Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ivale En Manaivi
Ivale En Manaivi
Ivale En Manaivi
Ebook145 pages1 hour

Ivale En Manaivi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466411
Ivale En Manaivi

Read more from Indhumathi

Related authors

Related to Ivale En Manaivi

Related ebooks

Related categories

Reviews for Ivale En Manaivi

Rating: 5 out of 5 stars
5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ivale En Manaivi - Indhumathi

    10

    1

    மாலை மூன்று மணிக்கெல்லாம் வெய்யில் நன்றாக இறங்கி விட்டது. வெய்யில் என்றால் சென்னை வெய்யில் இல்லை. சுளீரென்று தீட்சண்யமாய் முகத்தைத் தாக்குகிற வெய்யில் இல்லை கசகசவென்று வழிந்து வியர்வையாய் வடிய வைத்து கையடிகளையும் பின் முதுகையும் நனைக்கிற வெய்யில் இல்லை. அதை வெய்யில் என்று கூடச் சொல்ல முடியாது. கூலிங்கிளாஸ் வழியாகப் பார்க்கிற மாதிரியான வெய்யில் நிலாக்கால வானம் போல கண்களுக்கு இதமாய் இன்னும் கொஞ்சம் சூடு ஏறாதா என ஏங்க வைக்கிற வெய்யில். அந்த ஊருக்கு வந்த நாள் முதலாக இந்த வெய்யிலைத் தினமும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறான். சுரணை கெட்ட மனிதனைப் போல் இது என்ன கொஞ்சம்கூட சூடு இல்லாத வெய்யில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

    பகல் பனிரெண்டு மணிக்குக் கூடப் பொன்மாலைப் பொழுதைப் போன்றிருக்கும் வெய்யிலும், சிலுசிலுவென்று நாள் முழுவதம் உடலை வருடிக் கொண்டு போகும் காற்றும், பற்களைக் கிட்டிக்க வைக்கும் குளிர்ச்சியும், அறை ஜன்னலைத் திறக்க மாட்டார்களா என்று காத்திருந்த மாதிரி குடுகுடுவென்று உள்ளே ஓடி வரும் பனி மூட்டமும், வெண்மேகக் குவியல்களாக அவை நகருகின்ற நேர்த்தியும், வினாடி நேரத்தில் முகத்திரை விலக்கி உடனே மூடிக் கொண்டு விடுகிற முஸ்லிம் பெண் மாதிரி பனி மூட்ட விலகலில் சட்டெனத் தெரிந்து மறைகிற மலைத் தொடர்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கிற குளிர்ச்சியும் இவை அத்தனை எழிலுக்கும் பின்னணியாக, ஓயாத ஒலியாக ஊர் முழுதும் கேட்டுக் கொண்டிருக்கும் அருவிச் சத்தமும்...

    எதைத் தேடி அந்த ஊருக்கு ஓடி வந்தானோ அந்த நிம்மதி சற்றே கிடைக்கிற மாதிரித் தோன்றியது அவனுக்கு. நெஞ்சில்பட்ட ரணமும், காயமும் ஆறுகிற மாதிரி இருந்தது. கன்னத்தில் அறைந்தாற்போல் கவிதா சொன்னாளே... அந்த வார்த்தைகளின் வலியும், வேதனையும் கூட கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வருகிறார் போல் இருந்தது. குறைகிற மாதிரித்தான் இருந்ததே தவிர எதுவும் குறையவில்லை என்பதை அவன் உணர்ந்தே இருந்தான். எதுவும் குறையாது. எதையும் அவனால் மறக்க முடியாது. மறக்க வேண்டுமென்றுதானே அர்த்த ராத்திரியில் அறையைக் காலி செய்து அந்தச் சென்னை மண்ணை விட்டு ஓடி வந்திருக்கிறான். யாரிடமும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல் வேலை செய்து வந்த பத்திரிகை அலுவலகத்திற்குக் கூட அறிவிக்காமல் தன் சேமிப்புப் பணத்தையும், பெட்டி பெட்டியாக வைத்திருந்த புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டவன்தான். எங்கெங்கோ அலைந்து, ஊர் ஊராகத் திரிந்து எங்கும் தங்கப் பிடிக்காமல், எந்த ஊரிலும் இருப்புக் கொள்ளாமல் கடைசியாகத்தான் எவ்வித ஆரவாரமுமற்று, அமைதியாய், அழகாய் இருந்த இந்த மலையடிவாரக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவனென்றும், அந்தக் கிராமத்துச் சூழலை அடிப்படையாக வைத்துக் கதை எழுதப் போவதாகவும் சொல்லி சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக ஒரு வீடு பார்த்துக் கொண்டான். நாலைந்து அலுமினியப் பாத்திரங்களும், திரி - ஸ்டவ்வும், சிறிது மளிகை சாமான்களும் வாங்கிக் கொண்டான். நிறைய பசி தாங்கி அதற்கு மேல் தாங்க இயலாது என்கிற போது மட்டும் ஏதோ கொஞ்சம் சமைத்துக் கொண்டான். அதற்கு சமையல் என்று பெயரில்லை. இருத்தலுக்காகச் செய்து கொண்ட ஏதோ ஒன்று.

    கவிதா அப்படிச் சொன்ன பிறகுதான் இனிமேலும் கூடத் தன் இருத்தலுக்கு ஏதும் அவசியம் இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்துக் கொண்டான். தற்கொலை முயற்சிக்கான எண்ணங்களெல்லாம் கூட மனதில் வந்து போயின. ஒரு பெண்ணிற்காகத் தற்கொலை செய்து கொள்வது மகா அபத்தம் என்று அவன் அடிமனது எச்சரித்தது. ஆனால் அதை மீறின கவிதைகளில் உருகிய அந்த எட்டயபுரத்துக் கவிஞன்தான் ‘காதல் போயின் சாதல்’ என்றான். ‘கண்ணம்மா... கண்ணம்மா’ எனக் கதறினான். கவிதைகளாக எழுதிக் கரைந்தான். ஆனாலும் அந்தக் கண்ணம்மாவிற்காக அவன் சாகவில்லை. சாகாவரம் பெற்ற அந்தக் கவிஞனாலும் சாக முடியவில்லை. மதம் பிடித்த யானை தூக்கிப் போட்டு மிதித்துத்தான் செத்தானே தவிர தானாகத் தூக்குப் போட்டுச் சாகவில்லை. தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதே போல் எந்த யானையாவது தன்னையும் தூக்கிப் போட்டு மிதிக்கட்டும் என்று தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டான். தற்கொலை எண்ணத்தைத்தான் கைவிட்டானே தவிர கவிதா என்கிற யானை அவனைத் தினமும் தூக்கிப் போட்டுத் தன் காலடியில் மிதித்துத் துவைத்துக்கொண்டேதானிருந்தது. சாப்பிட முடியாமல் தூங்க விடாமல் சித்ரவதை செய்தது. காதருகில் வந்து மணிக்கணக்கில் பிளிறிற்று.

    ‘நானா... காதலிக்கிறதா...? அதுவும் உங்களையா...? மைகுட்நெஸ்!’

    ‘நானா... காதலிக்கிறதா...’

    ‘காதலிக்கிறதா...? உங்களையா...?’

    ‘உங்களையா...? உங்களையா...!"

    அந்த யானையின் பிளிறல் அவன் நெஞ்சைப் பிளந்தது. அதுவும் இந்த ‘உங்களையா...?’ அம்பு தைத்த மாதிரி வலியெடுக்க வைத்தது. ‘உங்களையா? உங்களையா...?’ மீண்டும் மீண்டும் தைத்து ரணப்படுத்தி ரத்தம் சொட்ட வைத்து, புரையோடிப் போய், எப்படிச் சொன்னாள் அவள்...? அதைச் சொன்ன அவளது முகம்... அதில் தெரிந்த இகழ்ச்சி... கண்களில் எட்டிப் பார்த்த ஏளனம்... இதழ் கோடி நமுட்டுச் சிரிப்பின் நையாண்டி...

    அன்றுபோல் இன்றும் துடித்துப் போனான். அதை நினைக்கிற போதெல்லாம் துடித்தான். நினைத்து நினைத்துத் துடித்தான். கவிதா... எப்படிச் சொன்னாய்...? உன்னால் எப்படிச் சொல்ல முடிந்தது? கவிதை ரசிக்கிற பெண்ணால் கற்பனையாகக் கூட அப்படிச் செல்ல முடியாதே...

    இதழ் கோடிச் சிரிப்பும், ஏளனமும்...

    கவிதா... நீயா...? நீதானா அது...?

    சட்டென்று தன்னைப் பார்க்கத் தன் அறைதேடி வந்து நின்ற அந்த கவிதா நினைவிற்கு வந்தாள். அறை வாசலில் தேவதை ஒன்று வந்து நிற்கிற மாதிரி இருந்தது. துணிகளும், புத்தகங்களும், பத்திரிகைளும், சரியாக வராமல் எழுதி எழுதி சுருட்டிப் போட்ட காகித உருண்டைகளுமாகக் கிடந்த அறையின் மத்தியில் கட்டிலில் படுத்திருந்தவன் சடாரென்று எழுந்து நின்றான்.

    அதுவரை அந்த லாட்ஜிற்குப் பெண்கள் யாரும் வந்ததில்லை. சத்தியமாய் அவன் அறை பக்கம் பெண்களின் நிழல் கூடப் பட்டதில்லை. பெயர் தான் லாட்ஜே தவிர கிட்டத்தட்ட ஒரு கல்லூரி ஹாஸ்டல் மாதிரித்தான் நடந்து வந்தது. ராமகிருஷ்ணா லாட்ஜ் என்பது பெயரில் மட்டுமல்ல, உள்ளே தங்குபவர்கள் பரமஹம்சர்களாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. லாட்ஜின் சொந்தக்காரர் ராமமூர்த்தி ஹாஸ்டல் வார்டனின் கெடுபிடிகளோடு கூடியவர். அறை சுத்தமாக இருக்க வேண்டும்; குளியலறைகளும், கக்கூசும் ஒழுங்காக உபயோகப்படுத்தப்பட வேண்டும்; ராத்திரி பத்து மணிக்கு மேல் யாரும் வரக்கூடாது; சரியாகப் பத்து மணி அதன்பின் வந்து எத்தனை சார் போட்டாலும் எவ்வளவு கெஞ்சினாலும் திறக்கமாட்டார்.

    ரூல்னா ரூல்தான். டிஸிப்பிளின் எனக்கு ரொம்ப முக்கியம். அதுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறதுன்னா இந்த ராமகிருஷ்ணா லாட்ஜுல தங்கலாம். இல்லேன்னா வேற லாட்ஜ் பார்த்துப் போய்க்கலாம். லாட்ஜூக்கா இந்த மெட்ராசுல பஞ்சம்...?

    வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். பேச்சு, பட்டுக் கத்தரிக்கும். வெறும் பேச்சு மட்டுமில்லை. செயலும் அப்படித்தான், படு சுத்தம்.

    மொத்தம் இருபதே அறைகள். அறைக்கு நாள் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் வாடகை. டெலிபோன் வசதிக்குக் கூடுதல் பணம். காலை ஆறு மணிக்கெல்லாம் காபி, எட்டு மணிக்கு டிபன். சரியாகப் பதினொரு மணியிலிருந்து சாப்பாடு தயாராகி விடும். மாலையில் டிபன் கேட்டால் கிடைக்காது. இரவு இட்லி, தோசை, சப்பாத்தி தவிர சாப்பாடு கிடைக்காது. கல்யாணமாகாத வேலையில் இருக்கிற இளைஞர்களுக்கென்றே சின்ன மெஸ் மாதிரி ஆரம்பித்தார். பின்னால் அதுவே லாட்ஜாகி இருபது அறைகளாகி விட்டன.

    லாட்ஜின் எழுதப்படாத விதிமுறைகளில் ஒன்றுதான் அந்நியப் பெண்கள் யாரும் அறைக்குள் வரக்கூடாது என்பது. அக்கா, தங்கைகள் வரலாம். அம்மா, சின்னம்மா, பெரியம்மாக்கள் வரலாம். பாட்டிகள் தாராளமாக வரலாம். ஆனால், உறவு முறைகளற்ற இளம் பெண்கள் எட்டிப் பார்த்து விட முடியாது. வாசல் ரிசப்ஷனின் மேஜையடியில் உட்கார்ந்து துருவித் துருவிக் கேள்விகள் கேட்கிற ராமமூர்த்தியை மீறி யார் வந்துவிட முடியும்?

    அப்படி இருக்கையில் யார் இவள்...? எவ்வாறு உள்ளே நுழைந்தாள்...? எதற்காகத் தன் அறைக்குள் வந்து நிற்கிறாள்...? வினாடி நேரத்தில் அத்தனை எண்ணங்களும் அலைமோத பனியன் கூடப் போடாமல் வெற்று மார்புடன் இருப்பதை உணர்ந்து சடாரென்று கை நீட்டிக் கிடைத்த சட்டையை அணிகிற முயற்சியுடன் கேட்டான் அவன்.

    யார் நீங்க...?

    பதில் எதிர்க் கேள்வியாக வந்தது.

    "சூர்யான்ற பேர்ல கவிதைகள்லாம் எழுதுறது

    Enjoying the preview?
    Page 1 of 1