Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalangalil Aval Vasantham
Kaalangalil Aval Vasantham
Kaalangalil Aval Vasantham
Ebook87 pages45 minutes

Kaalangalil Aval Vasantham

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466053
Kaalangalil Aval Vasantham

Read more from Parimala Rajendran

Related to Kaalangalil Aval Vasantham

Related ebooks

Reviews for Kaalangalil Aval Vasantham

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalangalil Aval Vasantham - Parimala Rajendran

    20

    1

    புழுதியை கிளப்பிக் கொண்டு காற்று வேகமாக வீச, இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவேன் என்று மழை பயமுறுத்துவது போல் வானத்தில் மின்னல் கீற்றுகள் பளீரிட்டு, இடி முழங்க...

    பஸ்ஸை விட்டு இறங்கிய நந்தினி, காற்றின் வேகத்தில் முகத்தில் விழும் முடிக்கற்றைகளை ஒதுக்கிய வண்ணம், முன்புற புடவை சுருக்கத்தை ஒரு கையால் தூக்கி பிடித்தபடி வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள்.

    பஸ்ஸை விட்டு இறங்கி, வீட்டை அடைய எப்படியும் இரண்டு தெரு நடக்க வேண்டும். பத்து நிமிஷ நடையை, வேகமாக ஐந்து நிமிடத்தில் கடந்து வீட்டை நெருங்க, கதவு பூட்டியிருப்பதை பார்த்து, அத்தை எங்கே போயிருப்பார்கள். அவரும் இந்த நேரம் வந்திருப்பார். குழந்தை சுமியை மழை வரும் நேரத்தில் வெளியில் அழைத்து சென்றிருக்கிறார்களா... பலவித சிந்தனையுடன் நின்றவளை...

    அம்மா...

    மகளின் குரல் கேட்டு திரும்ப, எதிர்வீட்டு பார்வதியின் இடுப்பில் உட்கார்ந்திருந்த இரண்டு வயது சுமித்ரா... அம்மாவிடம் தாவினாள்.

    சுமிக்குட்டி... நீ இங்கேயா இருக்கே.

    மகளை முத்தமிட்டு வாங்கியவள்,

    என்னம்மா... அத்தை எங்கே. சுமியை உங்ககிட்டே கொடுத்துட்டு எங்கே போனாங்க?

    இப்பதான்மா அரை மணி நேரத்துக்கு முன்னால் உன் வீட்டுக்காரர் வந்ததும், அழைச்சுக்கிட்டு கோயிலுக்கு கிளம்பினாங்க. மழை வர மாதிரி இருக்குன்னு சுமியை என்கிட்டே விட்டுட்டு போனாங்க. இந்தாம்மா சாவி.

    சாவியை வாங்கிக் கொண்டவள்,

    ரொம்ப தாங்ஸ்மா.

    பூட்டிய கதவை திறந்தாள்.

    சுமிக்குட்டி சமர்த்தா விளையாடணும் அவளது விளையாட்டுப் பொருட்களை ஹாலில் கொட்டி உட்கார வைத்தாள்.

    அடுப்படியில் நுழைந்தவளுக்கு தலைசுற்றிக் கொண்டு வந்தது. எல்லாம் போட்டது, போட்டபடி இருந்தது. வேலைக்காரி மதியம் அலம்பி வைத்த பாத்திரங்கள் கூடையில் அப்படியே இருந்தன. மேடையில் காபி போட்ட டபரா, டம்ளர் என்று அங்கும் இங்கும் கிடந்தது. மேடையில் சிந்திய காபியை துடைக்காமல் எறும்பு சுற்றிலும் வரிசை கட்டி நின்றது.

    எதனால் இப்படி, எல்லா வேலைக்கும் என்னையே எதிர்பார்த்து காத்திருக்கும் இவர்கள், என்னை ஒரு மனுஷியாக கூட மதிப்பதில்லை.

    நந்தினி தனியார் நிறுவனம் ஒன்று நடத்தும் டிராவல் ஏஜென்சியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் கணவன் அரவிந்த், கல்லூரி பேராசிரியர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன். அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவன். நிலபுலம் இருந்ததால், வசதிக்கு எந்தக் குறையும் இல்லாமல் இருந்தது.

    அரவிந்தை பொறுத்தவரை, அவனுக்கு எல்லாமே அம்மாதான். திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே அதை புரிந்துகொண்டாள் நந்தினி.

    நந்தினி, எங்கம்மா என்னையே நம்பி, எனக்காக வாழ்கிறவங்க. அவங்க மனசு கோணாம நீ நடந்துக்கணும். எனக்கு அதுதான் முக்கியம். என் தங்கை ஹேமாவும் கல்யாணம் முடிச்சு, அமெரிக்காவில் இருக்கா. நான்தான் அவங்களுக்கு எல்லாம்.

    சாப்பிட உட்கார்ந்தால் கூட பரிமாற அம்மாதான் வர வேண்டும். தாய்க்கும், மகனுக்குமான பாசத்தில் தலையிட விரும்பாமல், இந்த அளவுக்கு தாய் மேல் பிரியமாக இருக்கும் கணவனை நினைத்து வெகு மதிப்பாள்.

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

    அதுபோல... எல்லாமே அம்மாதான் என்று நினைத்து வாழும் அரவிந்த். மனைவியாக வந்த தன்னை, ஏதோ தனக்காக படைக்கப்பட்டவள் என்பது போல நடத்திய விதம், அவளுடைய ஆசைகள், எண்ணங்கள் எதுக்குமே மதிப்பு கொடுக்காமல் நடந்து கொண்டது. ஒரு கட்டத்தில் இதை சகித்துக் கொள்ள இயலாமல் எதிர்ப்பு காட்டியபோது, வீட்டில் சின்னதாக புயல் உருவாக தொடங்கியது.

    உங்கம்மாதான் சாப்பாடு போடணும், வெளியே. போனாலும் அம்மா வரணும், எதுவாக இருந்தாலும் அம்மாவை கேட்டுதான் செய்யணும்னா... என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.

    அடுத்த கணம், பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்ததில் பொறி கலங்கி நின்றாள்...

    இங்கே பாரு, உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எங்கம்மாவை விட்டுட்டு வரச் சொல்றியா?

    பெத்து வளர்த்த தாயின் மதிப்பு தெரியாதவன் வேணுமினா... பெண்டாட்டி இழுத்த இழுப்புக்கு வருவான். நான் அப்படிப்பட்டவன் இல்லை. எங்கம்மாவை மதிச்சு, என்னோடு குடித்தனம் நடத்த முடிஞ்சா இங்கே இரு. இல்லாட்டி டைவர்ஸ் தரேன். அப்பா வீட்டுக்கு போயிட்டே இரு.

    வயிற்றில் சுமியை சுமந்து கொண்டு தாய்மை பூரிப்போடு நின்றவள், அவன் பேச்சில் அடங்கி போனாள்.

    அதற்குப் பிறகு எதற்குமே அதிகமாக வாய் திறப்பதில்லை. மாமியார் கமலம் எடுத்தெறிந்து பேசும்போதும் பொறுத்துக் கொண்டாள்.

    பெற்றவர்களுக்கு ஒரே மகளான நந்தினி, தன் நிலைமையை வெளியே சொல்லாவிட்டாலும், அதை உணர்ந்த மகாதேவன்,

    "அம்மா,

    Enjoying the preview?
    Page 1 of 1