Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhkkai Enbathu Varam
Vazhkkai Enbathu Varam
Vazhkkai Enbathu Varam
Ebook103 pages38 minutes

Vazhkkai Enbathu Varam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒரு காரணத்திற்காக படைக்கப்பட்டுள்ளன. அப்படி படைக்கப்பட்ட நாம், நம்மைச் சார்ந்து வாழும் பிற உயிரினங்களின் வாழ்வியல் நிலைகளையும், வாழும் காரணிகளையும் தெரிந்து கொண்டு அனுசரித்து வாழ வேண்டும். ஒவ்வொருத்தர் வாழ்விலும் துன்பம், துயரம், கடன்சுமை, நோய் - நொடிகள், புரிந்துகொள்ளாமல் பிரிந்து போதல், வறுமை, கோபம், வன்மம், தாபம் இன்னும் சில காரணங்களால் நம்முடைய வாழ்வை அழித்துக்கொண்டும் நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியின்றி வாழச் செய்கிறோம். ஏன் இந்த நிலை? இவற்றை போக்கி நமக்கு கிடைத்த வாழ்க்கை எவ்வாறு, எவ்வகை புரிதலோடு வாழ்ந்து இவ்வுலக வாழ்வை நிறைவு செய்ய வேண்டும்? என்பதை இச்சிறுகதைத் தொகுப்பில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கதையிலும் தெரிந்துகொள்ளலாம். "வாழ்க்கையை சாபமாக நினைக்காமல் வரமாக நினைத்து" வாழ பழகிக்கொள்ள இச்சிறுகதையை வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580137808291
Vazhkkai Enbathu Varam

Read more from Parimala Rajendran

Related to Vazhkkai Enbathu Varam

Related ebooks

Reviews for Vazhkkai Enbathu Varam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhkkai Enbathu Varam - Parimala Rajendran

    https://www.pustaka.co.in

    வாழ்க்கை என்பது வரம்

    (சிறுகதைகள்)

    Vazhkkai Enbathu Varam

    (Sirukadhaigal)

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. குடைக்குள் மழை

    2. மூக்கணாங்கயிறு

    3. மற... மற... மனமே

    4. பந்தயக் குதிரை

    5. அந்தஸ்து

    6. இடைவெளி

    7. வாழ நினைத்தால்...

    8. மாலை சூட வா!

    9. மீன் குழம்பு

    10. சொர்க்கமும், நரகமும்!

    11. ஆசை

    12. உறவுகள்

    13. விலகாத உறவுகள்

    14. நன்றி சொல்ல வந்தேன்!

    15. கொலுசு

    16. வீரத்தை கடந்த வீரம்!

    17. வாழ்க்கை என்பது வரம்!

    1.குடைக்குள் மழை

    யாமினி... இன்னைக்கு பாக்கி இருந்த ‘ஆபீஸ் ஒர்க்’கை வீட்ல வச்சு பார்த்து முடிச்சுடலாம்னு இருந்தேன். உன்னால எல்லாம் கெட்டுப் போச்சு.

    ஏன்... அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?

    உன் ‘பிரெண்ட்’ கல்யாணத்துக்கு வரல. எனக்கு யாரையும் தெரியாது. நீ மட்டும் போயிட்டு வான்னு சொன்னேன். கேட்டியா? அங்கு வந்ததில் இன்னைய பொழுது ‘வேஸ்ட்டா’யிடுச்சு. சும்மா பேசக்கூட ஆள் இல்லாம உட்கார்ந்திருந்தேன்.

    அதுக்கு என்ன செய்ய முடியும்? கல்யாணத்துக்கு ரெண்டுபேரும் போனாத்தானே மரியாதையா இருக்கும்? எனக்காக வந்தீங்க... இதுகூட செய்யாட்டி அப்புறம் எப்படி?

    யாமினிக்கு கணவன் மீது சற்று கோபம் வந்தது.

    போன வாரமும் இப்படித்தான்... சினிமாவுக்கு போய்விட்டு வந்த மறுநாள் அவளிடம் புலம்பிக்கொண்டிருந்தான்.

    சினிமாவா அது! சரியான தலைவலி. எனக்குப் பிடிக்கல. ‘இந்தப் படம் ஒரே சண்டையா... நல்லா இருக்காது’ன்னு சொன்னேன். கேட்டியா?

    ‘நல்லா இல்லாமலா காசைப் போட்டு படம் எடுக்கிறாங்க? சும்மா பொழுதுபோக்குதானே! வாங்க... போலாம்’னு அழைச்சிட்டுப் போனே. ஞாயிற்றுக்கிழமை சாய்த்திர பொழுது வீணாச்சு. அதுக்கு ‘பீச்’சுக்காவது காத்தாட போயிட்டு, அதிக செலவும் இல்லாம வந்திருக்கலாம்.

    எதிலும் தன்னோடு ஒத்துப் போகாமல் முரணாக இருக்கும் கணவனை நினைக்க... யாமினிக்கு மனதில் எரிச்சல் தோன்றியது. திருமணமாகி இரண்டு ஆண்டாகிறது. இன்னும் அவனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

    ***

    "யாமினி, நேத்து ஸ்வேதாகிட்ட பேசினேன். குரல்ல சுரத்தே இல்ல. கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம்தான் ஆகுது. எப்படி இருக்காளோன்னு மனசு கலக்கமாக இருக்கு. உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. இல்லாட்டி ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வந்துடுவேன். முடிஞ்சா நீ ரெண்டு நாள் அவளோடு இருந்துட்டு, எப்படி இருக்காள்ன்னு பார்த்துட்டு வாயேன்."

    அம்மா போனில் அன்போடு சொல்ல... அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய கணவனிடம் வேண்டா வெறுப்பாக விஷயத்தைக் காதில் போட்டாள்.

    போய்ட்டு வா யாமினி. உங்க அம்மா பயப்படுறதிலேயும் நியாயம் இருக்கு. உன் தங்கையோடு ரெண்டுநாள் என்ன... ஒரு வாரம் இருந்துட்டு வா. நானும் உன்னோட தொந்தரவு இல்லாம நிம்மதியா இருப்பேன் - சிரித்தபடி சொன்ன கணவனை கசப்போடு பார்த்தாள். கடுகடு முகத்தோடு முறைத்தாள்.

    ***

    "அக்கா... நல்லா இருக்கியா? அத்தானையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே?"

    அன்போடு வரவேற்ற தங்கையையும், அடுத்து அவளுடைய கணவனையும் பார்த்து புன்னகைத்தாள்.

    உன் ஞாபகமாகவே இருந்தது ஸ்வேதா. அதான் உன்னோடு ரெண்டு நாள் தங்கி இருந்துட்டுப் போலாம்னு வந்தேன்.

    அம்மா பயந்ததுபோல் ஒன்றுமில்லை. ஸ்வேதாவின் மலர்ச்சியான முகமும், உபசரித்த விதமும் அவள் சந்தோஷமாக இருப்பது நன்றாகவே தெரிந்தது.

    ஸ்வேதாவின் கணவன் கொஞ்சம் ‘ரிசர்வ்டு டைப்’பாக தெரிந்தான். அதிகம் பேசாமல், ‘தான் உண்டு... தன் வேலை உண்டு’ என இருந்தான் ஸ்வேதாவிடமும் அளந்தே பேசினான். அலுவல் முடித்து வந்தால் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, மீதி நேரம் ‘லேப்டாப்’பைத் திறந்து வைத்து உட்கார்ந்துவிடுகிறான்.

    ஸ்வேதா ‘டி.வி.’ பார்த்துக்கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ, யாமினியுடன் பேசிக்கொண்டோ பொழுது போக்கினாள்.

    என்ன ஸ்வேதா... கல்யாணமாகி இந்த ஆறு மாசத்துல எங்கெங்கு போனே? எத்தனை சினிமா பார்த்தே?

    அவருக்கு சினிமா பார்க்க பிடிக்காதுக்கா. மூணு படம்தான் பார்த்தோம். அதிகமா பூங்கா, கோவில்ன்னு போயிட்டு வருவோம்.

    அவருக்குப் பிடிக்காட்டி என்ன... உனக்கு சினிமான்னா பிடிக்குமே! அவர் கூட்டிட்டுப் போக வேண்டியதுதானே?

    இல்லக்கா... நிறைய சினிமா ‘சி.டி.’ வாங்கி போட்டிருக்காரு. நான் வீட்லயே போட்டுப் பார்ப்பேன்.

    அக்காவிடம் புன்னகைத்தாள்.

    ***

    அன்று இரவு சாப்பிட்டபின், ஸ்வேதாவின் கணவன் வழக்கம்போல் கம்ப்யூட்டரில் மூழ்கிவிட... ஹாலில் தங்கையுடன் அமர்ந்திருந்தாள் யாமினி.

    நாளைக்கு ஊருக்கு கிளம்பறேன்டி என்றாள்.

    என்னக்கா... இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போலாமே?

    உன்னைப் பார்க்கணும்னு புறப்பட்டு வந்துட்டேன். நான் இல்லாம ரெண்டு நாளா அவர் சிரமப்பட்டிருப்பாரு. நீயும், வீட்டுக்காரரும் எங்க ஊருக்கு வாங்க.

    பார்ப்போம். அவருக்கு ‘லீவு’ கிடைக்கும்போது நிச்சயம் வருவோம்.

    முகமலர்ச்சியுடன் சொல்லிய தங்கையின் கைகளை அன்புடன் பற்றியவள், கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்:

    ஸ்வேதா, நீ சந்தோஷமா இருக்கியாம்மா?

    என்னக்கா இப்படி கேட்கற... உனக்கென்ன சந்தேகம்?

    "இல்ல... உன் கணவர் சகஜமா பழகற மாதிரி தெரியல.

    Enjoying the preview?
    Page 1 of 1