Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaanal Neer
Kaanal Neer
Kaanal Neer
Ebook75 pages34 minutes

Kaanal Neer

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125803962
Kaanal Neer

Read more from Lakshmi Ramanan

Related to Kaanal Neer

Related ebooks

Reviews for Kaanal Neer

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaanal Neer - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    கானல் நீர்

    Kaanal Neer

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முன்னுரை

    எழுத்தாளர் லட்சுமிரமணன் அவர்களுக்குப் புதிதாக அறிமுகம் தேவையில்லை. தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் லட்சுமிரமணன் அவர்கள் தமிழில் வெளியிடும் பல பிரபல வார, மாத இதழ்களில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்துப் பிரபலமானவர்"

    எழுத்தாளர் லட்சுமி ரமணன் எடுத்துக் கொண்ட பிரச்சினையைச் சீராக நோக்கி அதிலிருந்து விலகாமல் கதையை நேர்த்தியாகச் சொல்லுவதில் வல்லவர். இவரது எளிய நடை படிப்பவரின் கவனத்தை முழுமையாக ஈர்த்துவிடும் அசாத்திய திறமை வாய்ந்தது. கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செதுக்குவதிலும், படித்து முடித்த பின்னும் கதாபாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டு அகலாதவண்ணம் மிகவும் அழகாகச் செதுக்கியுள்ளார் கதாசிரியர், அவரது இந்தத் திறமைக்குத் தனிப் பாராட்டுதல்கள்.

    தமிழ் வாசகர்கள் இந்நூலை வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.

    - கிரிஜா ஜின்னா.

    1

    அந்த நெரிசலான கடை வீதியிலிருந்து அங்கங்கே கிளை பிரிந்துபோன சந்துகள் ஒன்றில்தான் ரேவதியின் ஜெம் கட்டிங் தொழிற்சாலை அல்லது சென்டர் இருந்தது.

    தொழிற்சாலை என்றதும் விஸ்தாரமான காம்பவுண்டும், அதன் நடுமையத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் மாடிக்கட்டிடமும்தான் நம் கற்பனையில் தோன்றும்.

    வடஇந்திய நகரங்களில் 'புரானா', 'நயா' என்று இரண்டு பிரிவுகள் இருப்பது இருக்கட்டும். இங்கே வீடு என்பதற்கு இருக்கும் லட்சணங்களே வேறு.

    அந்த ஊரும் இதற்கு விதி விலக்கல்ல.

    கடைவீதிப் பகுதிகளில் ‘குரூப்' போட்டோவுக்கு உட்கார்ந்திருப்பதுபோல் அடுத்தடுத்து இடித்துக் கொண்டிருக்கும் வீடுகள்.

    முதலில் வாசலைக் கடந்ததும் சின்ன நடை. அடுத்து மித்தம். அதைத் தாண்டி குளியலறை. மித்தத் இதைத் தொட்டுக் கொண்டு புறப்படும் மாடிப் படிகள்.

    நான்கைந்து படிகளைக் கடந்ததும் வழியில் இடது பக்கமாய் வசிக்கும் அறை.

    இன்னும் நாலு படிகள் ஏறினால் அடுத்த அறை. கொஞ்ச உயரத்தில் சமையலறை.

    படிகள் அனைத்தையும் ஏறி முடித்தால் அந்தக் குடும்பத்துக்குச் சொந்தமான அலுவலகமோ ஷோரூமோ முதல் தளத்தில் இருக்கும். விஸ்தாரமான மொட்டை மாடி. அங்கும் இரண்டு தனி அறைகள்.

    மேலே குடைபிடிக்கும் குல்மோஹர் மரம்.

    மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவர் அருகில் நின்று பார்த்தால் கடைவீதியில் நகர்ந்து கொண்டிருக்கும் மனிதப் பிரவாகம்.

    ரேவதியின் தொழிற்சாலையும் கிட்டத்தட்ட இந்தச் சித்தாந்தத்துக்குட்பட்டது!

    நுழைந்ததும் நடை.... அடுத்து சின்ன அறை. அங்கே இரண்டு பக்கங்களிலும் அட்டைப் பெட்டிகளில் ஜெம் கட்டிங்குக்குத் தேவையான உபகரணப் பொருட்கள்.

    உள்ளே பெரிய கூடம். அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டீல் அலமாரிகளில்தான் கட்டிங்குக்காக வந்த இயற்கை, செயற்கை நவரத்தினக் கற்கள் பத்திரப் படுத்தப்பட்டிருந்தன. ஒரு பக்கம் விரிக்கப்பட்ட மெலிதான' க்வில்ட் மெத்தை.

    அதன் மீது அலங்காரமாக ஜோடிக்கப்பட்ட உருண்டை வடிவ திம்புகள். அங்கேதான் 'கஸ்டமர்கள்' உட்காருவார்கள்.

    இரத்தினக் கற்களை உரசிச் சீர்ப்படுத்துவதற்குத் தேவையான ராட்டை வடிவ யந்திரங்கள் இன்னொரு பக்கத்தில் இருந்தன.

    ரேவதி அந்தத் தொழிலில் நுழைந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை.

    அவள் தந்தை சோமேஸ்வரன் தனியார் நிறுவனம் ஒன்றில் மானேஜர். புற நகர் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய சொந்த வீடு, கணவன் மனைவி, இரண்டு பெண்கள் என்கிற அளவான

    Enjoying the preview?
    Page 1 of 1