Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaayam Patta Idhayam
Kaayam Patta Idhayam
Kaayam Patta Idhayam
Ebook121 pages29 minutes

Kaayam Patta Idhayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவன் இறந்த பின் தன் இரு பிள்ளைகளையும் வளர்த்து படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருகிறாள். ஆனால் அந்தப் பிள்ளைகள் வயதான தான் தன் தாயை நிம்மதியாக வாழ வைத்தார்களா... அவர்கள் எதிர்பார்ப்பு என்ன... மற்றவர்களுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்ட அந்த தாய்... வாழ்வின் கடைசி நாட்களை எப்படி எதிர்கொண்டால் என்பதை சொல்லும் குடும்பபாங்கான கதை தான் காயம்பட்ட இதயம் என்ற நாவல் முதுமையில் பெற்றோர்களின் நிலைமையை நிச்சயம் படிப்பவர்கள் உள்ளத்தை பாதிக்கும்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580137806139
Kaayam Patta Idhayam

Read more from Parimala Rajendran

Related to Kaayam Patta Idhayam

Related ebooks

Reviews for Kaayam Patta Idhayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaayam Patta Idhayam - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    காயம்பட்ட இதயம்

    Kaayam Patta Idhayam

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ஸ்ரீநிவாசா கோவிந்தா, ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா... பக்தி பாடல் ஒலிபரப்பாக,

    காலை நேரத்தில் வெங்கடேசனின் பாட்டு, அலைபாயும் மனதிற்கு ஆறுதலை தந்தது.

    தனிமை என்பது எத்தனை கொடுமை, அதுவும் அறுபதை தொடும் இந்த வயதில்...

    ராஜலஷ்மியின் கண்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கணவனின் படத்தை பார்த்தது.

    "ராஜி எத்தனை முறை வந்தாலும், இந்த திருப்பதி மட்டும் உனக்கு அலுக்கவே இல்லையே...

    எத்தனை சிரமப்பட்டாலும், ஏழுமலையானை தரிசனம் பண்ணனும்னு ஓடோடி வந்துடறியே.

    எனக்கென்னமோ இந்த கூட்டத்தை பார்த்தாலே பயந்து வருது. இதற்கு சென்னையில் தேவஸ்தான பெருமாளை நிம்மதியா தரிசனம் பண்ணிடலாம்."

    தங்க கோபுரத்தை பார்த்து நூறாவது முறையாக கையெடுத்து கும்பிட்டவள்,

    "பூர்வ ஜென்ம பந்தம்னு சொல்வாங்களே... அதுபோல எனக்கும் இந்த திருமலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கணும்ங்க. இதற்கு முந்தைய ஜென்மத்தில், நான் இந்த திருமலையில் இறைவன் பணி செய்து வாழ்ந்திருக்கலாம். அதனால் தானோ என்னமோ இந்த திருமலைக்கு வந்தாலே, இனம் புரியாத பரவசம்.

    அந்த பெருமாளை தரிசனம் பண்ணனும்னு கூட இல்லை... இப்படி படிக்கட்டில் உட்கார்ந்து... கோபுரத்தை பார்த்துட்டு இருந்தாலே போதும். மனசு நிறைஞ்சு போகுது."

    காலிங்பெல் ஒலிக்க,

    வாசலுக்கு வருகிறாள்.

    புன்னகையுடன் நிற்கிறாள் வசந்தி.

    டிகாஷன் மணம் வாசல் வரை வருது. காபி போட்டாச்சாம்மா கேட்டபடி உள்ளே வந்தவள்,

    துடைக்கும் துணியை எடுத்து வந்து ஹாலில் உள்ள சோபா, டேபிள் என்று துடைக்க தொடங்குகிறாள்.

    நீ வரட்டும்னுதான் இருந்தேன் வசந்தி, என் ஒருத்திக்கா காபி கலக்க இஷ்டமில்லை.

    "என்னம்மா செய்யறது. கடவுள் உன் தலையில் அப்படியொரு எழுத்தை எழுதி வச்சுட்டாரே.

    மணி, மணியாய் இரண்டு பிள்ளைகள்... சகல வசதிகளோடு இருந்தும், உன் பிழைப்பை நீ தானே பார்க்க வேண்டியிருக்கு."

    "வேண்டாம் வசந்தி, காலை நேரம். இப்ப தான் பொழுது விடிஞ்சுருக்கு. தேவையில்லாமல் உடம்பையும், மனசையும் கெடுத்துக்க கூடாது.

    நான் காபி கலந்து எடுத்துட்டு வரேன். நீ அதுக்குள் துவைக்கும் துணிகளை சோப்பு தூளில் நனைச்சு வச்சுட்டு வா வசந்தி"

    டியூஷன் படிக்கும் பிள்ளைகள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க. அதனால் ஹாலை சுத்தம் பண்றேன்.

    அதுவும் சரிதான். நீ உன் வேலையை பாரு. இப்போதைக்கு ராஜலஷ்சுமிக்கு இருக்கும் ஒரே துணை வசந்தி தான். வேலைக்காரி மாதிரி இல்லாமல், உரிமையுடன் பழகுவாள். நாலு வீடு வேலை பார்த்தாலும், அதிகம் இருப்பது இங்கு தான்.

    ஸ்கூல் டீச்சராக வேலை பார்த்த ராஜலஷ்மி. கணவரின் மறைவிற்கு பின், வீட்டிலேயே டியூஷன் எடுக்க ஆரம்பித்தாள்."

    கணவரின் சம்பாத்தியத்தில், இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து, ஆளாக்கி திருமணமும் செய்து வைத்து... மிஞ்சியது. குடியிருக்கும் இந்த வீடு மட்டும் தான்.

    மாடியை வாடகைக்கு விட்டு, அதில் வரும் வருமானத்திலும், டியூஷன் மூலம் கிடைக்கும் பணத்திலும், அவள் வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்தது.

    பெரியவன் சிவா. சென்னையில் தான் இருக்கிறான். அண்ணா நகரில் வீடு. ஐ.டி. கம்பெனியில் வேலை. ஒரே மகள் தன்யாவை அவனுக்கு கல்யாணம் செய்து வைத்த மாமனார், மாமியார், இப்போது அவனுடன் தான் இருக்கிறார்கள்.

    ரிடையர்ட் ஆன பணத்தில் வீடு வாங்கி, அதை மருமகள் பெயரில் எழுதி வைக்க, உச்சி குளிர்ந்து போனான் சிவா.

    நீங்க ஏன் மாமா தனியா இருக்கணும். எங்களோடு வந்து இருங்க. இவ்வளவு பெரிய வீட்டை வாங்கி தந்துருக்கீங்க, உங்களுக்கு இடமா இல்லை.

    இந்த அழைப்பு அவர்களுக்கு திருப்தி தர, தன்யா அப்பா, அம்மாவை தன்னுடன் வைத்துக் கொண்டாள்.

    அப்போது ராஜலஷ்மியின் கணவர் இருந்தார்.

    பார்த்தியா ராஜி, அப்பா, அம்மாவை தன்னோடு வச்சுக்கணும்னு தோணலை. மாமனார், மாமியாரை கொண்டு வந்து வச்சுக்கிட்டான். நாமும் இங்கே தனியாகதானே இருக்கே

    வேண்டாங்க... இப்படியெல்லாம் யோசிக்கும் போது உறவுகளுக்குள் மனகசப்பு தான் வளரும். தன்யா அவங்களுக்கு ஒரே பெண் அவங்களும் எங்கே தான் போவாங்க. பேரன், பேத்தின்னு சந்தோஷமாக இருக்கட்டும்

    உன்னால மட்டும் தான் இப்படி பேச முடியும் ராஜி. எனக்கென்னவோ பெத்த பிள்ளைகள் நம்மை ஒதுக்கிறாங்களோன்னு தோணுது. சின்னவன் சரவணன் கோயமுத்தூரில் இருக்கான். இந்த பக்கம் வர்றது கூட இல்லை.

    பதில் எதுவும் சொல்லாமல், எழுந்தவள் சி.டி.யை போடுகிறாள்.

    ஏழுமலை வாசா, என்னை ஆளும் ஸ்ரீநிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீ வெங்கடேசா...

    மனசை அலைபாய விடாம, பாட்டு கேட்டுட்டு இருங்க. நான் போய் சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்

    இப்படிதான் பிள்ளைகளை நினைத்து மனம் வருத்தப்படும் போதெல்லாம் முடிந்தவரை ஆறுதல் சொல்வாள்.

    புண்ணியும் செய்த ஆத்மா... கடவுள் சீக்கிரமே அவரை தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டார்.

    இதோ இனி அவள் காலம் தான் எப்படி போக போகிறதோ தெரியவில்லை.

    ***

    ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் எடுத்து, அக்கறையுடன் சொல்லி தந்தவள், அவர்கள் விடைபெற்று கிளம்ப உள்ளே வருகிறாள்.

    நானும் வேலையெல்லாம் முடிச்சுட்டேன்மா. சட்னிக்கு வெங்காயம், தக்காளி நறுக்கி வச்சுருக்கேன். அடுப்பில் இட்லி ஊத்தி வச்சுருக்கேன்

    எதுக்கு மாலதி, இட்டி பொடி இருக்கு.

    "அதெப்படி ஒரு நாள் பார்த்தாற் போல பொடி வச்சு சாப்பிட முடியுமா... இரண்டு மிளகாய் வற்றல் வைத்து, ஒரு கல் உப்பு போட்டு வெங்காயம், தக்காளியை எண்ணெயில் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1