Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoruthi
Innoruthi
Innoruthi
Ebook164 pages1 hour

Innoruthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580126705120
Innoruthi

Read more from Ra. Ki. Rangarajan

Related to Innoruthi

Related ebooks

Reviews for Innoruthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoruthi - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    இன்னொருத்தி

    Innoruthi

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அன்புக்குப் பஞ்சம்-ஆசைக்குத் தஞ்சம்

    2. எப்ப சார் கல்யாணம்?

    3. வேண்டாங்க... அதெல்லாம் வேண்டாங்க....

    4. ஜன்னலுக்கு உள்ளே குதி!

    5. மதுன்னு பேர், அங்கிள்.

    6. கண்ணாடி ரொம்ப அழகாயிருக்கும்.

    7. எல்லாரையும் கூப்பிடுங்க.

    8. நீ ஒருத்தன்தான் ஸ்ட்ராங் ஃபெலோ

    9. போனை வை கீழே!

    10. கொஞ்ச நேரம்... கொஞ்ச நேரம்...

    11. எந்தப் பெண்ணுக்காகக் காத்திருந்தேனோ...

    12. போய் வா, மது!

    13. சை!

    1. அன்புக்குப் பஞ்சம்-ஆசைக்குத் தஞ்சம்

    வேடிக்கைதான். விசாலியின் புகைப்படத்தை மறுபடியும் ஒருமுறை உள்ளங்கையில் வைத்து லேசாக அசைத்துப் பார்த்தேன்.

    நெற்றியின் மீது கொக்கி மாதிரி வளைத்து கவிந்திருக்கும் அந்த ஒற்றைக் கூந்தல் சுருள் காற்றிலே பறக்கிற மாதிரி ஓர் அழகான பிரமை ஏற்பட்டது.

    நான் அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டு அவள் தலையில் பூச்சரத்தைச் செருகிக் கொண்டிருக்கிறேன்.

    அர்த்தமுள்ள, ஸிக்னிஃபிகன்ஸ் உள்ள புகைப்படம் தான். தெரிந்துதான் அனுப்பியிருக்கிறான் ராதாகிருஷ்ணன்.

    அப்போது நான் பின்புறமிருந்ததால் அவள் முகத்தைக் கவனிக்க முடியவில்லை. இப்போது ஆராய்கிறேன். ஈரக் கசிவுடன் மினுமினுத்தபடி கொஞ்சமாய்த் திறந்திருக்கும் செக்சியான உதடுகள். மொட்டுப் போன்ற மோவாய். ஓவலான. ஆனால் கோரமாய்க் கோணிக் கொண்டிராத-முக அமைப்பு. கறுப்பு-வெள்ளைப் புகைப்படத்திலேயே கூடக் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்குச் சிவப்பு நிறம்.

    இவ்வளவையும் கவனித்தவன் இன்னொன்றையும் கவனித்தேன். அந்த முகத்தில் கல்யாணப் பெண்களின் குதூகலத்தைக் காணோம்.

    ஏன் விசாலி, ஏன், என்று அன்று முதல் இன்றுவரை தினம் தினம் நான் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்....

    நார்தா உள்ளே வந்து, ஃபைவ் தர்ட்டிக்குக் கான்ஃபரன்ஸ் இருக்கு சார், என்று என் அருகில் நின்று ஞாபகப்படுத்திவிட்டு, தேவைக்கு மேல் ஒரு வினாடி அதிகமாகவே காத்திருந்தாள். சாரதா என்கிற பெயரை வேண்டுமென்றே 'நார்தா' என்று பண்ணிக் கொண்டிருப்பவள். அது ஒரு கவர்ச்சி என்று எண்ணம். மெல்லிய மல்லிகை செண்ட் அவள் பிளவுசிலிருந்து என் நாசிக்கு வந்தது. கண்களில் எப்போதும் 'ஐ ஆம் ஹியர்' என்கிற ஓர் அழைப்பு. மங்களூர் ஃபாக்டரியிலிருந்து இங்கே மாற்றலாகி வந்திருப்பவள். அங்கே மேலதிகாரியை இப்படிக் கவர் பண்ணிப் பழக்கப்பட்டிருப்பாளோ என்னவோ, எனக்கு அது ஜீரணிக்கக் கஷ்டமாயிருந்தது. ஆகவேதான் முந்தைய செக்ரடரிகள் என் அறைக்குள்ளேயே இருப்பது வழக்கமாயினும், நார்தாவை வெளியே பொது ஹாலில் மற்றக் குமாஸ்தாக்களுடன் இருக்கும்படி ஏற்பாடு பண்ணி விட்டேன்.

    தாங்க் யூ என்றேன். அவள் தன் லிப்ஸ்டிக் உதடுகளைக் குவித்து, முத்தமிடுகிற மாதிரி ஒரு புன்னகையைச் செய்து விட்டு வெளியேறினாள்.

    லஞ்ச் டயம் முடிந்ததற்கான மணி அடித்தது. நாற்காலிகள் இழுத்துப் போடப்படும் ஓசைகளும், டைப்ரைட்டர்களும் அலமாரிகளும் திறக்கப்படும் சத்தங்களும் கேட்டன.

    இனி என் சொந்தப் பிரச்னைகளுக்கு இடமில்லை. ஆபீஸ் வேலையைத் தொடரவேண்டும்.

    ஒரு பெருமூச்சுடன் வெளியே பார்த்தேன்.

    சாந்தியிலிருந்தும் பிளாசாவிலிருந்தும் தேவியிலிருந்தும் மாட்னி டிக்கட் கிடைக்காத கூட்டம் வெளி வந்து மவுண்ட் ரோடின் இதர ஜன வெள்ளத்துடன் சங்கமித்துக் கொண்டிருந்தது- அவைகளுக்கு நேர் எதிர்ச் சாரியில், ஆறுமாடிக் கட்டிடத்தின் நாலாவது ஃப்ளோர் மொத்தத்தையும் எங்கள் கிராண்ட் பெயின்ட்ஸ் அலுவலகம் (அட்மினிஸ்ட்ரேஷன்) ஆக்கிரமித்திருந்தது. மவுண்ட் ரோடைப் பார்த்தாற்போல விசாலமான அறை என்னுடையது. பெரிய கண்ணாடி ஜன்னலுக்கு அருகே என் பிரம்மாண்டமான மேஜையைப் போட்டுக் கொண்டிருந்தேன். என் பின்புறம் கரும்பலகையில் ஸேல்ஸ் சார்ட் மின்னியது. வலப்பக்கமும் இடப்பக்கமும் டெலிபோன்கள்.

    நண்பன் ராதாகிருஷ்ணனின் கடிதத்தையும் அவன் அனுப்பிய எங்கள் புகைப்படத்தையும் மேஜைக்குள் வைக்கப் போனேன்.

    கடிதத்தின் வரிகள் மீண்டும் கண்களில் பட்டன.

    டியர் பாலு. உன் திருமணத்தின் முதலாவது ஆனிவர்ஸரிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.... உன் கல்யாணத்தின்போது நான் எடுத்த படங்களில் ஒன்றை மட்டும் இந்த அக்கேஷனுக்காகவே வைத்திருந்தேன். அதை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். அதன் ஸிக்னிஃபிகன்ஸ் உனக்குப் புரியுமென்று நினைக்கிறேன்...

    முதல் ஆனிவர்ஸரி!

    காலையில் ஆபீசுக்குப் புறப்படுகிறபோது விசாலி எதுவும் சொல்லவில்லையே? காரில் என் பக்கத்தில் எவர்சில்வர் தூக்கை வேலைக்காரன் கொண்டுவந்து வைத்தபோது, சரியாய் வை. விழுந்துவிடப் போகிறது என்று அவனிடம் சொல்லிவிட்டு வெராந்தாவில் நின்று கொண்டு வழியனுப்பினாளே தவிர, இன்று நமக்குக் கல்யாணமாகி முதலாவது வருஷ பூர்த்தி என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே? சொல்லியிருந்தால், ரெடியாயிரு. நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன். கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, டிரைவ்- இன்னுக்குப் போகலாம். பிறகு ஏதாவது பிக்சர், என்று சொல்லியிருப்பேனே?

    அல்லது ஒருவேளை, திருமண ஆனிவர்ஸரி என்று தெரிந்திருந்தும் என் வாயால் அதைச் சொல்லவேண்டும் என்று ஆசையாய் எதிர்பார்த்து இருந்திருப்பாளோ? நாம்தான் அவள் மனசை உடைத்துவிட்டு வந்து விட்டோமோ?

    விரக்தியாகச் சிரித்துக்கொண்டேன். டேய் பாலு! இந்தக் கனவு உலகத்திலிருந்து என்றைக்குத்தான் நீ பிரத்தியட்ச உலகத்துக்கு வரப்போகிறாயோ? விசாலிக்கு அந்த மாதிரியான ஆசைகள் உண்டு என்று நீ நிஜமாகவே, நம்புகிறாயா?

    புகைப்படத்தை மறுபடி பார்த்தேன்.

    மாப்பிள்ளை! கல்யாணப் பெண்ணுக்கு உங்க கையாலே பூ வையுங்கோ! என்று யாரோ ஒருவர் குரல் கொடுத்ததும், இன்னொருவர் என்னிடம் ஒரு கட்டு மல்லிகைப் பூவைக் கொண்டுவந்து தந்ததும், விசாலிக்கு என் கையால் பூச்சூடியதும், ‘எப்படிப்பட்ட மகத்தான தியாகம் செய்து விட்டோம்!' என்று என் நெஞ்சுக்குள் ஓர் அகங்காரம் எழுந்ததும், ‘அடக்கத்துடன் செய்வதற்குப் பெயர்தான் தியாகம்' என்று என்னை நானே கண்டித்துக் கொண்டதும்- எல்லாம் இப்போதுதான் நிகழ்ந்த மாதிரி இருக்கிறது. ஒரு வருடம் ஓடியிருக்கிறது. முழுசாக முன்னூற்றறுபத்தைந்து நாட்கள்!

    சே, என்ன திரும்பத் திரும்ப வீட்டைப் பற்றியே சிந்தனைகள்! வலுக்கட்டாயமாக அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் சம்பந்தப்பட்ட ஃபைல்களைப் பிரித்து வைத்துக் கொண்டேன்.

    இந்தியாவில் நண்டும் சுண்டுமாக முன்னூறு பெயிண்ட் கம்பெனிகள் இருக்கின்றன. எங்கள் 'கிராண்ட் பெயிண்ட்'ஸை முதல் நாலு ஐந்து கம்பெனிகளில் ஒன்றாகச் செய்த பெருமை எங்கள் சேர்மன் ஹெக்டாவுக்கே சேரும்.

    வாயில் ஒரு 'பைப்' எப்போதும் தொங்கியபடி இருக்கும். பாதிக் கண்களை மூடினாற்போல்தான் எப்போதும் பேசுவார், கேட்பார். முழுக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு அவர் இருந்ததை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. குரல் வெகு சன்னம். பாதி நாள் மெட்ராஸ் வாசமாகையால் தமிழ்- தொழிலாளர் கொச்சை உட்பட -தண்ணீர் பட்ட பாடு. மீதிப் பாதி நாள் மங்களூரில் உள்ள ஃபாக்டரியில் இருப்பார். 'கிராண்ட் பெயிண்ட்ஸ்' ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி. டாப் எக்ஸிக்யூடிவ்கள், டைரக்டர்கள் எல்லாம் ஹெக்டாவின் மனைவி வழி உறவினர்கள் தான். ஆனால் நல்ல வேளையாகச் சென்னை ஆபீசில் அவர்களைக் கொண்டு வந்து கொட்டாமல் மங்களூர் ஃபாக்டரியோடு நிறுத்திக்கொண்டிருந்தார்.

    நான் -என்.ஸி. பாலகோபால் -சேல்ஸ் மானேஜர்.

    சரியாய் ஐந்தரை மணிக்கு ஹெக்டா வந்துவிட்டார். நாலு டைரக்டர்கள், மார்க்கெட்டிங் மானேஜர், பர்ஸனல் மானேஜர் இப்படி மொத்தம் பன்னிரண்டு பேர் கான்ஃப்ரன்ஸ் ஹாலில் கூடியிருந்தோம். வேறு யாருமில்லை. ஸ்டெனோகூட வெளியில்தான் நின்றிருந்தாள்.

    மார்க்கெட்டிங் மானேஜர் முன்னதாகவே எனக்குத் தகவல் கொடுத்திருந்ததால், அன்று ஏதோ ஒரு பாலிசி டிசிஷன் எடுக்கப்போகிறார்கள் என்று தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் என்ன என்று தெரியவில்லை.

    வழக்கமாய் ஆபீஸ் சம்பந்தப்பட்ட மீட்டிங்குகள் நடக்கும்போது வேறு எதிலும் என் கவனம் செல்லாது, எல்லோரும் என்னை லட்சியவாதி என்று சொல்வது வழக்கம்- பாதி கிண்டலாகவும், பாதி சீரியசாகவும். எவ்வளவு தூரம் நான் லட்சியவாதியோ எனக்குத் தெரியாது. ஆனால் முக்கியமான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது மனசை எங்கோ அலைய விட்டுக்கொண்டிருப்பது வாங்குகிற சம்பளத்துக்குத் துரோகம் செய்வதாகும் என்று நினைக்கிறவன் நான். அப்படியிருந்தும் இன்று ஏனோ என் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. சிரமப்பட்டு நடவடிக்கைகளில் மனசைச் செலுத்தினேன்.

    மார்க்கெட்டிங் மானேஜர் ஜான் ஆசீர்வாதம் முதலில் எழுந்து சுருக்கமாகப் பேசினார். அவருடைய யோசனையைக் கேட்பதற்காகவே கான்ஃபரன்ஸ் கூட்டப்பட்டிருந்தது என்று பின்னால்தான் எனக்குத் தெரிய வந்தது. மனிதர் அழுத்தக்காரர். கடைசி நிமிஷம் வரையில் தனக்குச் சம்பந்தம் உண்டு என்று எந்த விஷயத்திலும் காட்டிக் கொள்ளமாட்டார். எதுவானாலும் 'டைரக்டர் சொன்னார், சேர்மன் சொன்னார்' தான். பிற்பாடு ஒன்று கிடக்க ஒன்று நேர்ந்தால் பொறுப்பைக் கழற்றிக்கொள்ளவும் இது சௌகரியமாயிருக்கும். நான் என்ன செய்யட்டும் பாலு? டைரக்டர் சொன்னதால் செய்தேன். இப்படியாயிருக்குமென்று கண்டேனா? என்று எவ்வளவோ தடவை என்னிடம் சொல்லியிருக்கிறார். நல்லபடியாக முடியும்போது

    Enjoying the preview?
    Page 1 of 1