Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2
Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2
Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2
Ebook129 pages50 minutes

Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இவரது முதல் கதை 1958-ம் வருடம் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ பத்திரிகையில் பிரசுரமானது. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் 37 பிரபல எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாசகர் ரசனையில் இவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூல் வாசகர் மத்தியில் பேசப்படும் ஒரு நூலாகத் திகழ்கிறது. முதலில் நான் ஒரு வாசகன். அந்த வாசக உள்ளம் தான் என்னையும் எழுத வைத்தது என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் ரசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இணையத்தில் சக வாசகர்களுடன் பதிவெழுத்தாளராய் கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக தொடர்பில் இருப்பவர். நல்ல பல நண்பர்களைப் பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை, ஆய்வுகள் என்று எழுத்தின் சகல பரிமாணங்களிலும் வலம் வர தளராத ஊக்கம் கொண்டவர். சொந்தத்தில் பத்திரிகை, பதிப்பகம் என்றெல்லாம் எழுத்து சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் கொண்டவர்.

ஜீவி தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் 74 வயது இளைஞர். ஜி.வெங்கட்ராமன், ‘ஜீவி’யானது எழுதுவற்காகக் கொண்ட பெயர். தொலைபேசித் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாழ்க்கையின் சகல போக்குகளிலும் ரசனை கொண்டவர். எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்பதான சமதர்ம சமுதாயத்திற்காக கனவு காண்பவர். அந்தக் கனவின் நிதர்சனத்திற்கு தன் எழுத்து என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவர்.

Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580118702097
Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2

Read more from Jeevee

Related to Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2

Related ebooks

Reviews for Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2 - Jeevee

    http://www.pustaka.co.in

    காதலினால் கதையுமுண்டாம் - சிறுகதைத் தொகுப்பு-2

    Kaadhalinal Kathaiyumundaam - Sirukathai Thoguppu-2

    Author:

    ஜீவி

    Jeevee

    For more books
    http://www.pustaka.co.in/home/author/jeevee

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.ஞானம்

    2.ங்கா...

    3.சந்திப்போம்; பிரிவோம்; மீண்டும் சந்திப்போம்

    4.அப்பா.... அப்பா

    5.வரம்

    6.சாபம்

    7.நட்பெனப்படுவது யாதெனில்...

    8.மகாராஜன் உலகை ஆளலாம்

    9.மறம்

    10.காதலினால் கதையுமுண்டாம்

    1.ஞானம்

    இன்று ஆபிஸில் இன்ஸ்பெக்க்ஷன்.

    மேலதிகாரிகளின் குடைச்சலில் சுந்தரேசன் காலையிலிருந்தே குழம்பிப் போயிருந்தான். வீடு திரும்பியதும், அங்கிருந்த ரகளையில் பொறுமையையே இழந்து விட்டவன்,மனைவியைப் பார்த்துக் கர்ஜித்தான். உனக்கு எத்தனை தடவை சொல்றது?... ஏன் இப்படிஎதற்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்ணிண்டிருக்கே?... அம்மாவின் வழக்கம் அதுவென்றால், அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுவதுதானே?

    அதெப்படி விட்டு விடுவதாம்? என்று அவன் மனைவி ராகினி அவனை நோக்கிச் சீறினாள். ஊரிலில்லாத வழக்கமாக இருக்கிறது உங்கள் அம்மாவின் வழக்கம். அது தப்பு என்று தெரிந்தும் பேசாமல் இருந்தால், அம்மன் பூஜை செய்தும் என்ன பிரயோஜனம்?"

    இவள் சொல்லிக் கொடுத்துத்தான் இனிமேல் எனக்குப் பூஜை புனஸ்காரத்தைப் பத்தித் தெரியணுமாக்கும்? என்று சமையலறை நிலைப்படிப் பக்கம் அவன் அம்மா முனகுவது இவனுக்கு இங்கே கேட்டது.

    சுந்தரேசனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவன் அம்மா--மனைவி இரண்டு பேரையுமே சுட்டெரித்து விடுவது போல முறைத்தான். ச்சே! உங்க ரெண்டு பேராலுமே என் நிம்மதி கெட்டுப் போயிடுத்து! என்று ஆத்திரத்துடன் சட்டையைக் கழட்டி ஹேங்கரில் மாட்டினான்.

    என்னால் உன்னோட நிம்மதி கெட்டுப் போக வேண்டாமப்பா... பேசாமல் அவள் சொல்வதையே சரியென்று.... அம்மாவை அதற்கு மேல் பேசவிடவில்லை அவன்.அம்மா, நீ பேசாம் இருக்க மாட்டே?... எந்று அவன் அலறியதும், வீடே நிசப்தமாகிவிட்டது.

    அவன் மனைவி தோள்பட்டையில் அவனைப் பார்த்து இடித்துக் கொண்டு கிணற்றடிக்குப் போனாள். அம்மா சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

    சுந்தரேசன் 'ஸ்ஸெ'ன்று சலித்துக் கொண்டே ஈஸிச்சேரில் சாய்ந்து கொண்டான். ஃபேனை சுழலவிட்டான். பார்க்கப்போனால் ஒன்றுமில்லாத விஷயம்.... அதுவா தன்னை உணர்ச்சி வசப்படுத்தி இப்படிக் கத்த வைத்தது என்பதை நினைத்துப் பார்க்கவே அவனுக்கு வெட்கமாக இருந்தது.

    அவன் வீட்டில் நவராத்திரி கொலு வைத்திருந்தார்கள்.

    அதைப் பார்க்க அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் வந்து போன பின்பு தினமும் அம்மனுக்கு ஆரத்தி எடுப்பதா, இல்லை நவ்ராத்திரி பூஜை நாட்களெல்லாம் தொடர்ச்சியாக நடந்து முடிந்த பிறகு கடைசி நாளில் ஒரே ஆரத்தியோடு முடித்துக் கொள்வதா என்பது பற்றி இருவருக்கும் இடையே கருத்து வேற்பாடு.

    தினமும் ஆரத்தி எடுக்க வேண்டுமென்பது அவன அம்மா கட்சி.

    தினமும் ஆரத்தி கூடாது; அப்படிச் செய்தால் அம்மனை வீட்டை விட்டு அனுப்பி வைத்த மாதிரி ஆகிவிடும். ஆகையால் கடைசி நாளன்றுதான் ஆரத்தி என்பது அவன் மனைவி கருத்து.

    சுந்தரேசனின் மனைவி வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவள். ஆகையால், உங்கள் பழக்கம், எங்கள் வழக்கம் என்று இவர்கள் இருவருமே உரசிக் கொள்வதற்கு தீர்ப்பு வழங்குவதற்குள் அன்றாடம் அவனுக்குப் போதும் போதுமென்று ஆகிவிடும்.

    சுந்தரேசன் தலை நிமிர்ந்து வாசல் பக்கம் பார்த்தான்.

    அவன் தந்தை பொடிடப்பாவைத் தட்டிக்கொண்டு பஞ்சாங்கத்தில் ஆழ்ந்திருந்தார்.தன் தாயும் மனைவியும் இப்படிக் கூச்சல் போடும் பொழுது எப்படி இவரால் இப்படி இதையெல்லாம் பற்றி எந்த அபிப்ராயமும் சொல்லாமல் மெளனமாக இருக்க முடிகிறது என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வயதான அவர் இந்த மாதிரி பழக்க வ்ழக்க விவகாரங்களில் ஏதாவது சொன்னால் இவன் பாடு கொஞ்ச்ம் இலகுவாக முடியும். பெரியவர், அவர் சொல்கிறாரே என்று அதையே தீர்ப்பாக வழங்கி விடலாம். ஆனால், அவர் இதெல்லாம் தனக்குச் சம்பந்தபபடாத விஷயம் மாதிரி மெளனமாக இருக்கிறாரே?...

    சுந்தரேசன் சில வினாடிகள் ஆழ்ந்த சிந்தனையுடன் தன்னுடைய தந்தையை இங்கிருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தான்...... இனிமேல், இந்த மாதிரியான சந்தர்ப்பங்க்களில் தன் தந்தையைப் போலவே தானும் பேசாமல் இருந்து விடுவது என்று ஒரு முடிவுக்கு வந்தான்.

    அந்த சமயத்தில் தான் அவன் மகன் ரமேஷ் வெளியில் விளையாடி விட்டு உள்ளே நுழைந்தான். பின்னம் பக்கம் போய் கை கால் அலம்பிக் கொண்டு மூக்கைச் சிந்தினான்.

    என்னடா, சளி பிடித்திருக்கிறதா? இதற்குத்தான் நான் அடித்துக் கொள்கிறேன். பொழுது விடியறத்தையே நான் சமையல் பண்ணி வைப்பதில் ஒன்றும் குறைச்சல் காணோம். நீயானால், பாட்டி சொல்கிறாரே என்று ஸ்கூல் போகுமுன்பு பழைய சாதத்தை எடுத்து வைச்சிண்டு....

    ஆஹா... பெரிய கரிசனத்தைப் பாரு... நாங்கள்லாம் அந்தக் காலத்தில் சாப்பிடாத பழையதா?... அதான், ஒடம்புக்கு நல்லது. இந்த டானிக் தரித்திரங்களிலெல்லாம் என்ன இருக்குன்னு நெனைச்சிண்டிருக்கே?... என்று அவன் அம்மா ஆரம்பிக்க....

    உங்க கால்த்திலே வழியில்லாம நீங்க சாப்பிட்டீங்கன்னா... அதுக்காக இவனும் சாப்பிடணும்னு என்ன தலையெழுத்து?... பழையது சாப்பிட்டுப் பள்ளிக்கூடத்திலே போய் ஒக்கார்ந்தா படிப்பா வரும்... தூக்கம்தான் வரும்... என்று இவன் மனைவி தொடர....

    என்ன சொன்னே?... வழியில்லாம சாப்பிட்டோமா? யாரு அப்பிடின்னு உனக்குச் சொன்னா? உங்க மாமனாருக்கு நாலு வேலி நிலம்... நாப்பது புளியமரம்... யாரையும் எதிர்பார்க்க மாட்டாரே, தானே மாட்டைப் பூட்டி வண்டி கட்டி நெல் ஏத்திண்டு மில்லுக்கு அரைக்கப் போனார்னா... என்று புலம்ப....

    பேசாமல் இருக்க மாட்டே அம்மா? என்ற சுந்தரேசன் 'இனி இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தான் தலையிடக்கூடாது' என்று கொண்டிருந்த சங்கல்ப உறுதியெல்லாம் காற்றோடு பறக்கக் கத்த....

    உனக்கு என்னைத்தான் சொல்ல்த் தெரியும்... என்று தாழ்ந்த குரலில் முணுமுணுத்துக் கொண்டே அவன் அம்மா புழக்கடைப்பக்கம் போய்விட்டாள்.

    தலைநிமிர்ந்து சுந்தரேசன் வாசல் பக்கம் நோட்டமிட்டான். அவன் தந்தை எந்த சலனமும் இல்லாமல் 'கல்கி' புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார். தானும் இப்படியே இனி இருந்து விடுவது என்று பிரசவ வைராக்கியம் பூண்டான் சுந்தரேசன்.

    இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிப்போனதேத் தெரியவில்லை. அதற்குள்தான் எத்தனை மாற்றங்கள்?

    அப்பா, அதற்கடுத்து அம்மா என்று போய்ச் சேர்ந்தாச்சு.

    மகன் ரமேஷூக்குக் கூட கல்யாணமாகிவிட்டது. தழையத்தழையப் பின்னிண்டு மருமகள்.

    இபபொழுது உள்ரூமில் தலைக்கு மப்ளரைக் கட்டிக்கொண்டு, ஈஸிசேரில் சாய்ந்தபடி காபபி வரட்டுமே என்று காத்திருக்கும் சுந்தரேசன். கையில் தன் தந்தையைப் போல் பொடி டப்பி இல்லை; கண் கண்ணாடிக் கூடு... 'ஹிண்டு' வந்தவுடன் மேலோட்டமாகப் புரட்ட வேண்டும்; மத்தியானத்துக்கு மேலே டீடெய்லா, பக்கம் பக்கமா....இன்னிக்கு ஷேர் மார்க்கெட் எப்படிப் போகும்னு தெரியலே; எல்&டியையும், டாடா ஸ்டீலையும்...'

    பொழுது விடியறத்தேயே உள்ளே ஏதோ இரைச்சல்.

    நான் எது செஞ்சாலும், இது குத்தம் அது குத்தம்னு...ஏன் இப்படி எதுக்கெடுத்தாலும் ஏதாவது சொல்லிண்டிருக்கேள்? ....

    பெரியவர் சுந்தரேசன் காதைத் தீட்டிக்கொண்டார்.

    அவர் மனைவியிடத்தில் மருமகள்.

    "உன்னைக் குத்தம் சொல்லணும்னு தான் நான் காத்திண்டிருக்கேனாக்கும்?... வேறு வேலை இல்லை பாரு, எனக்கு! பெரியவர்கள்னு ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1