Sittukuruvi
()
About this ebook
இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.
விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.
இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.
கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.
இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Read more from Lakshmi Ramanan
Anaiya Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsVanathile Pootha Vanna Nila Rating: 5 out of 5 stars5/5Merke Veesum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsSakunthala Rating: 0 out of 5 stars0 ratingsMaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsOru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsGanga Nathi Theerathile Rating: 0 out of 5 stars0 ratingsMarainthirukkum Marmam Rating: 0 out of 5 stars0 ratingsAathma Samarpanam Rating: 0 out of 5 stars0 ratingsUravai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Yutham Rating: 0 out of 5 stars0 ratingsTherinthu Kollalame! Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Endrendrum Neethane…. Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thedum Alaigal... Rating: 0 out of 5 stars0 ratingsMeera Pallikoodam Pogiraal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Menmaiyanavai Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therintha Manam Rating: 0 out of 5 stars0 ratingsAnusha Appadithan! Rating: 0 out of 5 stars0 ratingsThendral Thappa Mudiyathu Rating: 0 out of 5 stars0 ratingsVaazhviyal Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaveri Rating: 0 out of 5 stars0 ratingsBrahmopadesham Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neer Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Samyukthai Rating: 0 out of 5 stars0 ratingsEzhamal Vandha Varam Rating: 5 out of 5 stars5/5Mella Thiranthathu Vazhi Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Ramananin Short Stories Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sittukuruvi
Related ebooks
Neengatha Ennam Ondru Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsUyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Nenjam! Rating: 5 out of 5 stars5/5Oru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsMuttrathu Mullai Rating: 0 out of 5 stars0 ratingsOonjalaadum Nenjam Rating: 4 out of 5 stars4/5Sollamale Naan Ketkirean Rating: 5 out of 5 stars5/5Vasantha Kaala Thendral Rating: 5 out of 5 stars5/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Oru Roja Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Unnai Karam Pidithean Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Inithu Inithu Kaadhal Inithu! Rating: 0 out of 5 stars0 ratingsAnupama Rating: 0 out of 5 stars0 ratingsViral Thodum Thooraththile Rating: 5 out of 5 stars5/5Mazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsSooriyan Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Sittu Rating: 5 out of 5 stars5/5Ennithunithal Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsThendralaga Nee Varuvaya Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsAthu veru Mazhaikkalam Rating: 5 out of 5 stars5/5Poove Neeyum Penthano Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsPoongatru Thirumbuma? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sittukuruvi
0 ratings0 reviews
Book preview
Sittukuruvi - Lakshmi Ramanan
http://www.pustaka.co.in
சிட்டுக்குருவி
Sittukuruvi
Author:
லக்ஷ்மி ரமணன்
Lakshmi Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
முப்பதாம் நம்பர் அறை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
கண்ணில் மிதக்கும் கொலை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
ஷில்பி!" என்று குரல் கொடுத்துக் கொண்டே அவளைத் தேடிக் கொண்டிருந்தாள் பாட்டி அம்புஜம்,
பேத்தியை அவள் அழைத்தது அந்தப் பங்களாவிலிருந்த சமையல்காரி சேஷம்மாவிலிருந்து தோட்டக்காரன் முனியன் வரை அத்தனை பேருடைய காதிலும் விழுந்தது.
ஆனால் ஷில்பிக்கு மட்டும் கேட்டதாகத் தெரியவில்லை. எப்படிக் கேட்கும்? அவள்தான் பாட்டிக்குச் சொல்லாமல் பொழுது புலர்வதற்குள் ஜாகிங் போய்விட்டிருந்தாளே?
முதல்நாள் மழை பெய்தால் மறுநாள் ஷில்பியை ஜாகிங் போகப் பாட்டி அனுமதிக்க மாட்டாள்.
ஊட்டியில் மழை பெய்யாமல் இருக்குமா? மலைப் பிரதேசம். அதுவும் மே மாதம் வேறு. கல்லூரி விடுமுறை விட்டு, படிப்புக்குத் தற்காலிகமாக 'டாட்டா' சொல்லிவிட்டுச் சில தினங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து ஷில்பி வந்திருந்தாள்.
அங்கே ஹாஸ்டலில் இருந்தவரையில் கட்டுப்பாடு, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள். இங்கேயும் அப்படியா? ஷில்பிக்குப் பாட்டியை ஏமாற்றுவது எப்படி என்று நன்றாகவே தெரியும். அம்புஜம் பல் தேய்க்க பாத்ரூம் பக்கம் போயிருந்தபோது இவள் நழுவி விட்டிருக்கிறாள்.
அதற்குள் டெலிபோன் மணி அடித்தது. அமெரிக்காவிலிருந்து அம்புஜத்தின் மகன் குருவரன் - அதாவது, ஷில்பியின் அப்பா - போன் செய்தான்.
'அம்மா எப்படி இருக்கீங்க?"
அம்புஜம் ஏற்கெனவே பேத்தியைக் காணாமல் தேடி அலுத்துப்போய்க் கோபமாக இருந்ததால், குரு, நீயும் அமெரிக்கா போய் நாலு வருஷமாச்சு. நடுவில் ரெண்டு தடவை சில நாட்கள் வந்து தலையைக் காட்டிட்டு நீயும் பானுவும் போனீங்க. உன் பெண்ணை நான் ஒண்டியாச் சமாளிக்க எத்தனை கஷ்டப்படுவேன்னு கொஞ்சமாவது ரெண்டு பேரும் யோசிச்சு பார்க்கறீங்களா? அவ ரொம்ப நாட்டி கார்ள். நாளுக்கு நாள் அவ குறும்பு ஜாஸ்தியாகுதே தவிர குறையக் காணோம்.
ஸாரி அம்மா! உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறோம். குரு எடுத்துக் கொண்டிருக்கிற பிராஜெக்ட் முடிகிற வரையில் நாங்க இங்கே இருந்துதான் ஆகணும். அதுக்குத்தான் உங்க ரெண்டு பேரையும் இங்கே கூப்ட்டா பாட்டியும் பேத்தியும் வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க,
என்றாள் பானு.
பானு ஒரு நல்ல மருமகள். அவளைப் பற்றி அம்புஜத்துக்கு எந்தவிதப் புகாரும் இருந்ததில்லை. ஊட்டியை விட்டு அவள் மேட்டுப்பாளையத்துக்குக் கூடப் போகிறதை விரும்பியதில்லை. அப்படி இருக்கிறபோது கலிஃபோர்னியா எப்படிப் போவாள்? தன் மகளைப் பற்றிப் புகார் செய்கிறாளே என்று பானு தப்பாக நினைத்துவிடக் கூடாதே என்று பானு! ஐ லவ் வெர். அவ கல்யாணமாகிப் போயிட்டா நான் எப்படி இருக்கப் போகிறேனோ அவளைப் பிரிஞ்சு! நான் அதற்காகச் சொல்லலை. சில சமயம் அவ நடந்துக்கறதைப் பார்த்தா உங்களைப் பிரிஞ்சு இருக்கிறதை மனசுக்குள்ளேயே நினைச்சு ஏங்கறாளோன்னு தோணுது ரெண்டு தலைமுறை இடைவெளி வேறு.
அதை நான் ஒப்புக்க மாட்டேன் அம்மா, ஷில்பி உங்களைத் தன் சிநேகிதி மாதிரிதான் நினைச்சு நடந்துக்கறா
என்றான் குரு.
எஸ்! கண்டிப்பான சிநேகிதி
அம்புஜம் சிரித்தாள்.
நீங்கள் ஷில்பியைப் பார்த்ததில்லையே?
தந்தத்தைக் கடைந்து வார்த்த சிற்பம் மாதிரி இருப்பாள்.
அவளை நீங்கள் எந்தச் சினிமா நடிகையோடும் ஒப்பிட்டு 'இவள் மாதிரி இருப்பாள் என்று சொல்லிவிட முடியாது.
ரவி வர்மா ஓவியத்தில் சித்தரிக்கப்படுகிற பெண் மாதிரி நளினமாய் இருப்பாள்.
பெற்றோருக்கு ஒரே மகள் என்கிற காரணத்தால் அவர்களாலும், பாட்டி அம்புஜத்தாலும் அதிகமாகச் செல்லம் கொடுக்கப்பட்டு துடுக்குத்தனமும், பிடிவாதமும் கோபமும் கொண்ட பெண்ணாக வளர்ந்து நிற்பவள்.
வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அவளுடைய மைனஸ் பாயிண்ட்டுகள் தெரியாது. ஆனால் வீட்டு வேலைக்காரர்களுக்கு ஏன் பாட்டி அம்புஜத்துக்குக்கூட ஷில்பியைக் கண்டால் கொஞ்சம் பயம்தான். 'மானஸரோவர்' என்கிற அந்தப் பங்களாவில் ஷில்பி வைத்ததுதான் சட்டம். சாவிக் கொத்து அம்புஜத்தின் இடுப்பில் தொங்கினாலும், பேத்திதான் அந்த வீட்டு எஜமானி என்பது அவர்கள் ஒப்புக் கொண்டுவிட்ட உண்மை!
பேத்தியைத் தேடி அலுத்துப்போன அம்புஜம் குருவுடன் பேசி முடித்துவிட்டு முன் வராண்டாவில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து மூடப்பட்ட கண்ணாடிக் கதவுகள் வழியே வெளியே நோக்கினாள்.
பஞ்சு பஞ்சாய் வானம் முழுவதும் உதிர்ந்திருந்த மேகக் கூட்டங்கள் ஒன்றை ஒன்று தள்ளியவாறு பிரயாணித்துக் கொண்டிருந்தன. பங்களாவுக்கு முன்னால் பரந்து கிடந்த விசாலமான தோட்டம்.
அம்புஜத்துக்குப் பேத்தி என்றால் உயிர்! அதற்கு அடுத்தபடி அவளுக்கு மிகவும் நெருக்கமான மனசைக் கவர்ந்த இடம் தோட்டம்.
'வீட்டுக்கு ஒரு மரம், ஊருக்கு ஒரு வனம்' என்பதைவிட வீட்டைச் சுற்றிப் பல மரங்களும் செடிகளும் கொண்ட நந்தவனம் இருப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவள்.
தன் தோட்டத்தில் எத்தனை அசோக மரங்கள் உள்ளன. ரோஜாச் செடிகள் எத்தனை... க்ரோட்டன்களில் எத்தளை விதங்கள் உள்ளன எல்லாமே அம்புஜத்துக்கு நன்றாகத் தெரியும்
பகல் வேளையில் தோட்டத்தைச் சுமார் மூன்று முறைகளாவது சுற்றிவருவது அவள் பொழுதுபோக்கு.
மனிதர்களுடன் பேசுவதுபோல் அம்புஜம் செடிகளுடன் பேசுவாள்.
அவற்றின் இலைகளை வருடுவாள்.
முனியன் உங்களைச் சரியாகக் கவனிக்கிறானா?
என்று விசாரிப்பாள்.
மொட்டு விரிந்து மலர்ந்திருக்கும் ரோஜா மலரிடம், 'கண்ணே! நீதான் உலக அழகி" என்று புகழுவாள்.
பார்க்கிறவர்களுக்கு அம்புஜம் செடிகளோடு நடத்துகிற இந்த சம்பாஷணையும், உபசரிப்பும் விசித்திரமாக இருக்கும்.
'சரியான பைத்தியம்' என்று நினைத்தவர்களும் உண்டு. அம்புஜம் தானாக இதைச் செய்யவில்லை.
'ரோஜாவின் பராமரிப்பு' என்ற புத்தகத்திலிருந்து சில குறிப்புக்கள் அவளைக் கவர்ந்தன.
'இதமாக ஒரு வருடல், இனிதாய் ஒரு வார்த்தை இவை இரண்டையுமே தாவரங்களால் புரிந்துகொள்ள முடியும். இனிய இசையினால் தாவரங்கள் 'வளரலாம் என்றால், ஏன் வார்த்தைகளால் முடியாது?' என்கிற அந்தக் கருத்து அம்புஜத்தைக் கவர்ந்தது. முயன்று பார்த்தாள்.
அந்த ஆண்டு ஊட்டி ரோஸ் ஷோவில் அம்புஜத்தின் என்ட்ரிக்கு பரிசு கிடைத்தது. அதிலிருந்து துவங்கி ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு பிரிவில் அம்புஜத்துடைய ரோஜாச் செடிகளுக்கு ஒரு பரிசாவது நிச்சயம் கிடைக்கும்.
அதிலிருந்து செடிகளோடு பேசுவது அம்புஜத்துக்குப் பொழுதுபோக்காகவே ஆகிவிட்டது. தோட்டத்தைப் பராமரிப்பதில் முனியன் அவளைவிட ஒரு படி மேலே முன்னேறியவன். அவன் உத்தரவின்றி ஒரு இலையைக் கூடப் பறிக்கக் கூடாது.
அப்படிப் பறித்தார்களோ சரியாக மாட்டிக் கொள்வார்கள். அவர்களைப் பற்றிப் புகார் செய்து அம்புஜத்திடம் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டிவிடுவான் அவன். எல்லாச் செடிகளும் என் குழந்தை மாதிரி. அதில் இலையையோ பூவையோ பறித்தால் செடிக்கு வலிக்காதுங்களா?
என்று கண்ணீர் மல்கக் கேட்பான்.
அவனுக்காகவே பொதுப் பூங்காக்களில் எழுதி வைப்பதைப் போல் 'பூக்களைப் பறிக்காதீர்கள்' என்று தோட்டத்தில் அங்கங்கே சிறு பலகைகளில் எழுதிவைக்கச் செய்திருந்தாள்
முனியன் அதே காம்பவுண்டில் இருந்த வீட்டில் வசித்தான். அவன் வீட்டைச் சுற்றிய இடமே நர்சரி மாதிரிச் செடிகள் நிலவறைந்து இருக்கும். அந்தப் பக்கமாக அவன் யாரையுமே வரவிட்டதில்லை. அவனைக் கூப்பிட வேண்டும் என்றால் கூட வேலைக்காரி செங்கழனி தோட்டத்தில் நின்று கொண்டுதான் குரல் கொடுப்பாள்.
பல ஆண்டுகளுக்கு முன் அம்புஜத்தின் நாத்தனாரும் அவள் பேரக் குழந்தைகளும் 'மானஸரோவருக்கு' வந்திருந்தார்கள்.
பேச்சு சுவாரஸ்யத்திலிருந்த பெரியவர்கள் குழந்தைகளைப் பற்றி மறந்து போனார்கள்.
சற்றைக்கெல்லாம் முனியன் "அம்மா! இங்கே என்ன நடக்குதுன்னு பாருங்க. ஐயோ...போச்சே, என் சொத்தே கொள்ளை போயிடுச்சே', என்று பதறிக் கொண்டு வந்தான்.
வந்திருந்தவர்கள் திகைத்தார்கள்.
வேறு ஒன்றுமில்லை, வந்த குழந்தைகள் இருவரும் முனியன் வீட்டருகில் இருந்த செடிகள் இரண்டை விளையாட்டுப் போக்கில் பிய்த்துப் போட்டிருந்தார்கள். அவற்றைக் கையில் குழந்தைபோல ஏந்திக் கொண்டு வந்து நின்றான் முனியன்.
வந்திருந்த விருந்தாளிகளின் முகம் விழுந்து போயிற்று. முனியனுக்கும் தோட்டத்துக்கும் இடையே உள்ள நெருக்கமான சம்பந்தம் அவர்களுக்குத் தெரியாது.
'அத்தனை பெரிய தோட்டத்திலே ரெண்டு செடிகளைப் பிச்சுட்டாத்தான் என்ன குடிமுழுகிடும்? கேவலம் ஒரு தோட்டக்காரன் தன் சொத்தே பறிபோயிட்டாப்பலே குத்தம் சொல்றான். அம்புஜம் பேசாம நின்னுக்கிட்டிருந்தா... பாவம் குழந்தைகள்தானேன்னு பரிஞ்சு ஒரு வார்த்தை சொல்லலே... என்ன உறவு வேண்டிக் கிடக்கு இவங்களோட... இனி வரவே கூடாது' என்று போன அவர்கள் அதன்பிறகு வரவே இல்லை.
முனியன் அவர்கள் போனபிறகு இரண்டு நாள் சாப்பிடவில்லை. பெத்த குழந்தையைப் பறிகொடுத்தவன்போல் உற்சாகமில்லாமல் காணப்பட்டான்.
ஷில்பி குறும்புக்காரிதான்!
ஆனால் தோட்டத்துப் பக்கம் போய் மலர்களைக் கொய்தோ, செடிகளைப் பிடுங்கியோ முனியனை வருத்தப்படச் செய்ய மாட்டாள். அவன் இருந்த வீட்டுப் பக்கமே போகமாட்டாள். சில சமயம் யோசிக்கையில் முனியனுடைய இந்தச் செடிப் பைத்தியத்துக்கும், சொந்த வாழ்க்கைக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்குமோ என்று தோன்றும்.
தாவரங்களின்மீது அவன் வைத்திருக்கும் இந்த அபரிமிதமான பற்றுக்கு ஏதோ ரகசியக் காரணம் இருக்க வேண்டும். அதை அம்புஜத்திடம் கேட்டபோது அவள் 'தெரியாது' என்று மழுப்பி விட்டாள்.
முதல் ஆண்டு ஹாஸ்டல் வாசத்தின்போது ஷில்பி முதுகில் மயில்தோகை மாதிரி புரண்ட கேசத்தைத் தோள்பட்டை அளவுக்கு வெட்டிக் கொண்டு வந்து நின்றதைக் கண்ட அம்புஜம் 'ஏண்டி உனக்கு இப்படி புத்தி போச்சு?' என்று பொருமித் தீர்த்தாள்.
ஷில்பிக்கு ரொம்பவும் பிடித்த டிரெஸ் ஜீன்ஸும் டீ ஷர்ட்டும்தான்.
அவளுக்காகப் பார்த்துப் பார்த்து அம்புஜமும் பானுவும் ஷிபான், ஜார்ஜெட், காஞ்சிபுரம், கத்வால், வெங்கடகிரி, பனாரஸ் என்று புடவை ரகங்களையும் தினுசு தினுசான சுடிதார் வகைகளையும் வாங்கிக் குவித்திருந்தார்கள். ஷில்பி அவற்றைத் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. நகைகள்.... கேட்கவே வேண்டாம்.
எல்லாம் லாக்கரில் தூங்கிக் கொண்டிருந்தன. கடையில் பத்து ரூபாய்க்கு விற்கிற பிளாஸ்டிக் தோடுகளையும் வளையல்களையும் அணிந்து கொண்டதால் அவள் அழகு குறைந்து விடவில்லை. ஷில்பி! புடவை ஒண்ணை எடுத்துப் பளிச்சுனு கட்டிக்கிட்டு ஏதாவது ஒரு செட் நகைகளைப் போட்டுகிட்டு வந்து காண்பியேன். எனக்குப் பார்க்கணும் போல இருக்கு. உன் கல்யாணம் வரை நான் இருக்கேனோ இல்லையோ!
என்று அங்கலாய்த்தால்...
நீங்க எங்கே போகப் போறீங்க பாட்டி? சொல்லுங்க, நானும் வந்துடறேன்
என்று பேத்தி மடக்கி விடுவாள். சற்றுமுன் குரு பேசியது நினைவுக்கு வர 'கடவுளே! சொன்னால் கேட்காத இந்தப் பெண்ணை வெச்சுக்கிட்டு நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று அம்புஜம் கவலைப்பட்டாள்.
*****
2
பாட்டி ஷில்பியின் குரல் அவளை உலுக்கியது. என்னைக் கூப்பிட்டீங்களாமே? முனியாண்டி சொன்னான்.
எதிரே முழங்காலுக்கு கொஞ்சம் கீழ் வரையில் மடித்துவிட்ட ஜீன்சும் மேலே தொள தொளவென்றிருந்த டீ ஷர்ட்டும், ரப்பர் வளையத்துக்குள் கைதான கூந்தலும் கையில் அணைத்துக் கொண்டிருந்த நாய்க்குட்டியுமாய் நின்ற பேத்தியைக் கண்டதும் அம்புஜத்துக்குக் கோபம் வந்தது.
ராத்திரி எல்லாம் மழை பெய்ஞ்சு குளிருது. ஸ்வெட்டர் போடாமே, வெறும் டீ ஷர்ட்டிலே ஜாகிங் போக நழுவி இருக்கே. இந்தச் சனியனை எங்கேருந்து பிடிச்சே?
என்று கண்களில் வெறுப்புச் சொட்ட நாய்க்குட்டியைப் பார்த்தவாறு கேட்டாள் அவள்.
வாட்! சனியனா? நோ பாட்டி! ஹி ஈஸ் சச் எ டார்லிங். இனிமேல் இவன் என் பெட். 'சச்சின்' அப்படின்னு பெயர் வைக்கப் போகிறேன்.
ஷில்பி நாய்க்குட்டியை உடம்போடு இறுக்கிக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.
முனியா!
வீறிட்டாள் அம்புஜம்.
என்னவோ ஏதோ என்று பயந்தவண்ணம் ஓடிவந்தான் அவன்.
'இந்த நாய்க்குட்டி இங்கே எப்படி வந்துச்சு?'
பாப்பா ஜாகிங் போயிட்டுத் திரும்ப வந்தப்ப பின்னாலேயே ஓடிவந்திடுச்சு போல இருக்கு. பார்த்தால் தெரு நாயாத் தெரியல்லே. வளர்ப்பு நாயோட குட்டி மாதிரி...
போதும் உன் வியாக்கியானம்.
அம்புஜம் அவனை அடக்கினாள்.
அவளுக்கு நாய், பூனை, முயல் எல்லாமே அலர்ஜி. எட்ட நின்று அவற்றைப் பார்ப்பாளே தவிர, அவற்றை அணைத்துக் கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது எல்லாமே அலர்ஜிதான்.
சின்ன வயசில் அவளை எப்போதோ நாய் கடித்து விட்டதாம்!
அதைப்பற்றித் தப்பித் தவறி யாரும் கேட்டுவிட்டாலோ தொலைந்தார்கள்.
அடுத்த அரை மணி நேரம் அவர்கள் அந்த இடத்தை விட்டே நகர முடியாது!
தான் சின்னப் பெண்களாக இருந்தபோது சிநேகிதியோடு, பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தபோது தெருவோடு போன மாணவன் சும்மாயிருக்காமல், எதிரே வந்த நாயின்மீது கல்லெறிந்து விட்டு ஓட்டம் பிடிக்க அது அம்புஜம்தான் எறிந்ததாகத் தப்பாக அவள் மீது பாய்ந்து கடிக்க, தொப்புளைச் சுற்றி இஞ்ஜெக்ஷன் போட வேண்டும் என்று டாக்டர் சொல்ல...