Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaalaattum Poongattru
Thaalaattum Poongattru
Thaalaattum Poongattru
Ebook132 pages1 hour

Thaalaattum Poongattru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466060
Thaalaattum Poongattru

Read more from Parimala Rajendran

Related to Thaalaattum Poongattru

Related ebooks

Reviews for Thaalaattum Poongattru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaalaattum Poongattru - Parimala Rajendran

    18

    1

    சூர்யா காலேஜிக்கு கிளம்பி செல்ல,

    வீட்டை ஒழுங்குப்படுத்த ஆரம்பித்தாள் சாந்தி.

    அவன் கழட்டி எறிந்திருந்த டீ-சர்ட், நோட்ஸ் எடுத்த புத்தகங்கள் என எங்கும் கலைந்து கிடந்த அவன் பொருட்களை உரிய இடத்தில் வைத்தாள்.

    சூர்யா நீ இன்னும் சின்ன குழந்தை இல்லை. இந்த வருஷத்தோடு உன் படிப்பு முடியுது. நீ ஒரு இஞ்சினியர். இப்படி எதையும் ஒழுங்கா எடுத்து வைக்காமல் போறியேப்பா...

    செல்லமாக கடிந்து கொள்வாள் சாந்தி.

    "நீ இருக்கும் போது, எனக்கென்னம்மா கவலை. சாயந்திரம் நான் காலேஜ் விட்டு வரும் போது... என் சாமான்கள் எல்லாம் சமர்த்தா அது அது இடத்தில் போய் உட்காந்திருக்கும்.

    நீயும் வேலைக்கு கிளம்பிடுவே. இந்த மேஜிக் எப்படிம்மா நடக்குது"

    சிரிக்காமல் சொல்வான் சூர்யா.

    சுருண்ட அவன் தலைமுடியை கலைத்து,

    ஏன் சொல்ல மாட்டே. இந்த அம்மா வேலைக்கு மட்டும் போகலை. என் செல்ல பையனுக்கு இன்னும் சேவகம் பண்ணிட்டு தான் இருக்கா மலர்ந்து சிரிப்பாள் சாந்தி.

    ஸ்கூலில் டீச்சராக வேலை பார்க்கிறாள் சாந்தி.

    அவளுக்கு எல்லாமே சூர்யா தான். மகன் மேல் அளவிடமுடியாத அன்பு. அவள் வாழ்க்கையின் பிடிமானமே அவன் தான்.

    கடந்து வந்த நாட்கள் அவள் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.

    புவனா புவனா

    அவள் வீட்டு வாசலில் நின்று குரல் தந்தாள் சாந்தி.

    இதோ வந்துட்டேன் சாந்தி

    வேகமாக ‘பேக்’கை தோளில் மாட்டியபடி வந்தவள், கதவை பூட்டினாள். "

    சுரேன் இப்ப தான் கவினை கூட்டிக்கிட்டு கிளம்பினாரு. இன்னைக்கு எல்லாருமே லேட்டு. சரிவா போகலாம் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் புவனா...

    படிக்கும் காலத்திலிருந்தே இருவரும் நெருங்கிய தோழிகள். அந்த நட்பு கல்யாணத்துக்கு பிறகும் தொடர, இருவரும் ஒரே ஸ்கூலில் வேலை பார்ப்பதும் ஒரு காரணமாகியிருந்தது.,

    கல்யாணமான மறு வருடமே புவனாவுக்கு ‘கவின்’ பிறக்க, சாந்திக்கு அந்த பிராப்தம் கிடைக்காமல் தள்ளி போனது.

    சாந்தியும், சங்கரும் இரண்டு வருடம் வரை அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

    குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் வருடங்கள் மூன்று, நான்கு, ஐந்து என தொடர, எத்தனை டாக்டர்கள்... எத்தனை விதமான சிகிச்சைகள்... எதுவும் பலனளிக்காமல் போக, மனம் சோர்வடைய ஆரம்பித்தது.

    சங்கரும் வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால், அவன் குடும்பமும் கவலைபட ஆரம்பித்தது.

    பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டு வெளியே வந்த சாந்தியை பார்த்தான்.

    "என்னங்க, புதுசா பார்க்கிற மாதிரி அப்படி பார்க்கிறீங்க...,

    கல்யாணமான புதுசில் உன் முகத்தில் தெரிந்த உற்சாகம், தெளிவு இப்ப மறைஞ்சு போச்சு சாந்தி. இதுக்கெல்லாம் காரணம் நமக்கு குழந்தை இல்லாதது தான்.

    கணவனின் அருகில் உட்காருகிறாள்.

    போன தடவை ஊருக்கு போனப்ப, அத்தை சொன்னது இன்னும் என் மனசை உறுத்துதுங்க.

    அதை பெரிசாக எடுத்துக்காதே சாந்தி

    எப்படிங்க...

    கல்யாணமாகி அஞ்சு வருஷ பொழுது ஓடி போச்சு. நல்ல வேலை. நல்ல சம்பாத்தியம் இருந்தும் என்ன பிரயோசனம் சங்கர். குழந்தை செல்வம் இல்லாத வீடு ஒரு வீடா...

    நம் குடும்பத்துக்கு வாரிசே இல்லாமல் போயிடுமோன்னு கவலையாக இருக்கு.

    கருவேப்பிலை கொத்து மாதிரி, ஒரே பிள்ளை நீ பிறந்தே... உனக்கு அந்த பிராப்தம் கூட இல்லாமல் போச்சே...

    சாந்தியும், நீயும் கலந்து பேசி... உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணினால்...

    "வேண்டாம் சாந்தி... அதை ஞாபகப்படுத்தி வருத்தப்படாதே, அம்மா அந்த காலத்து மனுஷி... குறை யாருக்கிட்டே இருக்குன்னு அவங்களுக்கு எப்படி தெரியும்... அப்படியே குழந்தைக்காக இன்னொரு கல்யாணம்ங்கிறது. எப்படி சாத்தியமாகும்.

    உனக்கு நானும், எனக்கு நீயுமாக வாழ்ந்துட்டு போவோம்.

    குழந்தைக்காக என் வாழ்க்கையில் இன்னொருத்தி வரவேண்டாம். எனக்கு நீ போதும் சாந்தி."

    கண்ணீருடன் கணவனை தழுவுகிறாள் சாந்தி.

    கோவிலில் சாமி கும்பிட்டு, சாந்தியுடன் புவனா வெளியே வர,

    கவின் ஓடாதே நில்லு

    வேகமாக சென்று அவன் கையை பிடிக்கிறாள் சாந்தி.

    ஆன்ட்டி... என் கையை விடுங்க.

    எவ்வளவு ட்ராபிக் இருக்கு பார்த்தியா. கை பிடிச்சுட்டு தான் வரணும் செல்லம். அப்ப தான் ஆன்ட்டி உனக்கு சாக்லேட் வாங்கி தருவேன்

    சாந்தி சொல்ல, சமர்த்து பையனாக அவள் கையை கவின் பிடித்து கொள்ள,

    பாத்தியா சாந்தி. இந்த வயசிலேயே சொன்னது கேட்கணும்னா... லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கு, சிரிக்கிறாள் புவனா.

    சாந்தி... நான் ஒண்ணு சொல்லட்டுமா.

    ம்...

    நடந்தபடி சினேகிதியை பார்க்கிறாள்.

    உனக்கு கவினை பிடிக்கும் இல்லையா...

    என்ன புவனா இப்படி கேட்கிற... அவன் மேல் எவ்வளவு பிரியம் வச்சுருக்கேன் தெரியுமா? இவன் முகத்தை பார்த்து தான் என் கவலையை மறக்கிறேன்.

    குரல் நெகிழ சொல்கிறாள்.

    "உனக்கு குழந்தை ப்ராப்தம் தள்ளி போகுது. நீயும், சங்கரும் எடுத்த முயற்சிகள் எல்லாம் பலிக்கலை...

    கடவுள் விட்ட வழின்னு இருக்கீங்க. இதற்கு நான் ஒரு தீர்வு சொல்லட்டுமா"

    கண்களை மலர்த்தி பார்க்கிறாள் சாந்தி.

    "குழந்தை மேலே அன்பும், பாசமும் பாராட்டற நீ, ஏன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கக்கூடாது? வாழ்க்கையின் சந்தோஷமும், வருத்தமும் அதை நாம் ஒத்துக்கிற விதத்தில் தான் இருக்கு சாந்தி.

    இன்னைக்கு பாலைவனமாக தெரிகிற உன் வாழக்கை நாளைக்கே சோலைவனமாக மாற வாய்ப்பிருக்கு. நீயும், சங்கரும் கலந்து பேசி முடிவு எடுங்க"

    உன் பிரெண்ட் புவனா சொன்னது சரியான தீர்வு தான் சாந்தி. என் மனசிலும் ரொம்ப நாளா இந்த எண்ணம் தான் ஓடுது. பெற்றெடுத்தால் தான் பிள்ளையா? உண்மையான பிரியத்தையும், பாசத்தையும் காட்டி மனசார ஒரு குழந்தையை நம் பிள்ளையாக ஏத்துக்க முடியும் சாந்தி.

    காத்திருந்த வரைக்கும் போதும். நமக்குன்னு குழந்தை வேணும் சாந்தி. கண்ணீருடன் சொல்லும் கணவனை மனம் நெகிழ பார்க்கிறாள்.

    என்னால் இதை ஒத்துக்க முடியாது சங்கர் யாரோ பெத்த பிள்ளையை... சாதி, மதம் தெரியாத ஒரு அனாதையை எப்படி என் பேரன்னு சொல்வேன், வேண்டாம். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்ககாட்டியும் பரவாயில்லை. இப்படியொரு காரியத்தை செய்து நம் குடும்பத்துக்கு தீராத அவமானத்தை தேடி தந்துடாதே.

    அப்புறம் உன் முகத்திலே முழிக்க மாட்டேன் கோபத்துடன் சொல்கிறாள் சங்கரின் அம்மா.

    அதை கேட்கும் மனப்பான்மையில் சங்கர் இல்லை. வாழ்க்கையின் வெறுமை அவனை குழந்தையை தேட சொல்கிறது. அந்த விஷயத்தில் புவனாவும், அவள் கணவன் சுரேனும் அவர்களுக்கு உதவுகிறார்கள்.

    "சாந்தி சேவா ஆசரமத்தில் பிறந்து மூன்று மாதமே ஆன ஆண் குழந்தை இருக்காம். நல்ல குடும்பத்தை சேர்ந்த குழந்தைதான். காதலனை நம்பி அந்த பெண் கர்ப்பமாக... அவளை அவன் கைவிட்டு போக, மகளின் வாழ்க்கை இதனால் பாதிக்ககூடாதுன்னு, அந்த குழந்தையை அந்த பெண்ணின் தாய், ஆசிரமத்தில் கொடுத்துட்டாங்களாம். பெரிய பணக்கார இடம். ஏற்கனவே ஆசிரமத்திற்கு நிறைய டொனேஷன் கொடுத்திருக்காங்க. அந்த குழந்தை

    Enjoying the preview?
    Page 1 of 1