Vetkam Kettavargal
By Sivasankari
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Thavam Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Andhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Deivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Kuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Rating: 0 out of 5 stars0 ratingsOverdose Rating: 0 out of 5 stars0 ratingsPaalangal Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Uyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Payirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Vimochanam Rating: 4 out of 5 stars4/5Nooleni Rating: 5 out of 5 stars5/5Oru Pahal Oru Iravu Rating: 5 out of 5 stars5/5
Related to Vetkam Kettavargal
Related ebooks
Avargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Maara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Ini Thodarathu Rating: 5 out of 5 stars5/5Kadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsSuttaman Rating: 5 out of 5 stars5/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsMarma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithanin Kathai Rating: 4 out of 5 stars4/5Uravukkendru Virintha Ullam Rating: 1 out of 5 stars1/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPoi Kaal Purushan Rating: 3 out of 5 stars3/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu Ethuvarai? Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Rating: 0 out of 5 stars0 ratingsThirisangu Sorgam Rating: 5 out of 5 stars5/5Oru Nadaipaathai azhugiradhu Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Etharkkaga? Rating: 1 out of 5 stars1/5Vilai Rating: 5 out of 5 stars5/5Kuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsThulla Mudiyatha Pulliman Rating: 5 out of 5 stars5/5
Reviews for Vetkam Kettavargal
0 ratings0 reviews
Book preview
Vetkam Kettavargal - Sivasankari
http://www.pustaka.co.in
வெட்கம் கெட்டவர்கள்
Vetkam Kettavargal
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/tamil/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
புவனா பஸ்ஸை விட்டு இறங்கினாள். ரங்கநாதன் தெருவோடு சென்று மேம்பாலம் ஏறியிறங்கி, பழைய மாம்பலத்தில் கொஞ்சம் நடந்தால், வீடு வந்துவிடும். மொத்தத்தில் பதினைந்து நிமிஷ நடை… வேகமாய் சென்றால், பத்து நிமிஷங்கள்.
புஸ்தகங்களை மார்போடு அணைத்து இரண்டு பக்கமும் பராக்குப் பார்த்தபடி நடக்கையில், மனசு சந்தோஷமாக இருப்பதை உணர முடிந்தது.
யோசித்துப் பார்த்தால், மதியம் மிஸ் ராதிகா முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டிப் பேசினதுதான் இத்தனை சந்தோஷத்துக்குக் காரணம் என்று புரிந்தது.
அன்று அவள் வகுப்புக்கு ‘டிசெக்ஷன்’ கிளாஸ் இருந்தது.
பி.யூ.சி. சயன்ஸ் பிரிவு மாணவிகளுக்கு அத்திப்பூத்த மாதிரி ஓரிரண்டு டிசெக்ஷன் கிளாஸ்கள் இருக்கும்… மேற்கொண்டு பி.எஸ்.சி.யோ வைத்தியமோ படிக்கப்போகும் மாணவிகளுக்கு உதவி செய்கிற தினுசில்.
க்ளோரஃபார்ம் கொடுத்து கொல்லப்பட்ட தவளைகளைக் கொண்டுவந்து, மரப்பலகையில் ‘ஆ’வென்று கைகால்களைப் பரத்தி ஆணிகளை அடித்து, ஆசிரியர் அதன் தோலை வெட்டுவார். சின்ன தகரத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதனுள் தவளைப் பலகையை வைத்து, ‘இது இருதயம், இது நுரையீரல், இது உணவுக் குழாய்ப் பாதை’ என்று ஒவ்வொன்றாய் விளக்குவார். ஏழெட்டுப் பெண்களுக்கு ஒரு தவளை என்று குழுக்களாய் பிரித்துவிடுவதால், ஆசிரியரைச் சுற்றி நின்று மாணவிகள் அறுவையைக் கவனிப்பார்கள்.
சில பெண்கள் முகத்தைச் சிணுங்குவார்கள்… சிலர் மூக்கைப் பொத்திக் கொள்வார்கள்… இன்னும் சிலர் ‘ஹக்’ என்று குமட்டலெடுக்கிற பாவனையைச் செய்வார்கள்.
இந்தப் பெண்களின் மாய்மாலத்தைக் காணும்போது, புவனாவுக்குச் சிரிப்பு வரும்.
என்னவோ கையில் கொடுத்து வாயில் போட்டுக்கொள்ளச் சொல்லிவிட்ட மாதிரி, இதென்ன அலட்டல்!
புவனாவுக்கு டிசெக்ஷனில் ஈடுபாடு அதிகம். ஆசிரியரின் முகத்துக்கருகில் கவிழ்ந்துகொண்டு உன்னிப்பாய் ஸ்கால்பல்லால் வெட்டுவதையும், உணவுக் குழாய் பளிச்சென்று தெரிய நெகடிவ் பிலிம்களை சின்னச்சின்னதாய் வெட்டி குழாய்க்கு அடியில் செருகுவதையும் ஆர்வத்துடன் கவனிப்பாள்.
இப்படிக் கவனிக்கும் இவளது சிரத்தை ஆசிரியருக்குப் புதுசாய் இருந்திருக்கவேண்டும்… இன்று டிசெக்ஷனுக்கு உட்கார்ந்தபோது என்ன நினைத்தாரோ, போன தடவை நா சொல்லிக்குடுத்தது ஞாபகமிருக்கா? உன்னால தனியா டிசெக்ட் பண்ணிக் காட்ட முடியுமா?
என்று இவளைப் பார்த்துக் கேட்டுவிட்டார்.
நானா! தனியாகவா! முடியுமா?
மனசுக்குள் வேகவேகமாய் ஒருதரம் என்ன செய்யவேண்டுமென்று நினைத்துப் பார்த்ததில், முடியும் என்றே தோன்ற, முயற்சி பண்றேன், மிஸ்…
என்றாள்.
ஆசிரியர் கிட்டத்தில் நின்று உதவி செய்ய, சக மாணவிகள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, புவனா மேஜை முன் உட்கார்ந்தாள்.
தவளையைப் பரத்தி ஆணி அடிக்கும்போதும், முதலில் கத்தரிக்கோலால் மேல்தோலை வெட்டும்போதும், படபடப்பாய் இருந்தது… கை நடுங்குகிற மாதிரி இருந்தது.
இரண்டு நிமிஷங்களில் படபடப்பும் நடுக்கமும் குறையத் தொடங்கியதும், டிசெக்ஷன் செய்யும் சுவாரஸ்யத்தில் தன்னை மறந்துபோனவள், நிதானமாய் அரைமணியில் கச்சிதமாய் காரியத்தை முடித்தாள்.
ஆசிரியரின் சந்தோஷம் வெளிப்படையாய்த் தெரிந்தது.
பிரமாதம்!
என்று அவள் முதுகில் தட்டிக்கொடுத்தார். நீ மெடிசனுக்குப் படிக்கணும், புவனா… ஒரு சர்ஜனுக்குத் தேவையான கைத்திறமை உன்கிட்ட இருக்கு! நீ மெடிசன் படிச்சு, சர்ஜரியில நிபுணராகணும்!
என்றார்.
அப்புறம், சுற்றியிருந்த மாணவிகளைப் பார்த்து, படிப்புல முதலா வர்றது மட்டுமில்லாம, பிராக்டிகல்லகூட புவனாதான் கெட்டிக்காரின்னு நிரூபிச்சுட்டா… நீங்க எல்லாரும் புவனா மாதிரி புத்திசாலியா, ஷ்ரூடா இருக்கணும்!
என்றார்.
புவனாவைப் பார்த்து மறுபடியும், குட் கேர்ல்! கீப் இட் அப்! அண்ட் ஆல் தி பெஸ்ட்!
என்று சொல்லி புன்னகைத்தவண்ணம் வெளியே போனார்.
ஆசிரியரின் சிரிப்பையும், சக மாணவிகளின் ‘சாது மாதிரி இருந்துகிட்டு, எப்படி நல்ல பேர் தட்டிக்கிட்டா பாரேன்!’ என்ற முகபாவத்தையும் இப்போது நினைத்துப் பார்த்தபோது, மனசின் மகிழ்ச்சி அதிகரித்தது.
மருத்துவமா? அடேயப்பா! கிட்டத்தட்ட ஏழு வருஷம் படிக்கவேண்டிய படிப்பு! அதை என்னால் படிக்க முடியுமா? சர்ஜனாய் வரக்கூடியவள் என்று ஆசிரியர் சொன்னாரே… நிஜமாகவா? முடியுமா? ‘கைத்திறமை’ என்றால் என்ன அர்த்தம்?
நடந்தவள் நின்றாள். கைவிரல்களைப் பிரித்துப் பார்த்தாள்… கையை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்தவளுக்கு, சட்டென்று சிரிப்பு எழுந்தது. நடுத்தெருவில் நாட்டியமாடுகிற மாதிரி, என்ன இது!
யாராவது பார்த்தால், பைத்தியம் என்று நினைக்கமாட்டார்கள்?
கையை மடக்கி பார்வையை நிமிர்த்தின புவனா, மேலே நடந்தாள்.
சர்ஜன் மனசை விட்டு அகல மறுத்தார்.
முழங்கால் வரை தொங்கும் வெள்ளை கோட்டு, கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் மாலை, உயரத் தூக்கிப் போடப்பட்ட கொண்டை, டெட்டால் ஜலத்தில் ஊறிப்போய் வெளுத்த கைவிரல்கள்.
‘டாக்டர் புவனாவைத் தெரியாது? சிசேரியன் ஆபரேஷன்ல கெட்டிக்காரங்க!’
‘அடேயப்பா, டாக்டர் புவனாவா? ஒரு நாளைக்குப் பல ஆபரேஷன்களை அனாயாசமா பண்ணுவாங்களே!’
‘டாக்டர் புவனா… நீங்க நிஜமாவே ஒரு சிறந்த சர்ஜன்!’
‘கான்ஃபரன்ஸா? டாக்டர் புவனாவக் கூப்பிடுங்க…’
‘இங்கிலாந்து டாக்டர்கிட்ட செஞ்சுகிட்ட வைத்தியத்த விட, நீங்க செஞ்ச சிகிச்சைக்குப் பலன் அதிகம், டாக்டர்!’
டாக்டர் புவனா… வெள்ளைக் கோட்டு, ரப்பர் கையுறை மாட்டிய அறுவை சிகிச்சை நிபுணர் புவனா…
இந்தாம்மே… கடை இருக்கறதுகூடத் தெரியாம, மேல வந்து விளறியே… கண்ணில்ல? தே…
அதட்டலாய் ஒரு கட்டைக்குரல் ஒலிக்க, புவனா கண்களை இரண்டு தரம் சிமிட்டி தன் சூழ்நிலையைப் பார்த்தாள்.
வாழைக்காய், வாழையிலை வியாபாரம் செய்யும் பெண் ஒருத்தி, தெருவோரத்தில் சாக்கு விரித்து கடை பரத்தியிருந்ததைக் கவனிக்காமல் சாக்கை மிதித்துக்கொண்டு தான் நிற்பதை உணர்ந்ததும், அவளுக்கு வெட்கமாய் போய்விட்டது.
நல்லவேளையாய் மெதுவாய் வந்ததில், சாக்கைத்தான் மிதித்திருக்கிறேன்… வேகமாய் வந்து இலையை மிதித்து அது கிழிந்திருந்தால், அப்புறம் கேட்கவே வேண்டாம்!
இந்த வியாபாரிகளிடம் தெரியாத்தனமாய் மாட்டிக்கொள்வதும், குழாயடிச் சண்டையில் பங்குகொள்வதும் ஒன்றுதான்.
‘அட சாவுக்கிராக்கி! கண் என்ன அவிஞ்சுபோச்சா?’ என்பாள்.
‘கசுமாலம்! பத்து ரூபா எலைய நார்நாராக்கிட்டியே… நீ நல்லா இருப்பியா?’ என்பாள்.
‘இந்தாம்மே… துட்ட எண்ணி கீள வெச்சிட்டு அப்பால நவுரு, ஆமா!’ என்பாள்.
இன்னும் பச்சைப்பச்சையாய், உடம்பும் மனசும் கூசிப்போகிற தினுசில் திட்டுவாள். சக வியாபாரிகள் வேறு அவளுக்குத் துணை வருவார்கள்.
அசிங்கம்!
மன்னிச்சுக்கம்மா… தெரியாம மிதிச்சிட்டேன்…
புவனா ஓரடி நகர்ந்து மேலே நடக்கத் தொடங்கினாள்.
ஜகஜகவென்று மனிதர்கள்.
கறுப்பாய், வெள்ளையாய், மாநிறமாய், குண்டாய், ஒல்லியாய், உயரமாய், குட்டையாய்…
ஏழ்மை, பணக்காரத்தனம், இரண்டுங்கெட்டான்தனம்…
அசடுகள், சமர்த்துகள்…
நோஞ்சான்கள், பலசாலிகள்…
ஆபீசிலிருந்து திரும்பும் கூட்டம்… வீட்டுக்குப் போக நாழியாகிவிட்டது, போய் அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த வேண்டும், மூஞ்சி தூக்கும் மாமியாரின் முணுமுணுப்பை வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும், ராத்திரிச் சமையலைக் கவனிக்கவேண்டும் என்று காலில் வெந்நீர் கொட்டிக்கொண்டு பரக்கப்பரக்க ஓடும் பெண்கள்…
வீட்டுக்குப் போய் என்ன வெட்டிக்கிழிக்கப்போகிறோம் என்ற மதர்ப்புடன், பெட்டிக்கடை வாசலில் சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு, புகையிலைக் குதப்பிக் கொண்டு, மாலைச் செய்தித்தாளைப் புரட்டி அரசியல் வம்படித்துக்கொண்டு, தாங்கள் ஆபீசுக்குப் போவது என்னவோ உலகத்திலேயே யாரும் செய்யாத காரியம் என்பதுபோல, வீட்டில் துரும்பை எடுத்துப் போடுவதற்குக்கூட தங்கள் ஆண்மைத்தனம் இடங்கொடுக்காது என்பதுபோல சாவகாசமாய் நிற்கும் ஆண்கள்…
ஒருநாளைப்போல இந்தப் பெண்களையும் இந்த ஆண்களையும் பார்க்கும்போது, புவனாவுக்குப் பாவமாக இருக்கும்.
நாயாய் ஆபீசில் உழைத்துவிட்டு வரும் இந்தப் பெண்களிடம், ஏன் ஆண்களுக்குப் பரிதாபம் எழுவதில்லை?
அட, நம்மைப் போலத்தானே இவளும் அலுத்துச்சலித்து வருகிறாள் என்று ஏன் நினைப்பதில்லை?
அழும் குழந்தையைச் சமாதானம் பண்ணுவோம், மொணமொணவென்று காரணமில்லாமல் திட்டும் தாயை ‘சும்மா இரும்மா’ என்று அடக்குவோம், ‘ஏதாச்சும் உதவி பண்ணட்டுமா?’ என்று கேட்போம்