Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aval Varuvala?
Aval Varuvala?
Aval Varuvala?
Ebook91 pages45 minutes

Aval Varuvala?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115702397
Aval Varuvala?

Read more from Lakshmi Rajarathnam

Related to Aval Varuvala?

Related ebooks

Reviews for Aval Varuvala?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aval Varuvala? - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    அவள் வருவாளா?

    Aval Varuvala?

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    அவன் நாலைந்து தினங்களாகவே அவளைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அவன் யார் என்று அவளுக்குத் தெரியாது. இளமைக்கே உரிய மதர்ப்பான கர்வம் அவளுக்குள் இழையோடியது. அவன் கண்களால் தொடுக்கும் மன்மதக் கணைகளிலிருந்து விடுபட முடியவில்லை.

    கண்ணாடி முன்பு கண்களில் அஞ்சனம் தீட்டும் பொழுது அவன் நினைவு வந்தது. நான் அழகியா? இளமை அவளைத் தீண்டிக் கொடுத்திருக்கும் இனிய அமிர்தத்தை அவன் அருந்தத் துடிக்கிறான் என்பது புரிகிறது. அவன் யார், எப்படிப்பட்டவன் என்பதெல்லாம் கேட்கத் தோன்றாமல் அறிவு மழுங்கிப் போகிறது.

    இன்றைக்கு அவனைப் பார்க்கக் கூடாது. அவன் நிற்கும் இடம் வந்த பொழுது நெஞ்சில் ரயில் தடதடக்கிறது. கன்னம் ஜிவுஜிவுக்கிறது. பார்க்காதது போல் பார்க்கிறாள்.

    கண்ணதாசன் கில்லாடியப்பா!

    உன்னை நான் பார்க்கும் பொழுது என்னை நீ பார்க்கின்றாயே...

    நேரில் கண்டால் விழிகள் தேய்ந்து போகுமோ?

    ஐயோ. அந்த ப்ரவுன் கலர் ஷர்ட் எத்தனை அழகா இருக்கிறது.

    அடுத்தநாள் வெள்ளை ஷர்ட். பாண்ட் போடாமல் தழையத் தழைய கருப்பு கரையிட்ட வேட்டி கல்யாணக் கோலத்தை நினைவுபடுத்தியது.

    இரவு கண்ணை மூடினால் இது என்ன அவஸ்தை? அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? உடம்பில் ஏதோ ஒட்டியது போல சதா அவன் நினைவே தன்னுடன் பவனி வருகிறதே.

    நடுவில் சனி, ஞாயிறு வந்தபொழுது மனசில் பிராண்டிய பிராண்டல் தாங்க முடியவில்லை.

    பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருக்கும் தோழி நினைவுக்கு வந்தாள்.

    அவளிடம் வேலை ஒன்றும் இல்லை. எங்கேயோ வந்தாற்போல பொய் சொல்லலாமா?

    அம்மா, ரமாகிட்ட இந்த நோட்டைத் தரணும். போயிட்டு வந்துரவா?

    அம்மாவுக்கு விழிகள்பெரிசு. மை தீட்டாமல் விழிகளை வெறுமையாய் விட்டதில்லை. கண்கள் அத்தனை பாவங்களையும் பேசும்.

    அம்மா, உனக்கு பூந்வித்யா மாதிரி கண்கள் ரொம்ப அழகு. நான் உன்னை மாதிரிதானே?

    மனசுக்குள் பொங்கும் கோபம் விழிகளை கோலிக் குண்டாக்கி உருட்டாமல் அம்மாவின் மனசை அடக்கிவிடும் சாமர்த்தியம் அவளுக்கு உண்டு.

    வர்ஷினி, அழகு இருந்து என்ன பண்றது? துளி கூட அதிர்ஷ்டம் இல்லையே! பாரியாள் ரூபவதி சத்ருனு உங்கப்பா என்னை படி தாண்ட விட்டதில்லை. என் அழகை நான் எங்கே கண்டிருக்கேன்? ஏதோ நீ பண்ணின புண்ணியம் உன்னைப் படிக்க வச்சிட்டு இருக்கார். இப்படி எல்லாம் என்னை பூரீவித்யா மாதிரி இருக்கேனு சொன்னது அவர் காதுல விழுந்தா உன் படிப்பை நிறுத்திடுவாரு

    அம்மாவின் ஆசைகள் அடுப்படி கரிச்சுவரில் எழுதப் பட்ட கல்வெட்டுக்கள்தான். அதை எந்தக் கண்ணாடி அணிந்தும் படிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும்.

    நான் நல்லாப் படிக்கணும். அம்மாவை நல்லா வச்சுக்கணும்.

    என்ன யோசிக்கிறே வர்ஷா?

    அம்மாவின் ஒட்டுப்போட்ட புடவைத் தலைப்பை நிரடுகிறாள்.

    நான் சம்பாதிச்சு உனக்கு நிறையப் புடவைகள் வாங்கித் தரேம்மா.

    அம்மா சாலினியின் கண்கள் ஊற்று வற்றிப் போய் வரண்டு போன கிணறுகள். சாந்தம் அவள் கண்களில் குடி ஏறியதால்தான் முகத்திற்கு ஜீவகளையைக் கொடுத்தது. பார்த்தவர்கள் கை கூப்பும் சத்திய தரிசனம். காதில் சிகப்புக் கல் தோடு, பாட்டி தன் பேத்திக்கு ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்தது. மூக்கில் தங்க மூக்குத்திகள். எண்ணெய் இறங்கும் என்ற பிரச்னை இல்லை.

    அம்மாவுக்கு நகைகள் போட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்?

    வரலட்சுமி பூஜைக்கு செம்பில் செருகும் வரலட்சுமி போல இருப்பாளா?

    என்ன வர்ஷா, திகைச்சுப் போயிட்டே? ரமா வீட்டுக்குப் போகல்லையா?

    தோ, கிளம்பிட்டேம்மா.

    அப்பாவுக்குப் பிடிக்காது என்பதால் அந்த வீட்டில் சுரிதார், மேக்ஸி போன்ற நாகரீக உடைகள் நுழைந்தது கிடையாது.

    அப்பா வடமொழி வித்தகர். சாவு மந்திரம் சொல்லப் போக மாட்டார். வடமொழியில் ஆசிரியர் உத்தியோகம் பார்த்தார். வடமொழிக்குத் தமிழ்நாட்டில் அதிக இடமில்லை. அதனால் பூணுால், கல்யாணம் என்று போகத் தொடங்கினார். சிக்கனமாக இருக்கவேண்டிய நிர்பந்தம்.

    மூன்று பெண் குழந்தைகள். இரண்டு ஆண், இரண்டு பெண், ஒரு ஆண், ஒரு பெண், ஒரு ஆண் வரிசை.

    பெரியவள் சந்திராவை எட்டாவது தாண்டவிடவில்லை. மைத்துனன்

    Enjoying the preview?
    Page 1 of 1