Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Palaivanathil Oru Roja
Palaivanathil Oru Roja
Palaivanathil Oru Roja
Ebook112 pages34 minutes

Palaivanathil Oru Roja

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெற்று வளர்த்து ஆளாக்கும் பெற்றவர்கள் பிள்ளைகளால் சந்தோஷப்படுகிறார்களா, துக்கப்படுகிறார்களா என்பதை பாலைவனத்தில் ஒரு ரோஜா என்ற இந்நாவல் வெளிப்படுத்துகிறது.

குறையுடன் பிறந்த மகளை, சமூகத்தில் நல்லவிதமாக உருவாக்குவது எவ்வளவு கஷ்டம்.

இக்கதையின் நாயகி ‘மதுமிதா’ அத்தகையவள்.

காலங்கள் அவள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை பாசமும், அன்பும் கலந்து சிறந்த குடும்ப கதையாக உருவாக்கி உங்கள் முன் தவழ விட்டிருக்கிறேன்.

படித்து ரசியுங்கள்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137806319
Palaivanathil Oru Roja

Read more from Parimala Rajendran

Related to Palaivanathil Oru Roja

Related ebooks

Reviews for Palaivanathil Oru Roja

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Palaivanathil Oru Roja - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    பாலைவனத்தில் ஒரு ரோஜா!

    Palaivanathil Oru Roja!

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    போர்டிகோவில் படர்ந்திருந்த முல்லைக்கொடியில் பூக்கள் மலர்ந்து, அந்த இடத்தையே தன் வாசனையால் நிரப்பியிருந்தது.

    சுகந்தமான அந்த நறுமணத்தை சுவாசித்தவளாக வாசல்படியில் உட்கார்ந்திருந்தாள் மாலதி.

    ஹால் வாசலில் மாட்டியிருந்த ஸ்கிரீன் துணி காற்றில் பறக்க, உள்ளே உட்கார்ந்து மும்முரமாக படம் வரைந்து கொண்டிருக்கும் பதினெட்டு வயது மகளைப் பார்த்தாள்.

    கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது. 'என்ன பாவம் செய்தோம். கடவுள் இப்படியொரு தண்டனையை கொடுத்து விட்டாரே!’

    தட்டையான முகம், சரிந்த நெற்றி, சிறிய மூக்கு, கண்கள் நேர்பார்வை பார்க்காமல் ஒருபுறமாக சாய்ந்தே இருக்கும். காதுகள் சற்று பெரிதாக... கோதுமை நிறத்துடன், உடல் வாளிப்பில் எந்தக் குறையுமில்லாமல் பருவ வயதின் இளமையுடன் காட்சியளித்தாள் மதுமிதா.

    மனம் கடந்து வந்த சோகங்களை நினைத்தது. வேதனை இன்னும் இரண்டு மடங்காக அதிகரித்தது.

    என் மகளின் எதிர்காலம் என்னவாகப் போகிறது. அவளுக்கான பாதைதான் என்ன? மகன், மகளுக்காக குடும்பத்தையே பிரிந்து வருஷக்கணக்காக வெளி நாட்டில் கஷ்டப்பட்டு உழைக்கும் கணவன் சங்கரை நினைக்கும் போது, உடலின் ஒவ்வொரு செல்லும் வேதனையில் துடித்தது.

    எங்கள் வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன... அன்பே உருவான அந்த நல்லவருக்கு கடவுள் கஷ்டத்தைதானே கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பகலில் கூட எங்கள் பொழுது விடியாமல், இருட்டில் தானே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

    பைக் சப்தம் கேட்க, அவசரமாக முந்தானையால் கண்களை துடைக்கிறாள்.

    கூலிங்கிளாஸை கழட்டி சட்டையில் தொங்கவிட்டபடி பைக்கில் இருந்து ஸ்டைலாக இறங்குகிறான் சரவணன்.

    ஆறடி உயரம் உயரத்துக்கு தகுந்த உடல்வாகு ஆண் பிள்ளைகளுக்கு உரிய கம்பீர அழகு அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது. படிப்பு முடிந்து இப்போதுதான் ஐ.டி. கம்பெனியில் வேலையில் சேர்ந்திருந்தான்.

    டிபன் எதுவும் செய்து வச்சுருக்கிறயா? இல்லை வழக்கம் போல உன் மகளுக்கு பிடிச்ச பிரெட்தானா?

    கேள்வியில் குதர்க்கம் தெரிந்தது.

    சரவணன் எப்போதும் இப்படித்தான்... அடுத்தவர்களை குற்றம் சொல்லியே பேசுவான்.

    பிரெட் இருக்கு உனக்கு வேணுமினா... முட்டை தடவி, தோசைக்கல்லில் போட்டு தரட்டுமா கேட்டபடி எழுந்தாள் மாலதி.

    அதானே பார்த்தேன். ஏதாவது செய்து வைத்திருந்தால்தான் அதிசயம். இனியாவது பஞ்சப்பாட்டு பாடறதை நிறுத்து. நான் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன். இன்னும் பத்து நாளில் சம்பளம் வந்துடும். அப்புறம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைதான் இந்த வீட்டில் செய்யணும். புரியுதா?

    செருப்பை கழட்டிப் போட்டவன் ஹாலில் உட்கார்ந்திருக்கும் தங்கையை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் ரூமில் நுழைந்து கதவை மூடுகிறான்.

    ***

    அம்மா... அம்மா

    நிதானமாக ஒவ்வொரு எழுத்தாக வாய் கோணி பேசும் மகளை பார்க்கிறாள்.

    என்னம்மா... மது.

    கையிலிருந்த பேப்பரை அவனை நோக்கி நீட்டுகிறாள்.

    அவளுடைய கைவண்ணத்தில் மலைத் தொடர்களும், ரோஜா தோட்டங்களும், வானில் வரிசை கட்டி பறக்கும் பறவை கூட்டங்களும் தத்ரூபமாக மின்னுகின்றன.

    ரொம்ப அழகா இருக்குடா... நல்லா வரைஞ்சிருக்கே... என் கண்ணம்மா எந்த வேலை செய்தாலும் அதில் நேர்த்தி இருக்கும்.

    அம்மா தன்னை பாராட்டுகிறாள் என்பது புரிய, மலர்ந்து சிரிக்கிறாள்.

    அண்ணாகிட்டே காட்டணும்மா.

    காட்டலாம் மது, அண்ணா இப்பத்தான் வந்திருக்கான். அப்புறமா பார்ப்பான் சரியா... விளக்கேத்தறேன்... வந்து சாமி கும்பிடு மது.

    எழுந்து மெல்ல நடந்து வரும் மகளின் கைப்பிடித்து அழைத்துப் போகிறாள் மாலதி.

    ***

    தாய், தந்தை இல்லாதவன் சங்கர்.

    தந்தையை அறியாதவன். ஆனால் தாயின் கைப்பிடித்து ஐந்து வயதில் நடந்து வந்தது மங்கலாக நினைவில் மோதிச் செல்லும்.

    அனாதை இல்லத்தில் ஆயாக்களின் பராமரிப்பில் வளர்ந்தவன்,

    யாருக்கோ பெத்து... வளர்க்க வழிதெரியாம, உன் அம்மா உன்னை இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டா...

    ஆயா, சொல்ல, மனம் வலிக்கும்.

    படிப்பும் சரியாக ஏறவில்லை. பத்தாவது தாண்டியதே பெரிய காரியம். டிரைவிங் கற்றுக் கொண்டான். அவனின் இருபத்தொரு வயதில், தொண்டு நிறுவனம் ஒன்று ஆட்டோ வாங்கி தந்து,

    சங்கர், உன் வாழ்க்கைக்கு எங்களால் முடிஞ்ச வழியை காட்டிட்டோம். இனி உன் வாழ்க்கையை நீதான் பார்த்துக்கணும் என்று கூற, இல்லத்தை விட்டு வெளியேறினான்.

    அவனுக்கு இருக்கும் ஒரே நண்பன் கேசவன்தான் உதவினான்.

    அவனுடன் பள்ளியில் படித்தவன். இவனை போல் இல்லாமல் நல்லபடியாக படித்து, இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவன்.

    அவனுக்கு அம்மா, அப்பா, தங்கை என்று அன்பான குடும்பம் இருந்தது.

    சங்கர், உன் காலில் நிற்கக்கூடிய அளவுக்கு உனக்கு திறமை இருக்கு. புண்ணியவான் உனக்கு வருமானத்திற்கு வழியும் பண்ணியிருக்கார். இதை வச்சு நீ பிழைச்சுக்கலாம் சங்கர். எங்க வீட்டு பக்கத்தில் பூக்கார கிழவி இருக்கு. அதுக்கு இருக்கிற ஒரே சொத்து ஓட்டு வீடுதான். அதில் ஒரு பகுதியை பிரிச்சு, வாடகைக்கு விட்டிருக்கு. வாடகையும் குறைச்சல்தான். இப்போதைக்கு நீ அங்கே தங்கிக்கலாம்.

    நண்பனை நன்றியுடன் பார்க்கிறான்.

    யாருப்பா... இது?

    கண்களை

    Enjoying the preview?
    Page 1 of 1