Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irul Thee
Irul Thee
Irul Thee
Ebook194 pages1 hour

Irul Thee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதையின் பரிணாம வளர்ச்சி என்பது எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான யுத்தம் கலைஞர்களிடத்தும் வாசகர்களிடத்தும் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

நுணுக்கங்கள் பல நிறைந்தவை நம் வாழ்க்கைமுறை.

பொதுவாக, வாழ்தலின் அர்த்தம் புரிந்தவன்தான் கலைஞனாக இருக்க முடியும். அல்லது அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் தான் கலையாக வாழ்க்கையை வாழ்ந்துகாட்டவும் முடியும்.

அல்லாமலும் வெற்றுத் தோற்றத்தில் போலி ஆரவாரங்களோடு ஏதோ ஒரு முகமூடி போட்டுக்கொண்டு பிரமாண்டமான கதாமாந்தர்களையும் காட்சி வருணணைகளையும் கொண்டு கலை இலக்கியத் தளத்தில் அடுக்குகிற சொல்விளையாட்டுக்கள் எல்லாம் சமூகரீதியாக ஏற்படுத்தும் தாக்கத்தை உற்றுநோக்க வேண்டியுள்ளது.

இதோ இவர்களும் மனிதர்கள்தாம்!

எனது கதைகளின் மாந்தர்களைத்தான் சொல்கிறேன். இந்தத் தொகுப்புதான் என்பதில்லை. எனது ஒட்டுமொத்தத் தொகுப்பையும் உள்வாங்கி அலசி ஆராய்கிறவர்களுக்குத் தெரியும்.

தொலைந்துபோன வாழ்க்கையை மீண்டும் பெறவும் காணாமல் போன மனிதத்தன்மையை மீட்கவும், கிடைக்காமல் போன உரிமைகளைத் தட்டிக் கேட்பதுமான மனிதர்களும் அவர்கள் சார்ந்த வாழ்வும் கதைகளில் பரவலாக நிறைந்து கிடக்கும். இதன் காரணகர்த்தாக்கள் யார் என்பது ஒளிவு மறைவின்றி வெட்ட வெளிச்சமாய் அம்பலப்பட்டு நிற்பதையும் கதைகளினூடே காணலாம். இதில் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்வின் நுணுக்கங்கள் பற்றியிருக்கிறது. எல்லாரிடமும் இடைவிடாத சோகம், ஏழ்மை, வறுமை... என ஏதோவொன்று வாழ்தலுக்காய் அன்றாடம் துரத்திக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் உள்வாங்கிய இந்தச் சமூகத்தில் படைப்புச் செயல்பாடுகளின் வீர்யமும் வீச்சும் என்பதைச் சாதி, ஆதிக்க வேறுபாடுகளின்றி பார்ப்போமேயானால் நாம் திட்டவட்டமாய் அறிந்துகொள்ள முடியும். இது யாருக்கான வாழ்வு, யாருக்கான இலக்கியம், கலை வடிவங்கள் என்பதை வெகு எளிதாகவே உணர முடியும். இத்தகு வாழ்வின் நுண்ணிய பதிவுகள் தாம் இச்சிறுகதைகள் என்பதைப் பெருமையாக என்னால் அறிவிக்க முடியும்!

- விழி. பா. இதயவேந்தன்

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127404413
Irul Thee

Read more from Vizhi Pa. Idhayaventhan

Related to Irul Thee

Related ebooks

Reviews for Irul Thee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irul Thee - Vizhi Pa. Idhayaventhan

    http://www.pustaka.co.in

    இருள் தீ

    Irul Thee

    Author:

    விழி பா. இதயவேந்தன்

    Vizhi Pa. Idhayaventhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vizhi-pa-idhayaventhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வேலி

    பயண இடைவெளி

    மலையான்

    இழவு

    முள்

    பறை

    முகம்

    அப்பாவின் மாணவன்

    இருள் தீ

    மூவர்

    சூளை

    அவ(ன்)ள்

    மீட்சி

    பாடம்

    உறவு

    கவுரவம்

    தன்மானம்

    வாழ்வின் நுண்ணிய பதிவுகள்

    சிறுகதையின் பரிணாம வளர்ச்சி என்பது எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான யுத்தம் கலைஞர்களிடத்தும் வாசகர்களிடத்தும் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

    நுணுக்கங்கள் பல நிறைந்தவை நம் வாழ்க்கைமுறை.

    பொதுவாக, வாழ்தலின் அர்த்தம் புரிந்தவன்தான் கலைஞனாக இருக்க முடியும். அல்லது அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் தான் கலையாக வாழ்க்கையை வாழ்ந்துகாட்டவும் முடியும்.

    அல்லாமலும் வெற்றுத் தோற்றத்தில் போலி ஆரவாரங்களோடு ஏதோ ஒரு முகமூடி போட்டுக்கொண்டு பிரமாண்டமான கதாமாந்தர்களையும் காட்சி வருணணைகளையும் கொண்டு கலை இலக்கியத் தளத்தில் அடுக்குகிற சொல்விளையாட்டுக்கள் எல்லாம் சமூகரீதியாக ஏற்படுத்தும் தாக்கத்தை உற்றுநோக்க வேண்டியுள்ளது.

    இதோ இவர்களும் மனிதர்கள்தாம்!

    எனது கதைகளின் மாந்தர்களைத்தான் சொல்கிறேன். இந்தத் தொகுப்புதான் என்பதில்லை. எனது ஒட்டுமொத்தத் தொகுப்பையும் உள்வாங்கி அலசி ஆராய்கிறவர்களுக்குத் தெரியும்.

    தொலைந்துபோன வாழ்க்கையை மீண்டும் பெறவும் காணாமல் போன மனிதத்தன்மையை மீட்கவும், கிடைக்காமல் போன உரிமைகளைத் தட்டிக் கேட்பதுமான மனிதர்களும் அவர்கள் சார்ந்த வாழ்வும் கதைகளில் பரவலாக நிறைந்து கிடக்கும். இதன் காரணகர்த்தாக்கள் யார் என்பது ஒளிவு மறைவின்றி வெட்ட வெளிச்சமாய் அம்பலப்பட்டு நிற்பதையும் கதைகளினூடே காணலாம்.

    இதில் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்வின் நுணுக்கங்கள் பற்றியிருக்கிறது. எல்லாரிடமும் இடைவிடாத சோகம், ஏழ்மை, வறுமை... என ஏதோவொன்று வாழ்தலுக்காய் அன்றாடம் துரத்திக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் உள்வாங்கிய இந்தச் சமூகத்தில் படைப்புச் செயல்பாடுகளின் வீர்யமும் வீச்சும் என்பதைச் சாதி, ஆதிக்க வேறுபாடுகளின்றி பார்ப்போமேயானால் நாம் திட்டவட்டமாய் அறிந்துகொள்ள முடியும். இது யாருக்கான வாழ்வு, யாருக்கான இலக்கியம், கலை வடிவங்கள் என்பதை வெகு எளிதாகவே உணர முடியும்.

    இத்தகு வாழ்வின் நுண்ணிய பதிவுகள் தாம் இச்சிறுகதைகள் என்பதைப் பெருமையாக என்னால் அறிவிக்க முடியும்!

    விழி. பா. இதயவேந்தன்

    *****

    வேலி

    ரத்தம்... ரத்தம்...

    கத்திக்கொண்டே எதிரே வந்தான் ஏகாம்பரம், மோகன் நெற்றியில் இடதுபுருவத்தின்மேல் கீறி ரத்தம் சொட்டிச் சொட்டி கண்களை நனைத்தது. ரத்தத்தைப் பார்த்த பீதியில் மிகவும் மிரண்டு போன மாதிரியிருந்தான் மோகன், வலியில் கதறி அழுதான்.

    அவன் அழுத குரல் கேட்டு ஏகாம்பரம் துடித்துப் போனான். அவனை அறியாமல் மீண்டும் மீண்டும் கத்தினான்.

    ரத்தம், ரத்தம்.

    சத்தங்கேட்டு உள்ளேயிருந்து வெளியே ஓடி வந்தாள் குப்பு. ஏகாம்பரம் தனது பையன் மோகனின் நெற்றியைத் தாங்கியபடி அழுத்திப் பிடித்திருந்தான்.

    என்ன என்னாச்சுப்பா.

    கம்பி கீறிடிச்சு.

    வேலிக் கம்பியா.

    ஆமாம்.

    அந்தக் கட்டயில போறவன் ஊரப்பூறா வளைச்சுட்டானே, நல்ல கெதிக்குப் போவானா...

    ரத்தஞ் சொட்டுவதைப் பார்த்ததும் ஏகாம்பரத்திற்கு லேசாகக் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது.

    இத்தனைக்கும் எத்தனை விதமான விசப் பாம்புகளைப் பகல் நேரத்தில் சந்து பொந்துகளில், புதர்களில் பாம்பு இருக்கும் இடம் அறிந்து அதன் வாசனையை உணர்ந்து கழியால் குத்திக் கிளப்பி வெளியே வரவழைத்து லாவகமாய் பிடித்திருப்பான்.

    வெளியே வந்த பாம்பை ஓடிப்போய் கவைக்குச்சியால் கழுத்தில் அழுத்திப் பிடித்து வாயும் விழியும் பிதுங்க அப்படியே கையால் அழுத்தி அதன் வழவழப்பில் அருவருப்போ, கடித்துவிடும் என்கிற அச்சமோ இல்லாமல் பூனைக் குட்டியைப் பிடித்து உள்ளே போடுவதுபோல சாக்குப்பைக்குள் போடுவான். ஆனால் ரத்தத்தைப் பார்த்ததும் ஏதோ வாழ்வே தொலைந்துபோன மாதிரி பீதியில் மிரண்டு போனான் ஏகாம்பரம்.

    அவள் தொடர்ச்சியாய் புலம்ப ஆரம்பித்ததை நிறுத்தச் சொல்லிய ஏகாம்பரம், மொதல்ல ஒரு சீலய எடுத்து கட்டேன்டி. என்றான்.

    அவன் அலறல் கேட்டு எழுந்து உள்ளே ஓடினாள். ஒரு அழுக்கு கந்தல் துணியை ரிப்பன் போல கிழித்து ஈரத்தில் நனைத்து மஞ்சளை லேசாய்த் தடவி, நெற்றியில் வைத்து இறுக்கிக் கட்டினாள்.

    இன்னும் கொஞ்சம் இருந்தால் கண்ணே போயிருக்குமே என்று அவள் வருத்தப்பட்டாள். அவனைத் திண்ணைப் பக்கம் கைத்தாங்கலாக அழைத்துவந்து மடிமீது சாய்த்து உட்கார வைத்தாள். கையிலிருந்த சிலேட்டு, புத்தகப் பையைத் திண்ணையோரம் சாய்த்து வைத்தாள்.

    இப்படியே போனால் என்ன ஆவது என்று ஏகாம்பரம் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தான்.

    குளத்துமேடு அப்படியொன்றும் பெரிய விசாலமான பகுதியாக இல்லை. ஒன்று இரண்டு என பிள்ளைக்குட்டி யெல்லாம் சேர்த்து நூறு பேருக்குமேல் தேறமாட்டார்கள். ஊரைத்தாண்டி புறம்போக்குப் பகுதியில்தான் அந்த விசாலமான குளத்துமேடு இருந்தது.

    ஊரிலிருந்து யாரும் அந்தப் பக்கம் போகவே பயந்துகொண்டு இருப்பார்கள். கிட்டத்தட்ட முப்பது வருசத்துக்குமேல் ஒவ்வொருவராக குடியேறி இப்போது சனங்களும் குடிசைகளுமாகக் கூடிவிட்டார்கள்.

    இருளர் சனங்கள் என்று ஊருக்கு வெளியே தள்ளப்பட்டு ஒருவருக்கொருவர் குளத்துமேட்டுப் புறம்போக்கில் குடிசை கட்டிக் கொண்டார்கள். பாம்பு பிடிக்க, எலி பிடிக்க... என்றெல்லாம் போகாத படிக்கு இப்போது தலைமுறை மாறிவிட்டது.

    அப்படி இப்படியென்று எப்படியோ ஓட்டுப் போடும் பட்டியலில் பெயரைச் சேர்த்தது அவர்களுக்குப் பெருமையாய் இருந்தது. தெருவில் பெருமாள் கொஞ்சம் விபரம் தெரிந்தவன் என்பதால் அலைந்தலைந்து அதைச் சேர்க்க முடிந்தது. தேர்தல் வரும்போதெல்லாம் பெருமாள் கையில் ஏதாவது கொடுத்துவிட்டுச் சொல்வார்கள்.

    உன் கும்பல அப்படியே பாத்துக்க

    சரிங்க.

    உட்டுடாத, நம்ம கட்சிக்குத்தான் ஓட்டு தெரிதா.

    சரிங்க, ஆனா...

    இன்னா ஆனா.

    முப்பது வருசமா தலைமொறைக்கு நாங்க இங்க கெடக்கறம்.

    அதான் தெரீமே.

    தோ, இந்தக் குடிசைக்கு பட்டா கெடைக்கல.

    இந்த மொற வாங்கிடலாம்.

    பெருமாளுக்கு நம்பிக்கை ஊட்டுவான் ஓட்டு கேட்டு வந்தவன். கூடியிருக்கும் பெண்கள் கேட்பதைத் தடுத்து அவர்களிடம் சத்தம் போட்டு பேசக்கூடாது என்பதுபோல் 'ச்சூ' என சாடை காட்டி நிறுத்திவிட்டு பெருமாள் தொடர்ந்து பேசுவான்.

    தண்ணி பைப்பாச்சும்...

    ஏற்பாடு பண்ணலாம்; சொல்லியிருக்கேன்.

    ரேசன் அட்ட இல்ல, இருந்தா ஏதாச்சும் அரிசி வாங்குவம்.

    அது கூடவா இல்ல. அவன் ஆச்சர்யமாய் கேட்பான்.

    ஆமாங்க.

    சரி பாக்கலாம்.

    வந்தவன் கிளம்பும்போது பின்னாலேயே வருவான்.

    சாதி சர்டிபிகேட்டு இன்னும் கெடைக்கலங்க.

    எழுதிப் போட்டாச்சா.

    எழுதிக் குடுத்து வருசக்கணக்காவதுங்க.

    அது வாங்கிடலாமே.

    அத ஏன் கேக்குறீங்க, கேட்டா இருளர்னா முடியாதுன்றான்.

    நான் மேல கலெக்டருகிட்ட பேசறன்.

    வந்தவன் அவசர கோலத்தில் எத்தனையோ பேருக்குச் சொல்வது போல வாக்குறுதிகளை இறைத்துவிட்டுப் போனான்.

    எந்தவித வசதியும் வாய்ப்பும் இல்லாத அந்த வனாந்திர பூமியில் காலம் காலமாய் இருக்கும் குடும்பங்களை எப்படியாவது கிளப்பிவிட வேண்டும் என்ற சதி ஊர்க்காரர்கள் பலருக்கு இருந்தது.

    முன்பு மாதிரி இருளர்கள் பிழைக்க வழியேதும் இல்லை. சுற்று வட்டாரம் முழுக்க விவசாய வேலைக்குத்தான் அவர்கள் தயாராய் இருந்தார்கள். பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவது எல்லாமே அந்த குப்பை மேட்டுக்குள்தான்.

    மேற்கே போகும் பிரதான சாலைக்குப் போவதென்றால் அத்தனை எளிதில் போகமுடியாத படிக்கு இப்போது சூழலே மாறியிருந்தது.

    ஏறத்தாழ இரண்டு வருடமாய் அமீது என்கிற அரிசி மில்லுக்காரன் பக்கத்தில் இடம்பிடித்து முள்ளை நட்டு வேலி அடைத்துக் கொண்டான். மேற்குப் பக்கமும் வடக்குப் பக்கம் முழுவதும் முள்வேலியால் சூழ்ந்திருந்தது. கிழக்குப் பக்கம் குடிசைகளைச் சுற்றி ராமுக்கவுண்டர் நிலம் வரை அடைத்துக் கொண்டான்.

    தெற்கே அரசாங்கக் கட்டிடம் ஒன்றின் மதில் சுவர் உயர்ந்து இருந்தது. மில்லுக்காரன் எப்போது மில்லு கட்டப்போகிறான் என்று சனங்களுக்குத் தெரியவில்லை.

    கும்பல் கும்பலாய்க் கூடிப் பேசிக் கொண்டார்கள். வாழவே வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு குடிசையை விட்டு வெளியே வந்து பிழைக்க முடியாமல் திணறினார்கள்.

    ராமுக்கவுண்டர் நிலத்துப்பக்கம் சுற்றிக்கொண்டே கொஞ்ச நாள் காலம் கடத்தினார்கள். இடையில் அவனுக்கு என்ன நெருக்கடியோ. அவனும் ஒருநாள் வழியைத் தடுத்துவிட்டான்.

    வழி மூடப்பட்டதும் வடக்கே அமீது போட்ட வேலி சாய்ந்து போய்க்கொண்டிருந்ததைப் பார்த்த அவன் அடியாட்களைக் கொண்டு வந்து நாலைந்து பேரை இழுத்துப்போட்டு அடித்தான்.

    பெருமாளுக்கும் ஏகாம்பரத்துக்கும் கோபம் வந்து நேரே போய் போலிசில் புகார் கொடுத்தார்கள். எப்படியும் வந்து நடவடிக்கை எடுப்பார்கள், வழி கிடைக்கும் என்று குளத்துமேடு முழுக்க நம்பிக்கையோடு இருந்தது.

    அத்தோடு நிற்காமல் 'பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்' என அமைத்து அதன் சார்பாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வழிகேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    பக்கத்து ஊர்களிலிருந்து சமூகத் தொண்டு செய்பவர்கள் பலர் ஆதரவாக வந்து பேசினார்கள். உள்ளூர் தலைவர்களுக்கும் சொல்லியாயிற்று. யாருமே வரவில்லை.

    இப்படியும் அப்படியுமாய் பயந்தபடியே வேலியை சாய்த்து வேலைக்குப் போகிறவர்களும் பள்ளிக்குப் போகிறவர்களும் போய்வந்து கொண்டிருந்தார்கள்.

    ஒரு நாள் லாரி நிறைய கல் தூண்களையும் முள் கம்பிகளையும் கொண்டுவந்து இறக்கிவிட்டு புன்னகைத்தபடி எதிரே நின்றான் அமீது.

    அவனது திட்டம் என்ன எது என்று புரியாமல் விழித்தார்கள். விசயத்தைக் கேள்விப்பட்டு ஒவ்வொருவராய் வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள். சின்னச் சின்னப் பிள்ளைகள் முள்வேலியைத் தாண்டிப் போனார்கள். நின்றிருந்த லாரியைச் சுற்றிக்கொண்டு ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

    டேய் டேய் பொறம்போக்கு, ஓடுகாலிங்களா... அப்டீ எட்டப்போ...

    அமீது துரத்தினான். பிள்ளைகள் மிரண்டுபோய் சாலைப் பக்கம் ஓடினார்கள். பெருமாளுக்கு ஆத்திரம் வந்தது.

    யாரப் பாத்து சொன்ன.

    தே இதுங்களத்தான் சொன்னன், இன்னா இப்ப.

    அப்படியெல்லாம் பேசுற வேல வெச்சுக்காத. கண்டிப்போடு சொன்னான்.

    பின்ன எப்படியாம்...

    இதெல்லாம் எதுக்குங்க.

    மூச்சிரைக்க ஓடி வந்த ஏகாம்பரம் விழிபிதுங்கக் கேட்டான்.

    "வேலி

    Enjoying the preview?
    Page 1 of 1