Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aangal Sevvai Pengal Velli
Aangal Sevvai Pengal Velli
Aangal Sevvai Pengal Velli
Ebook90 pages32 minutes

Aangal Sevvai Pengal Velli

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆங்கில மொழியில் Sympathy, Empathy என்று இரண்டு சொற்கள் இருக்கின்றன. இரண்டுமே பொதுவாக ‘அனுதாபம் காட்டுவது’என்பதைத்தான் குறிக்கின்றன, என்று வெகுநாள் வரையில் நினைத்திருந்தேன். பிறகுதான் அகராதியில் தெரிந்தது -
‘Sympathy’என்பது அடுத்தவரிடம் அனுதாபம் காட்டுவது; ‘Empathy’என்பது அடுத்தவரின் நிலையில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று உணர்வது. இந்த புரிந்துகொள்ளுதல் இருந்துவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். குறிப்பாக, ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய உரசல்கள் ஒழிந்துவிடும்.
தான் நினைப்பதையும், செய்வதையும் போலவே பெண் இருப்பாள், இருக்க வேண்டும் என்று ஆணும், தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே ஆண் இருப்பான், இருக்க வேண்டும் என்று எந்த பெண்ணும் நினைப்பது தவறான போக்கு என்று ‘Men are from Mars Women are from Venus’என்ற புத்தகம் கூறியது. இருபாலரும் இரு வேறு தன்மைகள் கொண்டவர்கள் என்பதை மனத்தில் இருத்தி வைத்தால் ஆண் - பெண் உறவுகள் சீர்படும், என்ற அந்த புத்தகத்தின் தத்துவத்தை ஒட்டி இது எழுதப்பட்டது.
-ரா. கி. ரங்கராஜன்
Languageதமிழ்
Release dateJun 19, 2020
ISBN6580126705463
Aangal Sevvai Pengal Velli

Read more from Ra. Ki. Rangarajan

Related to Aangal Sevvai Pengal Velli

Related ebooks

Reviews for Aangal Sevvai Pengal Velli

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aangal Sevvai Pengal Velli - Ra. Ki. Rangarajan

    http: //www.pustaka.co.in

    ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி

    Aangal Sevvai Pengal Velli

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http: //pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    முன்னுரை

    ஆங்கில மொழியில் Sympathy, Empathy என்று இரண்டு சொற்கள் இருக்கின்றன. இரண்டுமே பொதுவாக ‘அனுதாபம் காட்டுவது’என்பதைத்தான் குறிக்கின்றன, என்று வெகுநாள் வரையில் நினைத்திருந்தேன். பிறகுதான் அகராதியில் தெரிந்தது -

    ‘Sympathy’என்பது அடுத்தவரிடம் அனுதாபம் காட்டுவது; ‘Empathy’என்பது அடுத்தவரின் நிலையில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று உணர்வது. இந்த புரிந்துகொள்ளுதல் இருந்துவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். குறிப்பாக, ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய உரசல்கள் ஒழிந்துவிடும்.

    தான் நினைப்பதையும், செய்வதையும் போலவே பெண் இருப்பாள், இருக்க வேண்டும் என்று ஆணும், தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே ஆண் இருப்பான், இருக்க வேண்டும் என்று எந்த பெண்ணும் நினைப்பது தவறான போக்கு என்று ‘Men are from Mars Women are from Venus’என்ற புத்தகம் கூறியது. இருபாலரும் இரு வேறு தன்மைகள் கொண்டவர்கள் என்பதை மனத்தில் இருத்தி வைத்தால் ஆண் - பெண் உறவுகள் சீர்படும், என்ற அந்த புத்தகத்தின் தத்துவத்தை ஒட்டி இது எழுதப்பட்டது.

    -ரா. கி. ரங்கராஜன்

    ***

    1

    அப்போது எங்கள் பெண் லாரென் பிறந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். நானும், என் மனைவி பான்னியும் சலித்துக் களைத்துப் போய் விட்டோம். ராத்திரி பூரா லாரென் எழுந்துகொண்டு அழுது எங்களையும் எழுப்பிக்கொண்டிருந்தாள். சரியான தூக்கமே கிடையாது எங்களுக்கு. பிரசவத்தில் பான்னி ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டாள். தாள முடியாத வலி இருந்து கொண்டிருந்தது. அதற்காக வலி நிவாரண மாத்திரை விழுங்கி வந்தாள். அவளால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை.

    அவளுக்கு உதவியாக நான் ஐந்து நாள் வீட்டிலேயே தங்கியிருந்தேன். கொஞ்சம் தேவலைப்போல் தோன்றியதால் ஆறாம் நாள் வேலைக்குப் போய் விட்டேன்.

    அன்றைக்குப் பார்த்து அவளுடைய வலி நிவாரண மாத்திரை தீர்ந்துவிட்டது. என் ஆபீசுக்குப் ஃபோன் செய்து எனக்கு சொல்லியிருக்கலாம். அதை விட்டு விட்டு, அப்போது என் வீட்டுக்கு வந்திருந்த என் தம்பியிடம் மாத்திரை வாங்கி வரும்படி சொன்னாள்.

    ஆனால் அவன் அதை மறந்து விட்டு எங்கோ போய்விட்டான்.

    நாள் முழுதும் அவள் நரக வேதனைப்பட்டிருக்கிறாள் என்பதை அறியாமல் நான் பாட்டுக்குச் சாயந்தரம் வீட்டுக்கு வந்தேன். பான்னி சிடுசிடுவென்று இருந்தாள். நான் வேலைக்குப் போய்விட்டதில் அவளுக்கு எரிச்சல் என்று நான் தப்பாக எண்ணிவிட்டேன்.

    நாள் பூரா எனக்கு ஏகப்பட்ட வலி. மாத்திரை தீர்ந்துவிட்டது. அனாதை மாதிரி படுக்கையில் கிடந்தேன். ஏண்டி பாவி என்று கேட்க யாருமேயில்லை. என்றாள் பான்னி.

    என் மீது தப்பில்லை என்று காட்டிக் கொள்ளும் நோக்கத்துடன், ஏன்? எனக்கு ஃபோன் செய்ய வேண்டியதுதானே? என்றேன்.

    உங்கள் தம்பியிடம் சொன்னேன். அவர் மறந்துவிட்டார். வருவார் வருவார் என்று காலையிலிருந்து காத்துக்கொண்டிருந்தேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும் என்கிறீர்கள்? எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. எல்லாரும் என்னை அம்போ என்று விட்டுவிட்டார்கள் என்றாள் பான்னி.

    அதைக் கேட்டதும் எனக்குப் பொசுக்கென்று கோபம் வந்துவிட்டது. எனக்கும் நாள் முழுதும் ஆபீசில் சரியான வேலை. இவள் எனக்கு ஃபோன் செய்திருக்க வேண்டியதுதானே என்று கோபம் கோபமாய் வந்தது. இவள் வலியுடன் இருந்திருக்கிறாள் என்பதே எனக்குத் தெரியாது. அப்படியிருக்க, என்னைக் குற்றம் சாட்டுகிறாளே என்று கடுப்பு ஏற்பட்டது.

    வார்த்தைகள் தடித்தன. எனக்குக் களைப்பு, எரிச்சல். எங்காவது வெளியே போய்த் தொலையலாம் என்று தோன்றியது.

    கதவை நோக்கி இரண்டு அடி வைத்திருப்பேன் -

    என் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் நிகழ்ச்சி அப்போதுநடந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1