Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poongatru Thirumbuma?
Poongatru Thirumbuma?
Poongatru Thirumbuma?
Ebook52 pages15 minutes

Poongatru Thirumbuma?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவராமகிருஷ்ணன் தன் காதலன் குழந்தையை சுமக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். யார் அந்த பெண்? எதற்காக கர்ப்பிணி பெண்ணை இவன் திருமணம் செய்து கொள்கிறான்? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateJul 5, 2022
ISBN6580123908663
Poongatru Thirumbuma?

Read more from Indhumathi

Related authors

Related to Poongatru Thirumbuma?

Related ebooks

Reviews for Poongatru Thirumbuma?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poongatru Thirumbuma? - Indhumathi

    http://www.Pustaka.co.in

    பூங்காற்று திரும்புமா?

    Poongatru Thirumbuma?

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http: //www. pustaka. co. in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    என்றைக்கும் போல் அன்றும் சூரியன் மறைகிற நேரம்வரை காத்திருந்து வெளியில் போக ஆயத்தமானான் அவன். மேற்கு மலைத்தொடரின் அடிவாரமான அந்தக் கிராமத்தில் சூரியன் மறைகிற நேரம் என்பதே வெறும் பேச்சிற்குத்தான். கடிகாரத்தின் முட்களைக் கொண்டு கணிப்பிடப்படும் நேரம்தான். மற்றபடி மப்பும், மழையும், மந்தாரமுமாக இருக்கும் இடத்தில் உதயமாகிறபோதே சூரியன் காணாமற் போய் விடுவதுதான் வழக்கம்.

    அன்றும் அப்படித்தான் காணாமற் போயிருந்தது. காலையில் அவன் படுக்கையைவிட்டு எழுந்தபோதே இருட்டாக இருந்தது. விளக்கேற்றிப் பார்த்தபோது மணி எட்டரை என்றதே தவிர, வெளியில் கருக்கிருட்டு விலகாமல் கிடந்தது. கம்பளிப் போர்வையை இழுத்து மீண்டும் முகம்வரை மூடிக்கொண்டு தூங்க நினைத்தவன், சட்டென்று விலக்கிக்கொண்டு எழுந்தான். போர்வையை மடித்து கால் தலையணையின் அடியில் போட்டுவிட்டு ஜன்னலை நெருங்கினான்.

    ஜன்னலின் கண்ணாடிக் கதவைத் திறந்த உடனே, கோட்டைக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுகின்ற எதிரியின் சைன்னியத்தைப்போல் திபுதிபுவென்று குளிர்காற்று உள்ளே நுழைந்தது. ஐஸ் துகள்களை வாரி வீசினமாதிரி ஜில்லென்று முகத்தைத் தாக்கிற்று. புல்லாங்குழலின் ஓட்டைகளுக்குள் காற்று புகுவது போல் ஒவ்வொரு ரோமக் கால்களுக்குள்ளும் புகுந்தது. உடல் சிலிர்த்து வெடவெடத்தது. காது மடல்களும், மூக்கு நுனியும் தீ பிடித்துக் கொண்ட விறகுக் கட்டையாகச் சிவந்து போயின.

    இன்னும் சிறிது நேரம் ஜன்னலருகில் அப்படியே நின்றிருந்தால் செத்துப்போய் விடுவோம் என்று நினைத்துக் கொண்டான் அவன். அப்படியாவது சாவு வராதா எனவும் ஆசைப்பட்டான். இந்தக் குளிருக்காவது உடலை விரைக்கச் செய்து தன்னை சாகடிக்கிற சக்தி இருக்கக் கூடாதா என்கிற தாபமாகவும் மாறிற்று.

    ஆனால் உடனே நிஜம் பிடிபட்டது. தன் மனசு எத்தனை கள்ளத்தனம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொண்டான். எவ்வளவு பொய்யாக ஏங்குகிறது எனவும் தெரிந்துகொண்டான். நிஜமாகவே சாவதற்குத் துணிந்திருந்தால் எப்போதோ செத்துப் போயிருக்க வேண்டும். ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே, சென்னையில் தங்கியிருந்த அந்த ஓட்டல் அறையிலேயே மிகச் சுலபமான முறையில்

    Enjoying the preview?
    Page 1 of 1