Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanam Vittu Vaa Nilave
Vaanam Vittu Vaa Nilave
Vaanam Vittu Vaa Nilave
Ebook76 pages24 minutes

Vaanam Vittu Vaa Nilave

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115703988
Vaanam Vittu Vaa Nilave

Read more from Lakshmi Rajarathnam

Related to Vaanam Vittu Vaa Nilave

Related ebooks

Reviews for Vaanam Vittu Vaa Nilave

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanam Vittu Vaa Nilave - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    வானம் விட்டு வா நிலாவே...

    Vaanam Vittu Vaa Nilave…

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அலாரம் அடித்தது. சரியாக மணி நான்கு. மூன்று ஐம்பதுக்கே விழிப்பு வந்துவிட்டது பூரணிக்கு. விடியலில் எழுந்திருப்பது ஒரு அருமையான அனுபவம். சில பேர்களால்தான் வைகறை விடியலை அனுபவிக்க முடியும். சப்தமில்லாத, அமைதியான வைகறையில் சப்தத்தை அடக்கிக் கொண்டு ஓடும் ஆற்று நீரும், தனக்குள் தனக்குத் தானே பாடும் சங்கீதமாகும். நகரத்தில் ஆற்று நீரின் சங்கீதத்திற்கு எங்கே போவது? இருட்டுப் பிரியாத அமைதிதான் மோனத்தவம். ஆச்சு. இன்னும் சற்றுப் போனால் மரங்களில் சின்னச் சின்னப் பறவைகள் பூபாளம் இசைக்க ஆரம்பித்துவிடும்.

    பூரணிக்கு நாற்பது ஆவதற்கு மூன்று வயதுதான் குறைச்சல். மது என்ற அழகான மகள், மெடிக்கல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். பூரணியின் மனசு சற்றும் தளராத மனசு, சலிப்பே இல்லாத சிரிப்பு.

    பூரணியின் உடல்நிலைக்கு அவள் தளராமல் சுறுசுறுப்பாக இருப்பது அதிசயம்தான். இளம்பிள்ளை வாதத்தினால் வலதுகால் பாதம் சூம்பிப் போய் சாய்ந்து சாய்ந்து நடப்பாள். கருப்பும், வெளுப்பும் இல்லாத நிறம். ஆனால் தலைநிறைய கருகருவென்ற முடி. விரித்துப் போட்டால் முதுகை மறைக்கும்.

    ஒரு பெண்ணுக்கு இந்த முடி அழகு மட்டும் போதுமா? குட்டையான உருவம், முகம் செம்பு போல இருப்பதுடன் உளியால் கொத்திய மாதிரி அம்மைபோட்ட அடையாளக் குழிகள். கொஞ்சம் பெரிய பற்கள். மொத்தத்தில் அழகு என்ற சொல்லில் பார்த்தால் பூரணிக்கு மார்க்கு இல்லை.

    தோற்றத்தில் மார்க்கு இல்லாவிட்டால் என்ன? கண் பார்த்தால் கை செய்யும் என்பார்களே... அந்த வகையில் மார்க்கை அள்ளிக் கொண்டு போவாள். கொஞ்சம்கூட சோம்பேறித்தனம் இல்லை. தினமும் நாலு மணிக்கு எழுந்து விடுவாள். இன்றைக்கும் விடியலை வரவேற்க எழுந்து படுக்கையில் உட்கார்ந்தாள்.

    கைகளை தேய்த்துக் கொண்டு பார்த்தபின் எழுந்து படுக்கையை சுற்றி வைத்தாள். பல்தேய்த்து, முகம் கழுவி, ஸ்வாமி விளக்கேற்றி வைப்பது வழக்கம். அதன்பின் வாசல் பெருக்கி தண்ணீர் தெளிப்பாள்.

    ஒரு பெரிய வீட்டின் பின்னே தோட்டத்து வீட்டில்தான் குடியிருந்தார்கள். சின்ன ஹால், இரண்டு அறைகள், சமையல் அறை... தோட்ட வீடு என்பதால் வாசல் விஸ்தாரமாக இருந்தது. பூரணி கோலம் போடுவதில் எக்ஸ்பர்ட். ஒரு பெரிய வீட்டின் பின்னால்தானே இருக்கிறோம் என்றில்லாமல் அழகழகாக கோலம் போடுவாள். ரங்கோலிக் கோலம் போட்டால் இன்று பூராவும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

    இன்றும் வாசலில் பெரிய பெரிய தாமரைகளாக இதழ் விரித்தன. அதை முடித்துவிட்டு பாலைக் காய்ச்சி ஸ்வாமி படங்கள் முன்பு வைத்தாள். பிறகு நாராயணா, நாராயணா என்று சொல்ல ஆரம்பித்தாள்.

    இந்த எட்டெழுத்து மந்திரத்திற்கு உள்ள பலம் வேறு எங்கு கிடைக்கும். அது கிடைத்த இடம் குருவாயூரில். நாராயணா, நாராயணா என்று சொல்லும்பொழுதே மனம் விடியற்காலையில் ஈர உடையுடன் பக்தர்கள் சொல்லும் ரிதமிக்க நாராயண மந்திரம் ஒருமித்து ஒலிக்குமிடமான குருவாயூருக்கு ஓடிப்போய் விடுகிறதே.

    சென்னையில் ஒரு வீட்டின் பின்புற வீட்டின் அவுட் ஹவுஸில் விடியற்காலையில் உட்கார்ந்து சொன்னாலும்

    Enjoying the preview?
    Page 1 of 1