Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maara Vendiya Paathaigal
Maara Vendiya Paathaigal
Maara Vendiya Paathaigal
Ebook74 pages31 minutes

Maara Vendiya Paathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580125405926
Maara Vendiya Paathaigal

Read more from Vaasanthi

Related to Maara Vendiya Paathaigal

Related ebooks

Reviews for Maara Vendiya Paathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maara Vendiya Paathaigal - Vaasanthi

    http://www.pustaka.co.in

    மாற வேண்டிய பாதைகள்

    Maara Vendiya Paathaigal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    கூடத்திலிருந்து தோடி ராக ஆலாபனை கேட்டது. விஸ்தாரமாக ஆரம்பித்து படிப்படியாய் மேல் ஸட்மஜத்தை எட்டி பிருகாக்கள் நட்சத்திரச் சிதறல்களாய் விழுந்தன. உள் அறையில் உட்கார்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்த சுமதி தன்னையறியாமல் தலையாட்டி ரஸித்தாள். என்ன சாரீரம், என்ன ஞானம் என்று உள் மனசு வழக்கம்போல் வியந்தது.

    ஆலாபனை நின்றது. தொடர்ந்து ஆரவாரமான கைத்தட்டல் கேட்டது. பிரமாதம் ஸார்-உங்கள் மாதிரி யாராலே பாட முடியும்? என்ற வார்த்தைகள் கேட்டன. கொஞ்சுகிற வார்த்தைகள் -வருடிக் கொடுக்கிற மாதிரி நெருக்கம் தெரிகிற வார்த்தைகள்.

    நாற்காலியைப் பிடித்தபடி உட்கார்த்திருந்த சுமதியின் கைவிரல்கள் இறுகிக்கொண்டன. விரல் நுனிகளும், கணுக்களும் சிவந்து போயின.

    எப்படித்தான் உங்களுக்கு இப்படி ஒரு குரல் இருக்கோ?

    ராஜகோபாலின் சிரிப்புக் கேட்டது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு விசேஷமாயிருக்கும். எனக்குக் குரல் நன்னாயிருந்தா உனக்கு நிறம் நன்னாயிருக்கும்- எப்படித் தான் உனக்கு இப்படி ஒரு நிறம் இருக்கோன்னு நா அதிசயப்படலாம்!

    படறேளா?

    வார்த்தைகளில் மறுபடி ஒரு கொஞ்சல்- தொடர்ந்து ஒரு கிண்கிணிச் சிரிப்பு.

    இங்கு பாட்டு கிளாஸ் நடக்கிறதா, இல்லை வேறு ஏதாவதா?

    அவளுடைய நெற்றி நரம்புகள் புடைத்தன. முகமெல்லாம் சூடேறி மார்பு வேகமாக அடித்துக்கொண்டது. அவள் நாற்காலியில் உட்கார முடியாமல் எழுந்தாள். மனசில் எழுந்த கோபத்தை எப்படி அடக்குவது என்று தெரியவில்லை. கோபமும் ஆத்திரமும் மூச்சையே திணற அடித்துவிடும் போல் இருந்தது.

    சுத்தன வாரி கி கந்து...

    பாட்டு ஆரம்பித்துவிட்டது ஜோடியாக. இரண்டு குரல்கள் இழைந்து இழைந்து வரும் இனிமையில் அவள் கூட ஒரு விநாடி தன் கோபத்தை மறந்து நின்றாள். அவளையறியாமல் பாட்டின் வரிகளை மனசும், வர்யும் முணுமுணுத்தது.

    திடீரென்று பாட்டு நின்றது. லேசான சிரிப்பு- சிணுங்கல் கூடத்திலிருந்து வந்தது. அவள் சட்டென்று எழுந்தாள். ஒரு ஓசையுடன் தன் அறைக் கதவைத் திறந்தாள். பாட்டு விசை போட்ட மாதிரி தொடர்ந்தது.

    அவள் அவசரமாகக் கூடத்துக்குள் நுழைந்தாள்.

    ராதா ரொம்பப் பதவிசாகத் தலையை இழுத்துப் போர்த்திக்கொண்டு பாடிக் கொண்டிருந்தாள். மெல்லிய புடவைக்குள் ரவிக்கையின் இறங்கிய கழுத்தும், மார்பின் வளைவுகளும் துல்லியமாகத் தெரிந்தன. சுமதிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இவளும் இவள் பதவிசும்...! எதிரில் ராஜகோபால் கண்ணை மூடிக்கொண்டு தம்புராவை மீட்டியபடி உட்கார்ந்திருந்தார். இவ்வளவு நேரமாய் ராதாவின் உடம்பை மேய்ந்த கண்கள் அவை என்று தோன்றுகையில் குபீரென்று ஆத்திரம் வந்தது.

    ராஜகோபால் சட்டென்று கண்களைத் திறந்தார். அவள் கோபம் தெரிய நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் தம்புராவை மெல்லக் கீழே வைத்தார்.

    சுமதி, போய்ப் படு...

    அவள் முதுகு விரைத்துக் கொண்டது.

    ஏன்?

    எனக்கு உடம்பு சரியாயில்லே.

    "நீ அப்படித்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1