Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabalipurathil Marupadi Narasimma Pallavan
Mahabalipurathil Marupadi Narasimma Pallavan
Mahabalipurathil Marupadi Narasimma Pallavan
Ebook119 pages43 minutes

Mahabalipurathil Marupadi Narasimma Pallavan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303217
Mahabalipurathil Marupadi Narasimma Pallavan

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Mahabalipurathil Marupadi Narasimma Pallavan

Related ebooks

Related categories

Reviews for Mahabalipurathil Marupadi Narasimma Pallavan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabalipurathil Marupadi Narasimma Pallavan - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    மகாபலிபுரத்தில் மறுபடி நரசிம்ம பல்லவன்

    Mahabalipurathil Marupadi Narasimma Pallavan

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    எதற்காக வாழ வேண்டும்?

    இது, நரசிம்மன் தன்னைத்தானே கேட்டுக்கொண்ட கேள்வி.

    பட்ட காலிலே படும் என்ற மூதுரைக் கொப்ப, பட்ட பி. ஏ. பரீட்சையிலேயே அவன் பட்டுக் கொண்டிருந்தான்.

    அடி நாட்களிலே, அதாவது அப்பா கொடுத்த அடிநாட்களில் அம்மா அவனுக்குப் பரிந்துரைத்தது உண்டு.

    ஆனால் ஒரு தாயாரினால் ஆயுசுக்கும் ஒரு மகனது மக்குத்தனத்தோடு மாரடிக்க முடியுமா?

    கடைசியாக வந்த ரிஸல்ட்: டியுடோரியல் கல்லூரித் தலைமையாசிரியரிடமிருந்து.

    அவர் நரசிம்மனின் தந்தையைத் தேடிவந்து, 'உமது பிள்ளையைக் மல்யுத்தத்துக்குத் தயார் செய்யும். பிரபல மல்லனாக விளங்குவான். நல்ல 'பாடி' இருக்கிறது, நன்றாக எடை தூக்குகிறான்,' என்றார்.

    படிப்பைப் போதிக்க வேண்டியவர் 'பாடி'யைப் பற்றிப் பேசுவதன் அர்த்தம் நரசிம்மனை ஈன்றவருக்குத் தெரியவில்லை.

    அக்கம்பக்கத்து ஏழெட்டுக் குடித்தனக்காரர்களும் என்னவோ ஏதோ என்று கூடுமளவுக்கு நரசிம்மனை அவர் அன்று திட்டித் தீர்த்துவிட்டார்.

    'மக்கு நரசிம்மா, நீ வாழ்ந்ததென்ன, வாழாமலிருந்தென்ன' என்று அவன் மனக் கடலில் ஒரே புயல்.

    மருந்துக்கடைக்குப் போனான். ஒரு பாட்டில் தூக்க மாத்திரை வாங்கி கொண்டு வீடு திரும்பினான்.

    அடுத்தாற்போலிருந்த குடித்தனக்காரர்கள் அமர்க்களம் செய்து கொண்டிருந்தார்கள்.

    புளியோதரை...தயிர் சாதம்... உருளைக்கிழங்கு சிப்ஸ்... டிபன், காரியர். பிளாஸ்க்...மகாபலிபுரம்...சிவகாமியின் சபதம்...

    இப்படிப் பல வார்த்தைகள் அவன் காதுகளில் விழுந்தன.

    ‘மறுநாள் காலை மகாபலிபுரம் உல்லாசப் பயணம் போகிறார்கள் போலிருக்கிறது' என்று புரிந்தது.

    அவர்களோடு தானும் ஒட்டிக்கொண்டு மகாபலிபுரம் செல்வது. அங்கு நிம்மதியான சவுக்குத் தோப்பு ஒன்றில் உட்கார்ந்து கொண்டு ஓரொரு தூக்க மாத்திரையாக மர்லின் மன்றோ மாதிரி கொறித்து விட்டு நிம்மதியாக யாரும் காணாவண்ணம் உயிரை விடுவது என்று தீர்மானித்தான்.

    உல்லாசப் பயணக் கார் மகாபலிபுரத்தை அடைந்ததும், நரசிம்மன் தான் முக்கியமாக ஓர் உறவினரைப் பார்த்து வருவதாகச் சொல்லி விடை பெற்றுக் கொண்டான்.

    சாவதற்குமுன் சற்றுநேரம் மகாபலிபுரம் சிற்பங்களையெல்லாம் கண்ணாரப் பருகினான்.

    சவுக்குத் தோப்பின் மணற்பரப்பு இளம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது.

    தோப்பின் உள்ளே சென்றான். கஷ்ட காலம், அங்கு யாரோ ஒரு கதைப்பித்தன், சிவகாமியின் சபதம் நாவலைப் படித்துக் கொண்டிருந்தான் உரக்க.

    காரில் வந்தபோது பூராப்பூரா தனது கரகரத்த குரலில் பக்கத்துக் குடித்தனக்காரன் சோமு அதே நாவலைக் படித்துக் கொண்டிருந்தான். இப்போது இங்கு ஒருத்தனா?

    மனம் சலிப்புற்று இன்னும் கொஞ்சம் அடர்ந்த பகுதிக்குச் சென்றான். யாரும் இல்லை.

    கைக்குட்டையை விரித்துத் தரையில் போட்டு உட்கார்ந்தான்.

    தூக்க மாத்திரைகளை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டான்.

    ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். லேசாகத் தலை சுற்றியது.

    நரசிம்மா... நரசிம்மா...மக்கு நரசிம்மா, மட நரசிம்மா... போ ஓழிந்து. இந்த உலகத்திலிருந்து ஒழிந்து போ... உலகமே! உனக்கு டாடா...

    திடீரென்று அவனது மேனியில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. உடம்பில் ஒரு கொந்தளிப்பு.

    நரசிம்மா...ஏ...நரசிம்மா...என்ன காரியம் செய்கிறாய். நிறுத்து...நிறுத்து...

    நரசிம்மன் அந்தக் குரல் தன் மனத்திலிருந்து எழும்பிய குரல் என்பதை உணர்ந்தான்.

    சவுக்குத் தோப்பின் மெல்லிய மரங்கள் ஒன்றோடொன்று உரசி, கிரீச்கிரீச் என்ற ஒலியை எழுப்பிய வண்ணமிருந்தன. லேசான மந்த மாருதத்தில் மல்லைக் கடற்கரையின் துல்லிய மணல் மணிகள் உல்லாசமாக உலவி வந்த ஒலி சுநாதமாக அவன் செவிகளில் கேட்டது. காலைச் சூரியனின் பொற் கிரணங்கள் அப்போதுதான் தேர்ந்த ஒரு பொற்கொல்லரின் பட்டறையில் இருந்து பளபளப்புப் பெற்றாற்போல் சவுக்குத் தோப்பின் ஊடே புகுந்து ஜாஜ்வல்யம் செய்தன. நீலவானம் அங்குமிங்கும் மேகக் கூட்டத்தோடு இருந்தது.

    அலைகடலின் அலைகள் தங்களது ஓய்வு ஒழிச்சலில்லாதா அணிவகுப்பை நடத்திக் கொண்டிருந்தன.

    நரசிம்மன் கேட்டான்: நான் ஏன் மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும்?

    நரசிம்மா! நீ யார் தெரியுமா? தெரிந்துகொள் அதை முதலில்.

    நான் தான் மக்கு நரசிம்மன். பி.ஏ. பரீட்சை என்னும் பொல்லா அரக்கனால் துளித் துளியாக உறிஞ்சப்பட்டு உதறி எறியப்பட்டவன், உலகத்தினரின் அவமானப் பிண்டமாக...

    உன்னைக் கல்லூரியில் உன் தோழர்கள் என்னவென்று அழைப்பார்கள்?

    ஏன், நரசிம்மன் என்று அழைப்பார்கள்,

    இல்லை, யோசித்துச் சொல். செல்லமாக, கிண்டலாக...ஏதோ பெயர் சொல்லி அழைப்பார்களே... அது என்ன பெயர்...

    அது... அது... நரசிம்மன் கூச்சத்துடன் தனது சற்றே வெளிவந்த பல்வரிசையை மூடிக்கொண்டான்.

    கூச்சப்படாதே, நரசிம்மவர்மா...என்னவென்று அவர்கள் உன்னை அழைப்பார்கள்?

    பல்லவன் என்று. பல்வரிசை சற்று வெளியே எடுப்பாக இருப்பதால்...

    அவ்வளவுதானா உனக்குப் புரிந்தது? உன் பெயர் நரசிம்மன். அவர்கள் கூப்பிடுவது பல்லவன். இரண்டையும் பொருத்திப் பார். நரசிம்ம பல்லவன்! இந்தப் பிரத்தியட்சமான ஒற்றுமைகூட உன் உணர்வுக்கு எட்ட வில்லையா? போகட்டும். உனக்கு மறு ஜன்மத்தில் நம்பிக்கை உண்டல்லவா? மனிதன் திரும்பத் திரும்பப் பிறக்கிறான் என்ற தத்துவத்தை நீ நம்புபவன்தானே? இந்தப் பாரத மண்ணில்தானே பிறந்தாய் நீ?

    ஆம்.

    "அப்படியென்றால் நம்பு. நீயேதான் பல்லவ மாமன்னன். வடக்கே நர்மதை நதிவரையில் படையெடுத்துச் சென்று பொல்லாத புலிகேசியை வென்று வாதாபி நகரைத் தீக்கிரையாக்கிவந்த வாதாபி கொண்ட நரசிம்மன் நீயேதான்... உனது சாம்ராஜ்யத்தின் எல்லை. நம்பர் பத்தொன்பது, மூக்கறுத்தான் தெருவிலுள்ள இருபதடிக்கு முப்பதடி வீடல்ல. உனது

    Enjoying the preview?
    Page 1 of 1