Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pookkalilum Theepidikkum
Pookkalilum Theepidikkum
Pookkalilum Theepidikkum
Ebook128 pages31 minutes

Pookkalilum Theepidikkum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580128304808
Pookkalilum Theepidikkum

Read more from Maheshwaran

Related to Pookkalilum Theepidikkum

Related ebooks

Reviews for Pookkalilum Theepidikkum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pookkalilum Theepidikkum - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூக்களிலும் தீப்பிடிக்கும்

    Pookkalilum Theepidikkum

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 1

    அந்த வீட்டைச் சுற்றிலும் ஏகப்பட்ட மாமரங்கள் அடர்ந்து வளர்ந்து, செழித்து, குட்டையாய் நிழலைப் பரப்பியபடி நின்றிருந்தன. கிளைக்கு கிளை கொத்துக் கொத்தாய் கனிகள் மரத்திலே பழுத்து தொங்க, கனிகளைக் கொத்த வந்த கிளிக்கூட்டம் படபடவென்று சிறகுகளை அடித்தபடியே குதூகலமாய் அங்குமிங்கும் பறந்தன. இன்பமொழி பேசி மகிழ்ந்தன. குபீர்குபீரென்று மரத்திலிருந்து பறப்பதும், மறுபடியும் மரத்தில் வந்து அமர்வதுமாய் இருந்தன. அந்த ரம்யமான காட்சியை ரசித்தபடியே வீட்டைச் சுற்றிலும் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    வீட்டுவாசலில் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது.

    பந்தலின் முகப்பில் இரண்டு பக்கமும் வாழை மரங்கள் கட்டப்பட்டு ஆங்காங்கே மாவிலை தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. பந்தலின் உட்புறம் வண்ண காகிதங்களினால் அலங்கரிக்கப்பட்டிருக்க, பந்தலுக்குக் கீழே வரிசை வரிசையாய் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

    வீட்டின் கூடத்திலும், திண்ணையிலும் உறவுக்காரர்களும், உள்ளூர் ஜனங்களும் நிரம்பி வழிந்தார்கள். செண்பகராமனும், தனலட்சுமியும் வீட்டிற்கு வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

    கயல்விழி உள்ளறைக்குள் இருந்தாள்.

    எப்பவும் பாவாடை தாவணியிலேயே இருப்பவள் அன்றுதான் புடவை கட்டியிருந்தாள். அதுவும் அழகான பட்டுப்புடவை. எலுமிச்சைப்பழ நிறத்தில் கரும்பச்சை வண்ண கோபுரங்கள். மினுமினுக்கும் விலை உயர்ந்தப் புடவை. விலை எப்படியும் பத்தாயிரத்திற்குமேல் இருக்கும். அந்தப் புடவை கயல்விழியின் அழகை பேரழகாக்கியிருந்தது...

    கயல்விழி ஏற்கனவே கொள்ளை அழகு.

    கொடிபோல மேனி... நல்ல சிவந்த நிறம். போதுமான உயரம்.

    நிலவில் தங்கத்தை உருக்கிக் கொட்டி வார்த்தெடுத்ததுபோல முகம். கருந்திராட்சைகளைப்போல சுழலும் விழிகள். அழகிய நாசி. தாமரைப் பூவின் இதழ்களை ஒட்ட வைத்ததுபோல உதடுகள். மொத்தத்தில் சந்தனத்தில் கடைந்தெடுத்த சிற்பம்போல் இருப்பாள்.

    இன்று இன்னும் அழகாய் ஜொலித்தாள்.

    கன்னங்கள் குங்குமமாக சிவந்து போயிருந்தது. கண்களில் கனவுகள் வழிந்து கொண்டிருந்தது.

    கயல்...

    தோழி ஒருத்தி கயல்விழியின் முகவாயைத் தொட்டு நிமிர்த்தினாள்.

    ம்...

    நிச்சயதார்த்த விழாவுக்கு மாப்பிள்ளையும் வருவாராம்மா...

    தெரியலியேடி

    கயல்விழி சிணுங்கினாள்.

    மாப்பிள்ளை வருவரா... மாட்டாரான்னு உனக்கு தெரியாமலா இருக்கும்? உண்மையை சொல்லுடி! நாங்க ஒண்ணும் அவரைக் கொத்திக்கிட்டுப் போயிடமாட்டோம்!

    இன்னொருத்தி கயல்விழியின் கன்னத்தைக் கிள்ளினாள்.

    நிஜமாவே எனக்குத் தெரியாது...

    அப்பாவியாய் உதட்டைப் பிதுக்கினாள் கயல்விழி.

    அடிக் கள்ளி...எங்ககிட்டேயே பொய் சொல்றே பாரு.

    ஆள் ஆளுக்கு கயல்விழியை சீண்டிக் கொண்டிருந்தார்கள்.

    ஏய்... எதுக்குடி என்னை எல்லோரும் கேலிப்பண்றீங்க...?

    இப்போ கேலி பண்ணாம எப்போ பண்றதாம்? தாலி கழுத்துல ஏறிடுச்சின்னா எங்களையெல்லாம் சுத்தமா மறந்துடுவே... பேச நெனைச்சாலும் உம்புருசன் விடணுமே...!

    கயல் கயல்னு... உன்னையே சுத்தி சுத்தி வரப்போறவரை விட்டுட்டு... எங்களைத் தேடி வருவியா என்ன?

    இந்த கிண்டல்தானே வேணாங்கறது...

    வேற என்ன வேணும்னு சொல்லு...! மாப்பிள்ளை வந்ததும் கேட்டு வாங்கித் தர்றோம்...

    ஏய்... உங்களையெல்லாம் பிறகு கவனிச்சுக்கிறேன்...

    கயல்விழி வெட்கத்தோடு சிரித்தாள்.

    கேலியும், கிண்டலும் சிரிப்பொலியும் அந்த அறையையே... நிறைத்துக் கொண்டிருந்தது.

    அந்த கிராமத்திலேயே பணக்காரர் செண்பகராமன் மட்டும்தான். மாந்தோப்பு, தென்னந்தோப்பு, வாழைத் தோட்டம், கரும்பு, வயல், கடலைக் கொல்லை, என்று திரண்ட சொத்துக்களுக்கு சொந்தக்காரர். அரிசி ஆலை, பட்டணத்தில் துணிக்கடையெல்லாம்கூட இருக்கிறது.

    பரம்பரை பரம்பரையாய் பணத்திலேயே புரண்ட குடும்பம். இன்னும் ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு பணமிருக்கிறது.

    கயல்விழி பன்னிரண்டாம் வகுப்புவரை படித்தவள். உள்ளூர் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரைதான் படிக்க வசதியிருந்தது. அதற்குமேல் படிக்க வேண்டுமென்றால் பட்டணத்திற்கு போய்தான் படிக்க வேண்டும். கயல்விழிக்கு நிறைய படிக்க ஆசை. அப்பாவிடம் அடம் பண்ணி, பட்டணம் போய் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து பன்னிரண்டாம் வகுப்புவரை படித்து விட்டாள்.

    ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கியிருந்தும் கயல்விழியை மேற்கொண்டு படிக்க வைக்கவில்லை. வீட்டோடு இருக்க வைத்துவிட்டார்.

    ஆற்றங்கரையிலும், மாந்தோப்பிலும், வயல்காட்டிலும், தோழிகள் சூழ நான்கு வருடங்களாக, சிறகடித்து, சுதந்திரப் பறவையாக பறந்து, திரிந்தவளுக்கு இதோ இன்றைக்கு நிச்சயதார்த்த விழா.

    அத்தியாயம் 2

    புழுதி பறக்க வந்து நின்றது, சின்னஞ்சிறிய அந்த கிராமத்து பேருந்து. காலையில் ஒருமுறையும், சாயங்காலம் ஒருமுறையும்தான் ஊருக்குள் வரும்.

    பட்டணத்திலிருந்து பட்டணத்திற்கு செல்பவர்களுக்கும் உற்றத் துணையாக இருப்பது அந்த சின்ன பேருந்துதான். அது ஊருக்குள் வந்து போகாவிட்டால், ஏழெட்டு கிலோமீட்டர்கள் நடந்தே செல்ல வேண்டிவரும், அல்லது மாட்டுவண்டியில்தான் போக வேண்டும்.

    ஊர்... பச்சைக் கம்பளத்தை விரித்து போட்டது போல செழிப்பாக இருந்ததே தவிர போதுமான போக்குவரத்து வசதி கிடையாது.

    இப்போதைய ஒரே ஆறுதல் அந்த பேருந்து மட்டும்தான்.

    மூட்டை, முடிச்சுகளுடன் ஏகப்பட்ட பேர் பேருந்தினுள் இருந்து கீழே இறங்கினார்கள். இதில் பெரிய வேடிக்கை ஒரு வயதான கிழவி, ஒரு கூடையில் கோழியையும், கையில் கயிற்றில் கட்டப்பட்ட ஆட்டுக் குட்டியோடும் பேருந்தினுள் இருந்து இறங்கினாள்.

    பேருந்து நின்ற அரசமரத்தடியில், ஒரே கூட்டமாக இருந்தது. பேருந்திலிருந்து இறங்கியவர்களைவிட இரண்டு மடங்குபேர் பேருந்தினுள் ஏற காத்திருந்தார்கள்.

    பேருந்தினுள் பதினாறு வயதினிலே படத்தின் பாடல் ஒன்று ரொம்ப இரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்தது. அழுக்கு மூட்டையோடு ஒரு கிழவன் முண்டியடித்துக் கொண்டு பேருந்தினுள் ஏறுவதற்கு ஓடினான்.

    யோவ் பெரிசு... இருய்யா... ஏகப்பட்ட எடமிருக்கு மொதல்ல எறங்கறவங்க எல்லாம் எறங்கிடட்டும்...

    நடத்துனர் கத்தினார்.

    எல்லோரும் இறங்கியபிறகு கடைசியாய் கீழே இறங்கினான்

    Enjoying the preview?
    Page 1 of 1