Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirai Pirikka Mudiyuma?
Uyirai Pirikka Mudiyuma?
Uyirai Pirikka Mudiyuma?
Ebook160 pages56 minutes

Uyirai Pirikka Mudiyuma?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்த்துங்கள் வாசகர்களே…
என் அன்பான வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் ஆதரவினால் வளர்ந்துக் கொண்டிருக்கும் எனக்கும், செல்வி இந்திராவுக்கும் கடந்த நவம்பர் 2-ந் தேதியன்று கல்யாணம் நடந்தது. ஆசீர்வாதத்தோடும், பாசத்தோடும், எனக்கு தந்த கல்யாணப்பரிசுதான் இந்த நாவல்.
'உயிரைப் பிரிக்க முடியுமா?' என்ற இந்நாவலின் தலைப்பு மட்டுமல்ல கதையும் கூட ஒரு அழகிய கவிதையைப் போலத்தான் இருக்கும். ‘கல்யாணமானவனைக் காதலிக்கலாமா?’
காதலிக்கிறாள் இக்கதையின் நாயகி வைகை.
தாயில்லாத கிருஷ்ணா என்ற சிறுமி மீது அவள் வைத்த அளவு கடந்த பாசம்தான் அவளைக் காதலில் தள்ளுகிறது. உண்மையான அன்பை யாராலயும் அழிக்க முடியாது. காதலும் அப்படித்தான். எத்தனை ஆழமாய் குழி தோண்டி புதைத்தாலும் உண்மையான அன்பு ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்.
இந்த வைகையின் அன்பு புனிதமானது. காதல் தெய்வீகமானது. அவளுக்குள் ஒன்றாக கலந்து விட்ட பூரணச்சந்திரன், கிருஷ்ணா இவர்களது உறவைப் பிரிக்க முடியுமா? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி
வாழ்த்துக்களை வேண்டும்
மகேஷ்வரன்.
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580128304815
Uyirai Pirikka Mudiyuma?

Read more from Maheshwaran

Related to Uyirai Pirikka Mudiyuma?

Related ebooks

Reviews for Uyirai Pirikka Mudiyuma?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirai Pirikka Mudiyuma? - Maheshwaran

    http://www.pustaka.co.in

    உயிரைப் பிரிக்க முடியுமா?

    Uyirai Pirikka Mudiyuma?

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    என்னைப் பற்றி…

    வாழ்த்துங்கள் வாசகர்களே…

    என் அன்பான வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் ஆதரவினால் வளர்ந்துக் கொண்டிருக்கும் எனக்கும், செல்வி இந்திராவுக்கும் கடந்த நவம்பர் 2-ந் தேதியன்று கல்யாணம் நடந்தது. ஆசீர்வாதத்தோடும், பாசத்தோடும், எனக்கு தந்த கல்யாணப்பரிசுதான் இந்த நாவல்.

    'உயிரைப் பிரிக்க முடியுமா?' என்ற இந்நாவலின் தலைப்பு மட்டுமல்ல கதையும் கூட ஒரு அழகிய கவிதையைப் போலத்தான் இருக்கும். ‘கல்யாணமானவனைக் காதலிக்கலாமா?’

    காதலிக்கிறாள் இக்கதையின் நாயகி வைகை.

    தாயில்லாத கிருஷ்ணா என்ற சிறுமி மீது அவள் வைத்த அளவு கடந்த பாசம்தான் அவளைக் காதலில் தள்ளுகிறது. உண்மையான அன்பை யாராலயும் அழிக்க முடியாது. காதலும் அப்படித்தான். எத்தனை ஆழமாய் குழி தோண்டி புதைத்தாலும் உண்மையான அன்பு ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்.

    இந்த வைகையின் அன்பு புனிதமானது. காதல் தெய்வீகமானது. அவளுக்குள் ஒன்றாக கலந்து விட்ட பூரணச்சந்திரன், கிருஷ்ணா இவர்களது உறவைப் பிரிக்க முடியுமா? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    நன்றி

    வாழ்த்துக்களை வேண்டும்

    மகேஷ்வரன்.

    1

    மத்தியானம் ஒரு மணி.

    கதிரவன் உக்கிரமாய் அனலைக் கக்கிக் கொண்டிருந்தான். திறந்து வைக்கப்பட்டிருந்த சன்னல்களின் வழியே வெப்பக்காற்று வீசியது. மின்சாரம் வேறு இல்லாததால் மின்விசிறிகள் சுழலாமல் ஒரே புழுக்கமாக இருந்தது. அலுவலகத்தில் இருக்கவே முடியவில்லை. வியர்த்துக்கொட்டியதை துடைத்து துடைத்து கைக்குட்டையே ஈரமாக காட்சியளித்தது.

    திடீரென்று கரு மேகங்கள் சூழ்ந்து, வானம் இருண்டு குளுகுளுப்பான ஈரக்காற்று வீசி மழை கொட்டோ கொட்டென்று கொட்டாதா? என பூரணச்சந்திரனின் மனம் ஏங்கியது. தான் பிறந்ததிலிருந்து தன்னை சுமக்கிற பூமிப்பந்திற்கு யாரேனும் நன்றிக் கடனை செலுத்த விரும்பினால்... ஒரே ஒரு மரக்கன்றை நட்டு வையுங்கள். அது போதும். ஒவ்வொருவரும் ஆளுக்கொரு மரக்கன்றை நட்டு வைத்து ஆளாக்கிவிட்டால் பூமியை வெப்பம் நெருங்கவே முடியாது. குளுமையைத் தேடி ஊட்டிக்கும், கொடைக்கானலுக்கும் செல்கிற அவசியமும் இருக்கவே இருக்காது என்று இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரையில் படித்தது ஞாபகத்திற்கு வந்தது.

    இப்போதெல்லாம் மரங்களை நடுகின்றவர்கள் ஊருக்கு ஒரு சிலராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அதே சமயம் இருக்கிற மரங்களை வெட்டுகிறவர்களின் கரங்களும் அதிகரித்துக் கொண்டேதானே போகிறது.

    பூரணச்சந்திரன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்தான்.

    பூரணச்சந்திரன்...

    எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த கணேசன் உரக்க கூப்பிட்டான்.

    என்ன கணேசன்?

    நீங்க சாப்பிடலையா?

    கணேசன் கரிசனமாய்க் கேட்டான். வீட்டு சாப்பாடு அவனுடைய மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது. கூட்டு... பொரியல்... சாம்பார்.. ரசம்... என்று டிபன் கேரியரின் ஒவ்வொரு அடுக்கையும் திறந்து பரப்பி வைத்திருந்தான்.

    நா... கொண்டு வரலை...

    வாங்க. என்னோட சாப்பாட்டை ரெண்டு பேரும் பகிர்ந்து சாப்பிடலாம்

    வேணாம். எனக்குப் பசிக்கலை.

    பூரணச்சந்திரன் அலுவலக அறையை விட்டு வெளியே வந்தான். எல்லோரும் சாப்பிடுவதில் மும்முரமாய் இருந்தார்கள்.

    அந்த அலுவலகம் மூன்றாவது தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. மாடிப்படிகளில் இறங்கி கீழே வந்தான். கட்டிடத்தைச் சுற்றிலும் வரிசையாக வேப்பமரங்கள் அவனை நன்றி உணர்ச்சியோடு ஈரக்காற்றை வீசி தாலாட்டின.

    தினமும் அலுவலகத்தில் தனது வேலை நேரம் முடிந்ததும், அரை மணி நேரம் செலவழித்து அந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அதனால் தான் அந்த மரங்கள் உயிருடன் இருந்தன. இல்லாவிட்டால் எரிக்கிற வெயிலுக்கு எப்போதோ பட்டுப் போயிருக்கும்.

    வேப்பமரத்திற்கு கீழே வந்து நின்றதும் புழுக்கம் போன இடம் தெரியவில்லை. பூரணச்சந்திரனின் உள்ளுக்குள் குளுமை பரவியது. சுத்தமான காற்றை உள்ளுக்குள் இழுத்து நிதானமாக மூச்சு விட்டான்.

    காலையில் அழுது கொண்டே ஸ்கூல் வேனில் ஏறிப்போன கிருஷ்ணா கண்ணுக்குள் வந்தாள். காரணமே இல்லாமல் பிடிவாதம் பிடித்தாள். ‘நா இன்னைக்கு ஸ்கூலுக்குப் போகலை டாடி’ என்று கிளிப் பிள்ளையாட்டம் சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னாள். முதுகில் சுள்ளென்று ஒரு அடி வைத்து வேனுக்குள் வலுகட்டாயமாகத் திணித்து தான் கிருஷ்ணாவை ஸ்கூலுக்கு அனுப்பியிருந்தான்.

    கிருஷ்ணா மீது அவன் உயிரையே வைத்திருக்கிறான்.

    அவனது உலகமே கிருஷ்ணா தான்.

    அவன் உயிர் வாழ்வது கிருஷ்ணாவுக்காகத்தான்.

    ஆனாலும் சில சமயங்களில், அவனையும் மீறி கோபம் வெளிப்பட்டு விடுகிறது.

    கிருஷ்ணாவுக்கு ஏழு வயது...

    இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.

    துறுதுறுவென்ற விழிகள். நல்ல நிறம். சுருள் சுருளாய் கேசம் தோள்களில் வழிய, அவள் குதித்து குதித்து நடக்கும் அழகே தனிதான்.

    கிருஷ்ணா அவனுக்கு கடவுள் கொடுத்த வரம்.

    கிருஷ்ணா தேவதை. அவனது வீட்டை புன்னகையோடு வலம் வருகிற குட்டி தேவதை.

    இந்த உலகிலேயே பூரணச்சந்திரனுக்கு பிடித்த ஒரே பூ கிருஷ்ணாவின் புன்னகைதான்.

    கிருஷ்ணா வளர வளர பிடிவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணா எதைக் கேட்டாலும் வாங்கி கொடுத்து விடுகிற அவனால்... ஒன்றே ஒன்றை மட்டும் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

    அது அம்மா.

    கிருஷ்ணா பிடிவாதம் பிடிப்பது அம்மாவுக்காகத்தான். அந்த அழுகை ஆர்ப்பாட்டம் எல்லாமே அம்மாவுக்காகத்தான்.

    டாடி.... எனக்கு மம்மி வேணும்.

    கிருஷ்ணா தினமும் அதிகமாய் உச்சரிக்கிற வார்த்தை இதுதான். இது மட்டும் தான். கூடை கூடையாய்... வித விதமாய்... பொம்மைகளை வாங்கிப் போய் கொட்டினாலும் அவள் தொட்டுப்பார்ப்பது இல்லை.

    ஜூலிக்கு மம்மி இருக்காங்க. வினோவுக்கு மம்மி இருக்காங்க... ப்ரீதிக்கு மம்மி இருக்காங்க. ஆனா... எனக்கு மட்டும் மம்மி இல்லை என்னோட மம்மி எங்கே டாடி?

    அழுகை அழுகையாய் கிருஷ்ணா கேட்ட கேள்விக்கு அவனால் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

    டாடி... என்னோட மம்மி எங்கே டாடி?

    தனது பிஞ்சு விரல்களால் அவனது கன்னத்தை சுரண்டினாள் கிருஷ்ணா.

    மம்மி... சாமி கிட்டே போயிட்டாங்க கிருஷ்ணா.

    ஏன் சாமி கிட்டே போனாங்க?

    அந்த பிஞ்சு விழிகளின் கூர்மையை அவனால் நேருக்கு நேர் சந்திக்க இயலவில்லை. அழுகை அடைத்தது.

    இதயம் தடதடவென்று துடித்தது.

    சாமிக்கு மம்மியை பிடிச்சுப் போச்சு. அதான் தன்னோட கூட்டிக்கிச்சு

    அப்போ... மம்மி திரும்பி வரவே மாட்டாங்களா?

    வர மாட்டாங்க...

    நீங்க கூப்பிட்டாலுமா...?

    ஆமா...

    நா... கூப்பிட்டா வருவாங்களா?

    ஏக்கம் மிளிரக் கேட்ட போது வேதனை முள்ளாய் தைத்தது பூரணச் சந்திரனுக்கு.

    யார் கூப்பிட்டாலும் வரமாட்டாங்க

    ஓகே. மம்மியை நாம கூப்பிட வேணாம். நாம ரெண்டு பேரும் சாமி கிட்டேயே போயிடலாமா?

    அவனது கையை இறுக்கமாய் பற்றினாள் கிருஷ்ணா.

    சாமி கிட்டே போயிட்டா... மம்மியைப் பார்க்கலாம் தானே? சாமி கிட்டே எப்படி போறது டாடி? என்னைக்குப் போகலாம் டாடி?

    நினைக்கும் போதெல்லாம் அதைப்பற்றியே தான் பேசுகிறாள் கிருஷ்ணா. பீரோவைத் திறந்து அடித்தட்டில் மிகப் பத்திரமாய் வைத்திருந்த, அவனுடைய கல்யாண ஆல்பத்தை எடுத்து வைத்துக் கொண்டு, அவனுக்கு பக்கமாய் மாலையுங் கழுத்துமாய் நிற்கும் மேகலாவைக் காட்டி...! இது தான் என்னோட மம்மியாடாடி?" என கிருஷ்ணா கேட்கும் போதே இதயமே வெடித்து விடும் போல இருக்கிறது. மேகலாவின் புகைப்படத்தை எடுத்து எப்பவும் தனது படுக்கையில் தலையணைக்கு அடியிலேயே வைத்திருக்கிறாள் கிருஷ்ணா.

    தாய்ப் பாசத்திற்காகவும், தாயின் தாலாட்டிற்காகவும், தாயின் அருகாமைக்காகவும் ஏங்கும் கிருஷ்ணாவைப் பார்க்கும் போதெல்லாம் உடம்பு பூராவும் கத்தியினால் கீறியதைப்

    Enjoying the preview?
    Page 1 of 1