Ilakkia Inbam
By Jeevee
()
About this ebook
ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இவரது முதல் கதை 1958-ம் வருடம் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ பத்திரிகையில் பிரசுரமானது. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் 37 பிரபல எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாசகர் ரசனையில் இவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூல் வாசகர் மத்தியில் பேசப்படும் ஒரு நூலாகத் திகழ்கிறது. முதலில் நான் ஒரு வாசகன். அந்த வாசக உள்ளம் தான் என்னையும் எழுத வைத்தது என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் ரசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இணையத்தில் சக வாசகர்களுடன் பதிவெழுத்தாளராய் கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக தொடர்பில் இருப்பவர். நல்ல பல நண்பர்களைப் பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை, ஆய்வுகள் என்று எழுத்தின் சகல பரிமாணங்களிலும் வலம் வர தளராத ஊக்கம் கொண்டவர். சொந்தத்தில் பத்திரிகை, பதிப்பகம் என்றெல்லாம் எழுத்து சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் கொண்டவர்.
ஜீவி தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் 74 வயது இளைஞர். ஜி.வெங்கட்ராமன், ‘ஜீவி’யானது எழுதுவற்காகக் கொண்ட பெயர். தொலைபேசித் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாழ்க்கையின் சகல போக்குகளிலும் ரசனை கொண்டவர். எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்பதான சமதர்ம சமுதாயத்திற்காக கனவு காண்பவர். அந்தக் கனவின் நிதர்சனத்திற்கு தன் எழுத்து என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவர்.
Read more from Jeevee
Iruttukku Idamillai Rating: 0 out of 5 stars0 ratingsJeeveeyin Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsPaarthavai Padithavai Rating: 0 out of 5 stars0 ratingsYuga Purushan Kathai Rating: 0 out of 5 stars0 ratingsEngal Thozhi Kamali Rating: 0 out of 5 stars0 ratingsKanavil Nanaindha Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2 Rating: 0 out of 5 stars0 ratingsKumudamum Vikatanum - Sirukathai Thoguppu 1 Rating: 5 out of 5 stars5/5
Related to Ilakkia Inbam
Related ebooks
Oozhikkaala Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kuthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsSooriya Vamsam Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - Part 1 Rating: 5 out of 5 stars5/5Vazhkkai Paathaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsThevar Koyil Roja! Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsMeendu(m) Varuven Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Vellam Rating: 0 out of 5 stars0 ratingsSethunattu Vengai Rating: 0 out of 5 stars0 ratingsSethu Banthanam Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathil Oru Nandhavanam Rating: 0 out of 5 stars0 ratingsTholainthu Ponavargal Rating: 4 out of 5 stars4/5Irul Thee Rating: 0 out of 5 stars0 ratingsChennaiyil Oru Mazhainaal! Rating: 5 out of 5 stars5/5Oorpidaari Rating: 0 out of 5 stars0 ratingsThailand Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAntha Onbathu Per Rating: 5 out of 5 stars5/5Ponniyin Selvanudan Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsKeladi Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsAanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Ranga Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsKhan Shahib Rating: 0 out of 5 stars0 ratingsThanjai Ezhilan Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Yutham Rating: 0 out of 5 stars0 ratingsJakartavil 100 Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsKaathiru, Kaadhalikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsIraiyuthir Kaadu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKrishnadaasi Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ilakkia Inbam
0 ratings0 reviews
Book preview
Ilakkia Inbam - Jeevee
http://www.pustaka.co.in
இலக்கிய இன்பம்
Ilakkia Inbam
Author:
ஜீவி
Jeevee
For more books
http://www.pustaka.co.in/home/author/jeevee
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும்...
2. பெற்றால் தான் பெண்ணா?..
3. உயிரில் கலந்து உணர்வில் ஒன்றி....
4. கணவனைத் தொலைத்த காரிகை
5. ஆற்றில் அடிமணல் எடுத்து...
6. அன்று வந்ததும் அதே நிலா...
7. "EVEN IF-ம் இந்திரர் அமிழ்தமும்
8. வல்லாங்கு வாழ்தும் என்று என்னாது நீயும்..
9. யாயும் யாயும் யாராகியரோ...
10. குழந்தைச் செல்வம்
11. உலகம் தழுவிய ஒரு கோஷம்
ஜீவியின் இலக்கிய இன்பம்
காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனாலும் மாறாதவை சில உண்டு. முற்றிலும் அழிந்து விடாமல் தொடர்புச் சங்கிலியாய் பூணப்பட்டு பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் சில அடிப்படை உணர்வுகள் மனித குலத்திற்கு உண்டு. காலாதிகாலமாக மனிதப் பிறப்பின் மாண்புகளாக கிரீடம் சூட்டப்பட்டு அந்தப் பண்புகள் போற்றப்பட்டு வருவதின் பெருமைக்கான காரணமும் இது தான்.
இக்கால சில நினைவுச் செதுக்கல்களை சங்க காலச் செய்திகளோடு முடிச்சுப் போட்டு மகிழ்ந்ததின் பகிர்தலே இத்தொடராக உருவெடுத்துள்ளது.
1
இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும்...
வாழ்ந்த ஊர்களும் அந்தந்த ஊர்களில் வாழ்ந்த காலத்து நினைப்புகளும் ஒரு வாழ்க்கையினூடே மறக்கவே முடியாத விஷயங்கள். அதுவும் நினைப்புகள் இல்லையென்றால் வாழ்க்கை சூன்யமாகிப் போகும் என்று தெரிகிறது. நினைப்புகள் அற்ற மனித வாழ்க்கை என்பதும் இல்லவே இல்லை. ஆக நினைப்புகள் என்பதே ஒரு வரம் தான்.
மறக்கமுடியாத திருநெல்வேலி நினைவுககள் இந்த வயதிலும் இ்பொழுதெல்லாம் அடிக்கடி நினைவுக்கு வந்து சந்தோஷ அலைகளை என்னுள் புரளச் செய்கின்றன. திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் பள்ளியில்
ஆறாவது ஏழாவது வகுப்புகளை முடித்துக் கொண்டு எட்டாவதுக்கு
திருநெல்வேலிக்கு வந்து விட்டேன். திருநெல்வேலியில் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரிப் பள்ளியில் படிப்பு. அது 1957-ம் ஆண்டு. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் வாடகை வீடு. வண்ணாரப்பேட்டை தாமிரபரணி படித்துறையில் இறங்கி ஆற்றைக் கடந்து அக்கறையிலிருந்த மாந்தோப்பில் நுழைந்து ஏறி இறங்கி ரோடுக்கு வந்தால் ஜங்ஷன் அந்த வயது குஷியில் கொஞ்ச தூரம் தான். ஜங்ஷனில் தான் ம.தி.தா. இந்துக் கல்லூரி சார்ந்த ஹைஸ்கூல் இருந்தது.
ஆற்றைக் கடக்கும் பொழுதே சுலோச்சனா முதலியார் பாலம் கண்ணுக்குத் தட்டுப்படும். பாலத்தில் நடப்பது சுற்றுவழி என்று ஆற்றைக் கடந்தே தினம் பள்ளி செல்வோம். அந்த வயதில் நண்பர்களுடன் முட்டி அளவு நீரில் ஆற்றை அளைந்து கொண்டு செல்வது அற்புதமாக இருக்கும். தினந்தோறும் காலைக் குளியல் தாமிரபரணி ஆற்றில் தான். எங்களது நண்பர்களின் கூட்டம் பெரிய ஜமா. சுமார் 15பேர் தேறும்.
தாமிரபரணி ஆற்றை நினைவில் நினைத்து நினைத்து எழுத எழுத இனிக்கிறது. வண்ணாரப்பேட்டை எங்கள் பகுதியிலிருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் நீண்ட தெரு வழியே நடந்தால், ஐந்து நிமிட நடை தூரத்தில் படித்துறை வந்து விடும். படித்துறையில் பிள்ளையார். காலையில் ஆற்றுக்கு வந்துக் குளித்துவிட்டுச் சென்றிருக்கும் பெண்கள் கூட்டம் வழிபட்டிருக்கும் சங்குப்பூக்கள் திருமேனியில் செருகப்பட்டிருக்கும் பிள்ளையாரை உற்றுப்பார்த்தால் சிரித்துக் கொண்டிருப்பது போலத் தோற்றமளிப்பார். நாங்களும் பிள்ளையாரை ஒரு சுற்று சுற்றித் தோப்புக்கரணம் போட்டுவிட்டு படித்துறைப் படிகளில் இறங்கி தாயின் மடி நோக்கி ஓடும் குழந்தைகள் போல, மணல்வெளி தாண்டி ஆறு நோக்கி ஓடுவோம்.
அந்த ஏழுமணிக்கெல்லாம் காலைக் குளியலுக்காக நண்பர்க்ள் படித்துறையில் கூடி விடுவோம். அந்தக் காலைப் பொழுதில் கணுக்கால்