Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ore Vazhi
Ore Vazhi
Ore Vazhi
Ebook182 pages1 hour

Ore Vazhi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580126705211
Ore Vazhi

Read more from Ra. Ki. Rangarajan

Related to Ore Vazhi

Related ebooks

Reviews for Ore Vazhi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ore Vazhi - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    ஒரே வழி

    Ore Vazhi

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நிறுத்து!

    2. ஒற்றை வரி

    3. அகல்யாவின் பரிசு

    4. தாளும் தவிப்பும்

    5. உறவு முறிந்தது

    6. முட்கள்

    7. எங்கே?

    8. வேண்டாம்

    9. ரத்தம்

    10. தாய்

    11. போராட்டம்

    12. விடிவு

    1. நிறுத்து!

    எங்கே போய்விட்டது மாயமாய்?

    அலமாரியில் இருந்த அத்தனை பொருள்களும் கட்டில் மீது இரைந்து கிடந்தன. வளையல்களும் ரிப்பன்களும், தாவணிகளும் சோளிகளும், சந்தனப் பெட்டிகளும், சாக்லேட் டப்பாக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து உறவாடி கடைசி நாள் கண்காட்சி போல் அலங்கோலத்தின் சிகரத்தை அடைந்திருந்தன.

    அகல்யாவின் நெற்றியில், கேசத்தின் ஓரமாக முத்து முத்தாய் வியர்வை அரும்பிற்று.

    ஏண்டி மீனாம்பா, தெரியவே தெரியாதென்று ஒரேயடியாய்ச் சாதிக்கிறாயே? நீ பார்க்கவில்லை. அந்தக் கல்யாணத்துக்குப் பரிசு கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்த பட்டுச்சோளித் துண்டை? என்று மூன்றாம் தடவையாக வேலைக்காரியைக் கேட்டாள் அகல்யா.

    இல்லீங்கம்மா! என்னம்மா அது பொட்டலம்னு நேத்துக் கேட்டேன். உனக்கு ஒண்ணுமில்லை, சும்மா இருன்னு கோவிச்சிக்கிட்டீங்க, நமக்கென்னாத்துக்கு...

    சரி, சரி, சரி! பொலு பொலுவென்று ஆரம்பித்து விடாதே!

    ‘சீக்கிரம் அகல்யா, சீக்கிரம். உன் கார்த்திகேயன் எந்த நிமிடமும் புறப்பட்டு விடுவான்.’ உள்ளம் பறந்தது.

    தற்செயலாய்த் தெரிந்தது உருவம் நிலைக் கண்ணாடியில். பாழ்! பாழ்! அலங்காரங்கள் அத்தனையும் பாழ்! ஆசைகள் அத்தனையும் பாழ்! படுக்கையில் இருக்குமோ? உதறு! உதறு! ஐயோ,ஏனிந்தப் பதட்டம்! போகிற வழியில் வேறொரு துண்டு வாங்கிக்கொண்டால் போயிற்று. முடியாது, இனி நேரமில்லை. கீழே யார் சிரிப்பது? அண்ணாவா? ஆச்சரியம்தான். சிரிக்கக் கூடத் தெரியுமா அவனுக்கு?

    கணீரென்று கேட்கும் குரல் கார்த்திகேயனுடையது. கீரல் இல்லாமல் மழுங்கல் இல்லாமல் கற்கண்டுத் துண்டுகளாகப் பேசக் கூடியவன் என் கார்த்திகேயன்.

    தூக்கி எறி எல்லாவற்றையும் அலமாரிக்குள்ளேயே! சனியன்கள்!

    மீனாம்பா! இதோ இங்கேயே இருக்கிறது! என்று அகல்யா கூவினாள்.

    அவள் கையில், பிரித்த தாவணியொன்றின் மடிப்புக்குள்ளே அந்தச் சோளித் துண்டு மடங்கிக் கிடந்தது.

    வேலைக்காரி சிரித்தாள்.

    ***

    இரண்டாவது கப் என்றபடி ஸ்ரீராம் நிதானமாகக் காப்பியை ஊற்றினான் பூச்சாடிக்குள். பிறகு கார்த்திகேயன் பக்கம் திரும்பி, அப்படியானால் கோயமுத்தூர் போகத் தயார் என்கிறாய்? என்று கேட்டான்.

    காப்பி நன்றாயிருக்க வேண்டுமானால் ஒன்று அம்மா போட வேண்டும். அல்லது மனைவி தயாரிக்க வேண்டும் என்றான் கார்த்திகேயன்.

    சமையற்காரக் கிழவர் நடுங்கிக்கொண்டு முன்னே வந்தார். உள்ளே திரும்பியபோது அவர் கையில் பீங்கான் கோப்பைகளும் தட்டுகளும் ‘ணங்ணங்’ என்று தாளமிட்டன.

    ஸ்ரீராம், நீ இப்படி ஒண்டியாக...

    கேட்டதற்குப் பதில் சொல்லு. கோயமுத்தூர் போகிறாயா?

    அரும்பிய முறுவலைப் படரவிட்டான் கார்த்திகேயன், வேலை கிடைப்பதென்றால் சகாராவுக்குக் கூட நான் போகத் தயார், ஸ்ரீராம்.

    நல்லது. லட்சுமிபதிக்குக் கடிதம் தருகிறேன். நாளைக்கே நீ போய்ப் பார்த்து... அப்பப்பா! கொஞ்சம் மெதுவாகத்தான் படியிறங்கி வரக்கூடாதா அகல்யா?

    கார்த்திகேயன் நிமிர்ந்து பார்த்தான். டம்பப்பையைச் சுழற்றிக் கொண்டு நின்ற அகல்யாவின் தோற்றம் அவன் விழிகளுக்கு விருந்தாய் அமைந்தது.

    சாட்டையிலிருந்து கழன்ற பம்பரமாய்க் கிறங்கிற்று அகல்யாவின் இதயம். ‘வெற்றி உனக்கே அகல்யா, வெற்றி உனக்கே. பார், இது போலக் கார்த்திகேயன் என்றைக்காவது உன்னைக் கனிவுடன் நோக்கியதுண்டா?’

    டிரைவரை எங்கே அனுப்பியிருக்கிறாய் அண்ணா? மணி ஐந்தாகப் போகிறது.ஓர் இடம் பாக்கியில்லை. தேடியாகி விட்டது. என்ன அண்ணா செய்வது? அகல்யா ரோஜா நிறக் கைக் குட்டையால் நெற்றியை ஒற்றிக் கொண்டே கார்த்திகேயனை ஓரக் கண்ணால் பார்த்தாள்.

    எங்கே தொலைந்தானோ? ஸ்ரீராம் சோபாவின் குறுக்கே படுத்துவிட்டான்.

    அப்படி என்ன அகல்யா அவசரம்? என்று கார்த்திகேயன் முதல் தடவையாக வாயைத் திறந்தான்.

    அகல்யாவின் புருவங்கள் பாம்பாக நெளிந்து வளைந்தன. திருநந்தியூருக்குப் போகவேண்டும். சினேகிதிக்குக் கல்யாணம் ஆறு மணிக்கு வரவேற்பு... கார்த்திகேயன், உங்களுக்குத்தான் கார் ஓட்டத் தெரியுமே? கொஞ்சம்...

    மன்னித்துக்கொள், அகல்யா. கார்த்திகேயன் உடனேயே வெட்டிவிட்டான் பேச்சை. பதினைந்து மைல் போய்வர நேரமாகும். ராத்திரி நான் திரும்புகிறவரையில் என் அம்மா வேறு சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பாள்.

    கோயமுத்தூருக்கு உன் அம்மாவையும் - சடக்கென்று சோபாவில் எழுந்து உட்கார்ந்து கொண்டான் ஸ்ரீராம், அகல்யா! வருவது யார், பார்!

    சாளரத்து வழியாக நோக்கிய அகல்யாவின் கண்களும் வியப்பை வெளிப்படுத்தின. புண்ணியகோடி! உன் மாமனார் அண்ணா!

    ஸ்ரீராமின் முகம் சிடுசிடுவென்று மாறிற்று. மேசைக் கண்ணாடிப் பரப்பின் மீது கிடந்த பத்திரிகைத் தாள் கைகளில் ஏற முகத்தில் கடுகடுப்புப் படர்ந்தது.

    புத்தக அலமாரியருகே குனிந்து மண்டியிட்டுக் கொண்டாள் அகல்யா. ஒழுங்காக இருந்த புத்தக வரிசைகளைக் கலைப்பதில் முனைந்தன அவள் கரங்கள்.

    வாருங்கள். பார்த்து நாளாயிற்று! கார்த்திகேயன் ஒருவன் தான் அவரைப் புன்சிரிப்புடன் வரவேற்று, சோபாவின் ஒதுக்கமாய் நகர்ந்து இடம் காட்டினான்.

    புண்ணியகோடிக்கும் கம்பீரமான தோற்றத்துக்கும் என்றுமே உறவு இருந்திருக்காது. இப்போது அவமானத்தினால் அந்த நாவரையடி உருவம் இன்னும் குன்றிச் சிறுத்தது.

    சோபாவின் இடுக்கில் ஒடுங்கிப் போன புண்ணியகோடி, காலையில் ரொம்ப நேரம் வரையில் நீங்கள் வருவீர்களென்று காத்திருந்தோம். மாப்பிள்ளை என்றார் மெலிந்த குரலில் மாப்பிள்ளை பதில் சொல்லவில்லை.

    குழந்தைக்கு அத்தை நீயாவது வரக்கூடாதாம்மா அகல்யா? புண்ணியகோடி புத்தக அலமாரி மூலைக்கு விண்ணப்பமிட்டார்.

    நேரமில்லை என்ற பதில் நறுக்கென்று வந்தது.

    ஆண்டு நிறைவு வருஷா வருஷமா கொண்டாடப் போகிறோம்? தலைச்சன் குழந்தை. நீகூட இப்படிப் பாராமுகமாகி விட்டாயே என்று லலிதா பிழியப் பிழிய அழுதாள். குழந்தைக்கும் உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள்? புண்ணியகோடி மேல் துண்டால் கண்ணைத் துடைத்துக் கொண்டார். தரித்திரப்பாவி நான்தான் இருக்கிறேன் - ஒன்றே கால் ரூபாய்க்குச் சொக்காய் வாங்கிப் போடுவதற்கு மேல் எதுவும் கையாலாகாத கபோதியாய்.

    ஸ்ரீராமின் பத்திரிகையில் இன்னொரு பக்கம் புரண்டது.

    புண்ணியகோடி எழுந்து மருமகனின் அருகே சென்று நின்றார்.

    மாப்பிள்ளை என்று கெஞ்சினார் அவர். பஞ்சவர்ணக் கிளி மாதிரி பெண்டாட்டி. கொஞ்சப் பிடிக்கவில்லை. அது அவள் பண்ணிய பாவம். தங்க விக்கிரகம் மாதிரி இருக்கிறதே குழந்தை, அது என்ன பண்ணிற்று? ஒரு தரம் வந்து பார்க்கக் கூடாதா அதன் முகத்தை? நீங்கள் செய்வது நன்றாகவேயில்லை…

    சுத்தமாய்! ஸ்ரீராம் உறுமினான்.

    வெடுக்கென்று அவன் கையிலிருந்த பத்திரிகையைப் பிடுங்கி எறிந்தார் புண்ணியகோடி, வயிற்றைப் பற்றிக்கொண்டு எரிகிறது எனக்கு! வேடிக்கையா பண்ணுகிறீர்கள்? சப்ரமஞ்சக் கட்டிலில் சீராட வேண்டிய என் செல்வம் கிழிசல் பாயில் புரண்டு புரண்டு அழுகிறாள். தங்கத் தொட்டிலில் தவழவேண்டிய குழந்தை தரையைத் தடவுகிறது ஒற்றைச் சோற்றுப் பருக்கைக்காக! சோபாவில் சாய்ந்து கொண்டு இங்கே கிண்டலா பண்ணுகிறீர்கள்?

    கார்த்திகேயன் அவர் தோளைப் பற்றிச் சாந்தப்படுத்த முயன்றான். அவனை உதறி அப்பால் நகர்ந்தார் புண்ணியகோடி, விடுமய்யா! இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம்!

    பார்ப்பதையெல்லாம் வெளியே போய்ப் பாருங்கள் என்றான் ஸ்ரீராம்.

    வெளியே என்ன ஐயா, கோர்ட்டிலேயே பார்த்திருப்பேன் என்றைக்கோ! அந்த மகாபாவி சண்டாளி, என் வயிற்றிலே பிறந்தவளா அவள்? ஒரு கையெழுத்து. ஒரே ஒரு கையெழுத்துப் போடு, வக்கீல் நோட்டீசு விட்டு இவர்கள் அத்தனை பேர் மானத்தையும் வாங்கிவிடுகிறேன் என்று ஒன்றரை வருஷமாய்க் கெஞ்சுகிறேன். மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாளே பழிகாரி!

    புண்ணியகோடி, நீங்கள் பெரியவர்… என்று கார்த்திகேயன் மீண்டும் இதமாகப் பேசப் பார்த்தான்.

    அட சரிதானையா! இவனுக்குத் தோழன்தானே நீ? என் பக்கமா பேசுவாய்?... நாளைக்கே முதல் காரியமாய், இவன் பெண்டாட்டியையும் குழந்தையையும் இதே வீட்டு வாசலில் கொண்டு வந்து தள்ளிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்! ஸ்ரீராம மகாராஜாவின் யோக்கியதையைப் பார்த்துச் சிரிக்கட்டும் ஊரெல்லாம்!

    புண்ணியகோடி வெளியேறிவிட்டார். கார்த்திகேயன் கூடவே சென்றான் வாசல்வரை. அகல்யா அலமாரியை மூடினாள். ஸ்ரீராம் கீழே கிடந்த செய்தித் தாளைக் குனிந்து எடுத்துக்கொண்டான்.

    கார்த்திகேயன் திரும்பி வந்தபோது அறை சலனமற்று இருந்தது.

    ஐயையோ! மணி ஐந்தே முக்கால்! கார்த்திகேயன் கொஞ்சம் தயவு பண்ணுங்களேன்...

    சரி, புறப்படு என்றான் கார்த்திகேயன் அகல்யாவே எதிர்பாராத விதமாய். ஸ்ரீராம், இவளை அழைத்துக்கொண்டு போய் வருகிறேன்.

    சட்டைப் பையிலிருந்து காரின் சாவியை எடுத்து மேஜை மீது போட்டான் ஸ்ரீராம்.

    காரோட்டும் போது பேசக்கூடாது என்ற கொள்கை உங்களுக்கும் உண்டா? கார்த்திகேயனின் தலைக்கெதிரே இருந்த சிறு கண்ணாடியைத் தன்புறம் திருப்பிப் பார்த்துக்கொண்டாள் அகல்யா.

    ஊம் என்று கடிந்தபடி அவளை ஓரக்கண்ணால் நோக்கினான் கார்த்திகேயன்.

    மாலைச் சூரியனின் மஞ்சள் வெளிச்சம் பக்கவாட்டாகக் காருக்குள் புகுந்து அகல்யாவின் அலங்காரங்களுக்குக் கூர்மை கொடுத்தது. தோளில் தவழ்ந்து கொண்டிருந்த கருநீலக் காஷ்மீர் சில்க்கின் நுனிகள் இளங்காற்றில் படபடத்தன. சம்கி வேலைப்பாடு செய்த அரக்கு நிற வெல்வெட் சோளி பளபள வென்று மின்னிற்று. கூந்தலின் ஒற்றை இழை காதின் மேற்புறத்தில் பேசும் ரகசியத்தைக் கேட்க விரும்பியது போல் கீழ்ப் பக்கத்து மீன் தோடு பளிச்சிட்டு நின்றது. ஓபல் நெக்லேசின் பட்டுக் சுருங்குஞ்சம் முதுகைக் கொஞ்சுவதற்குப் பதிலாக மார்புப்புறம் எட்டிப் பார்த்தது. சோளியின் முன்புறத்து மேல் முடிச்சு சிவந்த கழுத்தை நெருடிற்று வலது மணிக்கட்டைப் பிரேஸ்லெட் கடிக்க, இடது மணிக் கட்டை சிறிய கைக்கடியாரம் கவ்விக் கொண்டிருந்தது. பீர்க்கங்காய்க் கூட்டில் செய்த டம்பப்பை மடியில் விளையாடிற்று.

    கல்யாணப் பெண் திருநந்தியூரில் இருப்பவளா? இங்கே பக்கத்தில் இருப்பவளா? என்று சிரித்தான் கார்த்திகேயன்.

    அகல்யாவின் நெஞ்சு ஒருமுறை

    Enjoying the preview?
    Page 1 of 1