Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pirai Thedum Iravu
Pirai Thedum Iravu
Pirai Thedum Iravu
Ebook106 pages1 hour

Pirai Thedum Iravu

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466336
Pirai Thedum Iravu

Read more from Parimala Rajendran

Related to Pirai Thedum Iravu

Related ebooks

Reviews for Pirai Thedum Iravu

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pirai Thedum Iravu - Parimala Rajendran

    20

    1

    ஆதியும் அந்தமும் இல்லாத, அருவமும், உருவமும் அல்லாத இன்பமும், துன்பமும் இன்றி வேதங்களை கடந்து நிற்கும் இறைவா நீதான் அலைபாயும் என் மனதுக்கு நிம்மதி தரவேண்டும்.

    ஆசைகளையும், உணர்ச்சிகளையும் அடக்கியாளும்மன வலிமையை கொடு. மனதின் வேண்டுதல், மூடியிருந்த கண்களின் வழியே கண்ணீரை வெளியேற்றுகிறது. தீய ஒளியில் சுடர்விடும் ஈசனை சிரம்தாழ்த்தி வணங்கியவள், அங்கிருந்த திருநீறை நெற்றியில் இடுகிறாள்.

    அம்மா... அம்மா... எங்கேம்மா இருக்கே?

    ஐந்து வயது மகன் பிரபுவின் மழலை மாறாத குரல்...

    இந்தா வந்துட்டேன் ராஜா...

    கண்ணீரை துடைத்துக் கொண்டு சுவாமி அறையை விட்டு வெளியே வருகிறாள்.

    "காலை நேரத்தில் இப்படி அரை மணி நேரம் சாமியறையில் இருந்தா என்ன அர்த்தம். எல்.கே.ஜி போற பிள்ளையை கிளப்பணும்.

    தினகருக்கு ஒன்பது மணிக்குள் சாப்பாடு ரெடி பண்ணனும். சுமதி காலேஜுக்கு கிளம்பிட்டிருக்கா... நீ என்னடான்னா வேலையே எதுவும் இல்லாத மாதிரி குளிச்சு முடிச்சு சாவகாசமா வர்றே..."

    எரிச்சலும், கோபமும் வெளிப்பட மருமகளை பார்க்கிறார் அம்சவள்ளி.

    இதோ அரைமணியில் முடிச்சுடுவேன்மா.

    எதிரில் வரும் பிரபுவின் கையை பிடித்து அழைத்து அடுப்படிக்குள் நுழைகிறாள் சாந்தி.

    முருங்கை காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், உருளைக்கிழங்கு மசாலா, தக்காளி ரசம் டேபிளில் தயாராகிறது.

    சமர்த்து இல்லையா. இந்த ஒரு வாய் மட்டும் சாப்பிடு. சாயந்திரம் நீ ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மா உன்னை பார்க்குக்கு கூட்டிட்டு போவேன்.

    நிஜமா...

    ஆமாம்...

    இல்ல நீ பொய் சொல்றே. நீ வரமாட்டே... தாத்தாவோடதான் அனுப்புவே. இன்னைக்கு நீயும், தாத்தாவும் வரணும்.

    வரேண்டா கண்ணா.

    அம்மா... நான் ஊஞ்சலில் ஸ்பீடா ஆடுவேன். பார்க்கிறியா...

    ம்... பார்க்கிறேன்.

    அங்கே கலர் கலராக நிறைய பூ இருக்கும்மா.

    அப்படியா...

    பேச்சு சுவாரஸ்யத்தில் சாந்தி கொடுக்கும் சாப்பாட்டை விழுங்குகிறான்.

    சரி போய் ஷூ எடுத்துட்டு வா... போட்டு விடறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் வேன் வந்துடும்.

    சிட்டாக பிரபு வாசலை நோக்கி ஓட...

    அண்ணி, சாப்பாடு ரெடியா... சாப்பிடலாமா...

    தினகரை பார்க்கிறாள். உருவ ஒற்றுமையில் அண்ணனை கொண்டிருந்தாலும், நிறம் கொஞ்சம் குறைவுதான்.

    நீ உட்கார் தினகர், நான் பரிமாறேன்.

    அம்சவல்லி டேபிளில் தட்டை வைக்கிறாள்.

    காலையில் இட்லி, தோசைன்னு சாப்பிடாம, ஏண்டா சாதத்தை சாப்பிடறே...

    சாதம் சாப்பிட்டா பசி இருக்காது. மூணு மணி போல லைட்டா ஸ்நாக்ஸ் எடுத்துக்கிட்டா போதும். கம்பெனியில் வேலை சரியா இருக்குமா...

    சாம்பாரை தட்டில் ஊற்றியவள்...

    பெரிசா ஸ்டீல் கம்பெனி வச்சிருக்கேன்னுதான் பேரு, நல்ல லாபம் வந்தாலும், நீதான் உழைக்க வேண்டியிருக்கு.

    என்னம்மா செய்யறது? முதலாளி பொறுப்போடு இருந்தாதான் தொழிலாளியும் ஒழுங்கா வேலை பார்ப்பான்.

    என்னவோ போ... உங்கண்ணன் டாக்டர்னு பெருமைப்பட்டேன். அந்த கடவுளுக்கே பொறுக்கலை... லாரி ரூபத்தில் ஆஜானுபாகுவா ஆறடி உயரத்தில் இருந்த என் பிள்ளையை அழைச்சுட்டு போயிட்டான். பெத்த தாய்க்கு ஈடு செய்யற இழப்பா இது... நினைச்சா பெத்த வயிறு பத்தி எரியுது...

    எதுக்கும்மா... காலங்கார்த்தாலே இந்த பேச்சு. அப்புறம் இன்னைக்கு முழுக்க பிரமைபிடிச்சது போல உட்கார்ந்திருப்பே. அப்பா கடைக்கு போயிட்டு வந்துட்டாரு போலிருக்கு. வாசலில் சப்தம் கேட்குது. போய் பாரு. சாப்பாடு நான் போட்டுக்கிறேன்.

    அம்சவல்லி எழுந்து செல்ல...

    கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தபடி தன் அறைக்கு செல்லும் அண்ணியை பார்க்கிறான் தினகர்.

    தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் விட்டவர், கத்தரி செடியிலிருந்து பிஞ்சு கத்தரிக்காய்களை பறிக்கிறார். தினகருக்கு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பிடிக்கும். அதுவும் சாந்தி கையால் செய்யறது அமிர்தமாக இருக்கும். நல்ல பெண். கடவுள்தான் கருணையில்லாமல் அவள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி விட்டார்.

    என்னங்க, இன்னும் தோட்டத்தில் என்ன செய்யறீங்க. டிபன் சாப்பிட வரலையா?

    எல்லாரும் கிளம்பி போகட்டும். எனக்கென்ன அவசரம். மெதுவா சாப்பிடறேன்.

    அதானே மருமகளோடு உட்கார்ந்து பத்து மணிக்குதானே சாப்படுவீங்க. மார்க்கெட்டுக்கு போய் வந்தவுடன் தோட்டத்தில் நுழைஞ்சாச்சு. எனக்கு பசிக்குது. நான் சாப்பிடறேன்.

    நான் உன் கையை பிடிச்சுக்கலையே... போய் சாப்பிடு. ரிடையர்ட் ஆனபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன்.

    அப்பா ரிடையர்ட் ஆயிட்டிங்க. பென்ஷன் வருது... இரண்டு பிள்ளைகள், ஒருத்தன் டாக்டர், இன்னொருத்தன் தொழிலதிபர். இனி நீங்க நிம்மதியா இருக்க வேண்டிய காலம் சுமதி கல்யாணத்தை நாங்க பார்த்துக்கிறோம்.

    சுதாகார் புன்னகையுடன் அப்பாவின் கைபிடித்து சொல்ல...

    எனக்கென்னப்பா ராம, லஷ்மணர் போல இரண்டு பேரும் என் மனசறிஞ்சு நடக்கிற பிள்ளைகள். அன்போடு தந்தை ஸ்தானத்தில் வைத்து என்னை கவனிக்கிற என் மருமகள் சாந்தி, நிம்மதிக்கு எந்தக் குறைவும் இல்லையே... நீ இப்படி பேசறதை கேட்கும்போது சந்தோஷமா இருக்கு திவாகர்.

    "அப்பா உங்களுக்கு வேலையே இல்லைன்னு நினைச்சுடாதீங்க. உங்க பேரன் பிரபுவை கவனிக்கிற முழு பொறுப்பும் உங்களுக்குத்தான்.

    சாந்திக்கு அடுப்படியில் நுழைஞ்சிட்டா இந்த உலகமே தெரியாது."

    சந்தோஷமா ஏத்துக்கிறேன். கரும்பு தின்ன கூலியா.

    மனம் விட்டு சிரிக்கிறார்.

    என்ன தோணியதோ தெரியவில்லை. ஈஸிசேரில் அமர்ந்திருக்கும் அப்பாவின் காலடியில் உட்காருகிறான்.

    அப்பா...

    என்ன திவாகர்... சொல்லுப்பா...

    "கல்யாணமாகி நாலு வருஷமாச்சுப்பா... அம்மா இன்னும் சாந்தியை முழு மனசோடு மருமகளாக ஏத்துக்கலைன்னுதான் தோணுது. எங்க காதல்

    Enjoying the preview?
    Page 1 of 1