Subhavin Sirukathaigal - Part 1
By Subha
()
About this ebook
Read more from Subha
Enathu Raja Sabaiyiley.. Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vettai Rating: 0 out of 5 stars0 ratingsAdimai Rajyam Rating: 3 out of 5 stars3/5Subhavin Sirukathaigal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Subhavin Sirukathaigal - Part 1
Related ebooks
Avalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Drogam Rating: 4 out of 5 stars4/5Nandhini 440 Voltz Rating: 0 out of 5 stars0 ratingsNalaiya Thesam Rating: 0 out of 5 stars0 ratingsOotha Nila Rating: 0 out of 5 stars0 ratingsUraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Human Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsPachonthigal Rating: 0 out of 5 stars0 ratingsCynaide Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru Rating: 3 out of 5 stars3/5Crime Rating: 4 out of 5 stars4/5Edhuvum Oru Ellai Varai Rating: 5 out of 5 stars5/5Nalliravu Droham Rating: 5 out of 5 stars5/5Kadaisi Sottu Ratham Rating: 5 out of 5 stars5/5Oru Poi Pothum Rating: 5 out of 5 stars5/5Aasai Konda Devathai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsEnge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mattum Puyalodu... Rating: 5 out of 5 stars5/5Yetho Ariyen Enatharuyire Rating: 5 out of 5 stars5/5December Poo Teacher Rating: 0 out of 5 stars0 ratingsMannil Neendhum Meengal Rating: 0 out of 5 stars0 ratingsIrappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5Kaakitha Medai Rating: 0 out of 5 stars0 ratingsSaharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsOosi Munaiyil Usha Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5
Reviews for Subhavin Sirukathaigal - Part 1
0 ratings0 reviews
Book preview
Subhavin Sirukathaigal - Part 1 - Subha
http://www.pustaka.co.in
சுபாவின் சிறுகதைகள் - பாகம் 1
Subhavin Sirukadhaigal – Part 1
Author:
சுபா
Subha
For more books
http://www.pustaka.co.in/home/author/subha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. ம்ம்ம்மாஹ்..!
2. பிராயச்சித்தம்
3. இன்னும் அவன் வரவில்லை
4. முகங்களும் முகமூடிகளும்
5. இன்றைய நியாயங்கள்
6. வெயில் மழை
7. பாகல் இனிக்கும்
8. தொங்கு பாலம்
9. முதல்ல நகை...
10. வேரும் விழுதும்
ம்ம்ம்மாஹ்..!
இன்றைக்கும் தெருவை அடைத்துக்கொண்டுதான் அந்த மாடு நின்றிருந்தது.
அதைப் பார்த்தவுடன் அவன் அடிவயிற்றில் நெருப்புச் சட்டியைத் தூக்கி வைத்தாற் போல ஒரு சின்ன சூடு பரவுவதை உணர்ந்தான். அவனுக்கு அந்தச் சந்தின் மீதே ஒரு வெறுப்பு.
தெருவே இரண்டு பேர் அகல வாக்கில் படுத்தால், அதில் ஒருவன் கால் மடக்கிப் படுக்க வேண்டிய விஸ்தாரம். அதில் அடுத்த வீட்டு ஜன்னல் அருகே மாடு, வந்த முதல் நாளே இருந்தது. ஒருநாள் சமாசாரம் போலும் என்று நினைத்திருந்தான்.
அப்புறம் பார்த்தால் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று அவன் தெருவிற்குக் குடிபெயர்ந்து ஆகிற ஏழு நாட்களிலும் வளர்பிறைக் கதை. நூற்றிருபது ரூபாய் வாடகைக்கு, அந்தச் சந்தில்தான் வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் மிச்சம் வைத்திருந்தார்கள். அப்புறம் தெருவைப் பற்றி அநாவசியமாய்ச் சொல்லக் கூடாதுதான் என்றாலும், அந்த உள் புழுக்கத்தை அவனால் தவிர்க்க முடியவில்லை.
தெரு திரும்பினவுடன் எச்சரிக்கை எழுத்துக்கள்தான் முதலில் கண்ணில் விழுந்து தெறிக்கும்.
இங்கே சிறுநீர், மலஜலம் கழிப்பவர்கள் மடையர்கள். சிறுநீர் கழிக்காதேடா முட்டாளே...
அந்த எழுத்துக்களுக்கு அப்படி ஒரு ராசி. அத்தனை பேரும் மடையர்களாகவும், முட்டாள்களாகவும் இருக்கத் தயாராயிருந்தார்கள்.
நாசி இந்த ஏழு நாட்களுக்குள் சமனப்பட்டுப் போயிற்று. ஓர் ஒற்றையடிப் பாதையளவிற்கு மட்டுமே மனிதர்கள் நடமாடுகிற அகலம். அதிலும் பெரும் பகுதியை அடைத்துக்கொண்டு அந்த மாடு. உண்மையில் அந்த மாட்டால் அவனுக்கு எந்தத் தொந்தரவும் இல்லைதான்.
அந்த மாடு கிட்டத்தட்ட அவன் உயரம். முகத்திலும், பின்முதுகிலும் இருந்த பழுப்பு போக மிச்சமெல்லாம் வெள்ளை. வால் ஒரு தாம்புக் கயிறு மாதிரி நீண்டு முடிவில் ஒரு கறுப்பு மயிர்க் குஞ்சலம். கண்களில் பரிசல் ஏறி பவனி வரலாம் போல எப்போதும் தெரிகிற நீர்ப்பரப்பின் மினுமினுப்பு. முதுகில் திமில், தனியாக ஒரு வட்டக் கல்லை ஏற்றின மாதிரி. வெள்ளை ரோமம் அங்கங்கே சுழி கண்டிருக்கும். சில சிலிர்த்த சமயங்களில் ரோமம் முழுக்க எழும்பி அடங்கும். கொஞ்சம் அகலமான மேடு தட்டிய நெற்றியில் மறுபடி அந்த ரோமச் சுழிவு. கறுப்பாய்த் தெரியும் மேல் உதடு. அதில் எப்போதும் எண்ணெய் தடவின பளபளப்பு. அகன்ற நாசித்துவாரம். மூச்சு பெருமூச்சாய்ப் பிரிகையில் அது இன்னும் விரிந்து சுருங்கும். அப்புறம் கீழ் வாயும், அதைத் தொடர்ந்து தளர்ந்த சதையும். ஒரு பட்டுப்புடவையின் மடிந்த தலைப்பு போல அது தொய்ந்து தொங்கும். சற்றே கருத்த முட்டிகளுடன் முன்னங்கால்கள். ஏர்க்கலப்பை மாதிரி மடிகிற பின்னங்கால்கள். விரற்கிடை இடைவெளிவிட்டுப் பிரிந்த குளம்புகள். இன்றைக்கும் அவன் தெருவில் நுழைந்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகையில் கழுத்துக் கயிற்றைக் கொஞ்சம் தளர்த்திக்கொண்டு சுவரோடு சுவராய் ஒதுங்கிக்கொண்டு வழிவிட்டது. உரித்த வாழைப்பூ மட்டை மாதிரி இருந்த காதை ஒரு தரம் அசைத்தது. அதன் பிரமாண்ட உடம்பைப் பார்க்கிறபோதெல்லாம் தனக்குள் எழுகிற கிலி நியாயமில்லாததோ என்ற எண்ணம் வந்தது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, காய்கறிப் பையை உள்ளே கொடுத்துவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தான்.
இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையாகப் போனதால் வெட்டி முறிக்க வேலையில்லை. இலக்கில்லாமல் தெருவை வெறித்துக்கொண்டிருந்தாலும் காட்சிகள் தப்பிப் போய்விடவில்லை. மாட்டுக்காரன் ஒரு தொட்டியைக் கொண்டுவந்து அதனருகில் வைத்துவிட்டு அதன் பின்முதுகில் ஒரு தட்டு தட்டினான். உடல் சிலிர்த்துக்கொண்டது. பின் மெதுவாய் வாயை அதில் நுழைத்தது. ஒரு சின்ன செய்தி படிக்கிற நேரத்தில் தலையை நிமிர்த்திக் கம்பீரமாய் ஒரு பார்வை. பின் ஆசுவாசம். பின் தலைநுழைப்பு. ஒரு 'ஜர்’ என்ற உறிஞ்சல் இல்லை. ஒரு சத்தம் இல்லை. ஐந்து நிமிடங்களில் தொட்டி காலியாகி இருக்க வேண்டும். தடித்த நாவை நீட்டி நாசித் துவாரங்களைச் சுத்தம் செய்துகொண்டது. அவன் எழுந்து வெற்றிலைச் சாறைத் துப்புகிற மாதிரி வாசலுக்கு வந்தான். ஓர் ஓரக்கண்ணில் தொட்டியைப் பார்த்தான். தொட்டி சுத்தமாய்க் காலியாகி இருந்தது.
கொஞ்சம் வியப்புடன் வெற்றிலை எச்சிலைத் துப்பாமல் விழுங்கிவிட்டு உள்ளே வந்தான்.
மாடு மறுபடியும் அமர்ந்துகொண்டது. நிமிர்ந்த தலையும், திமிலுமாய், வாய் லேசாய் அசை போட்டுக்கொண்டிருந்தது. திடீரென்று பக்கத்தில் வந்து நின்ற எச்சில் இலை நாயை வளைந்த கொம்பை ஆட்டி மிரட்டி விரட்டியது. அந்தக் கொம்பைப் பார்த்தால் அவனுக்கு உள்ளூர பயமாக இருந்தது. குத்தினால் குடல் மாலையாய்த்தான் வெளியில் வரும்.
இந்த நேரத்தில் எதிர் வீட்டுக் குழந்தைகள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு வெளியில் ஓடிவந்தன. துரத்தல் வேகத்தில் திசை புரியாமல் சின்னக் குழந்தை மாட்டுக்குப் பக்கத்தில் ஓடிவிட்டது.
அவன் கை கால் பதற, கையிலிருந்த பேப்பர் பக்கம் பக்கமாய்க் கீழே சிதற எழுந்து வாசலுக்கு ஓடினான். குழந்தை அதற்குள் மாட்டுக்கால் இடறி அதன் மேலேயே விழுந்துவிட்டது.