Kaaviyama Nenjin Ooviyama
()
About this ebook
Read more from Lakshmi Rajarathnam
En Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsNavagrahangal Rating: 1 out of 5 stars1/5Aval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsThiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsMarakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Ninaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Aanmeega Amudham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAshtalakshmi Rating: 0 out of 5 stars0 ratingsArputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Bramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Enakkul Nee! Rating: 5 out of 5 stars5/5Abiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Lakshmi Rajarathnam Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsUravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5
Related to Kaaviyama Nenjin Ooviyama
Related ebooks
Kaadhal Nilavey... Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Aagaya gangai Rating: 5 out of 5 stars5/5Kaathalaai Vanthu Pogiraai Rating: 5 out of 5 stars5/5Kaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsVizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Andha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Uthaya Nila Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsUravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vittu Vaa Nilave Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Rating: 5 out of 5 stars5/5Kalyana Raagam Rating: 5 out of 5 stars5/5Kannaadi Veedu Rating: 0 out of 5 stars0 ratingsThulasithalam Rating: 5 out of 5 stars5/5Anbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Kalanthuvidu! Rating: 0 out of 5 stars0 ratingsSooriyan Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsEn Arukil Nee Irundhaal... Rating: 5 out of 5 stars5/5Concrete Manasugal Rating: 4 out of 5 stars4/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Vasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsKundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kaaviyama Nenjin Ooviyama
0 ratings0 reviews
Book preview
Kaaviyama Nenjin Ooviyama - Lakshmi Rajarathnam
https://www.pustaka.co.in
காவியமா...? நெஞ்சின் ஓவியமா?
Kaaviyama…? Nenjin Ooviyama?
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
மழை பெய்து ஓய்ந்த காலை நேரக் குளுமையில் ஒரு கனமிருந்தது. காற்று குளிர்வாய் சிலீரென்று தடவி விட்டதில் தேகம் சிலிர்த்தாள் காவ்யா.
கண்ணுக்குத் தெரியாத பூஞ்சாரல் நனைத்ததால்... கறுத்த தார்ச் சாலையும் இருமருங்கும் பச்சைப் பசேலென்று அசைந்த மரம், செடிகளும் கண்களுக்கு விருந்தளித்தன.
சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து, கன்னங்களில் ஒத்தடம் கொடுத்தபடி... மெல்ல அண்ணாந்து பார்த்தாள்.
வானத்தின் கோடிகளுக்கு நடுவே பளீரிட்ட வண்ணப் பாலமாய் வானவில்... அவளது கண்களை கட்டிப் போட்டது.
மூணாறு எஸ்டேட் கெஸ்ட் ஹவுஸின் வாசலில் நின்றிருந்தவள்... படிக்கட்டுகளைத் தாண்டி மெல்லப் புல்வெளியை நோக்கி நடந்தாள்.
அந்தப் பச்சைப் பரப்பின் நடுவே நின்ற பன்னீர் மரம் மிக நளினமாய் கிளை பரப்பியதோடு... தன் நிழல் விழும் இடமெங்கும் இப்போது வெண்ணிற மலர்களால் ஒத்தடம் தந்திருந்தது...
பொன் ஒளி மெல்லப் படர்ந்த இளங்காலை வேளையில்... அம்மலர்த்தூவல் மாயலோகக் காட்சி போல பிரமிப்பு ஊட்டியது காவ்யாவுக்கு!
ரப்பர் செருப்புகளை அவிழ்த்துவிட்டு பனி மகுடங்களைத் தாங்கி ஜ்வலித்த புல்லின் மீது பாதங்களை வைக்க... குளிர் ஜிவ்வென்று பாதங்களிலிருந்து உச்சந் தலைக்குப் பாய்ந்தது.
கையடக்க காமிராவை எடுத்துக் கொண்டு, கெஸ்ட் ஹவுஸிலிருந்து வெளிப்பட்ட மாதவன்... காவ்யாவைக் கண்டதும் சட்டென்று நின்றான்.
பச்சைப் பசேலென்ற புல்வெளியில், வெண் மலர் பரப்பின் நடுவே அடர் சிவப்பு நிற புடவையுடன் நின்ற காவ்யா... வன தேவதையைப் போன்று பேரழகுடன் மிளிர்ந்தாள். - காவ்யா! பெயருக்கேற்றபடி காவியங்களில் வரும் நாயகியைப் போன்றே சிற்பி செதுக்காத பொற்சிலையாய் வசீகரிப்பவள்.
என்ன காவ்யா இது? எஸ்டேட் குளிருலே கை, கால் எல்லாம் வெட வெடங்குது. நீ என்னடான்னா... செருப்பைக் கழட்டி வச்சுட்டு வெறுங்காலோட புல்லு மேல நிக்கிறியே?
அக்கறையாய் அதட்டியபடி படிகளில் இறங்கி வந்தான்.
"ஒவ்வொரு புல்லும் வைர கிரீடம் சூட்டிக்கிட்ட மாதிரி பனித்துளியைத் தாங்கி நிக்கிறதைப் பார்த்தியா மாதவன்? நீயும் இதே மாதிரி நின்னு பாரேன்... பச்சைப் 'பசும் பட்டு' மேல நிக்கிறாப்பல மெத்து மெத்துன்னு சிலீர்ன்னு இருக்கு தெரியுமா?
எவ்ளோ தூரத்திலேர்ந்து வந்திருக்கோம்! இயற்கையை அணு அணுவா ரசிக்கிறதைத் தடுக்காதே... அதோ! அந்த வானவில்லைப் பாரேன். எவ்ளோ அழகா இருக்கு பாரு? வானம் ஒரு மாலையைச் சூட்டிக்கிட்டு இருக்கிறாப்பல...
வானம் வானவில்லை மாலையாக சூடிக் கொண்டது
எப்படியிருக்கு மாதவன்?"
"உம்! அபாரமாகத் தானிருக்கு. அதைவிட அழகான ஒரு கவிதையை நான் சொல்லட்டுமா? முதல்லே... செப்பலை மாட்டு காவ்யா! கால்லே அட்டை ஏறிக்கப் போகுது... அட்டை கால்லே ஏறிச்சுன்னா... ரத்தத்தை உறிஞ்சுட்டு அதுவா சுருண்டு விழற வரைக்கும்... நமக்கு ஒண்ணுமே தெரியாது.
அதுக்கு அப்புறம் தான் நமக்கு சுள்ளுன்னு வலியெடுக்கும். ரத்தமும் சாமானியத்துல நிக்காது. ஜாக்கிரதை! இன்னும் நிறைய சுத்திப் பார்க்க வேண்டியிருக்கு. இயற்கை அழகை ரசிக்க வேண்டியது தான்! குளிர் ஒத்துக்காம ஜூரம் வந்துடிச்சுன்னா... என்ன செய்வே? வெளியே எங்கேயும் தலைகாட்டாம கெஸ்ட் ஹவுஸிலேயே முடங்கி யிருந்துட்டு... அப்படியே ஊருக்குப் போய் சேர வேண்டியதுதான்...
அவன் பேசி முடிக்கும் முன் அவசரமாய் செருப்புகளைக் கால்களில் திணித்துக் கொண்டே காவ்யா ஆர்வமாய் விழிகள் விரிய மாதவனை ஏறிட்டாள்.
சரி... இப்ப சொல்லு! அழகான கவிதை சொல்றேன்னியே?
வெண்மலர் விரிப்பில்... ஒரு ஒற்றை ரோஜா எப்படியிருக்கு?
உம்... நல்லாயிருக்கே... உன்னோட ரசனையே அலாதி தான்... ஆமா... ஒத்தை ரோஜாவை எங்க பார்த்தே? இங்கே வித விதமான கலருலே டேலியாக்கள் தானே இருக்கு? தாமரைப் பூ சைஸுலே ஒவ்வொரு டேலியாவும் எவ்ளோ பெரிசா பூத்திருக்கு? ரோஜாவை நான் பார்க்க லையே? ஒரு வேளை... நீ பள்ளத்துல பார்த்தியா?
வெகுளியாய் கேள்விகளை அடுக்கிய வண்ணம் நடையை எட்டிப் போட்டு கெஸ்ட் ஹவுஸுக்குப் பின்னால் தெரிந்த சரிவில் எட்டிப் பார்த்தாள்.
இங்கேயும் டேலியாக்கள் தான் இருக்கு?
ஏமாற்றம் ததும்பும் விழிகளுடன் மாதவனை ஏறிட்டாள்.
இன்னுமா புரியலை? படிப்புல நம்பர் ஒன்! கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டின்னு எந்தப் போட்டியில கலந்துகிட்டாலும் முதல் பரிசைத் தட்டிக்கிட்டு வர்ற ஜீனியஸ்... கணினி என்ஜீனியரா மெரிட்டிலே தேறி... படிப்பை முடிச்ச கையோட எங்க கம்பெனியில வேலைக்கு வந்துட்ட திறமைசாலி... சுறுசுறுப்பா புத்திசாலித்தனமா செயல்பட்டு எம்.டி. கிட்டேயும் நல்ல பேர் சம்பாதிச்சுட்டு இருக்கிறவ... சூட்சுமமா பேசினா மட்டும் புரிஞ்சுக்க முடியலையே?
"தினமும் நாலு வாட்டியாவது என்னைப் பாராட்டிப் பேசினாதான் உனக்கு தூக்கமே வரும் போல...? இங்க எஸ்டேட்டுக்கு வந்த எடத்துலேயும் ஆரம்பிச்சுட்டியா? நீ மட்டும் என்னவாம்? எந்த விதத்துல குறைச்சலாம்? நீயும் படிப்புலே நம்பர் ஒன் தான்... என்னை விட மூணு வயசு மூத்தவன்...
"படிப்புலேர்ந்து இலக்கிய ஆர்வம், ரசனைன்னு எல்லா விஷயத்துக்கும் நீ தானே எனக்கு முன்னோடி? நான் இந்தளவுக்கு உசந்து நிக்கிறதுக்கு காரணமே... உங்க குடும்பம் தானே? இதுக்கு காலத்துக்கும் நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன் தெரியுமா? சரி... நான் ஒரு ட்யூப் லைட்டுன்னு உனக்கு நல்லாத் தெரியுமே?
சூட்சுமமா பேசாம... புதிர் போடாம... தெளிவா சொல்லேன்
வெகுளித் தனமாய் ஆர்வமாய் அருகில் வந்து நின்றவளைப் பார்த்து மெல்ல முறுவலித்தான் மாதவன்.
அந்தப் பன்னீர் மரத்துக்கு அடியில போய் நில்லு... உன்னை ஒரு வாட்டி ஏற இறங்கப் பார்த்துக்கிட்டு... நான் சொன்னதை திரும்பச் சொல்லிப் பாரு... உனக்குப் புரியும்...
அலங்க மலங்க விழித்தபடி பன்னீர் மரத்தடியை ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு... தன் புடவையை குனிந்து பார்த்ததும் மாதவன் தன்னைத் தான் கவிதைத் தனமாய் பாராட்டியிருக்கிறான் என்பது புரிந்து இலேசாய் முகம் சிவந்தாள்.
சின்ன வயசிலேர்ந்து ஒண்ணா வளர்ந்தோம். உனக்கு என் மேல் அலாதிப் பிரியம், நேசம்... அதான் சதா என்னை உசத்தி வச்சுப் பார்க்கிறே... வானவில் மறையறதுக்கு முன்னாடி சீக்கிரமா அதை ஒரு போட்டோ எடு மாதவா...
மறு வார்த்தை பேசாமல் வானவில்லின் எழிலைத் தன் கேமிராவுக்குள் நேர்த்தியாய் சிறை பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தான் மாதவன்.
"குடும்பக் கஷ்ட நஷ்டத்தை உணர்ந்து அம்மாவோட மனசைப் புரிஞ்சுக்கிட்டு பொறுப்பா நடந்துக்கிற விதம், பொறுமை, நிதானம், பணிவு, பண்பு, தன்னடக்கம், உதவற மனப்பான்மை, சகிப்புத் தன்மைன்னு... ஒட்டு மொத்த நல்ல குணாதிசயங்கள் ஒருங்கே அமைஞ்ச பொண்ணு நீ!
"இவளை மகளா அடைய நான் ரொம்பவே கொடுத்து வச்சிருக்கணும்னு... அடிக்கடி அபிராமி அம்மா சொல்லிட் டிருக்காங்கல்ல? நான் ஒண்ணும் உசத்தி வச்சுப் பேசலை... உள்ளதைத் தானே சொன்னேன்?
"பார்த்த மாத்திரத்திலேயே உன்னை சட்டுன்னு எல்லோருக்கும் பிடிச்சுப் போயிடுது. வேலைக்குச் சேர்ந்து கொஞ்ச நாள்லேயே... நல்ல பேர் வாங்கிட்டே பார்த்தியா? எங்கம்மா அடிக்கடி என்ன சொல்றாங்க தெரியுமா?
அழகுன்னு இருந்தா... கண்டிப்பா ஆணவம் வந்து ஒட்டிக்கும். உலகத்துல இருக்கிற மொத்த அழகையும் சேர்த்து... பிரம்ம தேவர் காவ்யாவைப் படைச்சுட்டாரு... இவ்ளோ அழகான பொண்ணுக்கு ஒரு துளி கூட கர்வம் தலை காட்டவே இல்லையே?
ன்னு அடிக்கடி ஆச்சரியப் பட்டு சொல்வாங்க...
இப்படியொரு உன்னதமான தோழி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கேன் காவ்யா! எங்கப்பாவுக்கு உன் மேல் அலாதிப் பிரியம்... எதுக்குன்னு சொல்லட்டுமா?...
போதும் மாதவா! இன்னிக்கு என்னமோ பாராட்டுப் பத்திரம் வாசிக்கிற மூடுலேயே இருக்கியே?
கற்பகம் அம்மா, சிவகுரு அப்பா, நீ... இப்படி குடும்பத்துல இருக்கிற மூணு பேருக்கும் ரொம்ப நல்ல குணம்... ஒரு குடும்பத்துல ஒட்டு மொத்தமா எல்லாருமே நல்லவங் களா இருக்கிறது... எவ்ளோ அதிசயம் தெரியுமா? நல்லவங்க கண்ணுக்கு எல்லாமே நல்ல விஷயங்களாத் தானே தெரியும்?
உங்க குடும்பம் மட்டும் இல்லேன்னா... எங்க குடும்பமே நட்டாத்துல நின்னுருக்கும். எங்கம்மா என்ன சொல்வாங்க தெரியுமா?
வாழ வழி தெரியாம திக்கு முக்காடி நின்னேன். கற்பகம் கை கொடுத்துத் தூக்கி விட்டா... அவ இல்லேன்னா... அந்தக் காலத்து நல்ல தங்காள்
மாதிரி ரெண்டு பெண் குழந்தைகளை சேர்த்துக் கட்டிக்கிட்டு கிணத்துல குதிச்சிருப்பேன்" அப்படின்னு சொல்லி கண்ணீர் விடுவாங்க...
"அந்த செய்ந்நன்றிக்கு எங்க குடும்பமே உங்களுக்கு காலத்துக்கும் கடமைப்பட்டிருக்கு மாதவா... உங்க நட்பும் அன்பும் கிடைக்கிறதுக்கு நாங்க போன ஜென்மத்துல ஏதோ தவம் பண்ணியிருக்கணும். ஏதோவொரு பேச்சுக்காக சொல்ற வார்த்தையில்லை மாதவா... இது என்னோட அடி மனசிலேர்ந்து வர்ற வார்த்தை !
நான் உயிரோட உள்ள வரைக்கும் இந்த நன்றியுணர்ச்சி மாறவே மாறாது. கடைசி காலம் வரைக்கும் நம்ம 'நட்பு' நீடிக்கணும். எந்த கோவிலுக்குப் போனாலும் சரி... நான் பகவான் கிட்ட வைக்கிற முதல் கோரிக்கை இது வாகத்தானிருக்கும்...
நெஞ்சம் நெகிழ்ந்து போய் பேசியதால் காவ்யாவின் அகன்ற விழிகளில் கண்ணீர் குளம் கட்டியது.
காவ்யாவின் தாயார் அபிராமியும், மாதவனின் தாயார் கற்பகமும் இணை பிரியாத தோழிகள். இருவருமே சென்னையை அடுத்த குன்றத்தூரில் அக்கம் பக்கத்து வீடுகளில் குடியிருந்தவர்கள்.
கற்பகமும், அபிராமியும் தூரத்து உறவுக்காரர்கள் தான்! உறவு முறையைவிட 'ஆத்மார்த்தமான நட்பு' இருவரையுமே அன்புச் சங்கிலியால் பிணைத்து வைத்திருந்தது என்பது நிஜம்!
அபிராமியின் கணவர் பத்மநாபனுக்கு சொந்தமாய் அந்தக் காலத்து பரம்பரை வீடு மட்டுமே இருந்தது. பஜாரில் காய்கறிக் கடை நடத்தி வந்தார்.
வருமானம், வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாய் இருந்தபோதிலும்... மனைவி அபிராமியை உள்ளங்கையில் வைத்துத் தான் தாங்கினார்.
குழந்தைகள் காவ்யா, பவ்யாவின் மீது உயிரையே வைத்திருந்தார். என்ன அபிராமி? காஸ் தீர்ந்து போச்சா? புது சிலிண்டரை மாட்டணுமா? புது சிலிண்டர் பாரம் அதிகமா இருக்கும்... இவ்ளோ வெயிட்டான பொருளை நீ ஏன் நகர்த்திக் கஷ்டப்படறே? என்கிட்ட சொன்னா... நான் வந்து மாட்டித் தர மாட்டேனா?
என்று அன்பாய் கடிந்து கொள்ளும்