Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kann Pesum Vaarthaigal!
Kann Pesum Vaarthaigal!
Kann Pesum Vaarthaigal!
Ebook119 pages29 minutes

Kann Pesum Vaarthaigal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செல்வத்திற்கு எந்த குறையும் இல்லாமல் சொகுசான வாழ்க்கை வாழ்ந்தாலும், குழந்தை செல்வம் இல்லாமல் வருத்தத்துடன் வாழும் கௌதம், யாமினி. அவர்களுக்கு வாடகை தாயாக கிடைத்தவள் யார்? கௌதமை காதலித்த வெண்ணிலாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த துயரம் என்ன? கண் பேசிய வார்த்தைகளை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateOct 8, 2022
ISBN6580137809102
Kann Pesum Vaarthaigal!

Read more from Parimala Rajendran

Related to Kann Pesum Vaarthaigal!

Related ebooks

Reviews for Kann Pesum Vaarthaigal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kann Pesum Vaarthaigal! - Parimala Rajendran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண் பேசும் வார்த்தைகள்!

    Kann Pesum Vaarthaigal!

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    விடியற்காலை நேரம். இன்னும் இருட்டு விலகவில்லை. காலை நேர தென்றல் காற்று அவனை தழுவி செல்ல, கைகளை முன்புறம் கட்டியபடி பால்கனியில் நின்றான் கௌதம்.

    காற்றில் திரை சீலை ஒதுங்க, இழுத்து போர்த்தியபடி கட்டிலில் தூங்கும் யாமினி தெரிந்தாள்.

    திருமணமாகி மூன்று வருடங்கள்.

    எந்தவித மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கை. அவன் மனம் அறிந்து நடந்து கொள்ளும் யாமினி.

    செல்வத்திற்கு எந்த குறையும் இல்லை. பங்களா போன்ற வீடு. வேலையாட்கள், சொகுசான வாழ்க்கை. ஆனால் குழந்தை செல்வம் மட்டுமே... வெகுதூரத்தில்...

    அதற்கான முயற்சியில் ஓடி... ஓடி... களைத்து விட்டார்கள். சமயத்தில் இப்படிதான். தூக்கம் வராத இரவுகள் எத்தனையோ...

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

    எவ்வளவு சத்தியமான வார்த்தை.

    அவன் வாழ்க்கையில் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. திருமணத்திற்கு முன் அப்பாவின் ஸ்டீல் பாக்டரியை கவனித்தவன், ‘பிஸினஸ் மேனேஸ்மெண்ட்’ அமெரிக்காவில் ஒரு வருடம் படித்து... திரும்ப வந்து... அவன் கனவுகள் எல்லாம் தவிடு பொடியாகி...

    காதலியின் நினைவுகளோடு, அவளை கைபிடிக்கும் கனவோடு அமெரிக்காவிலிருந்து வந்தவன்...

    அவனுடைய மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தவள், இன்னொருவனை கைபிடித்து சென்று விட்டாள்... என்று கேள்விப்பட்டபோது நொறுங்கிப் போனான்.

    அப்பாவின் அருகாமை... அவருடைய அன்பான ஆறுதலான வார்த்தைகள்... அவருக்காக தன்னை மாற்றிக்கொண்டான்.

    ஒரு வருடத்திற்கு பின், அவர் ஏற்படுத்தித் தந்த வாழ்க்கைதான் யாமினி.

    காதலின் வலியை, மனதிற்குள் மறைத்தான். தன்னை நம்பி கைபிடித்த யாமினிக்கு, நல்லதொரு கணவனாக நடந்து கொண்டான்.

    அம்மா இல்லாமல், தனக்காக வாழ்ந்த அப்பாவை கடைசி வரையில் தன்னோடு வைத்து பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தவனின் எண்ணமும் ஈடேறவில்லை.

    அவனுக்கு ஒரு வாழ்க்கை தர காத்திருந்தவர் போல, திருமணமாகி ஆறு மாதத்தில், உலகை விட்டு பிரிந்து போனார்.

    இப்போது அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அடையாளமாக... அவனை சந்தோஷப்படுத்த... அப்பா என்று அழைக்க ஒரு ஜீவன்... இன்னும் வரவில்லை.

    யாமினி தன் வருத்தத்தை மனதோடு வைத்துக் கொண்டு, அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.

    இப்ப தான் நாம் டீரிட்மெண்ட் ஆரம்பிச்சுட்டோமே... கட்டாயம் நல்லது நடக்கும்... கடவுள் நமக்கான குழந்தையை சீக்கிரம் நம் கையில் தருவார்.

    அன்போடு சொல்லும் யாமினியை, கனிவு தெரிய பார்ப்பான் கௌதம்.

    ***

    "என்னங்க மணி அஞ்சு கூட ஆகலை... அதுக்குள்ள எழுந்தாச்சா."

    திரைசீலையை ஒதுக்கி பால்கனிக்கு வந்தாள் யாமினி.

    எனக்கு தூக்கம் கலைஞ்சுடுச்சு யாமினி. நீ ஏன் எழுந்தே. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கக் கூடாதா...

    இல்லைங்க... எனக்கும் முழிப்பு வந்தாச்சு. போய் சூடாக டீ போட்டு எடுத்துட்டு வரட்டுமா.

    எதுக்கு யாமினி கஷ்டப்படறே... சமையல்காரம்மா ஆறு மணிக்கு வந்துடுவாங்க... அவங்க வரட்டும்.

    இருக்கட்டுங்க. நீங்க ரொம்ப நேரமாக முழிச்சுட்டிருக்கிங்க போலிருக்கு. கண்களெல்லாம் சிவந்திருக்கு. இருங்க, சூடாக இரண்டு பேருக்கும் ‘டீ’ கலந்து எடுத்துட்டு வரேன்.

    அவன் சொல்வதை கேட்காமல், பெட்ரூம் கதவை திறந்து, படி இறங்குகிறாள்.

    ***

    பாக்டரிக்கு கிளம்புகிறான் கௌதம்.

    கதவை திறந்து உள்ளே வந்தவள், புன்னகையுடன் அவனை பார்க்கிறாள்.

    என்ன யாமினி, புதுசா பார்க்கிற மாதிரி அப்படி பார்க்கிறே.

    மூணு வருஷத்துக்கு முன்னால, கல்யாணத்தப்ப எப்படி இருந்தீங்களோ கொஞ்சமும் மாறாமல் அப்படியே, ‘ஹேண்ட்சம்’மா இருக்கீங்க.

    உங்க உயரம், துருதுருக்கும் கண்கள்... கோதுமை நிறம், உங்களுக்கு அழகு சேர்க்கும் தாடியும், அழகான மீசையும்... பெருமையா இருக்குங்க... என் புருஷன் எவ்வளவு அழகுன்னு..."

    வரிசையான பற்கள் தெரிய வாய்விட்டு சிரித்தவள்.

    எல்லாரும் பெண்டாட்டியை தான் வர்ணிப்பாங்க. நீ என்னடான்னா... என்னை வர்ணிக்கரே... அப்படி தானே...

    என் புருஷனோட அழகை ரசிக்கிறேன்... சொன்னவள், இந்த ப்ளாக் பேண்ட்டும், ஒய்ட் ஷர்ட்டும் உங்களுக்கு நல்லாயிருக்கு. உங்களை இன்னும் கம்பீரமாக காட்டுது..."

    போதும் யாமினி... காலையிலேயே நிறைய ‘ஐஸ்’ வைக்காதே... சாயந்திரம் எங்கே போகணும்னு சொல்லு, கட்டாயம் கூட்டிட்டு போறேன்.

    குறும்போடு சொல்ல, அவன் முதுகில் செல்லமாக தட்டியவள், கீழே வாங்க ‘டிபன்’ சாப்பிடலாம். எல்லாம் ரெடியா இருக்கு.

    அவளுடன் படிகளில் இறங்கியவன், நாளைக்கு டாக்டர் அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கில்லையா யாமினி. கௌதம் கேட்க, ஆமாங்க.

    இருவரிடமிருந்த சிரிப்பு மறைகிறது.

    ***

    அடுத்த மாதம் பிஸினஸ் விஷயமாக பெங்களூர் போக வேண்டிய வேலை இருக்கிறது. எப்படியும் ஒரு வாரம், பத்து நாள் ஆகிவிடும்.

    யாமினியை அழைத்துப் போவதா... வேண்டாமா... தனியாக பொழுதுக்கும் ஹோட்டலில் என்ன செய்வாள்.

    சரி அவள் விருப்பத்திற்கே விட்டுவிடுவோம்.

    வேலையில் பிஸியாக.

    ரூம் கதவை மெல்ல தட்டி உள்ளே வந்த அட்டெண்ட்டர், சார், டீ கொண்டு வந்திருக்காங்க. உங்களுக்கும் எடுத்துட்டு வரட்டுமா.

    வேண்டாம் ஒர்க்கர்ஸ் குடிக்கட்டும். நீ போய் வேலையை பாரு.

    அவன் வெளியேற, அடிமனதில் ஆழமாக பதிந்த நினைவுகள் மெல்ல வெளிவருகிறது.

    இதேபோல்தான், பல வருடங்களுக்கு முன் ஒருநாள்... சார், நம்ப பாக்டரிக்கு ‘டீ’ சப்ளை பண்றவங்க உங்களை பார்த்து பேசணும்னு வெளியே வெயிட் பண்றாங்க.

    "எதுக்கு என்னை பார்க்கணும். மானேஜர்கிட்டே பேசிக்கச் சொல்லு. மாசாமாசம் பணமெல்லாம் கரெக்டா வருதா இல்லையா... அதுவுமில்லாமல், இதெல்லாம் அப்பா ‘டீல்’ பண்ண வேண்டிய விஷயம். அவர் ஊரில் இல்லாததால், படிச்சு முடிச்சு வீட்டில் இருக்க பிடிக்காமல் நான்

    Enjoying the preview?
    Page 1 of 1