Nilavai Thazhuvatha Mehangal!
()
About this ebook
திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.
இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.
காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.
இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.
1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.
2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.
Read more from Lakshmi Rajarathnam
Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNavagrahangal Rating: 1 out of 5 stars1/5Nesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsEn Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Ezhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Marakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Ashtalakshmi Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsArputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Thanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Vaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnam Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPoochudum Naal Paarkkava Rating: 0 out of 5 stars0 ratingsAbiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5
Related to Nilavai Thazhuvatha Mehangal!
Related ebooks
Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Aboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Kaattrukkenna Veli? Rating: 5 out of 5 stars5/5Anbe Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kili Mayanguthu Rating: 0 out of 5 stars0 ratingsAanandamadi Aanandhi! Rating: 0 out of 5 stars0 ratingsPazhamozhi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSakkarai Nilavey Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsRamar Paatham Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Pattu Kayiru Rating: 0 out of 5 stars0 ratingsAgalya Kaathirukiral Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam…! Rating: 4 out of 5 stars4/5Ramar Paatham Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Kannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingspudhayala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsSagaram Rating: 0 out of 5 stars0 ratingsNesa Nadhikaraiyil Rating: 3 out of 5 stars3/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsPoochudum Naal Paarkkava Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pidiyil... Rating: 0 out of 5 stars0 ratingsKungumam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Nilavai Thazhuvatha Mehangal!
0 ratings0 reviews
Book preview
Nilavai Thazhuvatha Mehangal! - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
நிலவைத் தழுவாத மேகங்கள்!
Nilavai Thazhuvatha Mehangal!
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajarathnam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
கடற்கரையில் மாலை நேரக் காற்று சுகமாக இருந்தது. வெள்ளி அலைகள் தாவித் தாவி ஓடி வருவதும் கரையில் மோதுவதும், அந்த வெள்ளியலை நுரையில் காலை நனைக்கும் குழந்தைகளுடன் பெரியவர்களும் நனைத்து விளையாடும் பொழுது அவர்களும் குழந்தைகளாகி விடுகிறார்கள். மஞ்சள் வெய்யில் பாயாகத் தங்கக் கலரில் விரித்துக் கொண்டு வந்தது. இயற்கையின் அழகே அழகுதான்.
காலையில் இளம் காற்று, மதியம் சுட வைக்கும் வெய்யில், மாலையில் இதத்தைத் தந்து உடலையும், உள்ளத்தையும் இதப்படுத்தும் ஜால வித்தை, வானம் ஆரஞ்சு வண்ணம். சூரியனும் பெரிய பந்து. மாலைச் சூரியன் நெருப்புப் பந்தலில், காதலியைக் காணப் போகும் ஆனந்தமோ?
ரஞ்சனிக்கு கடற் காற்று சுகம்தான். வீட்டில் அண்ணியின் பார்வை நெருப்புக் கோளங்கள்தான். அண்ணன் வாய் பேசாத ஊமை. அம்மாவும் வாயைத் திறக்க முடியாது. அவள் ஒரு பேக்கிங் செக்ஷனில் வேலை பார்த்து வந்தாள். சாமான்களை நிறுத்துப் போடும் வேலை. சில சமயங்கள் பலவித வேலைகளையும் செய்ய வேண்டி வரும்.
பத்தாவது படித்துவிட்டு வந்தவளை கலெக்டர் உத்யோகமா கை நீட்டி அழைக்கும்? அவளுக்கு மேலே படிக்க ஆசைதான். அண்ணி விடத் தயாரில்லை.
ஒருத்தர் சம்பாதியத்துல உட்கார்ந்து மூணு வேளையும் தண்டச் சோறு கொட்டிக்க முடியுமா?
என்பாள்.
அண்ணிக்கு இரண்டு பெண்கள் வேறு. இத்தனைக்கும் சின்னக் குழந்தைகள்தான். தன் மாமியாரையும் சும்மா இருக்கவிட மாட்டாள். தேவையான வீடுகளுக்குக் கார்ப்பரேஷன் தண்ணீர் அடிச்சுத் தர வேண்டும். ஒரு குடத்திற்கு ஐந்து ரூபாய். ஒரு நாளைக்கு சுமார் இருபது குடம் தண்ணீராவது சுமந்து எடுப்பாள். காசை கணக்குப் பண்ணி அண்ணிதான் வாங்கிக் கொள்வாள்.
ரஞ்சனியின் சம்பளம் மாசம் பன்னிரெண்டாயிரம். அவளுடைய செலவுக்கு என்று ஆயிரம் ரூபாயைப் பிச்சை போடுவது போலப் போடுவாள்.
அம்புட்டையும் செலவு பண்ணிடாதே. உன் கல்யாணத்திற்கும் சேர்த்து வச்சுக்கோ
என்பாள் தாராளமாக.
வாயாலே வாரி இறைக்கும் வள்ளல்தான் அண்ணி மரகதம். இவர்களின் உழைப்பின் பணம் வங்கிக் கணக்கிலும், நகைச் சீட்டுமாக சேருவது தாயும் மகளும் அறியாத விஷயமே இல்லை. வாயிருந்தும் பேசுவதற்கும், உணவு உண்ணுவதற்கும் கூட உரிமை இல்லையே.
அண்ணி, வேலைக்கு நேரமாச்சு. டிபன் தரீங்களா?
இப்பத்தான் உங்கண்ணனையும், புள்ளைகளையும் அனுப்பினேன். நானும் மனுஷிதானே? உன்னைய மாதிரி வேலைக்குப் புறப்பட்டா மினுக்கிகிட்டு புறப்படலாம். என் தலையில் ஆண்டவன் உங்களுக்கெல்லாம் வடிச்சுக் கொட்டிட்டு இந்த சமையலறையே கதினு கெடக்கணும்னு எழுதி வச்சிருக்கானே! தா, மாவு ரெண்டு கரண்டிதான் இருக்குது. உனக்கொரு தோசை, உன்னைப் பெத்தவளுக்கு ஒண்ணுனு வார்த்துத் தின்னு...
உங்களுக்கு அண்ணி?
இம்புட்டு நேரம் என்னால பட்டினி பசியைத் தாங்க முடியுமா? முதல்லயே ஊத்தி தின்னுட்டேன்.
நேரமாகிவிடவே கிளம்பிவிடுவாள் ரஞ்சனி. அம்மா ரங்கமணி வேலை செய்யும் வீட்டினர் தங்கமானவர்கள். மறைவாக நாலு இட்லி, தோசை, உப்புமா என்று எதையாவது தருவார்கள்.
தான் கூடத் தின்னாமல் மகளை ரகசியமாக அழைத்து வயிற்றுக்குப் போட்டு அனுப்புவாள். தண்ணீர் பிடித்து ஊற்றும் வீடுகளில் கணக்குப் பார்க்காமல் வேலை செய்வதால் வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் கிடைத்தது.
அம்மா, உனக்குப் பசிக்குமே? ஒருவா காப்பித் தண்ணியைக் குடிச்சுட்டு வேலை செய்யறே!
எனக்கு இங்கே காப்பித் தண்ணி அப்பப்ப கிடைக்குது கண்ணு. ஏதாச்சும் எனக்கு கிடைக்கும். நீ வேலைக்குப் போற புள்ள... வளர்ற புள்ள... தழுதழுத்த குரலில் பேசும் ரங்கமணி கண்ணீரை அடக்க முடியாமல் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்வாள்.
ரஞ்சனி வேலை செய்யும் கடை முதலாளி மிகவும் நல்லவர். கஷ்டத்தை உணர்ந்தவர். தன்னிடம் வேலை செய்யும் பெண்களுக்கு கடை சீருடை என்று மூன்று சேலைகளை எடுத்துக் கொடுத்துவிடுவார். அண்ணி மரகதத்திற்கு அதில் கை வைக்க முடியவில்லையே என்ற குறை உண்டு. தண்ணீர் பிடித்துக் கொடுக்கும் வீட்டினர் தீபாவளி, பொங்கல் என்று வாங்கித் தரும் புடவைகளையும் எடுத்துக் கொண்டுவிடுவாள்.
தண்ணீர் பிடிக்க பழைய புடவை போதும் அத்தை
என்பாள்.
பொறுமையாக இருந்தாலும் வாழ்க்கை நரகமாக இருந்தது. வேலை செய்யும் வீட்டார்கள் உதவியால் பசியாற முடிந்தது. கணவனின் தாயாரையும் சகோதரியையும் பாரமாக நினைப்பவளை யார் புத்தி சொல்லி திருத்த முடியும்?
எல்லாவற்றையும்விட அன்று காலையில் நடந்த சம்பவம் சிகரம் வைத்தாற்போல இருந்தது. இரண்டு தினங்களாகவே மரகதத்தின் சொந்தம் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் உறவாட வந்துவிட்டான். பை நிறைய பழங்கள், பிஸ்கெட்கள், ஒன்றுவிட்ட தங்கைக்குச் சீதனமாகப் புடவை என்று வந்து நின்ற நமசிவாயத்தை கண்டதும் மரகதத்திற்கு தலைகால் புரியவில்லை.
ஓடி ஓடி வரவேற்றாள். அண்ணனின் பெருமையைப் பட்டியல் போட்டாள். தன் மாமியார், நாத்தனாரிடம் வானளாவப் புகழ்ந்தாள். தன் அண்ணன் வருகைக்கு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் போல இருந்தது அவள் பேச்சு.
முன் வழுக்கை விழுந்த தலை, நீண்ட முகத்தில் கூர் மீசை, தெறித்து விழுந்து விடுவது போலக் கண்கள், வெற்றிலை போட்டுக் கோணமாணலான பற்கள்... இந்த உருவத்தின் பெயர்தான் நமசிவாயம்.
தங்கச்சி, நீ நல்லா சமையல் செய்வியே... இந்தா என்னென்ன வேணுமோ வாங்கிக்க, பெண்டாட்டி செத்துட்டப்புறம் நாக்கும் செத்துப் போச்சு. ரெண்டு பிள்ளைகளை வச்சுகிட்டு திண்டாடறேன். நீ நண்டு, மீனுனு வாங்கி நல்லா சமையல் பண்ணிப் போடு. இங்கே இருக்கற ரெண்டு நாளாவது வாய்க்கு வக்கணையா சோறு தின்னறேன்.
மீன்களை மாமியாரை வைத்துக் கழுவ வைத்தவள் அரைத்த மசாலாவை வழித்து வைத்துவிட்டு எழுந்து வந்தாள்.
ஏன் அண்ணே, உனக்கு என்ன குறை? ராஜாவாட்டம் இருக்கே! இன்னொரு கண்ணாலம் கட்றது? ரெண்டும் பொட்டப் புள்ளைங்க. அதுக வளர வளர உனக்கும் பாதுகாக்கற வேலை அதிகம்தானே?
என்னம்மா செய்யறது? வயசு முப்பத்தி எட்டாகுது. உங்கண்ணி செத்து அஞ்சு வருஷமாகுது. பணம் காசுக்குக் குறைச்சல் இல்ல. பங்களா மாதிரி வீடு தோட்டம், துரவுனு விரிஞ்சு கெடக்குது. வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறேன். பொறந்த வீடுனு எங்கிட்ட வந்து நாலு நாள் தங்குன்னா நீதான் தங்கமாட்டேங்கறே? உறவுனு இருந்தா வந்து போக இருக்கணும்
என்றவன் ரங்கமணியை சாட்சிக்கு இழுத்தான்.
நீங்களே சொல்லுங்கம்மா. எனக்கு மக்க மனுஷானு யார் இருக்காங்க? இவங்க அம்மா, அப்பா, எனக்கு பெரியப்பா, பெரியம்மாதான் எங்கிட்ட வந்து இருக்கலாம். கையகல நிலத்தை வச்சுகிட்டு பெரீ...சா விவசாயம் பண்ற மாதிரி பேசறாங்க.
என்றான்.
ரங்கமணி சிரித்துக் கொண்டாள். இவன் வீட்டிற்குப் போனால் அரை வயிறு கஞ்சிக்குக்கூட வழியில்லை என்பதை அறியாதவளா என்ன? மகன் கல்யாணம் முடிந்து சம்பந்தி விருந்து என்று வைத்தவன் பட்டினி போட்டு அனுப்பியதை ரங்கமணி மறந்தாளில்லையே? இப்பொழுது பேசுகிறான் வாய்கிழிய.
நரி உயரப் பறக்க நினைப்பது எதனால? என்ன விஷயமாக வந்திருக்கிறான் என்று யோசிக்க வைத்தது அவனுடைய வரவும் பேச்சும். ஆயிரம் ரூபாயை அலட்சியமாக எடுத்து வீசி அசைவ சமையல் சமைக்கச் சொல்லுகிறான் என்றால் பல வீடுகளில் பழகிய