Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhai Tharumo En Megam?
Mazhai Tharumo En Megam?
Mazhai Tharumo En Megam?
Ebook128 pages44 minutes

Mazhai Tharumo En Megam?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிந்துவும் சூர்யாவும் காதலர்கள். அவர்கள் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் அது எவ்வாறு தடைபடுகிறது அதற்குப் பிறகு சிந்துவின் வாழ்க்கையில் ஏற்படும் துரோகங்களை அவள் எவ்வாறு மன்னித்து தன் வாழ்க்கையை அமைத்து கொள்கிறாள் என்பதை உண்ர்ச்சிபூர்வமான இந்த நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106133
Mazhai Tharumo En Megam?

Read more from R. Sumathi

Related to Mazhai Tharumo En Megam?

Related ebooks

Reviews for Mazhai Tharumo En Megam?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhai Tharumo En Megam? - R. Sumathi

    http://www.pustaka.co.in

    மழை தருமோ என் மேகம்?

    Mazhai Tharumo En Megam?

    Author:

    ஆர்.சுமதி

    R. Sumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    புகையாய் மேகம். நகையாய் நிலவு. அதனழகை மிகைப்படுத்தும் இரவு. பகையாய் காற்று! மேகத்தை கலைத்துப் பார்த்தது.

    சூர்யா கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழு என்றது கடிகாரம்.

    விளையாடும் வேளையில் இடையில் ஓடிவந்து அம்மாவின் காதில் ரகசியம் சொல்லிவிட்டு ஓடும் குழந்தைகளாக அலைகள் கரை தொட்டு ரகசியம் பேசி மறைந்தன.

    சிந்துவிற்காக காத்திருக்கிறான். வந்து சேரவில்லை அவள் இன்னும்.

    இருவரும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை செய்கின்றனர். இவனுக்கு ஐந்து மணியோடு வேலை முடிந்து விடும். ஆனால் அவள் வேலை அப்படி இல்லை. எம்.டி.க்கு செகரட்டரி. அவருக்கு வலது கை போல. கூடவேயிருக்க வேண்டும். நினைத்த நேரத்திற்கு எங்கும் போக முடியாது.

    அலுத்துக் கொண்டான் சூர்யா.

    காலையில் சிந்து அலுவலகத்திற்கு வந்த கோலம் அவனுடைய இதயத்துடிப்பை உச்சத்துக்கு கொண்டு போனது!

    ஷாம்புவில் குளித்த கூந்தலை தோளைத் தழுவி படர விட்டு மஞ்சள் நிற சுடிதாரில் புத்தம் புது பனிமலராக அவள் வந்து நின்ற கோலம் அவனை படாத பாடு படுத்திக் கொண்டிருந்தது.

    ஒருமுறை தன்னைப் பார்க்க மாட்டாளா? பார்த்தாள் அவளுடைய அழகை ஜாடையில் சொல்லிவிட தவித்தான். அவளோ அவனிருக்கும் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை.

    அலுவலகத்தைப் பொறுத்தவரை அவர்களுடைய காதல், அஞ்சலிதேவி கால சினிமா போல். கண்ணால் மட்டும் பேசிக் கொள்ளும் காதல், அவர்களின் காதல் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

    காட்டிக் கொள்ளக்கூடாது என கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தாள்.

    அவனுடைய மேஜைக்கு செல்ல வேண்டிய ஃபைலில் இவள் கடிதம் சொருகுவாள். இவளுடைய கை வழியாக எம்.டி.க்கு போக வேண்டிய ஃபைலில் அவன் கடிதம் சொருகுவான்.

    பார்க், பீச் என என்னதான் சுத்தினாலும் கடித வழி காதலுக்கு ஒரு தனி அழகு தான். ஒரு அமைதி, ஒரு ஏகாந்தம், ஒரு ஆழம் அதில் இருக்கிறது.

    அலுவலகத்தில் அவளிடம் எதுவும் பேச முடியாது. செல்போனில் கூட.

    அன்றைக்கும் அப்படித்தான். அவளின் அழகை அதனால் எகிறிய தன் இதயத்துடிப்பை எப்படியாவது சொல்லி விட வேண்டும் என இவன் அவளுடைய செல்போனுக்கு முயற்சி செய்ய... அவள் தொடர்பை துண்டித்தாள். துண்டித்த விதமே அவளுடைய கண்டிப்பை சொன்னது.

    அலுவலகத்தில் மட்டும் தான், பாராமுகம், சேரா பார்வை கேளாத காது இதெல்லாம்.

    வெளியில் வந்து விட்டாளோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

    தூரத்தில் மஞ்சள் நிறம் தென்பட்டது. சிந்து என்று தெரிந்தது. கடற்கரை காற்று அவளுடைய கூந்தலையும் துப்பட்டாவையும் ஒருசேர பறக்கவிட்டது.

    கூந்தலை அலட்சியப்படுத்தி துப்பட்டாவை மட்டும் இழுத்து மார்பை மூடிய வண்ணம் வந்தாள்.

    ஓடிச்சென்ற பார்வை அவள் மேல் பட்டு அவள் பின்னாலேயே நாய்க்குட்டி போல் ஓடி வந்தது.

    ஸாரிப்பா... என்றவாறு அவனருகில் மணலில் அமர்ந்தாள்.

    எதுக்கு ஸாரி! நீங்களெல்லாம் பெரிய ஆள், உங்களுக்காக நாங்க காத்துத்தானே கிடக்கணும்.

    பெரிய ஆளா? உங்களை விட உயரத்தில் கம்மிதாம்ப்பா.

    நான் சொன்னது அதை இல்லை. எம்.டி.க்கு ரைட் ஹேண்ட்! நினைச்ச நேரத்திற்கு வர முடியுமா? செல்போனுக்கு ட்ரைப் பண்ணினா கூட ஆஃப் பண்ற அளவுக்கு ரொம்ப பிஸி.

    கலகலவென சிரித்தாள் சிந்து.

    ஓ... அதான் கோபமா? நீ எதுக்கு போன் பண்ணியிருப்பேன்னு எனக்குத் தெரியாதா? காலையில நான் ரொம்ப அழகா வந்தேன். ரோட்ல வரும்போதே கிழங்கட்டையெல்லாம் என்னைப் பார்த்து ஜொள்ளு விட்டதுங்க. அதுங்களே இப்படின்னா... நம்ம ஆளு இன்னைக்கு அம்பேல்தான்னு நினைச்சுக்கிட்டு வந்தேன். அந்த மாதிரியே நீ என்னைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டிருந்தே?

    யாரு... நானா? நான் உன்னைப் பார்த்து ஜொள்ளு விட்டேனா? பைத்தியம் பைத்தியம்

    யூ... பின்னே... பின்னே எதுக்கு போன் செய்தே?

    அதுக்கு வேற காரணம் இருக்கு.

    என்ன சொல்லு

    என்ன அவசரம்? அப்புறம் சொல்றேன்.

    பொய்... நீ... என் அழகை புகழத்தான் போன் செய்தே. ஒழுங்கா ஒத்துக்கோ!

    அவன் மார்பில் செல்லமா குத்தினாள்.

    அவளுடைய கையைப் பற்றிக் கொண்டவன் கண்களால் சிரித்தான்.

    சத்தியமா இல்லை.

    அப்போ... என் அழகைப் பாராட்டணும்னு உனக்குத் தோணலையா?

    இல்லை.

    ஏய்...

    கத்தாதே! யார் யாரை எங்கே பாராட்டணும்னு ஒரு லிஸ்ட்டேயிருக்கு. அதன்படி தான் பாராட்டணும். பெண்களை மஞ்சத்தைத் தவிர வேறு எங்கேயும் பாராட்டக்கூடாதாம்.

    உதைப்பட போறே!

    அப்படின்னு நான் சொல்லலே! ஒரு பெண்ணே சொல்லியிருக்காங்க.

    அந்த பொண்ணு யாரு?

    ஔவையார்

    இந்த கதையெல்லாம் விடாதே. நீ எழுதற லவ் லட்டர்ல ஆயிரம் தப்பு. இந்த லட்சணத்துல ஒளவையாரைப் பத்தியெல்லாம் பேசறே?

    வேண்டுமானால் என் புலமையை சோதித்து பாரேன்? திருவிளையாடல் சிவாஜி பாணியில் அவன் சொல்ல சிரித்த சிந்து.

    சரி... எப்படி, சொல்லு பார்ப்போம் என்றாள்.

    சொன்னா என்ன தருவே?

    ஆயிரம் பொற்காசுகள்.

    யாருக்கு வேணும்? ஆயிரம் முத்தங்கள்...!

    ச்சீ.. ஆயிரம் முத்தம் கொடுத்தா உன் மூஞ்சி பூரா எச்சில் தான் இருக்கும். சரி சொல்லு முதல்ல...

    நேசனைக் காணாவிடத்து நெஞ்சாரவே துதித்தல், ஆசானை எவ்விடத்தும் அப்படியே! வாசமனையாளைப் பஞ்சணையில், மைந்தர் தமை நெஞ்சில், வினையாளை வேலை முடிவில்! புரிஞ்சுதா?

    அட... ஆச்சரியமாயிருக்கே! விட்டாக்க வைரமுத்து ரேஞ்சுக்கு போய்டுவே போலிருக்கே! திடீர்னு நாம இலக்கிய காதலுக்கு போய்ட்டோம்

    பேச்சை திசை திருப்பாதே! சொன்னபடி ஆயிரம் முத்தம் கொடு.

    "ம்... நீ என்ன சொன்னே? மனையாளை பஞ்சணையில் மட்டும் தான்

    Enjoying the preview?
    Page 1 of 1