Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanam Vasapadum
Vanam Vasapadum
Vanam Vasapadum
Ebook128 pages34 minutes

Vanam Vasapadum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிறப்பால் வருவது மட்டுமல்ல உறவு. அன்பாலும், பாசத்தாலும் வருவதுதான் உறவு. அன்பு என்பது நம் மனதில் இருந்து வருவது. அது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்புடன் வாழ வேண்டும்.

மாதா, பிதா பிறகே அனைத்து உறவுகளும். கண் கண்ட தெய்வம் உன் தாய், தந்தை. அவர்களை முதியோர் இல்லத்தில் விடுவதை தவிர்க்க வேண்டும் என்பதையும், சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் மையமாக வைத்து உருவானதே இச்சிறுகதைத் தொகுப்பு. வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580137808293
Vanam Vasapadum

Read more from Parimala Rajendran

Related to Vanam Vasapadum

Related ebooks

Reviews for Vanam Vasapadum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanam Vasapadum - Parimala Rajendran

    https://www.pustaka.co.in

    வானம் வசப்படும்

    (சிறுகதைகள்)

    Vaanam Vasapadum

    (Sirukadhaigal)

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தனிமைச் சிறை

    2. வானம் வசப்படும்!

    3. விலக வேண்டிய உறவு!

    4. சில விழுதுகள்… பல வேர்கள்!

    5. எதிர்பார்ப்புகள்!

    6. எண்ணங்கள் மாறலாம்!

    7. கறார்

    8. தண்டிக்கப்படாத அநியாயங்கள்!

    9. உழைப்பு!

    10. வடிகால்!

    11. இருவரும் ஒன்றே!

    12. பேசும் தெய்வம் மாரி!

    13. புரிந்து கொள்ளும் மனம்!

    14. தந்தையர் தினம்!

    15. புதிய உறவு!

    16. உயிர் தேடும் உறவு!

    17. வாழ்க்கை!

    1. தனிமைச் சிறை

    பொழுது விடிய ஆரம்பித்துவிட்டது. பேப்பர் போடும் பையனின் சைக்கிள் மணி சப்தம்.

    அருகில் படுத்திருக்கும் தேவகியைப் பார்த்தார் சண்முகம். நல்ல உறக்கம். மெல்லிய குறட்டையொலி கேட்டது.

    பாவம் ராத்திரி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். தூங்கட்டும். சப்தமில்லாமல் மெல்ல கட்டிலிலிருந்து எழுந்து கொண்டார்.

    அடுப்படி மேடை பளிச்சென்று சுத்தமாக இருந்தது. பிரிட்ஜிலிருந்து பாலை எடுத்து ஊற்றி, அடுப்பில் வைத்து பற்ற வைத்தார். பில்டரில் டிகாஷன் இருந்தது.

    முகம், கை கால் அலம்பி வரவும் பால் பொங்கி வரவும் சரியாக இருந்தது. இரண்டு டம்ளர்களில் சர்க்கரை இல்லாத காபி கலந்து எடுத்துக்கொண்டு படுக்கையறை நோக்கி சென்றார்.

    படுக்கை காலியாக இருந்தது. தேவகி பாத்ரூமிலிருந்து முகத்தை துடைத்தபடி வந்தாள்.

    காபியின் நறுமணம் நுகர்ந்தவள், என்னங்க, காபி போட்டு எடுத்துட்டு வந்திட்டீங்களா?

    நீ நல்லா அசந்து தூங்கினே. அதான் நானே இரண்டுபேருக்கும் காபி கலந்துட்டு வந்து உன்னை எழுப்பலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே எழுந்திருச்சிட்டே.

    கணவனிடமிருந்து காபியை வாங்கிக்கொண்டாள். அவருடன் வாசலில் வந்து அமர்ந்தாள்.

    எத்தனை வயசானா என்ன? புருஷன் அன்போடு உபசரிக்கும்போது, அது மனசுக்கு அளவில்லாத சந்தோஷத்தை கொடுக்குது.

    நமக்கு கல்யாணமாகி, இந்த நாற்பது வருஷத்தில் நீ எனக்கு செய்திருக்கிற எத்தனையோ சேவைகளில் இது ஒரு துளிகூட இல்லை தேவகி. இதை போய் இவ்வளவு பெருமையாகச் சொல்ற?

    மனைவியை அன்போடு பார்த்தார்.

    நாற்பது வருட தாம்பத்யம். கை பிடித்த நாளிலிலிருந்து தன்னுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வருபவள். புன்னகை மாறாமல் எதையும் பக்குவமாக எடுத்துச் சொல்வது அவள் குணம்.

    அருமையாக மூன்று பிள்ளைகள் பிறக்க, ஏங்க, நம் குழந்தைக்கு அன்புச்செல்வன்னு பேர் வைப்போம். நம் அன்பான வாழ்க்கையின் முதல்பரிசு இவன்.

    முதல் குழந்தைப் பிறந்தபோது, விழிகள் அகல முகம் மலர தேவகி சொன்னது இன்னும் மனதில் தேனாய் இனிக்கிறது.

    அடுத்து அறிவுமதி. உங்களை மாதிரி அறிவானவனாக இருக்கணும் அதுக்குத்தான் இந்த பேர்.

    மூணாவது பெண் குழந்தை வேண்டும் என்று தேவகி ஆசையாக காத்திருக்க, அதுவும் ஆண்குழந்தையாக பிறந்தது.

    சுதாகர்னு பேர் வைச்சு சுதான்னு ஆசை தீர கூப்பிடப்போறேன். உனக்கு பெண் குழந்தை பிறக்கலைன்னு வருத்தமில்லையா, தேவகி?

    எனக்கு வரப்போற மருமகள்களை என் பெண்ணாக நினைச்சுட்டு போறேன்.

    எவ்வளவு நல்ல மனசு என் தேவகிக்கு. பூரித்துப் போனார் சண்முகம்.

    அவருடைய ஆசிரியர் உத்தியோகத்தில் கிடைத்த வருமானத்தில் கட்டுசெட்டாக குடும்பம் நடத்தி, மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து, எலி வளையானாலும் தனி வளை என்பதுபோல சின்ன வீடு கட்டி, தேவகியின் சாமர்த்தியத்தில் எந்த குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தார் சண்முகம்.

    இன்று மூன்று பிள்ளைகளும் திருமணம் முடித்து, ஆளுக்கொரு ஊரில் உத்தியோகம் பார்க்கிறார்கள்.

    ஒரு கூட்டில் வாழ்ந்த குஞ்சுகள், சிறகு முளைத்து பறந்துவிட்டன.

    இதோ திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து விட்டார்கள். இருவருக்குமான தனிமையான வாழ்க்கை. வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக, நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

    தேவகி, உனக்கு அறுபதாவது பிறந்தநாள் வருது. உன் பிள்ளைகள் சிறப்பா கொண்டாட முடிவு செய்திருக்காங்க. மூணுபேரும் குடும்பத்தோட வர்றதா சொல்லி இருக்காங்க.

    மனசு முழுவதும் தேவகிக்கு சந்தோஷம் பரவுகிறது.

    வரட்டுங்க. இந்த வீடு நிறைய எல்லாரும் இருக்கட்டும்.

    உனக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்கணும். என்ன வேணும் சொல்லு தேவகி. இவ்வளவு நாள் குடும்பத்துக்கு வேணும். குழந்தைகளுக்கு வேணும்னு நீ எதுக்குமே ஆசைபட்டதில்லை.

    இருக்கிற புடவை போதும்ங்க. அந்த காசிலே பிள்ளைகளுக்கு டிரஸ் எடுங்கன்னு சொல்வே. தேவைக்கு மேலே எதையும் எதிர்பார்க்க மாட்டே. இப்ப உனக்கு ஏதாவது வாங்கித் தரணும்னு தோணுது. என்ன வேணும் சொல்லு தேவகி.

    உங்க கையால ஒரு முழம் பூ வாங்கிக் கொடுங்க போதும் அவரைப் பார்த்து அன்புடன் சிரித்தாள் தேவகி.

    அண்ணா, அம்மாவோட பிறந்த நாளன்னைக்கு நம்முடைய இந்த முடிவை சொல்லணும். கேட்டு ரெண்டுபேரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க சுதா சொன்னான்.

    "ஆமாம் சுதாகர். நாம மூணுபேரும் இப்ப நல்லா சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கோம். நம்மை கஷ்டப்பட்டு ஆளாக்கினவங்க அவங்களுக்காக எதையும் செய்துகிட்டதில்லை. அவங்க வருமானத்தில் சிக்கனமாக இருந்து, நம்மை எல்லாம் நல்லபடியாக படிக்க வச்சாங்க.

    இனி இருக்கிற காலங்கள் அவங்க வசதியாக வாழணும். பத்தாயிரம் என்பது பெரிய தொகைதான். ஆனா, இதை பெத்தவங்களுக்கு செய்றோம்னு மூணுபேரும் மனசார கொடுக்கணும்." அன்புச் செல்வன் சொன்னான்.

    மூணுபேரும் பத்தாயிரம் கொடுத்தா, அவங்களுக்கு மாசாமாசம் முப்பதாயிரம் கிடைக்கும். அப்பா பென்ஷன் அவங்க குடும்ப நடத்த போதுமானது. இனியாவது கையிலிருக்கிற தாராளமான பணத்தை வச்சு, பிரியப்படறதை சாப்பிட்டு, போக வேண்டிய இடங்களுக்கு போய் சந்தோஷமா சுத்தி பார்த்து, பிடிச்சதை வாங்கி அனுபவிச்சு சந்தோஷமாக இருக்கட்டும் என்றான் அறிவுமதி.

    ஆமாம் அறிவு. மாசம் பிறந்தா மூணுபேரும் பணத்தை கரெக்டா அனுப்பி வச்சுடுவோம். இனியாவது அவங்க நிம்மதியா, சந்தோஷமா இருக்கட்டும்.

    ***

    மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அம்மாவுக்கு பட்டுப்புடவை, அப்பாவுக்கு பட்டு வேஷ்டி என துணிமணிகள், பலகாரங்கள் என கைகொள்ளாமல் வாங்கிகொண்டு மூவரும் வந்தார்கள்.

    மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகளை பார்த்து இருவரும் மனம் பூரித்து போனார்கள்.

    மூணுபேரும் குடும்பத்தோடு சேர்ந்து வந்ததே, எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? எங்க பிள்ளைகள் நிறைவாக வாழறதை பார்க்கிறதைவிட, வேறென்ன கொடுப்பினை வேண்டும். உள்ளம் மகிழ்ந்து கூறினாள் தேவகி.

    இரண்டு நாட்கள் பாட்டும், சிரிப்புமாக பொழுதுகள் சந்தோஷமாக கழிந்தன.

    தேவகியின் பிறந்த நாளுக்கு பெரிதாக கேக் ஆர்டர் பண்ணி,

    Enjoying the preview?
    Page 1 of 1