Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyiroviyam Unakkagathan
Uyiroviyam Unakkagathan
Uyiroviyam Unakkagathan
Ebook107 pages28 minutes

Uyiroviyam Unakkagathan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செல்வம் ஒரு புகழ்பெற்ற ஓவியன். ஒரு நாள் அவன் கண்ணில்படுகிறாள் மிக அழகான மனோன்மணி. அவளை தனக்கு மாடலாக நிற்க வைத்து ஓவியம் தீட்டும் எண்ணத்தில் அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும்... அவனுக்கு இருக்கும் ஆர்வத்தையும் கண்டு, அவனை விரும்பும் மாமன் மகள் அனுவிற்கு, இருவர் மீதும் தோன்றும் பொறாமை எண்ணம்... அதன் விளைவு பற்றி தெரிந்து கொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106157
Uyiroviyam Unakkagathan

Read more from R. Sumathi

Related authors

Related to Uyiroviyam Unakkagathan

Related ebooks

Reviews for Uyiroviyam Unakkagathan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyiroviyam Unakkagathan - R. Sumathi

    http://www.pustaka.co.in

    உயிரோவியம் உனக்காகதான்

    Uyiroviyam Unakkagathan

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    இளமஞ்சள் நிற கதிர்களால் கதிரவன் அந்த அதிகாலைப் பொழுதை நீராட்டிக் கொண்டிருந்தான். தூங்குமூஞ்சு மரத்தின் பூக்கள் மொட்டை மாடியில் கொட்டிக் கிடந்தன.

    இடுப்பை இறுக்கமாக கவ்விய வெண்ணிற கால் சட்டையுடன் பரந்து விரிந்த வெற்று மார்பை காட்டியபடி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் செல்வம்.

    நெடு நெடுவென்ற உயரம். செக்க சிவந்த மேனி. நடிகர் அரவிந்தசாமியை நினைவூட்டும் ஜாடை முகத்தில். கவர்ச்சியான கச்சிதமான மீசை கட்டான உடல். உருண்டு திரண்ட புஜங்கள்.

    பார்ப்பதற்கு மல்யுத்த வீரனைப் போன்ற தோற்றம். அரைமணி நேரமாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததில் குளித்து எழுந்ததைப் போல் தேகம் முழுவதும் வியர்வை.

    மொட்டைமாடியின் சுற்று சுவர் கட்டையில் வந்து அமர்ந்தான்.

    காலை நேர தென்றல் காற்று சில தூங்கு மூஞ்சி பூக்களையும் சேர்த்துக் கொண்டு வந்து அவனை தழுவிவிட்டு சென்றது.

    மடியில் விழுந்த மங்கையைப் போல் மென்மையாக விழுந்த தூங்குமூஞ்சி பூவை கையில் எடுத்து மெல்ல சுழற்றி அதனழகை ரசித்தான். அதன் மென்மையான பட்டுபோன்ற இதழ்களை மெல்ல வருடினான்.

    அதே நிமிடம் அவனுடைய கவனம் கீழே சென்றது. மறு நிமிடம் அத்தனை செல்களும் சிலிர்த்தன. இனம்புரியாத சிலிர்ப்பாக இருந்தது.

    மனதிற்குள் சந்தோஷ உணர்வு பெருகியது.

    கண்களில் இன்ப திகைப்பு.

    பார்த்துக் கொண்டேயிருந்தான். பார்த்த விழி பார்த்தபடியேயிருந்தான்.

    காலை நேர சூரியனை மிஞ்சுவதைப் போல் மஞ்சள் ஒளியை உருக்கி உருவாக்கியதைப் போன்ற ஒரு தேகம்.

    தேவதை ஒன்று தெருபெருக்குவதைப் போலிருந்தது. அவள் தூங்குமூஞ்சி மரத்தினடியில் நின்றிருந்தாள். தூங்குமூஞ்சி மரம் உதிர்த்திருந்த இலை, தழை, பூ, பிஞ்சு என சகலத்தையும் தெருக் கூட்டும் நீண்ட மூங்கில் துடைப்பத்தைக் கொண்டு பெருக்கிக்கொண்டிருந்தாள்.

    நிமிர்ந்து நின்றபடி இரு கைகளாலும் துடைப்பத்தை பிடித்திருந்தாள்.

    உயர்த்தி போட்ட கொண்டை ஒழுங்கு. மீறி சில முடிக்கற்றைகளை காதோரமும் கழுத்தோரமும் நெளியவிட்டிருந்தது.

    குனிந்திருந்த முகம், சரிவர தெரியாதபடியிருந்தது. கண்களையும் மூக்கையும் இதழையும் பார்க்கும் ஆவல் நெஞ்சின் நடுவில் தோன்றியது வியப்பாகயிருந்தது.

    செதுக்கிய சிற்பம் போல் வாளிப்பான தேகம். கலசமும், குடங்களும் கொண்ட கோபுர அமைப்பு. அந்த உயரம் உடலமைப்பு...

    சாதாரண தெருக்கூட்டுபவள் என நம்பமுடியவில்லை. ஏதாவது. ஷூட்டிங் நடக்கிறதா? அழகு சொரூபமான நடிகையொருத்தி தெருக்கூட்டுவதைப் போல் நடிக்கிறாளா?

    நாற்புறமும் சுழன்று கண்கள் கேமிராவையும் லைட்டையும் தேடின.

    தேடிய பொருள் கிடைக்கவில்லை.

    தேவதை பற்றிய சந்தேகம் தீர்ந்தது.

    அவள் நடிகை இல்லை. நாற் சந்தியையும் பெருக்கும் சாதாரண தொழிலாளி.

    அவள் நின்ற தோற்றம் துடைப்பத்தை கையில் பற்றியிருந்த லாவகம் இழுத்து சொருகிய முந்தானையால் இடுப்பும் எடுப்பும் அளித்த வடிவதோற்றம். உயர்த்தி கட்டியிருந்த புடவையால் வாழைத்தண்டாய் பளிச்சிட்ட கால்கள் பாதம்...அதில் அணிந்திருந்த தண்டை...

    காலைநேர மஞ்சள் ஒளிபட்டு அவள் ஒளி ஊடுருவிய கண்ணாடியாய் ஜொலித்தாள்.

    செல்வத்தின் கலையுள்ளத்தில் அந்த அழகு தாகத்தை ஏற்படுத்தியதில் வியப்பொன்றுமில்லை.

    மெல்ல சிறகு விரிக்கும் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சி, தென்றலில் அசையும் சோலை பூக்கள், சலசலத்து ஓடும் சிற்றோடை இப்படி காண்பதெல்லாம் உலக அதிசயம் போல் தெரியும் அவனுக்கு...

    இப்பொழுது இங்கே கண்ட இந்த எல்லோரா சிற்பம், தஞ்சாவூர் ஓவியம் உள்ளத்தை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    அவனுடைய விரல்களில் ரத்தம் பாய்ந்தன. துருதுருத்தன. பிரசவ வலியாய், காதல் தவிப்பாய், முக்திக்கான முயற்சியாய் ஏதோ ஒன்று அவனை ஆட்கொண்டது.

    இடத்தைவிட்டு எழுந்தான். கீழே தன் அறைக்குள் நுழைந்தான்.

    மேஜைமீது க்ளிப் பொருத்திய பேடின்மீது ஒரு காகிதத்தை எடுத்து பொருத்திக்கொண்டு மேஜைமீதிருந்த அழகிய நீண்ட பூவேலைப்பாடு செய்யப்பட்ட கண்ணாடி குவளைக்குள்ளிருந்து நீளநீளமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த தூரிகைக்களுக் கிடையேயிருந்து ஒரு பென்சிலை உருவிக்கொண்டு தடதடவென சிறுவனைப் போல் மறுபடியும் மொட்டை மாடிக்கு ஓடிவந்தான்.

    முன்பு நின்ற அதே இடத்திற்கு வந்தான்.

    விழிகளை கீழே வீசினான். எதுவும் மாறவில்லை. அவளும் அதே நிலையில் இன்னும் பொருக்கிக் கொண்டிருந்தாள். பென்சில் பிடித்திருந்த வலது கைவிரல்கள் இடது கையிலிருந்த காகிதத்தில் சரசரவென அவளுடைய தோற்றத்தை அப்படியே ஸ்கெட்ச் எடுத்தது.

    சில நிமிடங்களிலேயே அவள் நின்றிருந்த நிலை காகிதத்தில் அப்படியே வரிவடிவமாகயிருந்தது. தான் வரைந்த அந்த ஸ்கெட்ச் சரியாகயிருக்கிறதா என்பதை சரிபார்க்க அந்த காகிதத்தை பேடினின்றும் உருவி இரு கைகளாலும் அவன் உயர்த்தி பிடித்து கண்களுக்கெதிரே நீட்டி பார்த்த அதே நிமிடம்-

    யாரோ வேண்டுமென்றே

    Enjoying the preview?
    Page 1 of 1