Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manal Sirpangal
Manal Sirpangal
Manal Sirpangal
Ebook72 pages27 minutes

Manal Sirpangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெளிநாட்டுக்கு வேலைக்கு போக துடிக்கும் செல்வம். செல்வத்தின் ஆசை நிறைவேறியதா? செல்வத்தை காதலித்து அவனுக்காக தன் பணத்தை இழந்து நிற்கும் ஜமுனாவை செல்வம் மணந்தானா? நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. நாம் நினைக்காதவை நடப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை மணல் சிற்பங்கள்களில் வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580128308594
Manal Sirpangal

Read more from Maheshwaran

Related to Manal Sirpangal

Related ebooks

Reviews for Manal Sirpangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manal Sirpangal - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மணல் சிற்பங்கள்

    Manal Sirpangal

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    மனிதராகப் பிறக்கவே கூடாது.

    அப்படி பிறந்துவிட்டால் ஒன்று மேல்வர்க்கமாகப் பிறக்க வேண்டும். அல்லது... கீழ்வர்க்கமாகப் பிறக்கவேண்டும். மேல்வர்க்கத்தில் எல்லாமே இருக்கும்... எதற்கும் அலைய வேண்டியது கிடையாது... நினைத்ததை... நினைத்தவுடனேயே சாதித்து விடலாம்... கீழ்வர்க்கத்தில் எதுவுமே இருக்காது... சுயகவுரவம் என்றெல்லாம்... பார்க்கத் தோன்றாது... யாரிடமாவது கையேந்தியேனும் வாழ்ந்துவிடலாம்...

    ஆனால்... நடுத்தரவர்க்கத்தில் பிறந்துவிட்டால்... அவ்வளவுதான்... ஒரே தொல்லைதான்... மனக்கவலைதான். குனிவதற்கு கூச்சமாக இருக்கும்... வளைவதற்கு சுயகவுரவம்... இடமளிக்காது... எந்த பிடிப்பும் இல்லாமல்... கம்பி மீது நடக்கிற வாழ்க்கை அது...

    செல்வமூர்த்திக்கும்... வாழ்க்கை அப்படித்தான் இருந்தது...

    எதிர்காலம் என்னாகுமோ? என்று கண்ணுக்கு முன்னால்... பெரிய கேள்விக்குறி விசுரூபமெடுத்து நின்றது.

    அப்பாவிடம் எப்படி ஆரம்பிப்பது? என யோசனையாய் தாயைப் பார்த்தான்.

    மகனின் பரிதவிப்பை புரிந்துகொண்ட கமலவேணி... தொண்டையை செருமினாள். சாய்வு நாற்காலியில் அமர்ந்து... செய்தித்தாளில் கவனத்தைப் பதித்திருந்த... கணவரை... அந்த செருமலால் ஈர்க்க முயன்றாள்.

    வேதமூர்த்தி நிமிரவேயில்லை.

    மகனும், மனைவியும்... ஏதோவொரு... தனக்குப் பிடிக்காத விஷயத்தைக் கூறப்போகிறார்கள்... என்பது அவருக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் நிமிரவேயில்லை.

    நீயே சொல்லிடேண்டா... கமலவேணி... செல்வத்தைப் பார்த்தாள். கண்கள்தான் பேசியது. செல்வமும்... கமலவேணியிடம் கண்களாலேயே பேசினான்.

    ‘ப்ளீஸ்மா... நீயே சொல்லும்மா...!’

    கமலவேணி தைரியத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டாள்.

    என்னங்க...!

    .....

    என்னங்க...! செல்வம்... உங்ககிட்டே என்னமோ... பேசணுமாம்...!

    என்ன பேசணுமாம்...?

    வேதமூர்த்தி கையிலிருந்த செய்தித்தாளை... கீழே வீசினார். தலையை சாய்த்துப் பார்த்தார்.

    அப்பா...

    சொல்லு...!

    நா... மலேசியாவுக்குப் போகலாம்னு... இருக்கேன்பா...!

    போ...!

    அலட்சியமாய் சொன்னார்.

    அவன்மீது அவருக்கு தீராத கோபமிருந்தது. அந்த கோபத்தின் மிச்சம்தான் இது. அவனோடு முகம்கொடுத்துப் பேசாததுகூட அதனால்தான்.

    கள்ளிக்கோட்டையில... ஒரு ஏஜெண்ட்டு இருக்கானாம்....! அறுபத்தி அஞ்சாயிரம்... கேக்கறான்டா! மலேசியாவுல... நல்ல வேலை...! மாசம் இருபதாயிரம் சம்பளம்! அஞ்சுவருஷ காண்ட்ராக்ட்...! அந்த ஏஜெண்ட்டுகிட்டே பணத்தைக் கட்டிட்டா போதும்... அவனே... பாஸ்போர்ட்... விசா... எல்லாத்துக்கும் ஏற்பாடு... பண்ணிடுவானாம்! நா... மலேசியாவுக்கு போயிடுறேன்பா! சம்பாதிச்சுடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்குப்பா...! எனக்கு... பணம் கட்டிடுறீங்களாப்பா...?

    கண்களில் தவிப்பு பூக்க...

    ஒரே மூச்சில் படபடவென்று... சொல்லி முடித்தான்.

    வேதமூர்த்தி விருட்டென்று எழுந்தார்.

    அறுபத்தி அஞ்சாயிரத்துக்கு... நா... எங்கே... போறது...? அந்தப் பணமிருந்தா... மரகதத்துக்கு... பதிமூனு சவரன் நகை வாங்கலாம்...! உம் புள்ளையை... பணத்தைத்தவிர வேற பேச்சு பேச சொல்லு...!

    தோள்களைக் குலுக்கியபடி... கொல்லைப்புறம் நடந்தார்.

    செல்வம் கலங்கிய விழிகளோடு தாயைப் பார்த்தான்.

    கமலவேணியின் முகத்தில் இயலாமைப் படிந்திருந்தது.

    ***

    வேதமூர்த்திக்கு தாலுக்கா ஆபீஸில் ஹெட்கிளார்க் வேலை. சுருக்கமாய் சொன்னால் பிழைக்கத்தெரியாத மனுஷன் அவருக்குக் கீழே வேலைப்

    Enjoying the preview?
    Page 1 of 1