Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tharaiyil Irangum Vimanangal
Tharaiyil Irangum Vimanangal
Tharaiyil Irangum Vimanangal
Ebook250 pages2 hours

Tharaiyil Irangum Vimanangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி

இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123903144
Tharaiyil Irangum Vimanangal

Read more from Indhumathi

Related authors

Related to Tharaiyil Irangum Vimanangal

Related ebooks

Reviews for Tharaiyil Irangum Vimanangal

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    It’s a beautiful novel. I have seen the TV serial. Caught up with the book finally. Saw Raghuvaran in every mention of Viswam. இந்த தரையில் இறங்கிய விமானம் மீண்டும் பறக்கும் என நம்புவோம். நன்றி். வணக்கம். ??❤️✌️??????

Book preview

Tharaiyil Irangum Vimanangal - Indhumathi

http://www.Pustaka.co.in

தரையில் இறங்கும் விமானங்கள்

Tharaiyil Irangum Vimanangal

Author:

இந்துமதி

Indhumathi

For more books

http://www.pustaka.co.in/home/author/indhumathi

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

1

அந்த ஆபீஸின் வராந்தாவில் வெகுநேரமாய் நின்று கொண்டிருந்தான் விஸ்வம். கையில் ஒரு ஃபைல் இருந்தது. அதில் சில சர்டிபிகேட்களைத் தவிர, அப்பா கொடுத்தனுப்பின ஒரு கடிதமும் இருந்தது. அவன் உள்ளே போய், வரதராஜன் என்பவரைப் பார்க்க வேண்டும்.

ஐ’ம் ஜகன்னாதன்’ஸ் ஸன்! என்று அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஜகன்னாதன்? என்று அவர் புருவத்தை உயர்த்தினாலும் உயர்த்துவார். ரெயில்வேயில் இருந்து ரிட்டையர் ஆன ஜகன்னாதன்; வி. ஜகன்னாதன்… என்று விளக்கம் கொடுத்தாக வேண்டும். எப்போதோ இரண்டு பேரும் ஒன்றாகப் படித்ததை ஞாபகப்படுத்தியாக வேண்டும்.

ஆனால் அவன் உள்ளே போகவில்லை. போகப் பிடிக்கவில்லை. வந்ததிலிருந்து அரைமணி நேரமாய்க் காரிடாரின் ஓர் ஓரத்தில் நின்றுகொண்டே இருந்தான். அங்கு நிற்பது அவனுக்குப் பிடித்தமானதாய் இருந்தது. ஆபீஸில் அந்த வாசல் மிகவும் அழகாக இருந்தது. ரோட்டை ஒட்டின பெரிய கட்டிடமாக இல்லை. உள்ளே தள்ளி வரிசையாய் குட்டைத் தென்னை மரங்களும், மாமரங்களும் நிறைந்து ஓர் இளைப்பாறுகிற இடம் மாதிரி தோற்றம் அளித்தது. அணில்கள் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. காக்கைகள் விடாமல் கத்திக்கொண்டே இருந்தன. ஒன்று நிறுத்தினால் மற்றொன்று. கறுப்பாய் ஓர் அண்டங்காக்காய் இவனைப் பார்த்துக்கொண்டே காரிடாரின் ஓரத்திலிருந்து தத்தித் தரையில் நடந்து வந்தது. இவனுக்குச் சிரிப்பு வந்தது. அந்தக் காக்காய் திடீரென்று நினைத்துக் கொண்ட மாதிரி பறந்து போய்விட்டது. இவன் ஏக்கமாய் ஒரு பெருமூச்சு விட்டான். பின், தூரத்தில் தனியாகப் போடப்பட்டிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சைப் பார்த்தான். ‘அது, இங்கே வந்து என் மேல் உட்கார்ந்து கொள்ளேன்’ என்று கூப்பிடுகிற மாதிரி தோன்றியது. அதில் போய் உட்கார்ந்து கொள்ளலாம். மர இடுக்குகளின் வெளிச்சம் தரையில் காசு காசாய் இறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். விளையாடுகிற அணில்கள், அவை சில சமயம் மண்ணில் வால் பதிய உட்காருகிற அழகு, கத்துகிற காக்காய்கள், அவற்றின் திருட்டுத்தனமான தத்தி நடக்கிற நடைகள், எப்போதாவது வருகிற சிட்டுக் குருவிகள், தூரத்தில் வரிசையாய் நிறுத்தப்பட்டிருக்கிற கார்கள், பக்கத்தில் இருக்கும் சைக்கிள் ஸ்டாண்டின் சைக்கிள்கள், உள்ளே வருகிற மனிதர்கள், வெளியில் போகிற மனிதர்கள், கண்ணில் தட்டுப்பட்டுச் சட்டென்று மறைந்து விடுகிற புடவைகள்… இப்படிப் பார்த்துக் கொண்டே பொழுதைத் தள்ளிவிட்டு, சாயந்தரமானதும் எழுந்து வீட்டுக்குப் போய் விடலாம்.

வீடு - ஏன் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்று தோன்றுகிறது? இங்கேயே, இப்படியே இருந்து ராத்திரியில் இந்த அழகு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று ஏன் நினைக்கத் தோன்றவில்லை? எங்கே சுற்றினாலும் கடைசியில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்பது பழக்கமாகிவிட்டது. எத்தனை பாதுகாப்புத் தேவையாக இருக்கிறது.

தூரத்தில் சைக்கிள் ஸ்டாண்டின் பக்கத்தில் ஒரு சின்ன ஸ்டூல் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிற பையனைப் பார்த்தான். சாயந்திரம் ஐந்து மணி ஆனதும் அவனும் வீட்டுக்குத்தான் போவான். அதோ, அந்தக் கூர்க்கா. உள்ளே வருகிற இந்த மனிதர்கள், ஆபீஸில் வேலை செய்கிறவர்கள், தெருவில் போகிறவர்கள், வண்டிக்காரர்கள், ரிக்‌ஷாக்காரர்கள் எல்லோரும் வீட்டுக்குத்தான் போயாக வேண்டும். பகலில் பழக்கப்படாத எந்த இடத்துக்கும் போகலாம். எங்கேயும் சுற்றலாம். ஆனால், ராத்திரியில் மட்டும் வீடுதான் பழக்கம். இந்தப் பழக்கம் மட்டுந்தான் எல்லோருக்கும் ஒன்றாக இருக்கிறது.

நான்கூட வீட்டுக்குத்தான் போவேன். மன்னியோ, தங்கை அகிலாவோ சாதம் போடுவார்கள். அநேகமாய் அவனுக்கு மன்னி ருக்குமிணி தான் சாதம் போடுவாள். எத்தனை நேரமானாலும் காத்துக் கொண்டிருப்பாள். எங்கே போயிருந்தே? ஏன் இத்தனை நேரம்? எதுவும் கேட்க மாட்டாள். பசிக்கலையா, விஸ்வம்? நேரத்துக்குச் சாப்பாடு இல்லைன்னா உடம்பு என்னத்துக்கு ஆகும்? என்று மட்டும் கேட்பாள். தரையில் உட்கார்ந்து சாதத்தை அவன் பிசைகிறபோது, புடவைக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிற பாதங்களின் வெண்மை ‘பளிச்’சென்று அவன் கண்களில் அடிக்கும். ‘மென்மையாய் என்ன பாதங்கள் இவளுக்கு?’ என்று நினைத்துக் கொள்வான். தினமும் அதே காட்சி அதே நினைப்பு வரும். அகிலா சாதம் போட்டும் பார்த்திருக்கிறான். நரம்புகள் தூக்கிக்கொண்டு குட்டை குட்டையாய் விரல்களும், அசிங்கமாய் வளர்ந்து கறுப்பாய் அழுக்கு ஒட்டிக் கொண்டிருக்கிற நகத்தின் ஓரங்களும்… முகத்தை அழகு படுத்தத் தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் செலவழிக்கிற அகிலா, பாதங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொண்டால்தான் என்ன…? தன் பாதங்களைப் பார்க்கக் குனிந்தான் அவன். ஷுவால் மூடப்பட்டிருந்தது. ஷுவைக் கழற்றிப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. அந்த இடத்தில் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உடனே அம்மாவின் பாதம் எப்படி இருக்கும் என்பதை நினைவுபடுத்திப் பார்க்க முயன்றான். முடியவில்லை. அம்மாவின் முகம் மட்டும் நினைக்கிறபோதெல்லாம் மனசில் பிடிபட்டு விடுகிறது. செத்துப் போகிற போதுகூட அழகாய் இருந்த முகம் அது! சாவின் பயமோ வலியோ எட்டிப் பார்க்காத முகம். என்ன தெளிவு அதில்! அந்த வீட்டில் அவனுக்கு மட்டும்தான் அம்மாவின் நிறமும் சாயலும் உண்டு. கண்கள்கூட அம்மா மாதிரி பார்வையில் அடித்து நிறுத்துகிற கண்கள்தாம். மீதிப் பேர் எல்லாரும் அண்ணா பரசு, அகிலா, ராம்ஜி - எல்லோரும் அப்பாவைக் கொண்டு பிறந்தவர்கள்!

யாரை சார் பார்க்கணும்?

விஸ்வம் சட்டென்று நிமிர்ந்தான்.

ரொம்ப நேரமா நிக்கறீங்களே, யாரைப் பார்க்கணும்?

வரதராஜன் என்பவரை…

எந்த வரதராஜன், சார்…?

எம். வரதராஜன், எக்ஸிக்யூட்டிவ்…

இப்படி நேரே போய் இரண்டாவது மாடி ஏறி, வலப் பக்கம் திரும்பினா, மூணாவது ரூம் சார். வாசல்லே போர்டு கூட மாட்டியிருக்கும், பாருங்க.

சரி, ரொம்ப தாங்க்ஸ்பா.

இனிமேலும் அங்கு நின்று கொண்டிருக்க முடியாது. உள்ளே போய்த்தான் ஆக வேண்டும். அவன் உள்ளே நுழைந்தவுடனேயே சட்டென்று ஒரு மாறுதல் தெரிந்தது. ‘படபட’வென்று டைப்ரைட்டர்கள் அடிக்கப்படுகின்ற ஓசை, ஃபேன்களின் இலேசான முனகல், காகிதங்கள் புரட்டப்படுகிற சலசலப்பு, பேச்சு சத்தம், கிருஷ்ணமூர்த்தி… என்று யாரையோ யாரோ உரக்கக் கூப்பிடுகிற குரல். நாற்காலிகள் நகர்த்தப்படுகிற கிறீச்சிடல்கள், டெலிபோன் மணிகளின் ஒலிகள், நடந்து கொண்டிருக்கிற டவாலி ப்யூன்கள், அவர்களின் எரிச்சலைக் காட்டுகிற சிணுங்கின முகங்கள்… மாடிப்படி ஏறுகிறபோது, அவனுக்குத் தான் பார்த்த ஒரு பெங்காலி திரைப்படம் ஞாபகத்துக்கு வந்தது. லிஃப்ட் கெட்டுப்போய், ஏழாவது மாடிக்கு ஏறி வருகிற கதாநாயகனின் களைப்பை அவனால் அப்படியே உணர முடிந்தது. ஆனால் அவன் போக வேண்டியது இரண்டாவது மாடிதான். நிதானமாய் ஒவ்வொரு படியாக ஏறினான். வரதராஜனின் அறைக்கு எதிரில் போய் நின்றபோது, இலேசாக மூச்சு வாங்கியது. தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். கர்சீப்ஃபால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, கதவில் ஆள்காட்டி விரலின் முட்டியால் மெதுவாக இரண்டு தரம் தட்டினான்.

எஸ்! கட்டையாய் ஒரு குரல் கேட்டது. அவன் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனான்.

குட் மார்னிங், சார்!

எஸ்…

ஐ’ம் விஸ்வம், ஜகன்னாதனுடைய ஸன்.

ஜகன்னாதன்? அவன் நினைத்த மாதிரியே அவர் புருவங்களை உயர்த்தினார். அவன் தன் அப்பாவை பற்றிச் சொன்னான்.

ஓ…! அந்த ஜகன்னாதனா? ஹெள ஈஸ் ஹி?

ஹி ஈஸ் ஃபைன்!

அதற்குப் பின்பும் அவன் நின்று கொண்டுதான் இருந்தான். பக்கத்தில் இரண்டு நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. அதில் ஒன்றின் முதுகைப் பிடித்துக்கொண்டு தான் அவன் நின்றிருந்தான். ‘நான் என்ன செய்ய வேண்டும்’ என்கிறார் போல் அவனைப் பார்த்தார் அவர். அவன் ஃபைலைத் திறந்து, அப்பா எழுதித் தந்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். கடிதத்தைக் கொடுக்கிறபோது, தன் வீட்டுக்கு அடிக்கடி வருகிற (An appeal) என்று அச்சடித்த கார்டை நீட்டுகிற அந்த ஊமைப் பையனின் ஞாபகம் வந்தது. அவன் உண்மையிலேயே ஊமைதானா என்பது. தெரியாது. ஆனாலும் ஐந்து காசோ, பத்து காசோ கொடுத்து அனுப்புவான். அப்பாவும் அதேமாதிரி ஒரு கார்டை அச்சடித்துத் தன் கையில் கொடுத்து அனுப்பியிருக்கிற மாதிரி அவனுக்குப்பட்டது. அந்த ஊமைப்பையனை அவன் உட்காரச் சொல்லுவதில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. அவன் இன்னொரு காலில் சாய்ந்து இத்தனை நேரம் உடற்பாரத்தைப் போட்டிருந்த காலை இலேசாக்கி நின்று கொண்டான். திடீரென்று கால்கள் அதிகம் வலிக்கிற மாதிரியும் தோன்றியது. அவர் கடிதத்தைப் படித்து முடித்தார். மடித்துத் திருப்பி அவனிடமே கொடுத்தார். அவன் வாங்கி, ஃபைலில் வைத்துக்கொண்டு பேசாமல் இருந்தான்.

அப்ளிகேஷன் போட்டிருக்கியா?

அவன் தலையாட்டினான்.

என்ன க்வாலிஃபிகேஷன்?

அவன் சொல்ல வாயைத் திறக்கு முன், அவருக்கு ஒரு கப் டீ வந்தது. டீ வாசனை இவன் மூக்கை எட்டியது. அவர் மேஜை மேல் இருந்த சில காகிதங்களை நகர்த்திக் கோப்பையை வைக்க இடம் கொடுத்தார். ப்யூன் போனதும் விஸ்வம் பேச ஆரம்பித்தான்.

பி.காம். ஃபர்ஸ்ட் கிளாஸ்.

வேண்டுமென்றே சாரைத் தவிர்த்தான். மறுபடியும் காலை மாற்றி நின்று கொண்டான்.

அதனாலேதான் காம் (Calm) ஆக இருக்கியா? அவர் சொல்லிவிட்டுப் பெரிசாய்ச் சிரித்தார்.

அவன் சிரிக்கவில்லை. பேசாமல் இருந்தான். அவர் சிரித்து முடித்ததும் டீ கோப்பையை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தார்.

எங்கே, சர்டிபிகேட்டுகளை எல்லாம் காட்டு பார்ப்போம்.

அவன் ஃபைலைத் திறந்து அவரிடம் கொடுத்துவிட்டு, ‘கேன் ஐ ஸிட்?’ என்பதைக் கேட்டுவிடலாமா என்று நினைத்தான். ‘இவனிடமா…?’

அவர் வலது கையால் டீ கோப்பையைப் பிடித்து நிறுத்தி நிறுத்தி உறிஞ்சிக் கொண்டே அந்த ஃபைலைப் பார்த்தார். விஸ்வம் அறையைப் பார்க்க ஆரம்பித்தான். அவரது தலைக்கு மேல் பழக்கப்பட்ட புன்னகையோடு காந்தி படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. எல்லா ஆபீஸிலும் இந்தப் படத்தை மாட்டத் தவறுவதில்லை. சில சீனியர் ஆபீஸர்களின் தலைக்கு மேல் இந்தக் குழந்தை சிரிப்பு நிச்சயமாய் இருக்கும். அவர்கள் எந்த அர்த்தத்துடனும் அதை மாட்டுவதில்லை. ஆபீஸில் இருக்கும் மேஜை, நாற்காலி, இரும்பு பீரோ, டெலிஃபோன் இதே மாதிரிதான் அந்தப் படமும் ஒரு கன்வென்ஷன்…

அவர்ஃபைலை மூடிக் கொடுத்தார். திடீரென்று அவனோடு அதிக நேரம் செலவிட்டு விட்டதாக உணரத் தொடங்கி இருக்க வேண்டும். நிறைய வேலைகள் இதனால் பாதிக்கப்பட்டு விட்ட பாவனையில் பேசத் தொடங்கினார்.

லுக், உனக்குத் தகுதியிருந்தால், கட்டாயம் கிடைக்கும். எங்களுக்கு மூவாயிரம் அப்ளிகேஷன்கள் வந்திருக்கு. உனக்கு இன்டர்வ்யூ கார்டு அனுப்பிடச் சொல்றேன். அதிலே உன் சாமர்த்தியத்தைப் பார்த்துண்டு மேலே யோசிக்கலாம்.

தாங்க் யூ! விஸ்வம் அறையை விட்டு நகரத் தொடங்கினான்.

ஜகன்னாதனைக் கேட்டதாகச் சொல்லு.

தலையாட்டிவிட்டு வெளியே வந்தான். கொஞ்சம் வேகமாகப் படிகளில் இறங்கினான். வராந்தாவை அடைந்தவுடன், சில்லென்று காற்று முகத்தில் அடித்தது. சிறிது நிம்மதியை உணர்ந்தான். அவனுக்கு வழி காட்டின ப்யூன் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தவனாக எழுந்து வந்தான்.

என்ன சார், பார்த்துட்டீங்களா? என்று கேட்டான்.

விஸ்வம் தலையாட்டினான்.

எதுக்கு சார், வேலைக்கா?

அதற்கும் தலையாட்டினான்.

உங்களுக்கா சார்?

ஆமாம் என்றதும் ‘இவனுக்கு எதற்காக இப்படிப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்?’ என்பதை நினைத்துக் கொண்டான்.

கெடைச்சுடும் சார், கட்டாயம் கெடைச்சுடும்.

இவன் மெளனமாக அவனைப் பார்த்தான்; எந்த ஆர்வமும் இல்லாதவனாகத் தெரிந்தான்.

ஆமாம், நான் சொல்லி நெறையப் பேருக்கு வேலை கெடைச்சிருக்கு சார். நீங்களும் உண்மையா இல்லையானு பாருங்களேன்…!

சரி, நான் வரேம்ப்பா.

சா…ர்…! விஸ்வம் நின்றான்.

டீக்கு ஏதாவது காசு கொடுத்துட்டுப் போங்களேன்!

இவனுக்கு எரிச்சல் வந்தது. முதலில் எதுவும் கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. பின் கொடுக்க வேண்டுமென்று நினைத்தான். சட்டையில் கை விட்டான். பர்ஸில் தேடினான். சில்லறை இல்லை. ஓர் ஐந்து ரூபாய் நோட்டைத் தவிர எதுவும் இல்லை.

சில்லறை இல்லையேப்பா…!

கேட்டவனின் முகம் மாறியது.

ஆனாலும், சரி சார், பரவாயில்லை… போங்க. அடுத்த தரம் வாங்கிக்கறேன். இதோட வராம போயிடப் போறீங்களா, என்ன?

விஸ்வம் மர நிழல்களை மிதித்தபடி நடந்துகொண்டே வந்தான். எதிரில் வருகிறவர்களையும், தன்னோடு வெளியேறுபவர்களையும் ஓர் ஆர்வத்தோடு கவனித்தான். இந்த மரங்களையோ, அதன் நிழல்களையோ யாரும் பார்ப்பதாகத் தெரியவில்லை. குதிக்கும் அணில்களும், கத்துகிற காக்கைகளும் யாரையும் பரவசப்படுத்தவில்லை. வேகமான ஒரு நடை, எதையோ எதிர்பார்த்துக் கொண்டு போகிற முகங்கள், சலிப்போடு வெளிவருகிற முகங்கள், சிரிப்போடு வருகிற முகங்கள், பேச்சில் சுவாரஸ்யமாய் ஈடுபட்டிருக்கிற முகங்கள், ஆனால் ஒரு முகங்கூட எதிரில் தெரிகிற நிஜமான அழகைப் பார்க்கவில்லை. இதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று ஏன் யாருக்கும் தோன்றுவதில்லை?

அவனுக்கு சட்டென்று அண்ணா பரசுவின் நினைவு வந்தது.

2

பரசு - பரசுராமன் கூட ஆசைப்பட்டிருக்கிறான். வாயைத் திறந்து அதை வெளிப்படுத்தியும் இருக்கிறான். யாரோடும் எதுவும் பேசாமல், எதன் மீதும் ஒரு பிடிப்பு இல்லாமல் இப்போது இருக்கிற இந்தப் பரசு அப்போது இப்படி இல்லாமல் நிறையக் கனவுகள் கண்டிருக்க வேண்டும். ஒரு பெரிய உலகத்தைத் தனக்குள் உருவகப்படுத்தி இருக்க வேண்டும். விதம் விதமான பரசுராமன்கள் அதில் உலவி இருக்க வேண்டும். கையில் ஸ்டெதஸ்கோப்புடன் பூட்ஸ்கால்கள் சப்திக்க ஹாஸ்பிடலுக்குள் நுழைகிற பரசு, கருப்புக்கோட்டை கை மேல் போட்டுக்கொண்டு கோர்ட்டின் படிகளில் ஏறுகிற பரசு, வெள்ளை யூனிஃபாரம் அணிந்த டிரைவர் பணிவாகக் கார் கதவைத் திறக்க, பின்னால் உட்காருகிற பரசு, விமானத்தின் ஜன்னல் ஸீட்டில் சுகமாகச் சாய்ந்து பேப்பர் படிக்கிற பரசு, ஏர்கண்டிஷன் ரூமில் சுழல் நாற்காலியில்

Enjoying the preview?
Page 1 of 1