Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Madiyil Naanuranga
Un Madiyil Naanuranga
Un Madiyil Naanuranga
Ebook48 pages14 minutes

Un Madiyil Naanuranga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“வானம் மட்டும் கேட்கிறப்ப எல்லாம் மழையைக் கொட்டோ கொட்டுன்னு கொட்டி மனுஷங்களுக்கு கருணைக் காட்டணும். ஆறுகள் எல்லாம் வருஷம் முழுக்க வத்தாம மனுஷங்கள பயன்படுத்தணும்ங்கறதுக்காக ஓடிகிட்டே இருக்கணும். ஆனா மனுஷங்க மட்டும் சகமனுஷங்க மேல இரக்கம் காட்டவே மாட்டாங்க? இரக்கம் காட்ட நெனைக்கிறவுங்களையும் தடுப்பாங்க… எதிர்ப்பாங்க! சேச்சே… என்ன உலகம் இது…? வேணாம்… இன்பா… அப்பா… அம்மா… அண்ணன்… நீங்கன்னு எனக்கு யாருமே வேணாம்! நடக்கப்போற கல்யாணத்தை நீங்க என்ன நிறுத்தறது? அதை நானே நிறுத்திடுறேன். அதே நாள்ல… அதே முகூர்த்தத்துல… அதே கல்யாண மண்டபத்துல வெச்சு… வேறோரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கங்க இன்பா… அதுதான் உங்களுக்கு நல்லது”
சூர்யபிரபாவின் கோபத்திற்கு காரணம் என்ன? உன் மடியில் நானுறங்க நாவலை வாசியுங்கள்.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580128305679
Un Madiyil Naanuranga

Read more from Maheshwaran

Related to Un Madiyil Naanuranga

Related ebooks

Reviews for Un Madiyil Naanuranga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Madiyil Naanuranga - Maheshwaran

    http://www.pustaka.co.in

    உன் மடியில் நானுறங்க

    Un Madiyil Naanuranga

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    தாயின் மடியில் தவழ்ந்தபடியே... தலையை மெல்ல உயர்த்திப் பார்க்கிற மழலையைப் போல... கிழக்குப்பக்க வானத்திலிருந்து தூக்கிப் பார்த்தான் சூரியன்.

    யாரும் ரசிக்கிறார்களோ இல்லையோ, தோட்டத்து மரங்களில் தங்கி இருந்த பறவை இனங்கள் இலவசமாக இன்னிசைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தன. படுக்கை அறையின் திறந்திருந்த சன்னலின் வழியே... பாய்ந்து வந்த வெளிச்சக் கதிர்கள்... சுள்ளென்று இமைகளில் தாக்க, சட்டென்று கண்களைத் திறந்தாள், சூரியபிரபா. இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று வைத்து அழுந்தத் தேய்த்து... கன்னங்களில் ஒற்றியபடியே... அவசரமாய் படுக்கையை விட்டு எழுந்தாள்.

    சுவர்க் கடிகாரத்தில் மணி எட்டாகியிருந்தது.

    இவ்வளவு நேரம் வரை அவள் உறங்கியதே இல்லை. நேற்றிரவு பதினொரு மணிவரை கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்த தன்னுடைய கல்யாண அழைப்பிதழ்களை ஒவ்வொன்றாய் எடுத்து நான்கு மூலையிலும் மஞ்சள் தடவி... யார் யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுடைய முகவரியை எழுதி, தனித்தனியே வகைப்படுத்திக் கட்டி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

    அதுவரை தங்கை மதுமதியும் கூடவே கண்விழித்திருந்தாள். இருவரும் சேர்ந்துதான் அந்த வேலையைச் செய்தார்கள். வெகுநேரம் வரை கண்விழித்திருந்து வேலை செய்த களைப்பின் காரணமாகத்தான், அதிகாலையிலேயே எழ முடியாமல் அடித்துப் போட்டது மாதிரி உறங்கிவிட்டாள்.

    தாமதமாக எழுந்ததற்காக தன்னைத்தானே கோபித்துக் கொண்டு படுக்கை அறையைவிட்டு வெளியே வந்தாள் பிரபா.

    கூடம் அமைதியாக இருந்தது.

    பூஜை அறைக்குள்ளிருந்து வளையம் வளையமாய் சாம்பிராணி புகை வந்து கொண்டிருந்தது.

    முகம் முழுக்க

    Enjoying the preview?
    Page 1 of 1