Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Vennila
Kaadhal Vennila
Kaadhal Vennila
Ebook107 pages37 minutes

Kaadhal Vennila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுரேந்தர் பட்டப் படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கும் ஒரு வேலையில்லா பட்டதாரி. அவள் தங்கையின் அன்பைத் தவிர குடும்பத்தில் வேறு அன்பும் அவனுக்கு கிடைக்கவில்லை. வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். இச்சூழ்நிலையில் தன் தங்கைக்கு ஒரு நல்ல வரன் ஆனால் கூடுதல் வரதட்சணைகளோடு. இளையவன் நல்ல வேலையில் இருந்தாலும் முடியாது என்று விலகுகிறான். ஆனால் சுரேந்தர் இந்த கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென்று நினைத்தான். ஆனால் எப்படி வேலை இல்லாதவனுக்கு யாரும் கடன் தராத நிலையில் எதை வைத்து கல்யாணத்தை நடத்தி முடிக்கிறான். வாங்க வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580128307862
Kaadhal Vennila

Read more from Maheshwaran

Related to Kaadhal Vennila

Related ebooks

Reviews for Kaadhal Vennila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Vennila - Maheshwaran

    https://www.pustaka.co.in

    காதல் வெண்ணிலா

    Kaadhal Vennila

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள் சங்கரி. எதிரேவந்து அமர்ந்தாள் ஜோதி.

    அம்மா, இது உனக்கே நியாயமா...?

    எதுடி?

    சங்கரி புருவங்களை உயர்த்தினாள். விரலில் பிடித்திருந்த புடலங்காய் துண்டுதுண்டாகிக் கொண்டிருந்தது.

    ஒரு கண்ணுல வெண்ணையையும், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பையும் வைக்கிறியே அதைச் சொல்றேன்.

    ஜோதியின் குரலில் ஆத்திரம் தெரிந்தது.

    நீ என்ன சொல்றேன்னே எனக்குப் புரியல...

    நடிக்காதேம்மா, இன்னைக்கு நம்ம சுரேந்தர் அண்ணனுக்கு பர்த்டே. அப்பாக்கிட்ட சொல்லி புது டிரெஸ் வாங்கித் தரலைன்னாக் கூட பரவாயில்லை. காலையில டிபன் பண்ணினப்ப கூடவே ஏதாவது ஸ்வீட்டும் செஞ்சு தந்திருக்கலாம்ல? அண்ணன் எவ்ளோ சந்தோஷப்பட்டிருக்கும்? ஏம்மா இப்படி செய்றே? இதே ரவீந்தர் அண்ணனோட பர்த்டேயா இருந்திருந்தா இப்படி சும்மா இருப்பியா? காலையிலயே எழுந்திரிச்சு கோயிலுக்குப் போயி அண்ணன் பேருக்கு அர்ச்சனை பண்ணி விபூதியை நெத்தியில பூசி விட்டு, நூறு வயசு வாழணும்னு வாயாற வாழ்த்தியிருப்பே... பாதாம்கீர்லேருந்து பால்கோவாவரை ஒண்ணுவிடாம செஞ்சு அமர்க்களப்படுத்தியிருப்பே! ஆனா, சுரேந்தர் அண்ணனுக்கு மட்டும் எதுவுமே கிடையாது - ஜோதி ஆதங்கப்பட்டாள்.

    மூணு வேளையும் சோத்தைத் தின்னுட்டு வேலைவெட்டி இல்லாம தண்டமா ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கற உன்னோட அருமை அண்ணனுக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல். கால்தூசி பெறுவானா இவன்? படிச்ச படிப்புக்கு ஒரு வேலை தேடிக்க துப்பில்லை. இவனுக்குப் பொறந்த நாள் கொண்டாடலைன்னு யாரு அழுதா? கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி இருக்குதா? குடும்பக்கவலை இருக்குதா? காலையில சாப்பிட்டுட்டு வெளிய போனான்னா ராத்திரிக்குத்தான் வீட்டுக்குத் திரும்புறான்! எங்கே போறான் என்ன பண்றான்னு ஏதாவது தெரியுதா? யார்கிட்டேயாவது சொல்றானா? பாவம் உங்கப்பா... அவனோட கவலையிலேயே பி.பி.யும், சுகரும் நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போயி பாதி உடம்பாயிட்டார்! உன் அருமை அண்ணனை நீதான் மெச்சிக்கணும். பாசம் பொங்கி வழிஞ்சதுன்னா, நேரா பேக்கரிக்குப் போயி கேக்கு வாங்கி வந்து நடுக்கூடத்துல உன் அண்ணனை நிக்கவச்சு கேக்கை வெட்டச் சொல்லி பொறந்த நாளைக் கொண்டாடேன். யாரு வேணாங்கிறா?

    அனல் கங்குகளாய் வார்த்தைகளைக் கக்கினாள் சங்கரி. ஜோதியின் முகம் சடுதியில் சுருங்கிப் போனது. கண்கள் கலங்கின. முட்டிய அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டாள்.

    நீ சொன்னாலும் சொல்லாட்டியும் இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காவது ஒருநாள் என் சுரேந்தர் அண்ணனோட பர்த்டேயை இன்விடேஷன் அடிச்சு நூறு பேரைக் கூப்பிட்டு நடுக்கூடத்துல நிக்கவெச்சு கேக்கை வெட்டச் சொல்லி கொண்டாடத்தான் போறேன். அதை நீ பார்க்கத்தான் போறே! என்றாள் ஆத்திரத்தோடு.

    அப்பிடி ஒண்ணு நடந்தா அதுக்காக அதிகமா சந்தோஷப்படுற மொதல் நபர் நானாத்தான் இருப்பேன். மணி எட்டேமுக்கால் ஆவப்போவுது! காலேஜுக்கு நேரமாயிடுச்சு! உன் அண்ணன் பெருமைய அப்புறம் பேசிப்போம். இப்ப நீ எடத்தைக் காலி பண்ணு...! பரபரத்தாள் சங்கரி.

    அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை ஜோதிக்கு. விருட்டென்று எழுந்தாள். அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். டைனிங்டேபிளில் தயாராய் சங்கரி வைத்திருந்த டிபன்பாக்ஸைக் கையிலெடுத்து ஹேண்ட் பேக்கினுள் திணித்தாள். ஷெல்ப்பில் இருந்த ரெக்கார்ட்ஸ் நோட்டையும் புக்ஸையும் அள்ளிக்கொண்டு நிமிர்ந்தாள். எதிரே முறைப்பாய் ரவீந்தர் நின்றிருந்தான்.

    ஜோதி, நைட்டு உன்கிட்ட என்ன சொன்னேன்?

    என்ன சொன்ன?

    என்னோட பேண்ட்டையும் சட்டையையும் அயர்ன் பண்ணி வைக்க சொன்னேன்ல? டேபிள் மேல நான் சுருட்டிப் போட்டபடியே கெடக்கு? ஏன் அயர்ன் பண்ணி வைக்கல?

    ம்... நீ தெனமும் மடிப்புக் கலையாம மாட்டிக்கிட்டுப் போறதுக்கு அயர்ன் பண்ணி வைக்கிறதுதான் என்னோட வேலையா? எனக்குப் பரிட்சையெல்லாம் நெருங்கிக்கிட்டு இருக்கு. அதுக்குப் படிப்பேனா, உனக்கு அயர்ன் பண்ணி வைப்பேனா? உன்னோட வேலையை நா செய்றேன். எனக்காக நீ போய் எக்ஸாம் எழுதிடுறியா?

    கிண்டலாய்க் கேட்ட பின்னால் ஜோதியைப் பார்த்துக் கத்தினான்.

    உனக்கு வரவர வாய்க்கொழுப்பு ஜாஸ்தியாயிக்கிட்டே வருது! எல்லோரையும் எதிர்த்துப் பேசுற... யாரையும் மதிக்கிறதும் இல்லை. உன்னை ப்ளஸ்டூவோட நிறுத்தி அம்மாவுக்குத் தொணையா அடுக்களையில போட்டு இருக்கணும்! மேல படிக்கட்டும்னு காலேஜ்ல சேர்த்துவிட்டது ரொம்பத் தப்பாப் போயிடுச்சு! இரு இரு... செருப்புக்கு வார் போயிடுச்சு, சுரிதாருக்கு துப்பட்டா இல்லை, அது இல்லை, இது இல்லை, டியுஷன் பீஸ் கட்டணும்னு எல்லாத்துக்கும் என்கிட்டேதான் வரணும். அப்ப பார்த்துக்குறேன்.

    பற்களைக் கடித்தான் ரவீந்தர்.

    "டேய் ரவி! என்னத்துக்கு ஜோதிகிட்ட சண்டை போடுற? நீ போய் டிபன் சாப்பிடு. அதுக்குள்ள நா உன்னோட பேண்ட்டையும்

    Enjoying the preview?
    Page 1 of 1