 out of 5 stars0 ratingsEnge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Collection - 4 Rating: 3 out of 5 stars3/5Oru Nimisham Please Rating: 0 out of 5 stars0 ratingsIni Oru Piriva Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsVilagava Pazhaginom? Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru Rating: 3 out of 5 stars3/5Kanavu Mazhai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nitham Oru Nilavu
0 ratings0 reviews
Book preview
Nitham Oru Nilavu - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
நித்தம் ஒரு நிலவு
Nitham Oru Nilavu
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
முன்னுரை
அன்புள்ள வாசகர்களுக்கு,
வணக்கம். நலம்தானே...
இந்த இரண்டு நாவல்களும் வித்தியாசமான இரண்டு கதைக் கருக்கள்….. ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதவை... சாதாரணமாய் சாப்பிடும் உணவிலேயே குழம்பு காரம் என்றால், பச்சடியின் பங்கே-அந்தக் காரத்தைக் குறைப்பதற்காகத்தானே... ருசிக்கு மட்டுமின்றி, உடம்புக்கும் அப்படிப்பட்ட சேர்மானம்தானே ஒத்துக் கொள்ளும்.
அந்த வகையில் பார்க்கப் போனால் - 'நித்தம் ஓர் நிலவு' பச்சடியாக இங்கே உங்கள் முன்... ஆம்! அடுத்து வரும், 'நிலவு இல்லாத இரவு' - செம ஸீரியஸ்! கடைசியில் கொஞ்சம் கசப்பும் உண்டு...
'நித்தம் ஒரு நிலவு' கதையில் வரும் வசந்தியைப் போன்ற - ஒருவன் மீது ஆசைப்பட்டாலும், நம் தகுதிக்கும் குடும்ப நிலைமைக்கும் இந்தக் 'காதல் ஊதல்' எல்லாம் சரிபட்டு வராது என்று ஒதுங்கிப் போகிற பெண்கள்தாம் நம்மில் அதிகம்….. ராஜசேகர் போன்ற பெண் பித்தர்களின் முகத்திரையைக் கிழிக்க….. மனோகரி போன்ற நெஞ்சுரம் மிகுந்தவர்கள் வந்தாக வேண்டும்….. அதே போல 'தன்னை ஏமாற்றி, படுகுழியில் தள்ளியவனையே மணந்து, அவனுக்கே பிள்ளை பெறுவேன்' என்கிற பழைய அசட்டுத்தனமான விதிமுறைகளை எல்லாம் உடைத்தெறிந்து, நிமிர்ந்து நிற்கிற உமா.... நிஜ வாழ்க்கையில் நான் சந்தித்த தீரம் மிகுந்த பெண் இவள்!
இப்படிக்கு அன்புடன்,
அனுராதா ரமணன்.
***
1
வீடு அப்போதே கல்யாணக்களை கட்டி விட்டது. வெறும் பெண் பார்க்கும் படலம்தான். ஆங்காங்கே இரைந்து கிடக்கும் பூச்சிதறல்களும், காபி பலகாரத் தட்டுக்களும், ஊதுவத்தியின் மெல்லிய இதமான வாசமும் வரப்போகும் சுபநிகழ்ச்சிக்கு கட்டியம் கூறுவது போல...
வசந்தியின் தந்தை கூடத்தில் போடப்பட்டிருந்த சோபா முழுக்க இரு கைகளையும் வீசிப்படர்ந்து முகம் முழுவதும் சிரிப்பாய் உட்கார்ந்திருக்கிறார்.
அந்த சின்ன வீடு வழக்கத்துக்கு மாறாக ஏற்பட்ட நெரிசலில் விழி பிதுங்கியது. இத்தனைக்கும் மாப்பிள்ளை வீட்டு மனிதர்கள் கிளம்பிப் போயாயிற்று. ஒரு பெண் பார்க்கும் வைபவத்திற்கு ஊரில் இருக்கிற உறவினர்கள் அத்தனை பேரையும் கூப்பிட வேண்டாம் என்று வெங்கடேசன் அவர்தான் வசந்தியின் அப்பா-இவரிடம் இவரது பிள்ளைகள் இருவரும் கண்டித்து சொன்னதால் அவர், தனது மகன்களின் வார்த்தைக்கு மிகவும் கட்டுப்பட்டு தனது ஒன்று விட்ட இரண்டு விட்ட அண்ணன் தம்பிகளை விடுத்து, கூடப் பிறந்த நாலைந்து சகோதரர்களுக்கு மட்டும் காதும் காதும் வைத்தாற்போல் சொல்லியிருந்தார். அதுவே பத்துப் பதினைந்து பேருக்கு மேலாகிவிட்டது.
என்னதான் சொல்லு... நம்ம வசந்தி அதிருஷ்டக்காரிதான் ஜாதகத்தையே கையில எடுக்கலே... அதுக்குள்ள...
வெங்கடேசன் பேசப் பேச சமையலறையில் கடைசி ஈட்டு பஜ்ஜியை பொரித்தெடுத்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு கவலையாக இருக்கிறது.
எத்தனைதான் வசந்தியின் அதிருஷ்டத்தை எண்ணி சந்தோஷப்பட்டாலும் பெண்களுக்கே உரிய, இனம் புரியாக் கவலை... அவளுக்கும்...
"இதென்ன... திடுதிடுன்னு முந்தா நாள் வந்தாங்க... எங்க வீட்டுப்பிள்ளைக்கு, உங்க பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்பறோம்னு சொன்னாங்க. இவரும் என்னமோ, இத்தனை நாளும் பொண்ணை தன் தோள்லேயே சுமந்திட்டிருந்த மாதிரிதான், 'இந்தா, பிடி பாக்கு வெத்தலைய’ன்னு சொல்லிட்டார். விசாரிக்க வேண்டாமா?'
மனசுக்குள் சிந்தனை சக்கரம் சுழற்சியாய் சுழல கடைசி வார்த்தை மட்டும், அவளையும் மீறி வெளியே வர...
அம்மாவின் பக்கத்திலேயே நின்று சுடச்சுட வெங்காய பஜ்ஜியைத் தின்றபடி ரவி அதட்டினான்.
ஹே... என்ன நீ ரொம்பத்தான் அலட்டிக்கறே... ஏன் சொல்ல மாட்டே... என் பொண்ணைக் கேட்டு, டாக்டர் மாப்பிள்ளை வந்திருக்கார் இல்லே... அதான்.
எனக்கு சந்தோஷம்தான்டா, ஆனா, நாம நடுத்தரக்குடும்பம். இந்த காலத்துல டாக்டருக்கும், இன்ஜீனியருக்கும் படிக்க வைக்க லட்சக் கணக்குல லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அத்தனைப் பணம் இருந்தா முதல்லே நம்ம வாடகை வீட்டை விட்டுட்டு சொந்தமா ஒரு பங்களா வாங்கலாம். வேண்டாம். உங்க அப்பாவை இப்பவே ரிடையராகச் சொல்லிட்டு மாசா மாசம் நிம்மதியாக சாப்பிட்டு, டாக்டர் செலவைப் பார்த்துட்டு இருக்கலாம்.
அதுதான் செலவே இல்லாம ஒரு டாக்டரை பிடிச்சாச்சே அண்ணீ.
லட்சுமியின் நாத்தி புன்னகை மாறாமல் கூறினாலும் உள்ளூர அவள் எத்தனை வருத்தப்படுகிறாள் என்பதும் லட்சுமிக்குப் புரிந்துதான் இருந்தது.
நேற்று வரையில் அண்ணன் மகளை தன் பிள்ளைக்குத் திருணம் செய்வது பற்றி வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்த வெங்கடேசனின் தங்கைக்கு இது முற்றிலும் எதிர்பாராத வெடிகுண்டு.
என்ன இருந்தாலும் உன் பிள்ளை இன்னிக்கு பாங்க்குலே வேலை பார்க்கறானே விஜயா... சீர், செனத்தியின்னு நான் எங்கே போவேம்மா... உங்க அண்ணன் கிட்ட நிறைய எதிர்பார்க்க முடியாது... ஏதோ ரெண்டு பட்டுப்புடவை, பத்து பவுன் நகை... கோவில் மண்டபத்துல கொட்டு முழக்கோடத் தாலி... வந்த ஜனங்களுக்கு ரெண்டு வேளை வடை பாயசத்தோடச் சாப்பாடு
.
"அதென்ன அப்படிச் சொல்லிட்டே அண்ணா. வசந்தி உனக்கு ஒரே பொண்ணுதானே? கவர்ன்மென்ட்லே உனக்குத்தான் இப்ப அந்த அலவன்ஸ், இந்த அலவன்ஸ்னு ஏகப்பட்டதைத் தர்றாங்களாமே... ரவியும், பாபுவும் வேற சம்பாதிக்கத் தொடங்கிட்டாங்க... நாலு பட்டுப்புடவை, பதினஞ்சு பவுன் நகை, அப்புறம் எனக்கு, எங்க வீட்டுக்காரருக்கு நல்லதா புடவை, வேஷ்டி... இது கூடவா முடியாது... ஏற்கனவே என் பிள்ளை, வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்கறான். நான்தான், 'அதெல்லாம் நமக்கு