Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oonjalaadum Nenjam
Oonjalaadum Nenjam
Oonjalaadum Nenjam
Ebook121 pages1 hour

Oonjalaadum Nenjam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465827
Oonjalaadum Nenjam

Read more from R.Sumathi

Related to Oonjalaadum Nenjam

Related ebooks

Reviews for Oonjalaadum Nenjam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oonjalaadum Nenjam - R.Sumathi

    18

    1

    இரு கை குவித்து வணக்கம் தெரிவித்து விட்டு எதிரே தயக்கத்துடன் அமர்ந்தவர்களை கேள்விக் குறியோடு பார்த்தாள், மருத்துவர் மீனா.

    முப்பத்தைந்து வயது பெண்ணொருத்தி அவளுக்கு ஒத்தவனாய் அவள் கணவன், மாயன்.

    அருகே தலையைக் குனிந்தபடி சற்றே விழிகளை உயர்த்திப் பார்த்தபடி சிறுவன்.

    குச்சி தேகம். வாட்டமான முகம். பயம் பூசிய விழிகள். பெரும் தவறு செய்து விட்டதைப் போல் குற்ற உணர்வு அழுத்தும் நிலை. வாலிபம் தரும் வசீகரத்தை வாங்கிக் கொள்ள மாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்கும் இறுகிப்போன பார்வை.

    மீனா அந்தச் சிறுவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு, பார்வையைத் தகப்பன் மீது தாவவிட்டாள்.

    ம்... சொல்லுங்க...

    டாக்டர்... இவன் எங்களுக்கு ஒரே பையன். இவனை என்னென்னவோ படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டோம். காசுக்குப் பிரச்சினை இல்லை. ஆனா... இவன் திடீர்னு சரியா படிக்காம ‘விட்டேத்தி’யா இருக்கான். நல்லா படிச்ச பையன் பெயில் மார்க் வாங்கியிருக்கான் அவன் நிறுத்திக்கொள்ள, மனைவி தொடர்ந்தாள்.

    அதுமட்டுமல்ல... யார் கூடேயும் சரியா பேசுறதும் கிடையாது. நண்பர்களையும் மறந்துட்டான். விளையாடுறதும் கிடையாது. ஏன் இப்படி இருக்கேன்னு கேட்டாலும், பதில் சொல்ல மாட்டேங்கிறான். அதான்... என இழுத்தாள்.

    அணிந்திருந்த கண்ணாடியை ஆட்காட்டி விரலால் அழுத்தி விட்டபடி பார்த்தாள், மீனா.

    சிறுவன் அதைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக மேசை மீதிருந்த பேனாவை எடுத்து தாளில் ஏதோ கிறுக்கியபடியே பார்வையைத் தழைத்துக் கொண்டான்.

    உன்பேர் என்னப்பா?

    அவன் நிமிராமலேயே பாஸ்கர் என்றான்.

    உனக்கென்ன ஆச்சு?

    எனக்கொண்ணும் ஆகலை. நான் நல்லாத்தான் இருக்கேன்.

    மீனாவின் விழிகள் அவனை அளவெடுத்தன. சில கணங்கள் அவனையே ஊடுருவிப் பார்த்துவிட்டு பெற்றோர் பக்கம் திரும்பினாள்.

    "உங்க பையனோட இந்த நிலைக்கு என்ன காரணம்னு இவனைப் பார்த்த மாத்திரத்திலே கண்டுபிடிச்சுட்டேன்.

    ஆனா... இருபத்து நான்கு மணி நேரமும் அவன் கூடவே இருக்கிற, அதுவும்... தாய் - தகப்பனான உங்களால் எப்படிக் கண்டுபிடிக்க முடியாமப் போச்சு?"

    டாக்டர்... இருவரும் ஆச்சரியமும் குழப்பமும் கலந்து ஏறிட்டனர்.

    உங்க மகனை ஒரு டாக்டரா ஆக்கணும். இன்ஜினியரா ஆக்கணும்னு அவனைப் படி படின்னு உந்தித் தள்ளி இருப்பீங்க. ஆனா... அவனுக்குள்ளே இருக்கிற அற்புதமான திறமையை மதிக்க மறந்திட்டீங்க... இங்க பாருங்க...

    பாஸ்கர் கிறுக்கிய காகிதத்தை வாங்கி அவர்களின் முகத்திற்கெதிரே நீட்டினார். அதில் அழகான பெண் உருவம்.

    கல்விங்கிற லட்சியம் பிறரால் உருவாக்கப்படலாம். ஆனா கலைங்கிற லட்சியம் மனிதனுக்குள் தானா மலரும். அவன் ஏதாவது வரையும்போது உசாகப்படுத்தாம திட்டி இருக்கீங்களா...?

    அந்தக் கேள்விக்கு இருவரும் பதில் சொல்லாமல் தலை குனிந்தனர்.

    என்ன... நான் சொல்றது சரிதானா?

    ஆமா டாக்டர். கண்டதை வரையிற நேரத்துல் உருப்படியா படிக்கலாமேன்னு அடிக்கடி இவர் திட்டுவார். ஒரு தடவை அவன் வைத்திருந்த வண்ணங்களை எல்லாம் கோபத்துல தூக்கியெறிந்து விட்டார்.

    பாஸ்கரின் தாய் சொல்லச் சொல்ல, மாயன் தலை குனிந்தான். அவன் படிக்காம போயிடுவானோங்கிற கோபத்துல...

    இந்த நாட்டுல எல்லாருமே டாக்டரா... இன்ஜினியராதான் ஆகணும்ன்னா... திறமைமிக்க கலைஞனை எந்த நாட்டுலேருந்து இரவல் வாங்குறது?

    ...

    பிள்ளைங்களை அவங்க பாதையில விட்டுத்தான் வளர்க்கணுமே தவிர, நம்ம பாதைக்குப் பிடிவாதமா இழுக்கக் கூடாது. குழந்தைங்க மனசை நோகடிச்சு வீணா வேற பாதையிலேயும் திருப்பக்கூடாது...

    மீனா பேசிக்கொண்டே போக, குற்ற உணர்வு அவர்களைத் தொற்றிக் கொண்டு, தொங்கிய தலையை நிமிர்த்த முடியாமல்

    செய்தது.

    ஆள்காட்டி விரலை மடக்கி அதன் சின்ன எலும்பால் அறைக்கதவு தட்டப்பட, மனநலம் பற்றிய மருத்துவப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்த மீனா நிமிர்ந்தாள்.

    கதவு மெதுவாகத் திறந்தது. உள்ளே நுழைந்தவர், உயரமான மனிதர். ஆரோக்கியமான பற்கள் பளீரிட சிரித்த அவருக்கு ஐம்பது வயதிருக்கும். பளபளக்கும் கண்ணாடிக்குள் ஆளை இழுக்கும் காந்த வீச்சு.

    வணக்கம்... டாக்டர்! சட்டென்று எழுந்தாள், மீனா.

    அப்பாவுக்கு எதுக்குடா மரியாதை? எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டியா? சிரித்தபடியே அமர்ந்தார், பிரம்மன்.

    வித்தியாசமான பெயர். வைத்தவர்கள் என்ன நினைத்து வைத்தார்களோ! அப்படியே செயல்படுத்தி விட்டார். பிரமிக்க வைத்துவிட்டார்.

    அப்பாவாக இருந்தாலும் இந்த மருத்துவமனைக்கு நீங்க தலைமை மருத்துவராச்சே... நான் உங்களுக்கு கீழே வேலை பார்க்கும் டாக்டர்... மீனா பெருமிதமாகச் சிரிக்க, பிரம்மன் மகளைச் செல்லமாக அடித்தார்.

    போதும் புகழ்ந்தது.

    போதாதுப்பா... சாதாரண குடும்பத்தில் பிறந்து மேல மேல படிச்சு மருத்துவராகி, வாழ்க்கையில் உயர்ந்து இவ்வளவு பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவ உலகத்தோட மூலை முடுக்குக்கெல்லாம் பறந்துகிட்டிருக்கிற உங்களைப் பார்க்கும் போது கலிபோர்னியாவின் உயர்ந்த மலைச் சிகரத்தைப் பார்க்கிற மாதிரி இருக்குப்பா...

    நம்ம நாட்டில் கூட எத்தனையோ மலைச்சிகரங்கள் இருக்க, கலிபோர்னியா மலைச்சிகரத்தோட என்னை ஏம்மா ஒப்பிடுறே? அந்த உயர்ந்த மலைச்சிகரங்கள்ல கீழிருந்தே படிக்கிற மாதிரி ஒரு வாசகம் எழுதி இருக்கும்ப்பா... ‘உன்னை போல் உயரமான தலைவர்கள் பிறக்கட்டும்’ அப்படின்னு. அதைப் பார்க்கிற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உத்வேகம் பிறக்கும். இந்தச் சிகரம் மாதிரி நாம் உயரணும்னு! உங்களைப் பார்க்கும்போதும் எனக்குள் அப்படித்தாம்பா தோணுது. அவள் சொல்ல, சிரித்த பிரம்மன், மறுப்பாகத் தலையாட்டினார்.

    இல்லை! எனக்கு என்ன தோணுது தெரியுமா? நம்ம தமிழ்ப் பாட்டு ஞாபகம் வருது. ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு. சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு...’ எப்படி? நீ சிகரத்தையும் மிஞ்சி வானத்தையும் வசப்படுத்தணும்’ அதான் எனக்குப் பெருமை.

    இரு கண்களையும் அகல விரித்து அப்பாவைப் பெருமை பொங்க பார்த்துச் சிரித்தாள்.

    நன்றிப்பா... உங்க அன்பும் வாழ்த்தும் இருக்கும்போது வானத்தை என்னப்பா... அதுக்கும் மேலகூட போக முடியும்!

    அப்படிச் சொல்லு. சரி... வந்த விஷயத்தை மறந்துட்டு என்னென்னமோ பேசுறேன் பாரு என தலையில் லேசாகத் தட்டிக் கொண்டார்.

    என்ன விஷயம்ப்பா...?

    உன் கல்யாண விஷயம்தான்.

    சட்டென்று மீனாவின் முகத்திலிருந்த சிரிப்பு பறந்து போனது. ஓட்டுக்குள் உடலை இழுத்துக்கொள்ளும் நத்தையைப் போல்

    Enjoying the preview?
    Page 1 of 1