Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhvu Thodangum Idam Nee Thane!
Vazhvu Thodangum Idam Nee Thane!
Vazhvu Thodangum Idam Nee Thane!
Ebook116 pages1 hour

Vazhvu Thodangum Idam Nee Thane!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கலைமணி, சந்தான லெட்சுமி இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் தோழிகள். சந்தான லெட்சுமி தினமும் பள்ளிக்கு லேட்டாக வருகிறாள். சில நாட்களாக அவள் சரியாக படிப்பதில்லை, சோர்வுடன் இருக்கிறாள். திடீரென ஒரு நாள் தற்கொலை செய்து கொள்கிறாள். தோழியின் மரணம் கலைமணியை மிகவும் பாதிக்கிறது. சந்தான லெட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொள்கிறாள்? தோழியின் மரணத்தால் கலைமணியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580137106150
Vazhvu Thodangum Idam Nee Thane!

Read more from R. Sumathi

Related to Vazhvu Thodangum Idam Nee Thane!

Related ebooks

Reviews for Vazhvu Thodangum Idam Nee Thane!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhvu Thodangum Idam Nee Thane! - R. Sumathi

    http://www.pustaka.co.in

    வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே!

    Vazhvu Thodangum Idam Nee Thane!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    வகுப்பு தொடங்குவதற்கான மணி ஒலிக்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன.

    வராண்டாக்களிலும் வகுப்பறை வாசல்களிலும் மரத்தடிகளிலும் மாணவிகள் நிறைந்திருந்தனர். கலகலப்பாக பேசி சிரித்தபடி இருந்தனர்.

    கலைமணியின் கண்கள் சந்தான லெட்சுமியைத் தேடின. வழக்கம் போல் அலுப்புத் தோன்றியது.

    ஒரு நாளாவது சீக்கிரம் வருகிறாளா? தினமும் லேட். ச்சே! என எரிச்சல் பட்டுக் கொண்டாள்.

    சில நிமிடங்களில் மணி ஒலித்தது. கடவுள் வணக்க கூட்டம் முடிந்து வகுப்பிற்கும் வந்தாயிற்று. சந்தான லெட்சுமி வரவில்லை.

    முதல் வகுப்பே தமிழ் தான். தமிழாசிரியை கனகவல்லி வந்தார். வகுப்பாசிரியரும் அவர்தான். கலித்தொகையிலிருந்து ஒரு பாடலை எடுத்து எல்லோரையும் கட்டிப்போடும் விதமாக நடத்தத் தொடங்கினார். அப்பொழுது தான் சந்தான லெட்சுமி வந்தாள். தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டாள்.

    சரி...சரி. போ பாடம் நடத்தும் ஆர்வத்தில் சந்தான லெட்சுமி தாமதமாக வந்ததை பெரிதாகக் கண்டுக் கொள்ளவில்லை ஆசிரியை.

    சந்தான லெட்சுமி கலைமணியின் அருகில் வந்து அமர்ந்தாள். அவளுடைய முகத்தைப் பார்த்த கலைமணி துணுக்குற்றாள். அழுததைப் போல் கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. உற்றுப் பார்த்ததில் கன்னத்தில் விரல்பதிவுகள் வீக்கத்தோடு தெரிந்தன.

    ‘என்னாச்சு இவளுக்கு? யார் இவளை அடித்தது? அம்மாவா? அப்பாவா?’

    ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்ததால் பேச முடியவில்லை. ஆனால் மனம் பாடத்தில் பதியவில்லை. பக்கத்திலிருக்கும் சந்தான லெட்சுமியின் மீதேயிருந்தது.

    ஒரு வழியாக அந்த வகுப்பு முடிந்தது. அடுத்த வகுப்பிற்கான ஆசிரியை வந்து விட அப்பொழுதும் பேச முடியவில்லை. பத்து நிமிட இடைவேளையின் போது மாணவிகள் அனைவரும் எழுந்து வெளியே சென்று விட இவர்கள் இருவர் மட்டும் தனித்திருந்தனர்.

    சந்தானம்... என்னாச்சு? ஏன் அழுத மாதிரி இருக்கே? என்றாள்.

    இல்லையே... நல்லாத்தான் இருக்கேன் சந்தான லெட்சுமி சமாளிக்க முயல்வது தெரிந்தது.

    இல்லை. கன்னத்துல அஞ்சு விரலும் பதிஞ்சிருக்கு. அடிக்காம எப்படி இப்படி பதியும், சொல்லு. யார் அடிச்சா?

    எங்கம்மா

    ஏன்? நீ என்ன தப்பு பண்ணினே?

    ஒரு தப்பும் பண்ணலை. வீட்டு வேலை செய்யாம படிச்சுக்கிட்டிருந்தேன்னு அம்மா அடிச்சுட்டாங்க.

    வீட்டு வேலை நீதான் செய்யனுமா?

    ஆமா! அம்மா வேலைக்குப் போறதால காலையில எழுந்து சமையலை கவனிப்பாங்க. பாத்திரம் கழுவறது வீடு பெருக்கிறது, துணி துவைக்கறதுன்னு எல்லா வேலையும் நான்தான் செய்யணும். படிக்கிற வேலையிருக்குன்னு சொல்லிட்டு நான் படிக்க உட்கார்ந்ததால அம்மாவுக்கு என் மேல கோபம். அடிச்சுட்டாங்க.

    இந்த வருஷம் நீ டென்த் நிறையப் படிக்கணும். நல்ல மார்க் வாங்கனும்னு உங்கம்மாவுக்கு ஆசையிருக்காதா? உன்னை எதுக்கு வேலை வாங்கறாங்க? பேசாம ஒரு வேலைக்காரியை வச்சுக்க வேண்டியதுதானே?

    வேலைக்காரி வச்சா அம்மாவுக்கு பிடிக்காது.

    உங்கப்பா உங்கம்மா உன்னை அடிக்கும் போது திட்ட மாட்டாரா?

    ம்ஹும்... திட்ட மாட்டார். அவரும் சேர்ந்துக்கிட்டுத் திட்டுவார். அவரும் சில சமயம் அடிப்பார்.

    ச்சே! நீ ஒரே பொண்ணு. உன்னை செல்லமா வச்சுக்காம இப்படியா வேலை செய்ய சொல்லி அடிப்பாங்க...

    கலைமணி எரிச்சல் பட்டுக் கொண்டாள். அதற்கு மேல் பேச முடியாமல் வகுப்பு ஆரம்பிப்பதற்கான மணி ஒலித்தது.

    ஆசிரியர் சொல்லிக் கொடுத்த கணக்கில் மனம் பதியாமல் தடுமாறினாள் கலைமணி.

    அவள் மனதை சந்தான லெட்சுமி முழுவதுமாக ஆக்ரமித்திருந்தாள். அவளுடைய அழுத முகம் வீங்கிய கன்னம் இனம் புரியாத வேதனையை கலைமணியின் மனதில் உண்டாக்கியிருந்தது.

    கணக்கில் அவள் மனம் பதியாததை உணர்ந்தாள் ராஜரத்தினம். அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ‘இந்தா இந்த கணக்கைப் போடு’ என சொல்லிக் கொடுத்த மாடலிலேயே ஒரு கணக்கைப் போட்டு அவளிடம் கொடுத்தார். அவர் எதிர்ப்பார்த்தைப் போலவே அவள் தடுமாறினாள். மீண்டும் சொல்லிக் கொடுத்தார். மறுபடியும் அவளுக்குப் புரயவில்லை.

    என்னாச்சு உனக்கு? இத்தனை தடவை சொல்லிக் கொடுத்தும் புரிஞ்சுக்க மாட்டேங்கறே? என்ன நினைச்சுக்கிட்டு கவனிக்கிற நீ? சற்றே கோபமாத்தான் அதட்டினார்.

    ஆனால் -

    அவருடைய கோபமான வார்த்தைகளில் அவள் துளியும் பாதிக்கப்படவில்லை.

    அப்பா...

    ம்...

    பாவம்பா சந்தானம்

    யாரு சந்தானம்?

    சந்தான லெட்சுமிப்பா

    ஓ... உன் பிரண்ட் சந்தான லெட்சுமியா? ஏன் அவளுக்கென்ன?

    தினமும் அவ ஸ்கூலுக்கு லேட்டா வர்றாப்பா

    சோம்பேறியா இருப்பா. சீக்கிரம் எழுந்துக்கலைன்னா ஸ்கூலுக்கு லேட்டாத்தான் போகணும்.

    அவ ஒண்ணும் சோம்பேறி இல்லைப்பா. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து படிப்பா.

    படிச்சுட்டு அப்படியே மறுபடியும் தூங்கிடுவாளோ என்னவோ

    போங்கப்பா. அவ ஒண்ணும் அப்படிகிடையாது.

    பின்ன எதுக்கு ஸ்கூலுக்கு லேட்டா வர்றா?

    "வீட்டு வேலையெல்லாம் அவதான் செய்யணுமாம். காலையில எழுந்து வாசல் தெளிச்சு கோலம் போட்டு வீடு பெருக்கி துடைச்சு பாத்திரம் கழுவி துணி துவைச்சு இவ்வளவும் செய்யணுமாம். இன்னிக்கு படிக்கிற வேலையிருக்குன்னு அவ வீட்டு வேலை செய்ய முடியாதுன்னு சொன்னாளாம். அதனால அவங்க அம்மாவுக்கு கோபம் வந்து கன்னத்திலேயே பளார் பளார்னு அறைஞ்சுட்டாங்களாம் பாவம்பா. எப்படியிருந்தது தெரியுமா

    Enjoying the preview?
    Page 1 of 1